Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கேப்பாபுலவு மக்களின் ஒருதொகுதி காணிகள் நாளை விடுவிப்பு" சுவாமிநாதன்

Featured Replies

"கேப்பாபுலவு மக்களின் ஒருதொகுதி காணிகள் நாளை விடுவிப்பு" சுவாமிநாதன்

தமது சொந்த நிலங்களை மீட்க தொடர்ந்து 141 நாட்களாக கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக வாயில் முன்பாக கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

IMG_2431.JPG

இந்த நிலையில் 140 நாளான நேற்றைய தினம் கேப்பாபுலவு மக்களிடம் மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தொலைபேசிவாயிலாக ஒரு தொகுதி காணிகள் நாளை விடுவிக்கப்படும் என்று உறுதியளித்ததாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் தெரிவித்தனர்.

480 ஏக்கர்களுக்கும் அதிகமான காணிகள் கேப்பாபுலவில் விடுவிக்கப்படவேண்டி உள்ள நிலையில் நாளையத்தினம் முதல்கட்டமாக 180 ஏக்கர் காணிகள் மட்டுமே விடுவிக்கப்படும் என அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்ததாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் மேலும் தெரிவித்தனர்.

IMG_2966.JPG

இருந்தபோதிலும் தமக்கு சொந்தமான அனைத்து நிலங்களும் விடுவிக்கபடும் வரை தாம் தொடர்ந்து போராடுவோம் எனவும் அனைத்து நிலங்களும் விடுவிக்கப்பட்டு நிம்மதியாக தாம் வாழும் நாளுக்காக ஏங்கி நிற்பதாகவும் தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/22020

  • தொடங்கியவர்

கேப்பாப்புலவில் பாதுகாப்புப் படையினரிடமுள்ள 189 ஏக்கர் காணி நாளை விடுவிப்பு


கேப்பாப்புலவில் பாதுகாப்புப் படையினரிடமுள்ள 189 ஏக்கர் காணி நாளை விடுவிப்பு
 

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் பாதுகாப்புப் படையினரிடமுள்ள 189 ஏக்கர் காணி நாளை (19) விடுவிக்கப்படவுள்ளது.

இந்த காணி விடுவிப்பிற்காக 5 மில்லியன் ரூபாவை இராணுவத்திற்கு வழங்க மீள்குடியேற்ற அமைச்சினூடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாளைய தினம் இந்த காணிகள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டார்.

கேப்பாப்புலவில் 279 ஏக்கர் காணி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் வௌயிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில், 2015 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் படையினர் வசமிருந்த சுமார் 4500 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்ற அமைச்சின் தகவல்களின் படி, யாழ். மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 2991.2 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 1000 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 474 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 49 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

http://newsfirst.lk/tamil/2017/07/கேப்பாப்பிலவில்-பாதுகாப/

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் வாழ்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, MEERA said:

முதல்வர் வாழ்க

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.