Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கின்னஸ் சாதனையும், வைகோவின் சிறைவாசமும்!

Featured Replies

கின்னஸ் சாதனையும், வைகோவின் சிறைவாசமும்!

 
 

வைகோ பற்றி மல்லை சத்யா

ம்பது நாள்களுக்கும் மேலாக சிறைவாசத்துக்குப் பிறகு, சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வர இருக்கிறார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ. கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறி, அப்போதைய தி.மு.க அரசால், வைகோ மீது தேசத் துரோக வழக்கின்கீழ் குற்றம்சாட்டப்பட்டது. வழக்கு தொடுக்கப்பட்டு, எட்டு வருடங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஏப்ரல் முதல்வாரத்தில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான வைகோ, தன் மீதான தேசத்துரோக வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து வைகோவை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். வைகோவுக்கு ஜாமீன் வழங்க நீதிபதி முன்வந்த நிலையில், அப்போது ஜாமீன் மனுவை அவர் தாக்கல் செய்யவில்லை. தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணைகளிலும் வைகோ ஜாமீன் கோர விரும்பவில்லை எனத் தெரிவிக்க, நீதிமன்ற காவலில் வைகோ புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த ஐம்பது நாள்களுக்கு மேலாக சிறையில் இருந்த வைகோ, தற்போது ஜாமீன் மனுத்தாக்கல் செய்து, அவருக்கு ஜாமீனும் அளிக்கப்பட்டுள்ளது.

வைகோ

வைகோவைச் சந்தித்த ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிடம் "ஏன் வைகோ இந்த திடீர் முடிவு எடுத்துள்ளார்?" என கேட்டோம்.

"எனக்கு ஜாமீன் வேண்டாம், என்னைச் சிறையில் அடையுங்கள்' என்று வைகோ சொன்னதற்கான காரணம், மிக முக்கியமானது. தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஈழ உறவுகளுக்கு ஆதரவாகப் பேசியதாக அவர் மீது திட்டமிட்டு தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. தேசத் துரோக குற்றச்சாட்டை ஏன் சுமத்த வேண்டும்? எங்கள் ஈழ உறவுகளுக்கு ஆதரவாக நாங்கள் பேசக்கூடாதா? போன்ற கேள்விகள் எல்லாம் இளம் தலைமுறையினருக்கு சென்று சேர்க்க வேண்டும் என்பதற்காகவும், ஈழத் தமிழர்களுக்கு எதிராக தி.மு.க. எப்படியெல்லாம் சதிச்செயல் செய்தது என்பதை இளம் தலைமுறையினர் உணர வேண்டும் என்பதற்காகவும் தான் ஜாமீன் வேண்டாம் என்று சொல்லி சிறை சென்றார். இதனைத் தொடர்ந்து, மக்கள் நலக்கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள், முத்தரசன், திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறையில் வைகோவைச் சந்தித்து, ‘நீங்கள் வெளியே வர வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர். தவிர, கட்சிப் பணிகள் காரணமாகவும் வைகோ தற்போது தனது முடிவை மாற்றியிருக்கலாம். பினாங்கு துணை முதல்வர் ராமசாமியின் இல்ல விழா அடுத்த மாதம் மலேசியாவில் நடக்க இருக்கிறது. அதற்கு வைகோ நிச்சயம் செல்ல வேண்டும். ஏனென்றால், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் வைகோவைப் போன்று அதிக அக்கறை கொண்டுள்ள தலைவர் அவர். தான் வெளியே வருவதற்காக காரணங்களை அவர் சிறையில் இருந்து வெளியே வரும்போது விரிவாகச் சொல்வார் அல்லது அறிக்கை மூலம் தெரிவிப்பார்" என்றார்.

“வைகோ சிறையில் இருப்பது அரசுக்கு வீண் செலவு என தமிழக அரசு தெரிவித்துள்ளதே?”

மல்லை சத்யா"ஒரு அரசு இப்படிச் சொல்வது கண்டிக்கத்தக்கது. இன்று இவர் போன்ற தன்னலமில்லாத தலைவரைப் பார்க்க முடியாது. எப்போதும் மக்கள் பிரச்னை பற்றியே சிந்திப்பவர் அவர். தமிழகத்தில் இன்று நடக்கும் அனைத்து மக்கள் போராட்டங்களும் வைகோவால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் மறுவடிவம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. காவிரிப் பிரச்னையில் இருந்து இன்று நடக்கும் டாஸ்மாக்குக்கு எதிரான மக்கள் போராட்டம்வரை சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வளவு ஏன், சிறையில் இருந்த இந்த ஐம்பது நாள்களில், கட்சி நிர்வாகிகள், சமூக செயல்பாட்டாளர்கள், பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு எண்ணற்ற கடிதங்கள் எழுதி சாதனை படைத்திருக்கிறார் வைகோ. சிறைக் கைதியாக இருக்கும் ஒருவர், மிகக் குறைந்த நாள்களில் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் எழுதியிருப்பது இதுவே முதல்முறை. ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்தபோது தனது மகள் இந்திரா பிரியதர்ஷினிக்கு எழுதிய கடிதங்கள், அண்ணா சிறையில் இருந்தபோது தம்பிமார்களுக்கு எழுதிய கடிதங்கள் வரிசையில், வைகோ சிறைவாசத்தின்போது எழுதிய கடிதங்களும் வரலாற்றில் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

“நாஞ்சில் சம்பத்தைத் தொடர்ந்து மல்லை சத்யாவும் ம.தி.மு.க-வில் இருந்து வெளியேறப் போகிறார் என செய்திகள் கசிகின்றனவே?”

 

“(சிரிப்புடன்...) எனக்கு தெரிந்த ஒரே தலைவர் வைகோ மட்டும்தான். வெறும் சத்யாவாக இருந்த என்னை, மல்லை சத்யாவாக மாற்றியவர் அவர்.  நாஞ்சில் சம்பத் இங்கே இருக்கும்வரை நாயகனாக இருந்தார். அங்கே நகைச்சுவையாளராக இருக்கிறார். போகிறவர்கள் போகட்டும், அவர்களைப் பற்றி கவலையில்லை. என்னைப் பொறுத்தவரை, நான் தலைவராக ஏற்றுக் கொண்டது வைகோவைத் தான்"

http://www.vikatan.com/news/

  • தொடங்கியவர்

சிறையிலிருந்து நான் வெளியேவர இவர்கள்தான் காரணம்! ஜாமீனில் வந்த வைகோ பேட்டி

தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ 52 நாள்கள் சிறைவாசத்துக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

vaiko
 

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகவும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோமீது வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கில், எழும்பூர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி வைகோவுக்குச் சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து, புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

vaiko
 

ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி, 15 நாள்கள் காவல் முடிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதியிடம், தான் பிணையில் செல்ல விரும்பவில்லை எனத் தெரிவித்ததால், காவல் நீட்டிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் வைகோ. இதனால், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வைகோவின் காவலை ஜூன் 2 ஆம் தேதி வரை நீட்டிப்புச் செய்தது. இந்நிலையில் 23ஆம் தேதி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வைகோ மனுத்தாக்கல் செய்தார். தற்போது நிபந்தனையற்ற ஜாமீனில் வைகோ விடுவிக்கப்பட்டுள்ளார். ம.தி.மு.க தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

ஜாமீனில் வெளிவந்த வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘பழிவாங்கும் நோக்கத்திலேயே என்மீது வழக்கு தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தியதால்தான் ஜாமீனில் வெளிவர ஒப்புக்கொண்டேன். மதுக்கடைக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். மக்களின் எழுச்சியை காவல்துறை அடக்கமுடியாது. 52 நாள்கள் சிறையிலிருந்தபோது என்னை நானே ஆய்வு செய்து கொண்டேன். அதிமுக அரசு ஓராண்டு காலத்துக்குள் பல்வேறு நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது. கல்வித்துறையில் அவர்கள் கொண்டு வந்துள்ள திட்டங்கள் சிறப்பாகவுள்ளன’ என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/90307-vaiko-released-on-bail.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.