Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெற்றோர்கள்... ஏன்,  "உயில்" எழுத வேண்டும்..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உயில் எப்படி தயாரிக்க வேண்டும்?

பெற்றோர்கள்... ஏன், "உயில்"  எழுத வேண்டும்..?

பெற்றோர்கள் அவர்களுடைய சொத்துக்கள் அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்கள் விருப்பப்படிய யாருக்குச் சேர வேண்டும் என்பதை மிகச் சரியாகத் தீர்மானிக்க உயில்கள் உதவுகின்றன.

உயில்கள் எழுதப்படாத நிலையில், சொத்துக்கள் சட்டப்படி பகிர்ந்தளிக்கப்படும், மேலும் நீதிமன்றம் அதை கையாளுவதற்கு யாரேனும் ஒரு நபரை நியமிக்கும்.

இது குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படக் காரணமாக இருக்கலாம். உங்கள் சொத்துக்களை உங்களுக்குப் பிரியமானவர்களுக்கு மாற்ற கடினமான நீண்ட கால செயல் முறைகளுக்கு வழிவகுக்கும்.

அவர்கள் நியமனப்பட்டவர்களை ஏற்கனவே நியமித்திருந்தாலும் உயில் எழுதுவது அவசியமானதா? 
நியமனப்பட்டவர் சட்டப்பூர்வமான வாரிசாக இல்லாமல் வெறுமனே சொத்துக்களை கவனித்துக் கொள்ளும் நபராக மட்டுமே இருப்பதால் அனைத்துச் சொத்துக்களும் சட்டப்பூர்வமாக வாரிசு தாரருக்கு மாற்றப்படுகிறது. உயில் எழுதப்படாத பட்சத்தில் வாரிசுகளை சட்டம் தீர்மானிக்கிறது. நியமனப்பட்டவர்கள் வாரிசு தாரர்களாக இல்லாத பட்சத்தில் அது தகராறில் முடியும்.

உயில் எப்படி தயாரிக்க வேண்டும்? 
உயிலை சாதாரண காகிதத்திலோ இல்லையெனில் முத்திரைத் தாளிலிலோ எழுதலாம். கையிலும் எழுதலாம். அச்சிடப்படலாம். உயில் சாசனம் எழுதுபவர் வெவ்வேறு நிறங்களான மையை பயன்படுத்தக் கூடாது. 

உயில் சாசனம் எழுதுபவர் கடைசி வாக்கியத்திற்கு சற்று கீழே கையெழுத்திட வேண்டும். ஏனென்றால் அந்த கையெழுத்திற்கு கீழே உயிலில் எழுதப்படும் எதுவும் உயிலின் ஒரு பகுதியாக கருதப்பட மாட்டாது. 

இரண்டு சாட்சிதாரர்களால் கையெழுத்திடப்பட வேண்டும். உயில் சாசனம் எழுதியவர் மற்றும் உயிலின் பயனாளர் இருவரின் பெயர், வயது, முகவரி மற்றும் பல விவரங்கள் விவரமாக எழுதப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு சொத்தின் விவரங்களும் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.  

உயிலை பதிவு செய்வது கட்டாயமா?

உயிலை மாற்றி எழுதலாமா? 
ஆமாம், எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றி எழுதலாம். ஆனால் வேறு காகிதத்தில் தான் மாற்றி எழுத வேண்டும். (உயில் இணைப்புகள் என்று அழைக்கப்படுகிறது) மாற்றி எழுதிய அந்தத் தேதியை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். மாறுபடியும் கடைசி வரிக்கு கீழே இடைவெளி இல்லாமல் கையெத்திட வேண்டும். சாட்சிதாரர்களின் இருவர் கையெழுத்துகளும் இணைக்கப்பட வேண்டும்.

உயிலை பதிவு செய்வது கட்டாயமா? 
பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை, ஆனாலும் அது சட்டப்பூர்வமானது மற்றும் அதிகாரப்பூர்வமானது என்பதால் செய்வது நல்லது. சட்டப்படி பதிவு செய்த பிறகு சிக்கல்கள் வராது. இதையும் கூட முத்திரைத் தாளிலோ பத்திரங்களிலோ எழுத தேவையில்லை அல்லது சான்றுருதியும் அளிக்கத் தேவையில்லை.

இணையத்தில் உயில் தயாரிக்க முடியுமா? 
ஆமாம், இணையத்தில் சாதாரணக் கட்டணத்திற்குத் தயாரித்துக் கொடுக்கும் பல்வேறு நிறுவனங்கள் இருக்கின்றன. இதனால் அதிக விவரங்களுடன், மதிப்புடைய தவறுகள் இல்லாத உயில்கள் தயாரிக்க முடியும் என்பதால் இது சிறந்த வழியாகும்.

இணையத்தில் உயில் தயாரிக்க வழக்கறிஞர் தேவையா?

இணையத்தில் உயில் தயாரிக்க வழக்கறிஞர் தேவையா? 
வழக்கறிஞர்கள் தேவையில்லை. ஆனால் எந்தவிதமான சட்ட ஓட்டைகள் இல்லாமல் மதிப்புடைய உயிலைத் தயாரிப்பதற்கு அவருடைய உதவி தேவை.

நன்றி தற்ஸ் தமிழ்.
 

  • கருத்துக்கள உறவுகள்

 அண்மையில் றீகப் ஒன்றுக்கு போய் வர வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்ட போது உயில் விவகாரம் பற்றியும் துளைச்சுக் கொண்டு இருந்தார்கள்..இவ்வாறன கேள்விகள் கேட்பார்கள் என்று தெரியாமல் போய் அகப்படும் விடையங்கள்..யாராக இருந்தாலும் தனக்கு பின் தன்னுடைய சுய விருப்பின் பேரில் யாருக்கு சொத்துக்கள் அனைத்தும் போய் சேர வேண்டும் என்ற விபரங்களை சுய அறிவோடு நாம் வாழும் போதே எழுதி வைத்தல் நன்றே..பிள்ளைகளிடையே சகோதரங்களிடையே ஏற்படும் வீண் பிரச்சனைகளை தவிர்த்துக் கொள்ளலாம்...எல்லாம் இருந்தாலும் பிரச்சனை இல்லாது விட்டாலும் பிரச்சனை!

 

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாக...யுத்தங்களில் ஈடுபட்ட வெள்ளை இனத்தவர்கள்...இறுதிக்காலத்தில்..ஆசிய இனத்துப் பெண்களிடம் ஏமாந்து போவது இங்கு அதிகம் நடக்கின்றது!

அவர்களது சொத்துக்கள்....திருமணமாகா விட்டாலும் 'de facto relationship" என்னும் அடிப்படையில்.. அந்த ஆசிய இளம் பெண்களுக்கே போய்ச் சேருகின்றது!

அது மட்டுமன்றி...அந்தப் பெண்கள்..அவுசில் நிரந்தர வதிவிட விசா இல்லாவிட்டாலும்..அவர்களுக்கு உயிருள்ள வரை...war widow ஓய்வுப் பணம் செலுத்தப் பட்டுக்கொண்டிருக்கும்!

ஒரு எண்பது வயதுள்ளவர் ...ஒரு இருபத்தைந்து வயதுப் பெண்ணுடன் வாழ்ந்திருந்தால்...அந்தப் பெண் இறக்கும் வரை ...அதாவது அறுபது..எழுபது வருடங்களுக்கு அந்த ஓய்வுப் பணம் செலுத்தப் பட்டுக்கொண்டிருக்கும்!

அட... ஒரு அழகான பெண்ணாய்ப் பிறந்திருக்கக் கூடாதா..என்றும் சில வேளைகளில் நினைப்பதுண்டு..!

ஆண் சிங்கமாகவே.. இருந்து அசிங்கப்பட வேண்டிய நிலைமையாய்ப் போச்சுது..!

மிகவும் முக்கியமான ஒரு பதிவு...தமிழ்சிறி..!

  • கருத்துக்கள உறவுகள்

வேற்று இனத்தவர்களின் செயல்பாடுகளுக்கும் நமது மக்களின் செயல்பாடுகளுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது.இங்கு ஆண் பெண் என்ற நிலைப் பாட்டுக்கு அப்பால் உண்மையான நிலைப்பாடு என்று ஒன்று இருக்கிறதல்லவா......
சில விடையங்களை என்னால் விபரித்து எழுத முடியாத சந்தர்ப்பம் சூழ் நிலையாகவும் இருக்கிறது..குடும்பத்தில் தாயோ தந்தையோ நோய் பட்டு படுக்கையாகி விடும் சந்தர்ப்பத்தில் அந்த ஒரு விடையத்திலிருந்தே பாகப் பிரிவினைகள் தொடங்கி விடுகிறது..அதிக பட்சம் குடும்பம்பத்திற்காக கிடந்து பாடுபடுபவர்களை உனக்கு ஒன்றுமே தெரியாது; நீ பெண் பிள்ளை நீ தான் பெற்றோருக்குரிய கடமைகளை செய்ய வேண்டும் என்ற ஒரு போலியான கடமைகளுக்குள் தள்ளி விட்டு மிகுதி எல்லாவற்றிலும் தங்களை முன் நிறுத்துவதும் எம்மவர்கள் மத்தியில் நடக்காமலில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பிரயோசனமான வரவேற்கப் பட வேண்டிய  ஒரு பதிவு.... நன்றி.....! tw_blush: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.