Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெப்ரவரி 22

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெப்ரவரி 22

நாளை மறுதினம் திரைக்கு வருகிறது

நாளை திரைக்கு வருகிறது பெப்ரவரி 22 அன்று அனைத்து தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளங்களிலும் ஓரே நேரத்தில் வெளிவரும் பிரமாண்டமான படைப்பு

பலரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த புத்தம் புதிய திரைப்படம்

தயாரிப்பு : ஜேவிபி

இயக்கம் : ஜாதிக ஹெல உறுமய

இசை : புலம்பெயர் தமிழ் ஊடகங்கள்

ஒளிப்பதிவு : புலம்பெயர் பணியாளர்கள்

புலம்பெயர் தமிழ் மக்கள் நடிகர்களாகவும், பார்வையாளர்களாகவும் பங்கேற்கும் புதுமையான திரைச் சித்திரம்

பெப்ரவரி 22 அன்று அனைத்து தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளங்களிலும் ஓரே நேரத்தில் வெளிவரும் பிரமாண்டமான படைப்பு

பெப்ரவரி 22ம் திகதி ஆரம்பிக்கின்ற நடு இரவு 12 மணிக்கு புலம்பெயர்ந்து வாழுகின்ற அனைத்து தமிழர்களும் தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளங்களுக்கு முன்னால் கண் கொட்ட முழித்திருந்து பார்த்துக் கொண்டிருக்கின்ற உணர்ச்சிமயமான காட்சி மிகப் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வாழுபவர்கள் அமெரிக்க நேரம் இரவு 12 மணிக்கும், ஐரோப்பாவில் வாழ்பவர்கள் ஐரோப்பிய நேரம் இரவு 12 மணிக்கும், அவுஸ்திரேலியாவில் வாழ்பவர்கள் அவுஸ்திரேலிய நேரம் இரவு 12 மணிக்கும் முழித்திருந்து பார்க்கின்ற நகைச்சுவைக் காட்சிகளும் உண்டு.

காணத் தவறாதீர்கள்

"பெப்ரவரி 22"

முக்கிய குறிப்பு: "பெப்ரவரி 22" திரைப்படம் முடிந்த அடுத்த நாளே புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகும். அந்த திரைப்படத்திற்கும் ஒரு திகதியின் பெயரே (உதாரணம் : "ஏப்ரல் 1") வைக்கப்படும்.

தகவல்

donation: Sabeshan from webeelam.com :rolleyes:

Edited by snegi

இந்த பெப்பிரவரி 22 சமாச்சாரம் பற்றி அதிகம் ஆத்திரப் படு முன்னர் ஒரு அடிப்படை உண்மையினை நாம் உணர வேண்டும். அதாகப்பட்டது:

தொழில் நுட்ப வழர்ச்சியினால் ஏற்பட்ட பல மாற்றங்களில் ஒன்று அறிவு சார் சமூகக் கட்டமைப்பின் மறைவு. அதாவது இன்னார் இன்னார் தான் இன்னின்னவற்றை இந்த இந்தத் தகைமைகளின் அடிப்படையில் செய்தல் என இருந்து வந்த வரையறையின் மறைவு. முன்னர் எல்லாம் வைத்தியர்கள் தான் ஒரு நோயின் குணாம்சங்களை வைத்து அது இன்னதாக இருக்கும் என முடிவு செய்வார்கள். நோயாளர்கள் தாங்களாகவே தங்களின் உடல்நிலையை ஆராயத் தயக்கங் காட்டினார்கள். ஆனால் இன்று மிகப் பெரும்பான்மையானவர் மனங்களில் வைத்தியரின் நினைவு வருவதற்கு முன்பு ||கூகுள்|| தான் நினைவில் வரும். தமது உடல் ரீதியான அசௌகரியங்கள் என்ன வருத்தத்தின் குணங்குறியாக இருக்கும் என்று ||கூகுளில்|| தாமாகவே ஆராய்ந்த பின்னர், அந்த ஆராய்ச்சியை ஒரு பிரதி எடுத்து அதையும் தம்மோடு கொண்டு தான் பலர் இன்று வைத்தியரின் அறைக்குச் செல்கினறார்கள். அங்கு வைத்தியரை சில சமயங்களில், தமது கத்துக்குட்டி ஆராய்ச்சியின் அடிப்படையில் விவாதத்திற்கும் இளுக்கினறார்கள்;. அது போலத் தான் வீட்டு இலத்திரனியல் உபகரணங்களைப் பழுது பார்ப்பதாயினும் சரி இதர பல விடயங்களாயினும சரி.

எனினும் பல துறைகளில் மேற்படி ஆரம்ப விசாரிப்புக்களை அடுத்து பலர் துறைசார் வல்லுனர்களின் சேவையினை நாடுகின்றார்கள்;. ஆனால் புலம் பெயர் தமிழ் ஊடகத்துறை மட்டும் இதற்கு விதி விலக்கானதாயும் பயங்கரமானதாயும் அமைகின்றது.

ஊடகத்தைப் பொறுத்த வரை, பல அடிமுட்டாள்கள் கூடத் தங்களைச் சிந்தனையாளர்களாகவும், ஆய்வாளர்களாகவும் தமக்குத்தாமே வரித்துக் கொள்வது மட்டுமன்றி இதர முட்டாள்களையும் முட்டாள்த் தனமாய் வழி நடாத்துகின்றார்கள். இன்றைய புலம் பெயர் நாடுகளின் தமிழ் ஊடகத்துறையானது 99.9999 வீதம் அடிமுட்டாள்களின் தர்பாராகவே விளங்குகின்றது.

முன்னரெல்லாம் முட்டாள்கள் அறிவாளிகளின் ஆலொசனைகளைப் பெற்று அதனால் சற்றேனும் மேம்பட வாய்ப்பிருந்தது. ஆனால் தற்போது முட்டாள்கள் தங்களைத் ஜாம்பவான்கள் என தமக்குத் தாமே நினைத்துக் கொள்வதாலும் தங்களில் திருந்துவதற்கு இடமே இல்லை என நினைத்துக் கொள்வதனாலும் இவர்கள் முட்டாள்களாக வாழ்ந்து முட்டாள்களாகவே இறப்பதற்கான சாத்தியங்கள் தான் அதிகம் காணப் படுகின்றது

புலம்பெயர் தமிழ் சமூகத்தில் அதிகரித்த அளவில் அறிஞர்கள் மற்றும் கற்றவர்கள் தங்களை இந்த முட்டாள் குளாத்தில் இருந்து விலத்தி வாழ்ந்து வருவதனால் முட்டாள் ராச்சியம் இப்போதைக்குத் இவ்வாறு தான் இருக்கும்.

எனவே பெப்பிரவரி 22 சமாச்சாரம் மட்டுமல்ல இது போன்று இவர்கள் கூறும் இன்னோரன்ன விடயங்களையும் ஒரு வேடிக்கை விநோத பொழுதுபோக்காக மட்டும் மற்றவர்கள் பார்க்கப் பழகிக் கொள்ளுதல் உடல் நலத்திற்கு அவசியம்.

Edited by Innumoruvan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.