Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Featured Replies

ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பிரதமர் மோடி சந்திப்பு

அரசுமுறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு வேந்தர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

 
ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பிரதமர் மோடி சந்திப்பு
 
பெர்லின்:
 
வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் 6 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நேற்று தொடங்கிய இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக அவர் ஜெர்மனிக்கு இந்திய நேரப்படி நேற்றிரவு சென்றடைந்தார்.
 
ஜெர்மனி சென்றடைந்த அவருக்கு விமான நிலையத்தில் ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மோடி அந்நாட்டு வேந்தர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்தார். விருந்தினர் இல்லத்தில் உள்ள தோட்டத்தில் இருவரும் நடந்து சென்று பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
201705300834256053_modiger2._L_styvpf.gi
 
இதையடுத்து ஜெர்மன் அதிபர் பிராங்க்-வால்டர் ஸ்டைன்மரையும் மோடி சந்தித்து உரையாட இருக்கிறார். பிரதமரின் இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்தியா-ஜெர்மனி இடையே வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு, திறன் மேம்பாடு, நகர்ப்புற கட்டமைப்பு, ரெயில்வே மற்றும் சிவில் விமான போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
 
201705300834256053_modiger1._L_styvpf.gi
 
ஜெர்மனி பயணத்தை முடித்து விட்டு பிரதமர் நரேந்திர மோடி ஸ்பெயின் நாட்டுக்கு புறப்பட்டு செல்கிறார். ராஜீவ் காந்திக்கு பிறகு கடந்த 30 ஆண்டுகளில் ஸ்பெயினுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். அங்கு அவர் ஸ்பெயின் மன்னர் 6-ம் பெலிப் மற்றும் அதிபர் மரியானோ ரஜோய் ஆகியோருடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.
 
இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி 31-ந் தேதி ரஷியாவுக்கு செல்கிறார். அடுத்த மாதம் (ஜூன்) 2-ந் தேதி வரை அங்கு தங்கியிருக்கும் மோடி, 18-வது இந்தியா-ரஷியா உச்சிமாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார். குறிப்பாக அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை, இருநாட்டு அதிகாரிகளுடன் மோடி-புதினின் கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
 
ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 2-ந் தேதி பிரான்ஸ் செல்கிறார். 3-ந் தேதி வரை அங்கு தங்கியிருக்கும் மோடி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானை சந்தித்து பேசுகிறார். இதில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் விவாதிக்கின்றனர்.
 
அத்துடன் 4 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் மோடி நாடு திரும்புகிறார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/30083422/1087937/PM-Modi-meets-German-Chancelor-Merkel-at-Schloss-Meseberg.vpf

  • தொடங்கியவர்

இந்தியா - ஜெர்மனி இடையே உள்ள நட்புறவு உலக நாடுகளுக்கும் பயனளிக்கும்: பிரதமர் மோடி பேச்சு

 

அரசுமுறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் மோடி, இந்தியா - ஜெர்மனி இடையே உள்ள நட்புறவு உலக நாடுகளுக்கும் பயனளிக்கும் விதத்தில் இருக்கும் என பேசியுள்ளார்.

 
இந்தியா - ஜெர்மனி இடையே உள்ள நட்புறவு உலக நாடுகளுக்கும் பயனளிக்கும்: பிரதமர் மோடி பேச்சு
 
பெர்லின்:
 
வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் 6 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று தொடங்கிய இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக அவர் ஜெர்மனிக்கு இந்திய நேரப்படி நேற்றிரவு சென்றடைந்தார்.
 
ஜெர்மனி சென்றடைந்த அவருக்கு விமான நிலையத்தில் ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் 
மோடி அந்நாட்டு வேந்தர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்தார். விருந்தினர் இல்லத்தில் உள்ள தோட்டத்தில் இருவரும் நடந்து சென்று பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
201705301554574505_modi4._L_styvpf.gif
 
இதையடுத்து, தலைநகர் பெர்லினில் அரசு மரியாதையுடன் மோடியை, மெர்கெல் வரவேற்றார். பின்னர், இரு நாடுகளுக்கு இடையேயான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கியது. அப்போது, இந்தியா-ஜெர்மனி இடையே வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு, திறன் மேம்பாடு, நகர்ப்புற கட்டமைப்பு, ரெயில்வே மற்றும் சிவில் விமான போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
 
இதனையடுத்து, இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது,” இந்தியா - ஜெர்மனி இடையே உள்ள நட்புறவு உலக நாடுகளுக்கும் பயனளிக்கும் விதத்தில் இருக்கும். திறன்மேம்பாட்டில் ஜெர்மனி சிறந்து விளங்குகிறது. திறன்மேம்பாட்டில் ஜெர்மனி சிறந்து விளங்குவதால் இளைஞர்கள் பெரும் பயனடைகின்றனர். பயங்கரவாதத்தை எதிர்க்க ஏஞ்சலா மெர்கல் போன்ற தலைவர்கள் ஒத்துழைப்பு அவசியம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஒப்பந்தம் 
போடப்பட்டுள்ளது” என பேசினார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/30155453/1088075/Our-relations-have-regional-amp-global-perspective.vpf

  • தொடங்கியவர்
பயங்கரவாதத்திற்கு எதிராக போர்
ஜெர்மனியில் பிரதமர் மோடி சூளூரை
 
 
 

பெர்லின் : ''சர்வதேச அளவில், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்பவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க, இந்தியாவும், ஜெர்மனியும் உறுதி பூண்டுள்ளன,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

 

Tamil_News_large_1780549_318_219.jpg


பிரதமர் மோடி, ஜெர்மன், பிரான்ஸ், ஸ்பெயின், ரஷ்யா ஆகிய நான்கு நாடுகளுக்கு, அரசுமுறை பயணம் மேற்கொண்டு உள்ளார். முதலில், ஜெர்மன் சென்றடைந்த அவருக்கு, அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெலை சந்தித்து பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகள் குறித்து, இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். இதை தொடர்ந்து நேற்று, இருதரப்பிடையே, அதிகாரப்பூர்வ பேச்சு நடந்தது; இரு நாடுகளின் சார்பில் கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது.இதன்பின், பிரதமர் மோடி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 

ஆட்டி படைக்கிறது.


ஜெர்மன், இந்தியாவின் நீண்ட நாள் நட்பு நாடு. இரு நாடுகள் இடையேயான நல்லுறவு, வளர்ச்சி, சரியான பாதையில் செல்கிறது. சர்வதேச பயங்கரவாதம், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சமீபகாலமாக, ஐரோப்பிய நாடுகளையும் ஆட்டி படைக்கிறது.
மனித குலத்தை அழிவு பாதைக்கும் இட்டுச்

செல்லும் பயங்கரவாதத்தை சகிக்க முடியாது. பயங்கரவாதத்திற்கு ஆதரவு தருபவர்களையும்,நிதியுதவி செய்பவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விஷயத்தில், இந்தியாவும், ஜெர்மனியும் இணைந்துசெயல்படும்.
 

அதிகளவில் தொழில்


பயங்கரவாத தடுப்பு விஷயத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக, இரு நாடுகளும் அவ்வப்போது கலந்து பேசும். இதற்காக கூட்டுக்குழு அமைக்கப்படும். பயங்கரவாதம் தொடர்பான உளவுத் துறை தகவல்கள், இணைய பாதுகாப்பு அம்சங்களை, இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும்.இந்தியா - ஜெர்மனி இடையே, பொருளாதார ஒத்துழைப்பும் அதிகரித்து வருகிறது. ஜெர்மன் தொழில் நிறுவனங்கள், இந்தியாவில், அதிகளவில் தொழில் துவங்க ஆர்வம் காட்டி வருகின்றன; ஜெர்மன் முதலீடுகளை ஈர்க்க, இந்தியா சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.ஜெர்மனி மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான, ஐரோப்பிய யூனியனின் வளர்ச்சியிலும், செயல்பாட்டிலும், இந்தியா அக்கறை வைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

 

பிரியங்கா சோப்ரா சந்திப்பு


பாலிவுட் நடிகை பிரியங்காசோப்ரா, 34, தற்போது, ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். பேவாட்ச் திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்க, ஜெர்மனியின், பெர்லின் நகருக்கு, பிரியங்கா வந்துள்ளார்.

 


இந்நிலையில், பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்தின் போது, பெர்லின் நகரில், அவரை, பிரியங்கா சோப்ரா சந்தித்தார். அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிரியங்கா, அதை, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.
 

கால்பந்து பயிற்சி


ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்த பின், பிரதமர் மோடி கூறியதாவது:பொருளாதாரம், தொழில் உள்ளிட்ட துறைகள் தவிர, விளையாட்டு துறையிலும், ஜெர்மனியுடன் இணைந்து செயல்பட, இந்தியா தயாராக உள்ளது. இந்திய இளைஞர்கள், இனிமேல், ஜெர்மனியின் சிறந்த கால்பந்து பயிற்சியை பெறுவர். இதன் மூலம், விளையாட்டு துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதுடன், இந்திய இளைஞர்கள் விளையாட்டு துறையில் மிளிர்வர்.இவ்வாறு அவர் கூறினார்.

12 ஒப்பந்தங்கள்


பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்தின் போது, இந்தியா - ஜெர்மனி இடையே, 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவற்றில், நகர்ப்புற வளர்ச்சி, திறன் மேம்பாடு, ரயில்வே பாதுகாப்பு மற்றும் பயிற்சி, தொழில், அன்னிய முதலீடு உள்ளிட்ட, முக்கிய ஒப்பந்தங்கள் இடம் பெற்றன.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1780549

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜெர்மன் வேந்தர்....!

ஐ லைக் திஸ்..!

 

பல்கலைக் கழகத் துணை வேந்தர்.....என்ற மொழிபெயர்ப்பிலிருந்து வந்ததாக இருக்கும்!

ஜனநாயத்தில் வேந்தர் ( மன்னர்) என்ற பாவனை சரியா என்று தெரியவில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.