Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தி.மு.க வைரவிழாவும் அமித்ஷா வருகை அரசியலும்..

Featured Replies

தி.மு.க வைரவிழாவும் அமித்ஷா வருகை அரசியலும்..

 

அமித்ஷா

ஜெயலலிதா மரணத்தில் தொடங்கிய அரசியல் அதிர்வு இன்னும் ஓய்ந்தபாடில்லை. இப்படியான ஒரு மாற்றம் அரசியலில் நிகழ்ந்திருக்குமா என்பதுகூடச் சந்தேகம்தான். அந்த அளவுக்குத் தமிழக அரசியல் களம் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்த மாற்றங்களுக்கு பி.ஜே.பி-தான் காரணம் என அரசியல் தலைவர்கள் பலரும் பேசி வந்தாலும் இனி நிகழப்போகும் மாற்றம்தான் தமிழகத்தின் ஹாட் என்கிறார்கள் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்கள். தி.மு.க தலைவர் கருணாநிதியின் வைரவிழா என்பது அந்தக் கட்சிக்குச் சம்பிரதாயமாக இருந்தாலும் பி.ஜே.பி அதனை அரசியலாகப் பார்க்கிறது. அதன் காரணமாகவே அமித்ஷாவின் தமிழக வருகையும் தள்ளிவைக்கப்பட்டதாகவும் சொல்கின்றனர்.

இந்தக் கட்சிகளிடையேதான் போரா? 

கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா மற்றும் அவரது 94-வது பிறந்த நாள் விழா, வரும் 3-ம் தேதி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கிறது. இதில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சுரி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர். ஆனால், பி.ஜே.பி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதன்மூலம் அரசியல் போர் என்பது இங்கே பி.ஜே.பி-க்கும் தி.மு.க-வுக்கும் என்பது தெள்ளத்தெளிவாகிறது. ஏற்கெனவே இதனை உணர்ந்துவிட்ட பி.ஜே.பி., தி.மு.க-வுக்கு எதிராகப் பல பக்கவான திட்டங்களை வகுத்துவருவதாகக் கூறுகின்றனர், அந்தக் கட்சியினர். அதன் ஒரு பகுதியாகவே அமித்ஷா தமிழகம் வருகை தள்ளிவைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். தி.மு.க தலைவரின் வைரவிழாவை அடுத்து, பி.ஜே.பி-யின் பிளானைத் தமிழகத்தில் நகர்த்தத்  திட்டமிட்டுள்ளதாகவும் சொல்கின்றனர். அமித்ஷா வருகை ரத்தானதற்குக் குடியரசுத் தலைவர் தேர்தல்,அடுத்த வருடம் நடைபெற உள்ள கர்நாடகா தேர்தல் எனப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆனால், அவர் வந்தபோன பிறகு பேசக்கூடிய அளவிலான மாற்றத்தைத் தமிழகத்தில் ஏற்படுத்தவே அவருடைய வருகை தள்ளிவைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். இதுதொடர்பான பேச்சுதான் மத்தியில் இருந்துவருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

கருணாநிதி

மாற்றத்தை நோக்கித் தமிழகம்! 

இதுதொடர்பாக பி.ஜே.பி-யைச் சேர்ந்த ஒருவரிடம் பேசியபோது, "செப்டம்பர் மாதம் 20-ம் தேதிக்கு மேல் எங்களுடைய தலைவரின் வருகை இருக்கும் என்பது தகவல். அதற்கு முன்னதாகச் சில மாற்றங்கள் நிகழும். அது, தி.மு.க வைரவிழாவுக்குப் பிறகே இருக்கும். அந்த விழாவுக்குப் பிறகே ரஜினியைக் கட்சிக்குள் கொண்டுவருவது, பின்னர் பிளவுப்பட்டுள்ள அ.தி.மு.க-வையும்  ஒன்றிணைத்து முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது போன்ற நடவடிக்கை இருக்கும். அப்படியான மாற்றங்கள் நிகழும்போது பி.ஜே.பி-யின் மாநிலத் தலைமையும் மாறுவதற்கான வாய்ப்புள்ளது. அதன் பின்னரே அமித்ஷா தமிழகம் வருவார். அவர் வந்துவிட்டுப் போனபிறகு, தமிழகத்தில் பேசக்கூடிய அளவிலான மாற்றம் நிகழவேண்டும் என்பதே தலைவரின் எண்ணம். அதற்குக் கால அவகாசம் தேவைப்படும் என்பதால், அவருடைய வருகை தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தி.மு.க-வின் வைரவிழா குறித்து பி.ஜே.பி-க்கு அழைப்பு இல்லை. இருப்பினும், மூத்த தலைவர் என்ற காரணத்தால்  அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதிக்குப் பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவிப்பார். அது அவருடைய பண்பாடு" என்றார். 

பி.ஜே.பி-யின் மாஸ்டர் பிளான்!

''பி.ஜே.பி-யின் திட்டம்தான் என்ன? தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நிகழும் என்று அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்கள் கூறி வருகிறார்ளே'' என அரசியல் விமர்சகரான பாலுவிடம் கேட்டோம்.

"தமிழகத்தில் தங்களைப் பலப்படுத்துவதற்கான வேலைகளைக் கடந்த ஒருவருடமாக பி.ஜே.பி செய்துவருகிறது. அதன் ஒருபகுதியாக பாலுஅ.தி.மு.க பிளவு, வருமானவரித் துறை சோதனை இப்படியான மாறுதல் வேலைகளைச் செய்துவந்தது. தற்போது நட்சத்திரங்கள், பிரபலங்கள், சட்டத்துறை வல்லுநர்கள், அரசு அதிகாரிகள், கார்ப்பரேட் முதலாளிகள் உள்ளிட்டோரைக் கட்சிக்குள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக, 'கழகங்கள் இல்லாத தமிழகம்... ஆளப்போவது தாமரை' என்ற சுவரொட்டிகளைப் பல இடங்களில் ஒட்டிவைத்திருப்பதைக் காணலாம்.அவர்களுடைய இலக்கு தமிழகம். தமிழகத்தில் தாமரையை எப்படியாவாது விரிவுப்படுத்த வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளது. அதற்காக ஏற்கெனவே திட்டங்கள் வகுக்கப்பட்டு வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்தி திணிப்பு, விவசாயிகள் பிரச்னை போன்ற காரணங்களால் பிரதமர் மோடியின்மீது மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர். அதன் காரணமாக தற்போது மோடி தமிழகம் வர முடியாத  நிலையில் உள்ளார். அதனால்தான் அமித்ஷா வருகை படலத்தை ஓடவிட்டுள்ளனர். அது மட்டுமன்றி, கட்சிக்குள் ஆட்களைக் கொண்டுவரும் வேலைகளைத் திறம்படச் செய்யக்கூடியவர் அமித்ஷா என்பதாலும் அவருடைய பயணத்தை வகுத்துள்ளனர்.அவர் வருவதற்கு முன்பாகவே வேலைகளைத் தொடங்கிவிடுவது அவருடைய யுக்திகளில் ஒன்று. அதைத்தான் அவர் செய்து வருகிறார்.பி.ஜே.பி-யின் கையில் ஆட்சி இருப்பதால் எந்த நேரத்திலும் எதையும் நிகழ்த்தக்கூடிய நிலையில் அதன் தலைமை உள்ளது. அதனை ஏற்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்" என்றார். 

"மோசமானவற்றில் இருந்து மிக மோசமான நிலைக்கு மாறுவதுதான் அரசியல் மாற்றம்" என்றார் பெரியார்.. பி.ஜே.பி-யின்   நடவடிக்கை  எதனைக் கொண்டுவந்து நிறுத்தப் போகிறது என்பதை இனி காலம்தான் முடிவுசெய்யும்.

http://www.vikatan.com/news/india/90573-the-politics-behind-dmks-diamond-jubilee-celebration-and-amit-shahs-tn-visit.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.