Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். பல்கலையில் 13ஆவது பன்னாட்டு மாநாடு

Featured Replies

யாழ். பல்கலையில் 13ஆவது பன்னாட்டு மாநாடு

 
யாழ். பல்கலையில் 13ஆவது பன்னாட்டு மாநாடு
 

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 13ஆவது பன்னாட்டு மாநாடு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று நடைபெற்றது.

viber-image1-1-750x400.jpg

 

http://newuthayan.com/story/16711.html

  • தொடங்கியவர்

தமிழ் மக்களை பிளவு படுத்த சதி

தமிழ் மக்களை பிளவு படுத்த சதி

ஒரு சில விசமிகள் திட்டமிட்ட அடிப்படையில் மலையக தமிழர்களையும் வடகிழக்கு தமிழர்களையும் பிளவுபடுத்துவதற்கு சில திட்டமிட்ட வேலைகளை மேற்கொண்டு வருகின்றார்களளோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13 வது தேசிய மகாநாடு இன்று யாழ்ப்பான பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் நடைபெற்றது.

மாநாட்டின் சிறப்புத் தலைவர் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில், நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினாகளான மாவை சேனாதிராஜா, ஸ்ரீதரன் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, உட்பட 17 நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த 168 பேராளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே  வேலுசாமி இராதாகிருஸ்ணன் இதனை தெரிவித்துள்ளார்.

இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் முற்போக்கு கூட்டணியும் நாடாளுமன்றத்தில் இணைந்து செயற்பட்டு வருகின்றது.

நாங்கள் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட்டால் மாத்திரமே எமது உரிமைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

இதனை எமது இரண்டு தரப்புகளும் உணாந்திருக்கின்றது.ஆனால் ஒரு சில விசமிகளின் செயற்பாடுகள் மலையக மக்களை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது.இதனை நாம் வண்மையாக கண்டிக்கின்றோம்.

தமிழர்களையும் சிங்களவர்களையும் இணைக்க முடியாது என்று கூறிய நிலைமையில் இன்று நாம் எல்லோரையும் ஒன்று சேர்த்து அனைவரும் சமமாக மதிக்கப்படுகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்

 

 

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/Hilli-Tamils-and-the-Northeast-Tamils

  • தொடங்கியவர்

மலையக மக்களை இழிவு படுத்திய வீடியோ மாவை கண்டனம்

  • தொடங்கியவர்

உலகத் தமிழ் மா­நா­டு நேற்­று யாழ்ப்­பா­ணத்­தில் ஆரம்­பம்

 
 
உல­கத்­த­மி­ழ் பண்­பாட்டு இயக்­கத்­தின் 13 ஆவது பன்­னாட்டு மாநாட்­டின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக்­க­ழகக் கைலா­ச­பதி கலை­ய­ரங்­கில் நேற்று  ஆரம்­ப­மா­­னது.
 
கல்வி இரா­ஜாங்க அமைச்­சர் வி.எஸ்.இரா­த­கி­ருஸ்­ணன் மாநாட்டை ஆரம்­பித்து வைத்­தார்.  முதல் நாள் நிகழ்­வு­கள் 10 அமர்­வு­க­ளாக இடம்­பெற்­றன.    கல்விக்­கான  நிதி­யு­தவி, மலர் வெளி­யீடு, ஆய்­வு­ரை­கள் உள்­ளிட்ட நிகழ்­வு­கள் இடம்­பெற்­றன. மாநாட்­டில் 66 ஆய்­வுக் கட்­டு­ரை­கள் பரி­சீ­லிக்­கப்­பட்­டன.
 
விருந்­தி­னர்­கள் சிறப்­புரை நிகழ்த்­தி­னர். முனை­வர் பாஞ்.இரா­ம­லிங்­கம் தலை­மை­யில்  நிகழ்வு இடம்­பெற்­றது.   மாநாட்­டில் யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழ­கத் துணைவேந்­தர் இ.விக்­னேஸ்­வ ­ரன், வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட்­குரே, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை சேனா­தி­ராசா, இந்­திய, இலங்­கைப் பேரா­சி­ரி­யர்­கள்,பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் எனப் பல­ரும் கலந்து கொண்­ட­னர்.
 
”தமிழ் மொழியைப் பாது­காப்­ப­தற்­காக நூற்­றுக்­க­ணக்­கான பாட­சா­லை­களை புலம் பெயர் நாடு­க­ளில் உரு­வாக்­கி­ய­வர்­கள்  தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­கள்.  அவ்­வாறு அவர்­க­ளால் உரு­வாக்­கப்­பட்ட நூற்­றுக்­க­ணக்­கான தமிழ்ப் பாட­சா­லை­கள் புலம்­பெ­யர் நாடு­க­ளில் இன்­றும் இயங்­கிக் கொண்­டி­ருக்­கின்­றன.
 
தமிழை வளர்ப்­ப­தில் அவர்­க­ளும் பெரும் பங்­காற்­றி­னார்­கள். ” என்று உல­கத்­த­மிழ் பண்­பாட்டு இயக்­கத்­தின் அகி­ல­த­லை­வர் வி.சு.துரை­ராஜா  தனது உரை­யில் தெரி­வித்­தார்.
 
 ”உலகத் தமி­ழர் பண்­பாட்டுப் பல்­க­லைக்­க­ழ­கத்தை உரு­வாக்க முயற்சி எடுத்து வரும் இரா­ஜாங்க அமைச்­ச­ருக்கு எமது நன்­றி­கள். அதற்­காக யாழ்ப்­பா­ணம் மற்­றும் கண்­டிப் பகு­தி­க­ளில் இருந்து ஆசி­ரி­யர்­கள் தெரிவு செய்­யப்­பட்டுப் பயிற்­சிக்­காக அனுப்­பப்­பட்­டுள்­ள­னர்.
 
இந்த முயற்சி வெற்­றி­ய­டைய வேண்­டும்” என்று  தமிழ் பண்­பாட்டு இயக்கத் தலை­வர் பாஞ்.இரா­ம­லிங்­கம் தனது உரை­யில் தெரி­வித்­தார்.அதே­வேளை மாநாட்­டின் இரண்­டாம் நாள் நிகழ்­வு­கள் இன்று ஞாயிற்­றுக்­கி­ழமை  காலை 9 மணிக்கு  யாழ். ரில்கோ விடு­தி­யில் இடம்­பெ­றும்.  சென்னை முனை­வர் வா.மு.சேது­ரா­மன் தலை­மை­யில் நடை­பெ­றும் நிகழ்­வில்  கவி­ய­ரங்­கம், பேரா­ளர் கருத்­த­ரங்­கம், பேரா­ளர்­க­ளின் கருத்­து­ரை­கள், இலக்­கி­யத் திரைப்­ப­டக்­காட்சி, கலை­நி­கழ்­வு­கள் இடம்­பெ­றும். நிகழ்­வில் பேரா­ளர்­க­ளுக்­குச் சான்­றி­தழ்­க­ளும் வழங்­கப்­ப­டும்.

http://newuthayan.com/story/16755.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.