Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தந்தையின் சடலத்தை வணங்கி விட்டுப் பரீட்சை எழுதச் சென்ற மாணவி

Featured Replies

தந்தையின் சடலத்தை வணங்கி விட்டுப் பரீட்சை எழுதச் சென்ற மாணவி

 
தந்தையின் சடலத்தை வணங்கி விட்டுப் பரீட்சை எழுதச் சென்ற மாணவி
 

சிறுமி ஒருவர் உயிரிழந்த தன் தந்தையின் சடலத்தருகில் சென்று அப்பா நான் பரீட்சை எழுதச் சென்று வருகிறேன் எனக் கூறிச் சென்ற சம்பவம் ஒன்று அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.

குறித்த மாணவி உயிரிழந்த தனது தந்தையின் சடலம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் புலமை பரீட்சைக்கு சென்றுள்ளார்.

இச் சம்பவம் சுரியவெவ, விஹாரகல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

குறித்த சிறுமியின் தந்தை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றுப் பரீட்சைக்கு தயாரான சிறுமி முதலில் தாயாரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டுள்ளார்.

பின்னர் தந்தையின் சடலத்திற்கு அருகில் சென்று வணங்கி பரீட்சை எழுத செல்கிறேன் அப்பா என கூறிவிட்டு கண்ணீருடன் மாணவி சென்றுள்ளார்.

மாணவியின் இந்த செயற்பாடு அங்கிருந்து அனைவருக்கும் வருத்ததை கொடுத்ததுடன், கண்ணீர் சிந்தவும் வைத்துள்ளது.

நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சிறுமியின் தந்தை உயிரிழந்துள்ளார்.

http://newuthayan.com/story/21314.html

 

 

 

இறந்த தந்தையிடம் ஆசி கேட்டு பரீட்சை எழுதச் சென்ற சிறுமி : மனதை உருக்கும் சம்பவம்

 

 

Local_News.jpg

இறந்த தனது தந்தையின் சடலம் வீட்டில் இருக்க சடலத்தின் முன்நின்று ஆசிகேட்டு சிறுமியொரு வர் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதச் சென்ற  சோகமயமான சம்பவமொன்று நேற்று  எம்பிலிப்பிட் டிய விகாரகல பகுதியில்  இடம்பெற்றுள்ளது. புற்று நோய் காரணமாக சிறுமியின் தந்தை கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.  சிறுமியின் தந்தை இறந்து இரண்டு நாளாகையால் நேற்றும் உறவினர்கள் கிராம மக்களின் அஞ்சலிக்காக சடலம் வீட்டில் வைக்கப்பட்டி ருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் காலை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றதுடன் இப்பரீட்சையை இச்சிறுமி  எழுத வேண்டியிருந்தது.

உரிய நேரம் வந்ததும் பரீட்சைக்கு செல்ல  தாயாரான சிறுமி தனது தாயின் கால்களில் விழுந்து வணங்கி ஆசிபெற்றுக்கொண்டார். அதன் பின் தந்தையின் சடலத்துக்கு அருகில் சென்ற சிறுமி  "தந்தையே சென்று வருகிறேன்" எனக் கூறி கண்ணீருடன் ஆசி கேட்ட போது அங்கிருந்த அனைவர்  கண்களிலும் நீர் கசிந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/23387

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.