Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளியேற்றம்: ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல்

Featured Replies

சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளியேற்றம்: ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல்

 

 
 
 
சாலை மறியலில் ஈடுபட்டுள்ள திமுகவினர் | படம்: ம.பிரபு
சாலை மறியலில் ஈடுபட்டுள்ள திமுகவினர் | படம்: ம.பிரபு
 
 

பண பேர விவகாரம் வீடியோ தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர சபாநாயகர் அனுமதி மறுத்ததைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராஜாஜி சாலையில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, பண பேர விவகாரம் குறித்து வெளியான வீடியோ தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்க வேண்டும் என்ற திமுக கோரிக்கை விடுத்தது. ஆனால், திமுக கோரிக்கையை ஏற்க சபாநாயகர் ப.தனபால் மறுப்பு தெரிவித்துவிட்டார். "வீடியோ விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அது குறித்து அவையில் விவாதிக்க முடியாது. மேலும், சம்பந்தப்பட்ட உறுப்பினர் சரவணனே குற்றச்சாட்டை மறுத்து விளக்கமளித்துள்ளார். பத்திரிகை, தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளை எல்லாம் விவாதிக்க முடியாது. கூவத்தூர் பேரம் தொடர்பாக ஆதாரம் கொடுத்தால் விவாதிக்க அனுமதியளிக்கிறேன்" என சபாநாயகர் தெரிவித்தார்.

ஆனால், இதை திமுகவினர் ஏற்றுக்கொள்ளவில்லை. காவிரி பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் அவையில் விவாதிக்கப்பட்டிருக்கிறது என்றனர். சபாநாயகர் குறுக்கிட்டு அமைதி காக்குமாறு கோரியும் திமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அவையை நடத்த ஒத்துழைக்குமாறும் அமைதி காக்குமாறும் சபாநாயகர் தனபால் வலியுறுத்தினார். ஆனால், திமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். "MLA FOR SALE" என்ற பதாகைகளை ஏந்தி சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இதனையடுத்து அவைக்கு குந்தகம் விளைவித்ததாகக் கூறி திமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.

prabhu_2_3174900a.jpg

இதனையடுத்து ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/சட்டப்பேரவையில்-இருந்து-திமுகவினர்-வெளியேற்றம்-ஸ்டாலின்-தலைமையில்-சாலை-மறியல்/article9726762.ece?homepage=true

  • தொடங்கியவர்
 

சட்டப்பேரவையிலிருந்து தி.மு.க எம்எல்ஏ-க்கள் கூண்டோடு வெளியேற்றம்! மறியல்செய்த மு.க.ஸ்டாலின் கைது!

தமிழக சட்டப்பேரவையிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியேற்றப்பட்டுள்ளார். அவருடன் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் வெளியேற்றப்பட்டனர். தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் தொடர் அமளியால், சபாநாயகர் தனபால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். தற்போது, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மறியலில் ஈடுபட்டுவருகின்றனர்!

stalin

இன்று கூடிய தமிழக சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், 'ஓ.பி.எஸ் அணியில் இருக்கும் எம்எல்ஏ சரவணன், கூவத்தூரில் பேரம் பேசப்பட்டதாகக் கூறிய சமீபத்திய வீடியோ' குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், இந்த விவகாரம்குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். ஆனால் சபாநாயகர் தனபால், இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், விவாதிக்க முடியாது என மறுத்துவிட்டார். 

இதையடுத்து, தி.மு.க-வினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளியில் தி.மு.க உறுப்பினர்கள் ஈடுபட்டதால், நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் தனபால் எச்சரிக்கை விடுத்தார். தி.மு.க-வினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால், அவர்கள் அனைவரையும் பேரவையை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டார் தனபால். மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் பேரவையை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து, தலைமைச் செயலகம் எதிரே உள்ள ராஜாஜி சாலையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க எம் எல் ஏ-க்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட அனைவரையும் காவல்துறை கைதுசெய்து வேனில் அழைத்துச்சென்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/92252-mkstalin-expelled-out-from-tn-assembly.html

  • தொடங்கியவர்

’மாப்பிள்ளை இவர்தான், ஆனால் அவரின் சட்டை என்னுடையது’ - படத்தின் காமெடியைச் சொல்லி மு.க.ஸ்டாலின் கலாய்ப்பு

 

அ.தி.மு.க எம்.எல்.ஏ சரவணன் குதிரை பேரம் குறித்து பேசும் வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், தமிழக அரசு கலைக்கப்பட வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

M.KStalin
 

இன்று கூடிய தமிழக சட்டப்பேரவையில், கூவத்தூரில் பேரம் பேசப்பட்டதாக வெளியான வீடியோ குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பினார். மேலும், இவ்விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆனால் சபாநாயகர் தனபால், இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் விவாதிக்க முடியாது என மறுத்துவிட்டார். இதனால் தி,மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் பேரவையை விட்டு வெளியேற்றப்பட்டனர். 

சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் சட்டப்பேரவை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறை கைது செய்து அழைத்து சென்றது. 

m.k.stalin

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், ‘கூவத்தூர் விடுதியில் நடைபெற்றுள்ள குதிரை பேரம் தமிழக அரசுக்கு அவமானம். ”அந்த வீடியோவில் உள்ளது நான் தான். ஆனால் பேசியது நான் இல்லை” என்று எம்.எல்.ஏ சரவணன் கூறியிருக்கும் விளக்கம் ”இவர்தான் மாப்பிளை ஆனால் இவர் அணிந்திருக்கும் சட்டை அவருடையது கிடையாது” என்னும் திரைப்பட காமெடி காட்சியை நினைவுப்படுத்துகிறது. இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், தமிழக அரசு கலைக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/92257-mkstalin-teases-admk-mla-saravanan.html

  • தொடங்கியவர்

எம்எல்ஏக்கள் விற்பனைக்கு'- பதாகையுடன் சட்டப்பேரவையை அதிரவைத்த திமுக எம்எல்ஏ-க்கள்

மு.க.ஸ்டாலின்

'எம்எல்ஏக்கள் விற்பனைக்கு' என்று எழுதப்பட்ட பதாகையுடன் சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். அவர்களுக்கு சபாநாயகர் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, அமைச்சர் செல்லூர் ராஜூ பேசிக்கொண்டிருக்கும்போது திமுக உறுப்பினர்கள், தெர்மாகோல் தெர்மாகோல் என்று கூச்சலிட்டு கலாய்த்தனர்.

இதைத் தொடர்ந்து, ஆளும்கட்சி எம்எல்ஏ சரவணன் வீடியோ குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இதற்கு சபாநாயகர் தனபால், இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் விவாதிக்க முடியாது என மறுத்துவிட்டார். இதனைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, "எம்எல்ஏக்கள் விற்பனைக்கு" என்று எழுதப்பட்ட பதாகையுடன் திமுக உறுப்பினர்கள் கூச்சலில் ஈடுபட்டனர். மேலும், ஜனநாயகத்தை விற்காதே என முழக்கம் எழுப்பியும், ரூபாய் நோட்டுகளை உயர்த்தி பிடித்தப்படியும் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

திமுக

அப்போது, திமுக உறுப்பினர்களை அமைதி காக்கும்படி சபாநாயகர் தனபால் கேட்டுக்கொண்டதோடு, கூவத்தூர் வீடியோ தொடர்பாக உரிய ஆவணங்களை தாக்கல் செய்தால் பேச அனுமதி அளிக்கப்படும் என்றும்,  நீரா ராடியா டேப் விவகாரம் பற்றிப் பேச திமுக அரசு அப்போது அனுமதிக்கவில்லை என்றும் கூறினார். மேலும், அவையை தொடர்ந்து நடத்த திமுக உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், தொடர் அமளியில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் எச்சரித்தனர்.

 

திடீரென எழுந்த அவை முன்னவர் செங்கோட்டையன், வழக்கு தொடர்ந்த நிலையில் பேரவையில் விவாதிக்க கேள்வி எழுப்புவது சரியா என கேள்வி எழுப்பியதோடு, சட்டப்பேரவை நடைபெறக்கூடாது என திமுகவினர் செயல்படுகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/92259-dmk-mlas-show-a-banner-with-mlas-for-sale-text-in-assembly.html

  • தொடங்கியவர்

ஆட்சியை கலைத்துவிட்டு பண பேரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: ஸ்டாலின் பேட்டி

 
சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் | படம்: எல்.சீனிவாசன்.
சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் | படம்: எல்.சீனிவாசன்.
 
 

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசை கலைத்துவிட்டு எம்எல்ஏ.க்கள் பண பேர விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுத்து அவையில் இருந்து வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டடனர். கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் காமராஜர் சாலையில் சில நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் கைதாகினர்.

கைது செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசை கலைத்துவிட்டு பண பேர விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.

ஏற்கெனவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த தினத்தன்றே அவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் கைதிகள் போல் அடைத்துவைக்கப்பட்டு குதிரை பேரம் நடந்தது என்று கூறினோம். ஆனால் அதை சபாநாயகர் ஏற்காமல் அன்றைய தினம் எங்களை கூண்டோடு வெளியேற்றினார். அது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

அந்த வழக்குக்கு வலுசேர்க்கும் வகையில் ஆங்கில தொலைக்காட்சி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரம் தொடர்பாக வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளது. வீடியோவுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் கூறிய எம்.எல்.ஏ. சரவணன் பின்னர் வீடியோவில் இருப்பது நான்தான் ஆனால் குரல் என்னுடையது அல்ல என்று கூறுகிறார். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறார். இந்த ஆட்சியே குதிரை பேரத்தில்தான் நடக்கிறது.

இவற்றையெல்லாம் அவையில் எடுத்துரைக்கவே கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர கோரினேன். ஆனால், சபாநாயகர் அதை ஏற்க மறுத்துவிட்டார். சட்டப்பேரவையில் ஜனநாயகம் இல்லை. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினரை பேசவிடாமல் தடுத்ததோடு அவைக்கு குந்தகம் விளைவிப்பதாகக் கூறி எங்களை வெளியேற்றியுள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பண பேர விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். வழக்கு வரும் 16-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. தேவைப்பட்டால் இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தையும் நாடுவோம்" என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/ஆட்சியை-கலைத்துவிட்டு-பண-பேரம்-குறித்து-சிபிஐ-விசாரணை-நடத்த-வேண்டும்-ஸ்டாலின்-பேட்டி/article9726783.ece?homepage=true

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

DCROrCxXcAArcu8.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சட்டசபையை மூன்று முறை குழப்பி உள்ளார் 
இவர் மீது குண்டர் சட்டம் பாயுமா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.