Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியலமைப்பின் மாதிரி சட்டமூலத்தை தயாரிப்பதாயினும் அது தொடர்பாக மகா சங்கத்தினருக்கு தெரியப்படுத்தப்படும்

Featured Replies

புதிய அரசியலமைப்பின் மாதிரி சட்டமூலத்தை தயாரிப்பதாயினும் அது தொடர்பாக மகா சங்கத்தினருக்கு தெரியப்படுத்தப்படும்

 

 

புதிய அரசியலமைப்பின் மாதிரி சட்டமூலத்தை தயாரிப்பதாயினும் அது தொடர்பாக மகா சங்கத்தினருக்கு தெரியப்படுத்தி அவர்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்தார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று (06) பிற்பகல் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினருடன் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக எந்தவொரு இறுதி ஆவணமும் இதுவரை தயாரிக்கப்படவில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, புதிய அரசியலமைப்பு பற்றிய கலந்துரையாடல் ஒன்று தற்போது நாட்டில் நடைபெறுகிறது என்றும்,அரசினால் அத்தகைய சட்டமூலமொன்று தயாரிக்கப்படுமாயின் நாட்டின் எதிர்கால நன்மை மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பாக ஆழமாக ஆய்வுசெய்யப்பட்டதன் பின்னரே அது தயாரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Local_News_copy.jpg

நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் சமயம் தொடர்பாக மகா சங்கத்தினர் தமது கருத்துக்களையும்,ஆலோசனைகளையும் இக் கலந்துரையாடலின்போது முன்வைத்ததுடன், அவை தொடர்பான முன்மொழிவொன்றையும் ஜனாதிபதி கையளித்தனர்.

சியம் மகா நிக்காயவின் மல்வத்து பிரிவின் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரர், அஸ்கிரி பிரிவின் வரக்காகொட ஶ்ரீ ஞானரதன மகாநாயக்க தேரர், ராமஞ்ஞ நிக்காயவின் நாபான பேமசிறி மகாநாயக்க தேரர் உள்ளிட்ட பெருந்தொகையான மகா சங்கத்தினர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ, மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

http://www.virakesari.lk/article/21580

  • தொடங்கியவர்

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக தொடர்ந்து பேச்சு நடத்த ஜனா­தி­ப­தியும் தேரர்­களும் இணக்கம்

 

வரைபு குறித்து ஆராய ஆணைக்குழு நியமிக்கவும் முடிவு

(ரொபட் அன்­டனி)

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் தொடர்ந்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­வது என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் நான்கு பௌத்த பீட தேரர்­க­ளுக்கும் இடை யில் நேற்று கண்­டியில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­யின்­போது இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது.

கண்­டியில் அமைந்­துள்ள ஜனா­தி­பதி மாளி­கையில் நடை­பெற்ற இந்த சந்­திப்பில் நான்கு பிர­தான பௌத்த பீடங்­க­ளி­னதும் தேரர்கள் கலந்­து­கொண்­டனர். இதன்­போது சில தினங்­க­ளுக்கு முன்னர் பௌத்த பீடங்­களின் தேரர்கள் ஒன்­று­கூடி எடுத்த தீர்­மா­னங்கள் அடங்­கிய ஆவ­ணமும் ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது.  

அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்த செயற்­பா­டுகள் அதில் உள்­ள­டக்­கப்­ப­ட­வுள்ள பிர­தான விட­யங்கள் தொடர்­பாக விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக தேர்தல் முறை மாற்றம் தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு மற்றும் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையில் மாற்றம் ஆகிய விட­யங்கள் தொடர்­பா­கவும் பேசப்­பட்­டுள்­ளது.

இதன்­போது அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தேரர்­க­ளுக்கு விளக்­க­ம­ளித்­துள்ளார். இந்த நிலை­யி­லேயே புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் தொடர்ந்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­வது என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் நான்கு பௌத்த பீட தேரர்­க­ளுக்கும் இடையில் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது.

சில தினங்­க­ளுக்கு முன்னர் கூடிய நான்கு பௌத்த பீடங்­க­ளி­னதும் தேரர்கள் நாட்­டுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு தேவையில்லை என்றும் அரசியலமைப்பு திருத்தமும் அவசியமில்லை என்றும் தீர்மானம் எடுத்திருந்தனர். அதனையடுத்தே ஜனாதிபதிக்கும் தேரர்களுக்கும் இடையிலான நேற்றைய சந்திப்பு நடைபெற்றது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-07#page-1

 

மகாநாயக்கர்களின் அனுமதியின்றி புதிய அரசியலமைப்பு வெளியிடப்படமாட்டாது - மைத்திரி!

மகாநாயக்க தேரர்களின் அனுமதியின்றி புதிய அரசியலமைப்பு வெளியிடப்படமாட்டாது என சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன நேற்று மகாநாயக்க தேரர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

அத்துடன் ஒற்றையாட்சிக்கோ, பௌத்தமதத்திற்கான முன்னுரிமைக்கோ பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு அரசியலமைப்பு மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்படாது எனவும் உறுதியளித்துள்ளார்.

நேற்று கண்டியிலுள்ள மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தபோதே இவ்வுறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இன்னமும் புதிய அரசியலமைப்பு வரைவு இடம்பெறவில்லை. புதிய அரசியலமைப்பு வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், மகாநாயக்க தேரர்களிடமும்,  ஏனைய மதத் தலைவர்களிடமும் கையளிக்கப்படும்.

புதிய அரசியலமைப்பு ஒன்று வரையப்படும் போது, மகாசங்கம் மற்றும் ஏனைய பங்காளர்களுடன் கலந்துரையாடப்பட்டே அது மேற்கொள்ளப்படும் என்றும் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருப்பதாக, வண. ஓமல்பே நாயக்க தேரர் தெரிவித்தார்.

நான்கு மணித்தியாலங்களாக நடைபெற்ற இச்சந்திப்பில், வடக்குக் கிழக்கில் புனித இடங்கள் அழிக்கப்படுதல், பாதுகாக்கப்பட்ட காடுகள்அழிக்கப்படுதல், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் முரண்பட்ட கருத்துக்களை வெளியிடுதல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

http://thuliyam.com/?p=72855

வடக்குக் கிழக்கு இணைப்பில்லை-சமஷ்டி இல்லை – சிங்களத்திற்கு முன்னுரிமை இத்தகைய அரசமைப்பு ஆதரவளிக்காவிட்டால் நாட்டை யாராலும் காப்பாற்றமுடியாது – மனோகணேசன்!

வடக்குக் கிழக்கு இணைப்பில்லை-சமஷ்டி இல்லை - சிங்களத்திற்கு முன்னுரிமை இத்தகைய அரசமைப்பு ஆதரவளிக்காவிட்டால் நாட்டை யாராலும் காப்பாற்றமுடியாது - மனோகணேசன்!

வடக்குக் கிழக்கு இணைப்பில்லை, சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு இல்லை, தற்போது பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையில் எந்த மாற்றமும் இல்லை, இவ்வளவு விடயங்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட அரசியலமைப்பை எதிர்ப்பவர்கள் முன்வைப்பது போலியான வாதங்களேயென தேசிய சகவாழ்வு அரசகரும மொழிகள் அமைச்சர்மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பி.எம்.ஐ.சி.எச். இல் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், உத்தேச அரசியலமைப்பு நாட்டிற்கு அவசியம் தேவையெனவும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் இந்த நாட்டை யாராலும் காப்பாற்றமுடியாது.

இந்த அரசியலமைப்பில் வடக்குக் கிழக்கு இணைக்கப்படமாட்டாது. அத்துடன் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வும் இதில் உள்ளடக்கப்படவில்லை. பௌத்த மதத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

அத்துடன் அண்மையில் அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தமிழ் மக்கள் பலவீனமான நிலையில் உள்ளதால் அரசாங்கம் தருவதைப் பெற்றுக்கொண்டு மேலதிகமாகப் பெறுவதற்கு ஜனநாயக ரீதியில் போராடவேண்டுமென அமைச்சர் மனோ கணேசன் கருத்துத் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://thuliyam.com/?p=72850

  • தொடங்கியவர்

புதிய அரசியல் யாப்பு தொடர்பாக இறுதி ஆவணம் எதுவும் தயாரிக்கப்படவில்லை - சிறிசேன

 
புதிய அரசியல் யாப்பு தொடர்பாக இறுதி ஆவணம் எதுவும் தயாரிக்கப்படவில்லை - சிறிசேன Image captionபுதிய அரசியல் யாப்பு தொடர்பாக இறுதி ஆவணம் எதுவும் தயாரிக்கப்படவில்லை - சிறிசேன

இலங்கையில் புதிய அரசியலமைப்பு மாதிரி சட்ட மூலத்தை தயாரிப்பது குறித்து அது தொடர்பாக பௌத்த மகா சங்கத்தினருக்கு தெரியப்படுத்தி அவர்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு அல்லது தற்போதைய அரசியலமைப்பு மாற்றம் ஏதுவாயினும் தற்போதைக்கு தேவையில்லை என பௌத்த உயர் பீடத்தினரான மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட பௌத்த மகா சங்கத்தினரால் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டிருந்தது.

வியாழக்கிழமை மாலை கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் பௌத்த மகா சங்கத்தினருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்குமிடையில் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய அரசியலமைப்பு தொடர்பாக எந்தவொரு இறுதி ஆவணமும் தயாரிக்கப்படவில்லை என்றும், புதிய அரசியலமைப்பு குறித்து தற்போது கலந்துரையாடல் ஒன்று நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

மேலும், '' அரசினால் அத்தகைய சட்ட மூலமொன்று தயாரிக்கப்படுமாயின் நாட்டின் எதிர்கால நன்மை மற்றும் ஸ்திரதன்மை தொடர்பாக ஆழமாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே அது தயாரிக்கப்படும் '' என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் சமயம் தொடர்பாக மகா சங்கத்தினரால் கருத்துக்களும் ஆலோசனைகளும் முன் வைக்கப்பட்டு அது தொடர்பான முன் மொழிவுகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

http://www.bbc.com/tamil/sri-lanka-40528224

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Athavan CH said:

 

மகாநாயக்கர்களின் அனுமதியின்றி புதிய அரசியலமைப்பு வெளியிடப்படமாட்டாது - மைத்திரி!

மகாநாயக்க தேரர்களின் அனுமதியின்றி புதிய அரசியலமைப்பு வெளியிடப்படமாட்டாது என சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன நேற்று மகாநாயக்க தேரர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

அத்துடன் ஒற்றையாட்சிக்கோ, பௌத்தமதத்திற்கான முன்னுரிமைக்கோ பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு அரசியலமைப்பு மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்படாது எனவும் உறுதியளித்துள்ளார்.

நேற்று கண்டியிலுள்ள மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தபோதே இவ்வுறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இன்னமும் புதிய அரசியலமைப்பு வரைவு இடம்பெறவில்லை. புதிய அரசியலமைப்பு வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், மகாநாயக்க தேரர்களிடமும்,  ஏனைய மதத் தலைவர்களிடமும் கையளிக்கப்படும்.

புதிய அரசியலமைப்பு ஒன்று வரையப்படும் போது, மகாசங்கம் மற்றும் ஏனைய பங்காளர்களுடன் கலந்துரையாடப்பட்டே அது மேற்கொள்ளப்படும் என்றும் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருப்பதாக, வண. ஓமல்பே நாயக்க தேரர் தெரிவித்தார்.

நான்கு மணித்தியாலங்களாக நடைபெற்ற இச்சந்திப்பில், வடக்குக் கிழக்கில் புனித இடங்கள் அழிக்கப்படுதல், பாதுகாக்கப்பட்ட காடுகள்அழிக்கப்படுதல், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் முரண்பட்ட கருத்துக்களை வெளியிடுதல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

http://thuliyam.com/?p=72855

வடக்குக் கிழக்கு இணைப்பில்லை-சமஷ்டி இல்லை – சிங்களத்திற்கு முன்னுரிமை இத்தகைய அரசமைப்பு ஆதரவளிக்காவிட்டால் நாட்டை யாராலும் காப்பாற்றமுடியாது – மனோகணேசன்!

வடக்குக் கிழக்கு இணைப்பில்லை-சமஷ்டி இல்லை - சிங்களத்திற்கு முன்னுரிமை இத்தகைய அரசமைப்பு ஆதரவளிக்காவிட்டால் நாட்டை யாராலும் காப்பாற்றமுடியாது - மனோகணேசன்!

வடக்குக் கிழக்கு இணைப்பில்லை, சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு இல்லை, தற்போது பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையில் எந்த மாற்றமும் இல்லை, இவ்வளவு விடயங்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட அரசியலமைப்பை எதிர்ப்பவர்கள் முன்வைப்பது போலியான வாதங்களேயென தேசிய சகவாழ்வு அரசகரும மொழிகள் அமைச்சர்மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பி.எம்.ஐ.சி.எச். இல் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், உத்தேச அரசியலமைப்பு நாட்டிற்கு அவசியம் தேவையெனவும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் இந்த நாட்டை யாராலும் காப்பாற்றமுடியாது.

இந்த அரசியலமைப்பில் வடக்குக் கிழக்கு இணைக்கப்படமாட்டாது. அத்துடன் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வும் இதில் உள்ளடக்கப்படவில்லை. பௌத்த மதத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

அத்துடன் அண்மையில் அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தமிழ் மக்கள் பலவீனமான நிலையில் உள்ளதால் அரசாங்கம் தருவதைப் பெற்றுக்கொண்டு மேலதிகமாகப் பெறுவதற்கு ஜனநாயக ரீதியில் போராடவேண்டுமென அமைச்சர் மனோ கணேசன் கருத்துத் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://thuliyam.com/?p=72850

நிஜத்தினை, யதார்த்தனை உள்ளது, உள்ளபடியே பூசி மெழுகாமல் சொல்வதால் உங்களை பாராட்டிட வேண்டும்.

சம்பந்தரும், சுமந்திரரும் தான் என்ன சொல்லப் போகின்றனர் ?

தமிழ் மக்களுக்கு உள்ள ஒரே வழி: விக்கியார் சுஜ நிர்ணய உரிமை தேர்தல் கோரிக்கையை விடுப்பது தான். அது ஒன்றே தான் வழி. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு உரிய உரிமைகளை தரமுடியாத அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது! என எதிர்ப்புக்காட்டித் தமிழ் அரசியல் தலைவர்களும், அமைச்சர்களும் ஒட்டுமொத்தமாகத் தங்கள் பதவிகளைத் துறந்து தங்கள் எதிர்ப்பை உலகுக்கு அறியத்தருவார்களா....???  அப்படி நடந்தால்...!! நினைக்கவே பெருமையாக இருக்கிறது.!! மேலைநாட்டு மக்களுடன் ஒன்றி இருப்பதால் இப்படியான எண்ணங்கள் தோன்றுகின்றதா.......??? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.