Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா வைக்கும் பொறி

Featured Replies

சீனா வைக்கும் பொறி

Page-01-image-efd4f780ad04f860cc34b4185f2f384e8a6185a1.jpg

 

இலங்­கையில் சீனாவின் முத­லீ­டு­க­ளுக்கு எதி­ராக உள்­ளூரில் நடத்­தப்­படும் போராட்­டங்­க­ளை­யிட்டு சீனா கவலை கொள்­ள­வில்லை என்று, சீன தூதுவர் யி ஷியான்­லியாங் முன்­பொரு தடவை கூறி­யி­ருந்தார்.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா வின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறு­வ­னத்­துக்கு, குத்­த­கைக்கு வழங்கும், உடன்­பாடு கையெ­ழுத்­தி­டப்­ப­டு­வ­தற்கு கடு­மை­யான எதிர்ப்­புகள் தெரி­விக்­கப்­பட்டு ஆர்ப்­பாட்டப் பேர­ணிகள் நடத்­தப்­பட்ட பின்­னரே அவர் இந்தக் கருத்தை வெளி­யிட்­டி­ருந்தார்.

மஹிந்த ராஜபக் ஷ உள்­ளிட்ட கூட்டு எதி­ர­ணி­யி­னரின் எதிர்ப்­பையும் கூட சீனத் தூதுவர் பெரிய விட­ய­மாக அப்­போது எடுத்துக் கொண்­டி­ருக்­க­வில்லை.

உள்­நாட்டில் தெரி­விக்­கப்­படும் எதிர்ப்­பு­க­ளினால், இலங்­கையில் சீனாவின் முத­லீ­டுகள் பாதிக்­கப்­ப­டாது என்­பதே அவ­ரது கருத்­தாக அப்­போது இருந்­தது.

ஆனால், அதே சீனத் தூதுவர் தான் கடந்­த­

வாரம், இலங்கை மக்­க­ளுக்கு ஓர் அழைப் பை விடுத்தார்.

“இலங்­கைக்கு அபி­வி­ருத்தி முக்­கி­ய­மா­னது. நாட்டை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு அர­சாங்­கத்­துடன் மக்கள் ஒத்­து­ழைக்க வேண்டும்” என்­பதே அவ­ரது கோரிக்கை.

இந்தக் கோரிக்­கையை அவர் விடுத்­தி­ ருந்த சூழல், இடம் என்­பன அவர் எத னைக் கூற வரு­கிறார் என்­பதை புலப்­ப­டுத்­தி­யி­ருக்கும்.

தங்­கா­லையில், 1000 மாண­வர்­க­ளுக்கு சீனா­வினால் அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்ட 1.8 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான கல்வி உப­க­ர­ணங்­களைக் கைய­ளிக்கும் நிகழ்வில் உரை­யாற்­றிய போது தான், அவர் இதனைக் கூறி­யி­ருந்தார்.

தங்­காலை மஹிந்த ராஜபக் ஷவின் கார் ல்டன் இல்லம் அமைந்­தி­ருக்­கின்ற இடம் மாத்­தி­ரமல்ல, அம்­பாந்­தோட்டை துறை­முக உடன்­பாட்­டுக்கு எதி­ராக ஆர்ப்­பாட்டப் பேர­ணிகள் நடத்­தப்­பட்ட இடமும் கூட.

அந்தப் பின்­ன­ணியில் இருந்து பார்க்­கும்­போது, சீனத் தூதுவர் நாட்டை அபி­வி­ருத்தி செய்ய மக்கள் ஒத்­து­ழைக்க வேண் டும் என்று விடுத்த கோரிக்­கையின் உண்­மை­யான நோக்கம் புலப்­பட்­டி­ருக்கும்.

இந்த நிகழ்வில் சீனத் தூது

வர் வெளி­யிட்­டுள்ள சில தக­வல் கள், அம்­பாந்­தோட்­டையை உள்­ள­டக்­கிய, தென்­மா­கா­ணத் தின் மீது, சீனா கொண்­டி­ருக்­கின்ற அதீத அக்­க­றை­யையும், இலங் கை மீதுள்ள அதன் கரி­ச­னை­க­ளையும் புரிந்து கொள்ளக் கூடி­ய­தாக உள்­ளது.

சீனாவின் ஷங்காய் நக­ரத்தைப் போன்று, தென்­ப­கு­தியை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு, சீனா தொடர்ந்து உத­வி­களைச் செய்யும்.

அடுத்த 15 ஆண்­டு­களில் சிங்­கப்­பூரின் நிலைக்கு இலங்­கையைத் தர­மு­யர்த்­து­வ­தற்கு சீனா தொடர்ந்து உத­வி­களை வழங்கும் என்ற இர ண்டு அறி­விப்­பு­க­ளையும் சீனத் தூதுவர் வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

சிங்­கப்­பூரின் சிற்பி என்று அழைக்­கப்­படும், அந்த நாட்டின் முன்னாள் பிர­தமர், லி குவான் யூ இலங்­கைக்கு வந்­தி­ருந்த போது, இலங்­கையைப் போல சிங்­கப்­பூரை மாற்­றுவேன் என்று கூறி­யி­ருந்தார்.

அந்­த­ள­வுக்கு இலங்கை அப்­போது முன்­

னேற்­ற­ம­டைந்­தி­ருந்­தது. தன்னைப் பார் த்து மற்ற நாடுகள் பொறா­மைப்­படும் அள ­வுக்கு சிங்­கப்பூர், இன்று வளர்ச்­சி­ய­டைந்­தி­ருக்­கி­றது.

இதனால் தான், கடந்த பல ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூரைப் போல இலங்­கையை மாற்­றுவோம் என்று இங்­குள்ள அர­சி­யல்­வா­திகள் பலரும் கூறி வரு­கின்­றனர்.

இப்­போது ஒரு வித்­தி­யா­ச­மாக, சீனத் தூது­வரும் அத­னையே கூறத் தொடங்­கி­ யி­ருக்­கிறார். இலங்­கையில் சீனாவின் பொரு­ளா­தார முத­லீ­டு­களும் தலை­யீ­டு­களும் அதி­க­ரிக்கத் தொடங்கி 10 ஆண்­டு­க­ளுக்கு மேலாகி விட்­டது. ஆனால், இலங்­கையை சிங்­கப்­­பூரை நோக்கி கொண்டு செல்­வ­தற்குப் பதி­லாக, சோமா­லி­யாவைப் போல பின்­நோக்கி இழுத்துச் சென்­றது தான் மிச்சம்.

இலங்­கையைக் கடன்­பொ­றிக்குள் சிக்க வைத்து, நாட்டின் வளங்­களை வெளி­நா­டு­ க­ளுக்கு குத்­த­கைக்குக் கொடுக்க வேண்­ டிய நிலையில் கொண்டு வந்து நிறுத்­தி­யி­ருப்­பது சீனா தான். 

இதே சீனா தான், இன்னும் 15 ஆண்­டு­ க­ளுக்குள், இலங்­கையை சிங்­கப்­பூ­ராக மாற்­று­வ­தற்கு உத­வுவோம் என்று கூறி­யி­ருக்­கி­றது. இதனை எப்­படி சீனா சாதிக்கப் போகி­றது? சிங்­கப்­பூ­ராக மாற்­று­வ­தற்­கான அத்­தனை உத­வி­க­ளையும் சீனா வழங்கும் என்றால், அதன் அர்த்தம், எவ்­வ ­ளவு கட­னையும் தரத் தயா­ராக இருக்­கி றோம் என்­பது தான். இது தான், சீனா வைக்­கின்ற பொறி.

இதே பொறியை சீனா இப்­போது ஆபி­ரிக்க நாடு­களை நோக்­கியும் வைக்கத் தொடங்­கி­யி­ருப்­ப­தாக சர்­வ­தேச ஊட­கங்­களில் கார­சா­ர­மான விவா­தங்கள் நடக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன.

மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சியில் இருந்த போது, சீனாவைப் பற்றிக் கேள்வி எழுப்­பினால் மிகப் பெரு­மை­யாக ஒரு விட­யத்தை குறிப்­பி­டுவார்.

“இலங்­கையின் மிகச்­சி­றந்த நண்பன், மற்ற நாடு­களும், சர்­வ­தேச நிதி நிறு­வ­னங்­களும் கடன்­க­ளையோ உத­வி­க­ளையோ கேட்டால், நிபந்­த­னை­களை விதிப்­பார்கள். மனித உரிமை மீறல்­களை சுட்­டிக்­காட்டி எச்­ச­ரிப்­பார்கள்.

இவை எது­பற்­றியும் கேள்­வியே எழுப்­பாமல், சீனா நிதியை அள்ளித் தரு­வதால் தான் அவர்­க­ளிடம் போகிறோம்” என்று அவர் அடிக்­கடி கூறி­வந்தார்.

எவ்­வ­ளவு கட­னையும், எந்த நிபந்­த­னை­க­ளுக்கும் உட்­ப­டுத்­தாமல் தரத் தயா­ராக இருக்­கிறோம் என்ற சீனாவின் உத்­த­ர­வாதம் தான் பெரும்­பா­லான நேரங்­களில் இலங்கை போன்ற வளரும் நாடு­களை படு­கு­ழிக்குள் தள்ளி விடு­கி­றது.

இலங்­கைக்கு உத­வு­வ­தற்­காக எந்தக் கேள்­வியும் இல்­லாமல் கடன்­களை அள்ளிக் கொடுத்த சீனா தான், அதி­க­வட்­டியை கேட்டு நச்­ச­ரித்­ததும், அதனைக் குறைக்க முடி­யாது என்று அடம் பிடித்­ததும் வர­லாறு.

சீனாவின் கடன்கள் தான், அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை, மத்­தள விமான நிலை­யத்தை குத்­த­கைக்கு வழங்க வேண்­டிய நிலைக்கு அர­சாங்­கத்தை தள்ளிச் சென்­றுள்­ளது.

இதே சீனா தான், இப்­போது அடுத்த 15 ஆண்­டு­க­ளுக்குள் சிங்­கப்­பூ­ராக இலங்­கையை மாற்­று­வ­தற்கு உதவத் தயார் என்று கூறு­கி­றது என்றால், அது சற்று யோசிக்க வேண்­டிய விடயம் தான்.

இந்தத் திட்­டங்கள் வெற்­றி­ய­ளிக்க வேண்­டு­மென்றால் இங்­குள்ள மக்­களின் ஆத­ரவும் ஒத்­து­ழைப்பும் அவ­சியம் தேவை. அது இல்­லை­யென்றால், சீனாவின் எந்தத் திட்­டங்­களும் பல­ன­ளிக்­காது.

இதனால் தான், அர­சாங்­கத்தின் அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ளுக்கு மக்கள் ஒத்­து­ழைக்க வேண்டும் என்று ஒரு போடு போட்­டி­ருக்­கிறார் சீனத் தூதுவர்.

சீனாவில் ஷங்காய் ஒரு முக்­கி­ய­மான வணிக மையம். சீனாவின் கிழக்கு கடற்­ப­ரப்பை அண்­டி­யுள்ள ஓர் உலக நிதி மையம். போக்­கு­வ­ரத்து கேந்­திரம். உலகின் மிகப் பர­ப­ரப்­பான கொள்­கலன் துறை­முகம்.

ஆண்­டுக்கு 17,125 டொலர், நபர் ஒரு­வரின் தலா வரு­மா­னத்தைக் கொண்ட ஒரு வளர்ச்­சி­ய­டைந்த நகரம் தான் ஷங்காய்.

இலங்­கையின் தென்­ப­கு­தியை ஷங்காய் நகரைப் போல மாற்­று­வ­தற்கு உத­வுவோம் என்ற சீனத் தூது­வரின் உறுதி மொழிக்குக் காரணம் இருக்­கி­றது.

அம்­பாந்­தோட்டை துறை­முகம் மற்றும் அதனை அண்­டிய நிலப்­ப­கு­தியை சீனா அப­க­ரிக்கப் பார்க்­கி­றது என்ற கருத்து தென் மாகா­ணத்தில் உள்ள சிங்­கள மக்­க­ளிடம் இருக்­கி­றது. அத்­த­கைய கருத்தை உரு­வாக்­கு­வதில் மஹிந்த ராஜபக் ஷ ஆத­ரவு சக்­தி­களின் பங்கு கணி­ச­மா­னது.

அம்­பாந்­தோட்டை துறை­முகம், மத்­தள விமான நிலையம், சூரி­ய­வெவ கிரிக்கெட் மைதானம் எல்­லா­வற்­றையும் கட்டும் போது, மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம், அம்­பாந்­தோட்டை உலகின் சொர்க்­க­பு­ரி­யாக மாறப் போகி­றது என்று தான் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருந்­தது.

ஆனால், போகப் போகத் தான் அவை வெறும் மாயை என்­பது மக்­க­ளுக்குத் தெரி­ய­வந்­தது. அந்த அதி­ருப்தி இன்­னமும் தென்­ப­குதி மக்­க­ளிடம் காணப்­ப­டு­கி­றது.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா பெற்றுக் கொள்­வதால், தமது அன்­றாட வாழ்வு, பழக்க வழக்­கங்கள், மர­புகள், கலா­சா­ரங்கள் மாறி விடுமோ, என்ற அச்சம் சிங்­கள மக்­க­ளிடம் இருக்­கி­றது. தமது காணிகள் பறிக்­கப்­பட்டு விடுமோ என்ற அச்­சமும் இருக்­கி­றது. அதனால் அவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரி­வித்து வரு­கின்­றனர்.

இந்த எதிர்ப்பை போக்­கு­வதில் சீனா முக்­கிய கவனம் செலுத்த ஆரம்­பித்­துள்­ளது. சலு­கைகள் மற்றும் சாத்­தி­ய­மான திட்­டங்­களின் மூலம், மக்­களின் எதிர்ப்பைத் தணிக்க முற்­ப­டு­கி­றது சீனா.

உதா­ர­ணத்­துக்கு, தங்­காலை கூட்­டத்தில் சீனத் தூதுவர் குறிப்­பிட்ட இன்னும் இரண்டு விட­யங்கள் இருக்­கின்­றன. ஒன்று தற்­போது இலங்­கையில் இருந்து 1300 மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­படும் புல­மைப்­ப­ரி­சிலை சீனா 2000 ஆக அதி­க­ரிக்­க­வுள்­ளது. இது இளம் சமூ­கத்­தையும், மாண­வர்­க­ளையும், வசப்­ப­டுத்­து­கின்ற ஒரு முயற்சி.

அதேபோலவே, உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்றை தென்மாகாணத்தில் இலங்கை அரசுடன் இணைந்து சீனா நிறுவப் போகிறது என்பது இரண்டாவது விடயம்.

கல்விக்கான மிகப் பெரிய வாய்ப்புகளை சீனா திறந்து விடப் போகிறது என்றவுடன், அம்பாந்தோட்டை துறைமுகம் யாரிடம் இருக்கிறது என்பது பலருக்கு மறந்து விடும் என்று சீனா கணக்குப் போடுகிறது.

தெற்கில் உள்ள மக்களை அமைதிப்படுத்தி, தனக்கு எதிரான சிக்கல்கள் எழும்பாமல் பார்த்துக் கொள்வது தான் சீனாவின் உத்தி.

இலங்கையில் சீனாவின் முதலீடுகள் அனைத்துமே பொருளாதார நோக்கம் கொண்டதல்ல. இதில் கணிசமான மூலோபாய நோக்கங்களும் இருப்பதால், அதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, நல்லவனாக – கொடையாளியாக, நடிக்க வேண்டிய தேவையும் சீனாவுக்கு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-08-27#page-1

  • கருத்துக்கள உறவுகள்

15 ஆண்டுகளில் சிங்கப்பூரைப்போல் மாற்றிக்காட்டுவோம் என்று ஒரு மூன்றாவது நாட்டை உதாரணம் காட்டுடியதே சீனாவின் ஒரு இராஜதந்திரம். சீனாவைப்போல் இலங்கையை மாற்றிக்காட்டுவோம் என்று  இங்கு சொல்லப்பட்டிருந்தால் எப்படி இருக்கும் என்று சற்று எண்ணிப்பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த விதமான இயற்கை வளமும் இல்லாமல்...உலக நாடுகளால் ஏளனமாகப் பார்க்கப்பட்ட சிங்கப்பூரின் தந்தையென வர்ணிக்கப்படும்...லீ குவான் யூ...அப்போது கூறிய வசனம் இது தான்!

கொழும்பைப் போல....சிங்கப்பூரை ஒரு நாள் மாற்றிக்காட்டுவேன்!

இன்றோ..,

 

சிங்கப்பூரைப் போல.....இலங்கையை மாற்றிக்காட்டுவோம்!

 

சீனா தலையிட்டால்.....முதலில் மரணிப்பது பௌத்த மதம்!

இரண்டாவது மரணிப்பது...இலங்கையின் இறைமை!

மூன்றாவதாக மரணிக்கப் போவது.....பார்ப்பனியத்தின் அகங்காரம்!

  • தொடங்கியவர்

சீனாவின் பொறிக்குள் இலங்கை

 
 
சீனாவின் பொறிக்குள் இலங்கை
 

அண்­மை­யில் இலங்கை அரசு சீன அர­சுக்­குச் சொந்­த­மான சைனா மேர்ச்­சன்ஸ் போர்ட் ஹோல்­டிங்ஸ் (China Mercha nts Port Holdings Company Limited) நிறு­வ­னத்­து­டன் அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கம் தொடர்­பான சலுகை ஒப்­பந்­தம் ஒன்றை மேற்­கொண்­டது. இந்த உடன்­ப­டிக்­கை­யின் பிர­கா­ரம், அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கத்­தின் 70 சத­வீத உரிமை குறித்த சீன நிறு­வ­னத்­துக்கு வழங்­கப்­ப­டு­வ­து­டன், இலங்கை துறை­முக அதி­கா­ர­ச­பைக்கு மீதிப் பங்கு உரி­மை­யாக வழங்­கப்­ப­டு­கி­றது.

குவிந்துள்ளன சர்ச்சைகள்

அம்­பாந்­தோட்­டைத் துறை­முக உடன்­ப­டிக்­கை­யா­னது பல்­வேறு சர்ச்­சை­களை உரு­வாக்­கி­யுள்­ளது. இலங்கை அரசு தன் மீதான கடன்­சு­மை­யைக் குறைப்­ப­தற்கு அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கத்­தின் ஒரு பகு­தியை குத்­த­கைக்கு வழங்­கு­வதை மட்­டுமே சிறந்த தெரி­வா­கக் கொண்­டுள்­ளது.

தற்­போது சிறி­லங்கா மிகை­யான கடன் சுமைக்­குள் சிக்­கித் தவிக்­கின்­றது.இலங்கை நடுத்­தர வரு­மான நாடா­கத் தன்னை உயர்த்­திக் கொண்­டுள்ள அதே­வே­ளை­யில், இலங்கை அரசு பெற்­றுக் கொண்ட சலு­கைக் கட­னா­னது தற்­போது நிறுத்­தப்­பட்­டுள்­ளது. இத­னால் இலங்கை அரசு வர்த்­த­கக் கட­னைப் பெற்­றுக் கொள்ள வேண்­டிய நிலைக்­குத் தள்­ளப்­பட்­டது.

இதற்­கும் அப்­பால், சீனா தனது எக்­சிம் வங்­கி­யால் இலங்­கைக்கு உயர் வட்டி வீதத்­தில் கடன் வழங்­கி­யுள்­ளது. இதற்­கான நிதி­யா­னது வர்த்­தக வட்டி விகி­தத்­தில் இறை­யாண்­மைப் பத்­தி­ரத்­தின் ஊடா­கத் திரட்­டப் பட்­டது.
இதன் விளை­வாக, கடந்த பத்து ஆண்­டு­க­ளாக இலங்­கை­யின் வெளிக் கட­னின் அள­வா­னது வியத்­தகு அள­வில் மாறி­யுள்­ளது.

2006ஆம் ஆண்டில் இலங்கை பெற்­றுக் கொண்ட வெளி­ய­கக் கட­னின் 6 சத­வீ­தம் மட்­டுமே வர்த்­த­கக் கட­னா­கக் காணப்­பட்­டது. ஆனால் 2012ஆம் ஆண்டில் இது 50 சத­வீ­த­மாக அதி­க­ரித்­தது. குறிப்­பாக இதற்­கான வட்­டி­வீ­தம் மிக­வும் உயர்­வா­கக் காணப்­ப­டு­கி­றது. இந்்­தக் கடன் சுமை­யா­னது, இலங்­கை­யைப் பொரு­ளா­தார நெருக்­க­டிக்­குள் தள்­ளி­யுள்­ளது.

2006ஆம் ஆண்டில் இலங்­கை­யின் வெளி­ய­கக் கடன் 10.6 பில்­லி­யன் டொல­ரா­கும். கடந்த ஒரு பத்­தாண்­டுக்­குள் வெளி­ய­கக் கடன் 140 சத­வீ­தத்­தால் அதி­க­ரித்­துள்­ளது. 2016ஆம் ஆண்­டின் இறு­தி­யில், இலங்­கை­யின் வெளி­ய­கக் கடன் 25.3 பில்­லி­யன் டொல­ராக அதி­க­ரித்­தது. இது நாட்­டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யின் 34 சத­வீ­த­மா­கும்.
இலங்­கை­யில் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட மொத்­தக் கடன் தொகை­ யில் 13 சத­வீ­தம் அதா­வது 3.3 பில்­லி­யன் டொலர் சீனா­வி­ட­ மி­ருந்து பெறப்­பட்­ட­தா­கும்.

இதில் அதி­க­ள­வான கடன் கடந்த பத்­தாண்டு காலத்­துள் பெறப்­பட்­ட­தா­கும்.
இலங்கை சீனா­வி­ட­மி­ருந்து அதி­க­ள­வான கட­னைப் பெற்­றுக் கொண்­ட­மைக்கு முன்­னைய அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் அர­சும் பொறுப்­பேற்க வேண்­டும்.

அம்­பாந்­தோட்டை
துறை­முகம்
சீனா­வுக்­குக் குத்­த­கைக்கு

z_pi-India-must.jpg

மேற்­கு­லக நாடு­க­ளில் மகிந்த ராஜ­பக்ச ஒரு பிர­ப­ல­மான தலை­வர் அல்ல. ஆனால் ராஜ­பக்ச, சீனா­வு­டன் நெருக்­க­மான உற­வைப் பேணி­யி­ருந்­தார். அத்­து­டன் ராஜ­பக்ச தனது நாட்­டில் கட்­டு­மா­னத் திட்­டங்­களை மேற்­கொள்­வ­தற்­கான கடனை சீனா­வி­ட­மி­ருந்து பெற்­றுக் கொள்­வ­தில் தயக்­கம் காண் பிக்­க­வில்லை.

அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கம் 99 ஆண்­டு­கள் கால குத்­த­கைக்கு, சீனா­வுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்­தத்­து­றை­மு­க­மா­னது, சீனா­வின் நிதிப் பங்­க­ளிப்­பில் மகிந்த ராஜ­பக்­ச­வின் ஆட்­சிக்­கா­லத்­தில் மேற்­கொள்­ளப்­பட்­டது.

சீனா­வி­ட­மி­ருந்து கடன் பெற்றே இந்­தத்­து­றைமு­கம் கட்­டப்­பட்ட போதி­லும், இது சீனா­வுக்கு குத்­த­கைக்கு வழங்­கப்­பட்­டது எனக் கரு­த­மு­டி­யாது.

ஆனால் இலங்­கை­யில் ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கத்தைக் கட்­டு­வ­தற்­குப் பெற்­றுக் கொள்­ளப்­பட்ட கட­னைத் திருப்­பிச் செலுத்­து­வது இலங்கை அர­சுக்கு நெருக்­க­டி­யாக இருந்­த­தால் அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கத்தை நீண்­ட ­கா­லக் குத்­த­கைக்கு வழங்­கு­வ­தென கூட்டு அரசு தீர்­மா­னித்­தது.

அத்­து­டன் அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கத்­தின் மீதும் அதற்கு அரு­கி­லுள்ள மத்­தல விமான நிலை­யத்­தின் மீதும் இடப்­பட்ட முத­லீட்­டுக்கு எதிர்­பார்த்த அளவு வரு­வாய் கிட்­ட­வில்லை.

இத­னால் சீனா­வின் ‘எக்­சிம் வங்­கி’க்­குக் கட­னைத் திருப்­பிச் செலுத்­து­வது இலங்கை அர­சுக்­குப் பெரும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யது. இத­னால் அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கத்தை சீனா­வி­டம் பகிர்ந்து கொள்­வ­தென கூட்டு அரசு தீர்­மா­னித்­தது.

சீனா­வி­ட­மி­ருந்து பெறப்­பட்ட கடன் இலங்­கை­யின் மூலோ­பாய அமை­வி­டங்­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு முத­லீடு செய்­யப்­பட்­ட­து­டன் தற்­போது அவற்­றில் சீனா தனது அதி­கா­ரத்­தைச் செலுத்­து­வ­தற்­கும் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது.

இரு­த­லைக் கொள்ளி எறும்பின்
நிலைக்­குத் தள்­ளப்­பட்ட
இலங்கை அரசு

பொரு­ளா­தார இரா­ஜ­தந்­தி­ரத்­தின் ஊடாக தென்­னா­சி­யப் பிராந்­தி­யத்­தில் தனது அதி­கா­ரத்தை நிலை­நி­றுத்­தும் சீனா­வின் மூலோ­பா­யத்தை இந்­தியா மிக­வும் நெருக்­க­மாக அவ­தா­னித்து வந்­துள்­ளது. இது தொடர்­பில் இந்­தியா தனது அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­ய­து­டன், அதன் விளை­வாக இலங்கை அரசு இரு­த­லைக் கொள்ளி எறும்­பின் நிலைக்­குத் தள்­ளப்­பட்­டது.

இலங்கை மீதான சீனா­வி­னது பொரு­ளா­தார அதி­கா­ரத்­து­வ­மா­னது கடன் என்­ப­து­டன் மட்­டு­மல்­லாது, முத­லீ­டு­ க­ளை­யும் நோக்­கா­கக் கொண்­டி­ருந்­தது. 2005ஆம் ஆண்­டில், சீனா­வி­ட­மி­ருந்து பெறப்­பட்ட வரு­டாந்த வெளி­நாட்டு நேரடி முத­லீ­டா­னது ஒரு மில்­லி­யன் டொல­ருக்­கும் குறை­வா­கவே காணப்­பட்­டது.

ஆனால் 2014ஆம் ஆண்­டில் அது இது 400 மில்­லி­யன் டொலர் வரை அதி­க­ரித்­தது. இந்­தக் கடன் மூலமே கொழும்­புத் துறை­முக நக­ரத் திட்­ட­மும் ஆரம்­பிக்­கப்­பட்­டது. இந்­தத் திட்­ட­மா­னது பின்­னர் கொழும்பு பன்­னாட்டு நிதி மைய­மாக பெயர் மாற்­றப்­பட்­டது.

இந்­தத் திட்­ட­மா­னது இலங்­கை­யின் இறை­யாண்மை தொடர்­பான கேள்­வியை எழுப்­பி­யது. அதா­வது இத்­திட்­டத்­தின் மூலம் கொழும்­புத் துறை­மு­கத்­துக்கு அரு­கி­லுள்ள நிலம் 99 ஆண்­டு­கா­லக் குத்­த­கைக்கு சீனா­வுக்கு வழங்­கப்­பட்­ட­தால் அது சர்ச்­சைக்­கு­ரிய திட்­ட­மாக அடை­யா­ளம் காணப்­பட்­டது.

கடந்த பத்­தாண்­டு­கள் காலத்­துள் சீனா­வி­ட­மி­ருந்து 1.1 பில்­லி­யன் டொலர் நிதி நேரடி வெளி­நாட்டு முத­லீ­டா­கப் பெறப்­பட்­டது. இதே காலப்­ப­கு­தி­யில் இலங்­கை­யில் அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து 400 மில்­லி­யன் டொலர் மட்­டுமே நேரடி வெளி­நாட்டு முத­லீ­டா­கப் பெறப்­பட்­டது.

சீனா­வின் உத­வியை
நாட­வேண்­டிய
நிலைக்­குத் தள்­ளப்­பட்ட
இலங்கை

இலங்­கை­யில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்­கள் மேற்­கு­ல­கின் அதி­ருப்­தி­யைச் சம்­பா­திக்­கக் கார­ண­மா­கி­யது. இத­னால் இலங்­கைக்கு வேறெந்­தத் தெரி­வும் இல்­லா­த­தால், சீனா­வின் உத­வியை நாட­வேண்­டிய நிலைக்கு இலங்கை அரசு தள்­ளப்­பட்­டது. பணம் தேவைப்­ப­டும் இடத்­தில் சீனா இருக்­கும் என்­ப­தற்கு இது ஒரு எடுத்­துக்­காட்­டா­கும்.

சீனா தனது பூகோள அர­சி­யல் அமை­வி­டத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக இந்­தியக் க­டல் பிராந்­தி­யத்­தில் ‘ஒரு அணை ஒரு பாதை’ என்­கின்ற திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கி­றது. சீனா தனது இந்­தத் திட்­டத்தை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுத்­துச் செல்­வ­தற்­காக இந்­திய க் கட­லில் உள்ள சில நாடு­க­ளில் அபி­வி­ருத்­தித் திட்­டங் களை மேற்­கொண்டு வரு­கி­றது.

இந்­த­வ­கை­யில் இலங்­கை­யும் சீனா­வின் உத­வி­யைப் பெறும் நாடு­க­ளில் ஒன்­றாக உள்­ள­தால், இலங்கை தனக்­குக் கிடைத்த இந்த வாய்ப்­பைக் கைந­ழுவ விரும்­ப­வில்லை.

இலங்­கை­யில் மட்­டு­மல்­லாது பாகிஸ்­தா­னின் குவ­டார் துறை­மு­கத்­தி­லும் பங்­க­ளா­தே­ஷிலும் சீனா முத­லீ­டு­ க­ளைச் செய்­துள்­ளது. இந்­த­ வ­கை­யில், இலங்­கை­யா­னது வீழ்ச்­சி­ய­ டைந்­தி­ருந்த தனது பொரு­ளா
­தா­ரத்தை மீட்­டெ­டுப்­ப­தற்­கான ஒரு வாய்ப்­பாக சீனா­வின் உத­வி­யைப் பயன்­ப­டுத்­தி­யது.

சவாலை எதிர்­கொள்­ளும்
நிலை­யில் இலங்கை

எனி­னும், கடன் போன்ற இரா­ஜ­தந்­திர நட­வ­டிக்­கை­க­ளைச் சரி­யா­கக் கையா­ளா­விட்­டால் இலங்கை சீனா­வின் பொறிக்­குள் விழுந்­து­வி­டும் ஆபத்து உள்­ளது.

ஆகவே இலங்கை அரசு இந்த விட­யத்தை மிக­வும் சரி­யான வகை­யில் கையாள்­வ­து­டன் இது இலங்­கைக்கு ஒரு சவா­லான பணி­யா­க­வும் காணப்­ப­டும் என்­ப­தால் தேவைப்­ப­டும் இடங்­க­ளில் விட்­டுக்­கொ­டுப்­புக்­களை மேற்­கொள்­வ­தன் மூலம் சம­வ­லு­வைப் பேணித் தன்­னைப் பாது­காத்­துக் கொள்­வ­தற்­கான வழி­வ­கை­களை இலங்கை அரசு கண்­ட­றிய வேண்­டும்.

அது­மட்­டு­மல்­லாது அவ­சி­ய­மான வேளை­க­ளில் தனது நாட்­டின் தேசிய நலனை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கும் இலங்கை அரசு மறந்து விடக் கூடாது.

ஆங்­கில வழி­மூ­லம்:
த டிப்­ளோ­மற்
தமி­ழில்: நித்­தி­ய­பா­ரதி

http://newuthayan.com/story/23553.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.