Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் நிறுத்த ஒப்பந்தம் மாற்றம் எதுவுமே இன்றி தொடர்ந்து அமுலில் இருக்கும் அரசு அதனை முறித்துக்கொள்ளாது: கெஹலிய ரம்புக்வெல.

Featured Replies

போர் நிறுத்த ஒப்பந்தம் மாற்றம் எதுவுமே இன்றி தொடர்ந்து அமுலில் இருக்கும் அரசு அதனை முறித்துக்கொள்ளாது: கெஹலிய ரம்புக்வெல.

போர்நிறுத்த ஒப்பந்தம், மாற்றம் எதுவும் இன்றித் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். அதனை அரசாங்கம் முறித்துக்கொள்ளவும் மாட்டாது, அதில் திருத்தம் எதனையும் செய்துகொள்ளவும் மாட்டாது. இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல.

அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஐந்து ஆண்டுகள் பூர்த்தி குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை அரசாங்கம் முறித்துக்கொள்ளப் போவதாகவும், அவ்வாறில்லையெனில் அதில் திருத்தம் செய்து கொள்ளப்போவதாகவும் அரசியல் வட்டாரங்களில் நிலவும் ஊகங்கள் குறித்து அமைச்சரிடம் வினவப்பட்டது.

போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்கனவே அமைந்துள்ள வடிவத்திலேயே தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும். நாட்டின்அரசமைப்புக்கு இசைந்த வகையில் தனது பணிகளை முன்னெடுத்துச்செல்லும். நாட்டின் இறைமையையும் தேசிய ஒருமைப் பாட்டையும் பாதுகாப்பதற்கான முழு அதிகாரமும் எமது அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியிடமே உண்டு. நாட்டின் எந்தப் பகுதியிலாவது நாட்டின் இறையாண்மைக்கும் ஆட்புல ஒற்றுமைக்கும் பங்கம் ஏற்படும் பட்சத்தில் அரசமைப்புக்கு இணங்க அரசாங்கம் செயற்படும் என்று அமைச்சர் மேலும் விளக்கமளித்தார்.

கொழும்பு ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது: கிழக்கிலும் வடக்கிலும் முன்னர் நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதல்கள், நிலத்தைக் கைப்பற்றுவதாக செய்யப்பட்டவை அல்ல. விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழ் மக்களை விடுவிக்கும் ஒரே நோக்கத்துடனேயே அந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த நாட்டின் நிலம் அரசுக்கே சொந்தமானது. தனது சொந்த நிலத்தைக் கைப்பற்றவேண்டிய தேவை எதுவும் அரசாங்கத்துக்கு இல்லை. நாட்டின் சில பகுதிகள் பூகோளரீதியாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட் டுப் பிரதேசங்கள் என்று போர்நிறுத்த ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்டுள்ள போதிலும்

அந்தப் பிரதேசங்களில் வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகளும் உரிமைகளும் பறிக்கப்படும் பட்சத்தில் அந்தப் பிரதேசத்துக்குள் உத்தரவின்றிப் பிரவேசிப்பதற்கு அரசாங்கத்துக்கு அதிகாரம் உண்டு.

குறிப்பிட்ட மக்கள் விடுதலைப் புலிகளின் பிரதேசங்களில் வாழலாம் ஆயினும் அவர்கள் இலங்கைப் பிரசைகளே. இதன் அடிப்படையில் தனது சொந்த மக்களை விடுதலைப் புலிகளானாலும் சரி மாற்றான் சக்திகளாயினும் சரி துன்புறுத்தினால் அதனை அரசாங்கம் அசட்டை செய்ய முடியாது. அவ்வாறு நடப்பதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்கமாட்டோம். என்று கூறினார்.

-Uthayan-

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

புரிந்துணர்வு உடன்பாட்டைத் திருத்துமாறு அரசைக் கோருகிறது முஸ்லிம் காங்கிரஸ்.

அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசைக் கோரியுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஹசன் அலி இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

இந்த உடன்படிக்கை தற்போதுள்ள வடிவத்தில் தொடர்ந்து நடைமுறையில் இருக்குமானால் இனச் சிக்கலுக்குத் தீர்வு காணமுடியாது. ஆகவே அந்த உடன்படிக்கை திருத்தப்படவேண்டியது அவசியம். முஸ்லிம் மக்களுக்கு அந்தஸ்த்து கிடைக்கக் கூடிய வகையில், உடன்பாட்டை திருத்த அரசும் விடுதலைப் புலிகளும் முன்வர வேண்டும்.

சர்வதேச சமூகத்தின் பிரசன்னத்தில் இந்தத் திருத்தம் செய்யப்பட வேண்டும். சண்டையில் தமிழர்களும் சிங்களவர்களும் ஈடுபடுகின்றார்கள். இதில் சிக்கி முஸ்லிம் மக்கள் மரணமாகின்றார்கள். எனவே, முஸ்லிம் மக்களைப் பாதுகாக்கக் கூடிய வகையில் உடன்பாட்டில் திருத்தம் செய்யப்பட வேண்டும் இப்படி அவர் மேலும் தெரிவித்தார்.

-Uthayan-

போர் நிறுத்த ஒப்பந்தம் மாற்றம் எதுவுமே இன்றி தொடர்ந்து அமுலில் இருக்கும் அரசு அதனை முறித்துக்கொள்ளாது: கெஹலிய ரம்புக்வெல.

:rolleyes::lol::unsure::(

1214kd6.gif

:(:(:(:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கும்புறுப்பிட்டியில்

3 முகாம்களைப் படையினர்

தம்வசமாக்கியதாக அறிவிப்பு

திருகோணமலைஇ பெப்.25

திருகோணமலை நகரில் இருந்து 20 கிலோமீற்றர் தூரத்தில்இ கும்புறுப்பிட்டியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் மூன்று முகாம்களைப் படையினர் தம்வசமாக்கியதாக மத்திய ஊடக தகவல் நிலையம் நேற்றுத் தெரிவித்தது.

ஆட்லறி மற்றும் மோட்டார்த் தாக்குதல்களை நடத்தித் கொண்டு படையினர் முன்னேறி வருகின்றனர் என்றும்

கடந்த 72 மணிநேரத்தில் மூன்று முகாம் களைத் தமது கைவசப்படுத்தி கும்புறுப்பிட்டியைப் படையினர் மீட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

போர் நிறுத்த ஒப்பந்தம் மாற்றம் எதுவுமே இன்றி தொடர்ந்து அமுலில் இருக்கும் அரசு அதனை முறித்துக்கொள்ளாது: கெஹலிய ரம்புக்வல

  • கருத்துக்கள உறவுகள்

போர்நிறுத்த ஓப்பந்தம் அப்படியே இருக்கும்???

அது எல்லோருக்கம் தெரிந்ததுதானே. மொட்டை பிக்குகளைத் தவிர.

அதை கடைபிடிக்க வேண்டிய நீங்கள் எப்படி இருப்பீர்கள்?

மீறாமல் இருப்பீர்களா? இந்த கேள்வி பத்திரிகையாளர்களுக்கு வருவதில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர்நிறுத்த ஓப்பந்தம் அப்படியே இருக்கும்???

அது எல்லோருக்கம் தெரிந்ததுதானே. மொட்டை பிக்குகளைத் தவிர.

அதை கடைபிடிக்க வேண்டிய நீங்கள் எப்படி இருப்பீர்கள்?

மீறாமல் இருப்பீர்களா? இந்த கேள்வி பத்திரிகையாளர்களுக்கு வருவதில்லை

போர்நிறுத்தம் மாற்றமின்றி தொடர்ந்தால் தானே நீங்கள் தொடர்ந்து போர் செய்துகொண்டு புலிகள் மீது பழி போட்டுக்கொண்டு இருக்கலாம்..

நம்பர் 1 கோமாளி ஹெகலிய தானே.. அதையெல்லாம் போய் பத்திரிகையில் போட்டு பக்கங்கலை வீணடிக்கிறார்களே...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.