Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சிறிலங்கா மற்றுமொரு கோசோவோவாக மாறலாம்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

: விமல் வீரவன்ச

ஜவியாழக்கிழமைஇ 1 மார்ச் 2007இ 20:29 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ

"சிறிலங்காவின் உள்விவகாரங்களில் நேரடியாக தலையிடும் சூழலை அனைத்துலக சமூகம் ஏற்படுத்திக் கொண்டுள்ளதானது கோசோவோ மற்றும் தென்சூடான் போன்றவற்றில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடுகளைப் போல் ஆபத்தானது" என்று ஜே.வி.பி. கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு முன்னணி சார்பாக தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:

"அனைத்துலக சமூகம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதலின் பின்னரும் தமது வழமையான மந்திரத்தையே உச்சரித்து வருகின்றன. இராஜதந்திரிகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மிகக் கடுமையான வழிகளில் கண்டிப்பதை விட்டுவிட்டு இருதரப்பையும் பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

அனைத்துலக சமூகம்இ வடக்கு - கிழக்குப் பகுதிகளுக்கு செல்கின்ற போதுஇ தமக்கு அறிவிக்க வேண்டும் என்பதை விடுதலைப் புலிகள் விரும்புகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதலானது அனைத்துலக சமூகத்தில் தமது ஆதிக்கத்தை செலுத்துவதற்கான விடுதலைப் புலிகளின் ஒரு தந்திரமாகும்.

போர் நிறுத்த உடன்படிக்கையின் ஐந்தாம் ஆண்டு நிறைவின் போது விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஒஸ்லோவினால் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை தமக்கு வடக்குஇ கிழக்கில் ஒரு நாட்டுக்குரிய அந்தஸ்தை வழங்கியுள்ளதாக தெரிவித்திருக்கின்றனர்.

போர் நிறுத்த உடன்பாட்டை அரசு உத்தியோகபூர்வமாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அது தற்போது காலம் கடந்திருந்தாலும் பரவாயில்லை. அதேவேளை விடுதலைப் புலிகளின் அறிக்கை தொடர்பாக அரசின் நிலைப்பாட்டையும் அரசு தெரிவிக்க வேண்டும். இந்நாட்டின் மக்களுக்கு அரசின் நிலைப்பாட்டை அறியும் உரிமையுள்ளது.

இது தொடர்பான தமது கருத்தை நோர்வேயும் தெரிவிக்க வேண்டும். போர் நிறுத்தம் ஏற்படுத்தப்படுவதற்கு முன்னர் தேசிய பாதுகாப்பு முன்னணி கூறிய கருத்துக்கள் தற்போது உண்மையாகி உள்ளது" என்றார் அவர்.

http://www.eelampage.com/?cn=30944

ஒரு நாட்டிற்குள் ஏற்படும் பிரச்சினைகளைத் தாங்களாகத் தீர்க்க முடியாது போனால்

இப்படிப்பட்ட நிலைமைகள்தான் தோன்றும். கிடைத்த சந்தர்ப்பங்கள் எவ்வளவோ

ஊதாசீனப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நாட்டுக்குளிருக்கும் சிறுபான்மையினம் தனது

உரிமைகளை அகிம்சை முறையில் கேட்டபோது அது சுயலாப அரசியலாக்கப்பட்டது.

அதுமட்டுமல்ல. அந்த அகிம்சை வழிக் கோரிக்கை எவ்வாறு வன்முறைத்தனமாக

அடக்கப்பட்டது என்பதையும் வீரவன்ச ஞாபகத்தில் வைத்திருக்கலாம்.

இப்போது ஏற்பட்டிருப்பது கூட சுயநோக்க முடைய அரசியல்தான். காலங்கடந்தே

இப்படிப்பட்டவர்களுக்கு ஞானம் பிறக்கும். என்ன செய்வது பிரச்சினையைச் சர்வ

தேச மயமாக்கி அந்த வலைப்பின்னலுக்குள் போராட்டத்தைச் சிக்கவைக்க நினை

த்த சிங்கள தேசம் இன்று அதைப்பற்றிக் கவலைப் படுவதேனோ?

மானுக்கு வலை விரித்தால் அதற்குள் மானிருக்க வேண்டும்.

மீனுக்கு வலை விரித்தாhல் அதற்குள் மீனிருக்க வேண்டும்.

நுளம்க்கு வலை விரித்துவிட்டு அதற்குள் இவர்களல்லவோ இருக்கிறார்கள்.

நுளம்பு வெளியே சுதந்திரமாகச் சுற்றித்திரிகிறது.

இது சிங்களம் கவலையடைய வேண்டிய விடயமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.