Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எதிர் அவுஸ்திரேலியா ஒருநாள் போட்டி தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

#IndVsAus: இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 335!

 

இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 334 ரன்கள் குவித்துள்ளது.

களத்தில் ஆஸ்திரேலியா வீரர்கள்

 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஐந்து போட்டிகள்கொண்ட இத்தொடரில், மூன்று போட்டிகளில் வென்றதன் மூலம் தொடரில் வெற்றியை உறுதிசெய்த இந்திய அணி, இன்று எவ்வித பதற்றமும் இன்றியே விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்ததால், கடைசி இரண்டு போட்டிகளில் ஆறுதல் வெற்றி பெறும் நோக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியுள்ளது.

இன்றைய போட்டிக்கான டாஸை வென்று பேட்டிங் ஆட தீர்மானித்தது ஆஸ்திரேலியா. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக டேவிட் வார்னர் சதம் விளாசினார். மற்றொரு தொடக்க வீரரான ஆரோன் ஃபின்ச், 94 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 334 ரன்கள் குவித்துள்ளது. இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

http://www.vikatan.com/news/sports/103573-australia-sets-target-of-335-run-to-india-in-4th-odi.html

202/3 (32.4/50 ov, target 335)
 
 
  • Replies 60
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு ஆறுதல் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு ஆறுதல் வெற்றி
 
பெங்களூரு:

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் பின்ச் ஆகியோர் முதலில் இருந்தே நிதானமாக விளையாடினர். நூறாவது போட்டியில் விளையாடிய வார்னர் 103-வது பந்தில் சதமடித்தார். அவரை தொடர்ந்து பின்ச்சும் அரை சதமடித்தார்.

201709282221313779_1_0gx9d5rh._L_styvpf.

இந்த ஜோடியை கேதார் ஜாதவ் பிரித்தார். 35 ஓவரில் 231 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜாதவ் வீசிய பந்தை தூக்கியடித்த வார்னர் அக்சர் படேலிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அவர் 119 பந்துகளில் 4 சிக்சர், 12 பவுண்டரியுடன் 124 ரன்கள் எடுத்தார். 

அவரை தொடர்ந்து சதத்தை நெருங்கிய பின்ச், உமேஷ் பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்தார். இவர் 96 பந்துகளில் 3 சிக்சர், 10 பவுண்டரியுடன் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய ஸ்மித்தையும் உமேஷ் யாதவ் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார். அப்போது ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின்னர் டிராவிஸ் ஹெட் மற்றும் ஹேண்ட்ஸ்கோம்பும் நிதானமாக விளையாடினர்.  இந்த ஜோடி 63 ரன்கள் சேர்த்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் டிராவிஸ் ஹெட் அவுட்டானார். கடைசியில் அதிரடியாக ஆடிய ஹாண்ட்ஸ்கோம்ப், 30 பந்துகளில் ஒரு சிக்சர், 4 பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்து உமேஷிடம் வீழ்ந்தார்.

201709282221313779_2_bglubdy3._L_styvpf.

இறுதியில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டும், கேதார் ஜாதவ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இந்த போட்டியில் உமேஷ் யாதவ் தனது 100வது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். 

இதைதொடர்ந்து 335 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரகானேவும் ரோகித் சர்மாவும் களமிறங்கினர். இந்த ஜோடி நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தது. 106 ரன்கள் எடுத்த நிலையில் ரகானே ஆட்டமிழந்தார். அவர் 66 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். அவரை தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினார். ஆனால் அவர் அவசரப்பட்டு ஓடியதால் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா ரன் அவுட்டானார். அவர் 55 பந்துகளில் 5 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கோலி 21 ரன்களில் வெளியேறினார். அதிரடி வீரரான ஹர்திக் பாண்ட்யா 40 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 41 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

அதன்பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. கேதார் ஜாதவ் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 67 ரன்கள் சேர்த்தார். மணீஷ் பாண்டே 33 ரன்களும், டோனி 13 ரன்களும் அடித்தனர். இறுதிக்கட்டத்தில், ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக பந்துவீசினர். இதனால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியா பெறும் முதல் வெற்றி இதுவாகும்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் ரிச்சர்ட்சன் 3 விக்கெட், கோல்டர்நைல் 2 விக்கெட்டும், சம்பா, கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். டேவிட் வார்னர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/28222125/1110529/australia-beat-india-by-21-runs-in-foruth-oneday.vpf

  • தொடங்கியவர்

இந்திய அணி தோல்வி குறித்து கோலி விளக்கம்

 

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தத் தோல்வியினால் முதலிடத்தில் இருந்த இந்திய அணி தற்போது இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

kohli

 

இந்நிலையில் இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு கேப்டன் கோலி செய்தியாளர்களைச் சந்தித்த போது தோல்வி குறித்து விளக்கமளித்தார். அப்போது அவர், “முதல் 30 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி மிக பலமான இடத்தில் இருந்தது. அந்த நிலையில் அவர்களை 350 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என நினைத்தோம். அதைச் சிறப்பாக செய்து முடித்தோம். எங்கள் அணிக்கும் நல்ல தொடக்கம் கிடைத்தது. எனினும், அதன் பிறகு பெரிய பார்ட்னர்ஷிப் அமையாததால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. 
ஆஸ்திரேலிய அணியும் சிறப்பாகப் பந்து வீசியது. பாண்டியா மற்றும் கேதர் ஜாதவ் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த போதும், அவர்களது சிறப்பான பந்துவீச்சால் கட்டுப்படுத்தினர்.

 

ஏற்கெனவே தொடரை வென்று விட்டதால்,அணியில் இருக்கும் மற்ற வீரர்களைப் பயன்படுத்துவது என்பதுதான் சரியாக இருக்கும். அதன் படி களமிறங்கிய சமி மற்றும் உமேஷ் யாதவ் சிறப்பாகப் பந்து வீசினார்கள். சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எல்லா நாளும் நல்ல நாளாக அமைந்து விடாது. நேற்றும் அது போல் ஒரு நாளாக அமைந்துவிட்டது” என்றார்.

http://www.vikatan.com/news/sports/103626-kohli-explains-about-the-fourth-one-day-international-in-bangaluru.html

  • தொடங்கியவர்

நாக்பூரில் இன்று 5-வது ஒரு நாள் போட்டி! #IndvsAus

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று  நடைபெற உள்ளது. முதலில் மோதிய நான்கு போட்டிகளில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தும்  5 போட்டிகள் கொண்ட தொடரில்  3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணி

 

பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என்று அனைத்திலும் பலமாக உள்ள இந்திய அணியை சமாளிக்க ஆஸ்திரேலிய அணி திணறிவருகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்திய அணி நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளைப் பதிவு செய்தது. இதன் மூலம் இந்த ஒரு நாள் போட்டித் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, இன்று இத்தொடரின் இறுதிப்போட்டியில் களமிறங்குகிறது.  இப்போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் சர்வதேச தரவரிசையில் மீண்டும் முன்னேறியே இருக்க இந்திய அணியும், போட்டியை வென்று இத்தொடரில் ஆறுதல் வெற்றியைத் தேட ஆஸ்திரேலிய அணியும் தீவிரம் காட்டும் என்பதால் இப்போட்டியும் ரசிகர்களுக்கு விருந்தாகவே அமையும் என்று தெரிகிறது. 

http://www.vikatan.com/news/sports/103775-fifth-odi-at-nagpur-indvsaus.html

  • தொடங்கியவர்

கடைசி ஒருநாள் போட்டி : இந்திய அணி பவுலிங் #IndvsAus

 
 

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மகாராஷ்டிராவின் நாக்பூரில் இன்று தொடங்கியது. முதலில் மோதிய நான்கு போட்டிகளில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தும்  5 போட்டிகள் கொண்ட தொடரில்  3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தெர்வு செய்தார்.   

india vs australia

  • தொடங்கியவர்

 

ஆரோன் பின்ச் 32 ரன்களில் 'அவுட்' (ஆஸி., 11.3 ஓவரில், 66/1 ரன்)

  • தொடங்கியவர்

கடைசி ஒருநாள் போட்டி : அடுத்தடுத்து விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா #IndVsAus

ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்து இருந்த ஆஸ்திரேலிய அணி, அடுத்த 18 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி தனது நான்காவது விக்கெட்டை இழந்தது. அந்த அணியின் ஹேண்ட்ஸ்கொம்ப் 13 ரன்களில் அக்‌ஷார் படேல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இது அவருக்கு மூன்றாவது விக்கெட் ஆகும். 25 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழபிற்கு 119 ரன்கள் எடுத்துள்ளது.

 

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டகாரரான வார்னர் 53 ரன்களில் அக்‌ஷார் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். படேல் பந்து வீச்சில் தூக்கி அடிக்க பவுண்டரி அருகில் மணிஷ் பாண்டே பந்தை பிடித்தார். குறுகிய இடைவெளியில் இரண்டு விகெட்டுகளை இழந்ததால் அந்த அணியின் ரன்விகிதம் சற்று குறைந்துள்ளது

 

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் 16 ரன்களில், பகுதி நேர பந்து வீச்சாளரான கேதர் ஜாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த வார்னர் 50 ரன்களுடன் களத்தில் உள்ளார்.  அந்த அணி 19.3 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி ட்ரிங்ஸ் இடைவேளையின் போது 18 ஓவரில், ஒரு விக்கெட் இழபிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 47 ரன்களுடனும் ஸ்மித் 13 ரன்களுடனும் ஆடி வருகின்றனர், 

ஆஸ்திரேலிய அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. தொடக்க ஆட்டக்காரர் பின்ச் 36 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து பாண்டியா வீசிய பந்தில் பும்ராஹ்விடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 11.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 66ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி ஆடிவருகிறது.

5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் பின்ச் நிதானமான தொடக்கத்தை அளித்துள்ளனர். 5 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21ரன்கள் எடுத்துள்ளனர் வார்னர் 10 ரன்களிலும்,பின்ச் 11 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

india vs aus

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மகாராஷ்டிராவின் நாக்பூரில் இன்று தொடங்கியது. முதலில் மோதிய நான்கு போட்டிகளில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தும்  5 போட்டிகள் கொண்ட தொடரில்  3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தெர்வு செய்தார்.   

india vs australia
 

 

 

http://www.vikatan.com/news/sports/103786-ind-vs-aus-5th-odi-australia-opts-to-bat.html

  • தொடங்கியவர்

கடைசி ஒருநாள் போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி ! #IndVsAus

 
 
 
 

இந்திய அணி கடைசி ஒருநாள் போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தி ஆஸ்திரேலிய அணியை வீழ்தியது. மணிஷ் பண்டே 11 ரன்களுடனும், கேதர் ஜாதவ் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலன் இந்தியா தொடரை 4-1 என கைப்பற்றியது

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா 125 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய அவர் 11 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்கள் பறக்கவிட்டார். அதே ஓவரில் நான்காவது பந்தில் கேப்டன் கோலி அடித்து ஆட நினைத்து தூக்கி அடிக்க ஆட்டமிழந்தார். அவர் 39 ரன்கள் எடுத்தார். இந்திய அணிக்கு 60 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே தேவை

 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா சிக்சர் மூலம் தனது சதத்தை பதிவு செய்தார். இந்தியா வெற்றி பெற 88 பந்துகளில் 55 ரன்கள் தேவை.

1_99_20560.jpg

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி இலக்கை நோக்கி எளிதாக செல்கிறது. 34 ஓவர்கள் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் மட்டும் இழந்து 180 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா 96 ரன்களுடனும், கேப்டன் கோலி 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா வெற்றி பெற 96 பந்துகளில் 63 ரன்கள் தேவை. 

சிறப்பாக விளையாடி வந்த நிலையில் ரஹானே 61 ரன்களில் கவுல்டர்நைல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தற்போது கேப்டன் கோலி களமிறங்கி உள்ளார். இந்தியா 23 ஓவர்கலில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா 63 ரன்களுடன் களத்தில் உள்ளார்

ரோஹித் ஷர்மா இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் வேகமாக 2000 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இந்திய அணி கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி இலக்கை நோக்கி சிறப்பாக விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய ரஹானே மற்றும் ரோஹித் ஷர்மா சிறப்பான தொடக்கத்தை அளித்துள்ளனர். 15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 79 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 42 ரன்களும் ரோஹித் 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

rohit

இந்திய அணி 243 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. ஐந்து ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. ரஹனே 13 ரன்களும் ரோஹித் ஷர்மா 8 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்

கடைசி ஒருநாள் போட்டியில்  243 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி தனது இன்னிங்ஸை தொடங்கி உள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் ரஹானே களமிறங்கி உள்ளனர். 

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 243 ரன்களை ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது. 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்களை ஆஸ்திரேலிய அணி எடுத்தது. நல்ல தொடக்கம் அமைந்தும் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை.

indvsaus

நிலையாக ஆடிவந்த ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டாய்னிஸ்- ஹெட் ஜோடி ஆட்டமிழந்ததால் மீண்டும் ஆஸ்திரேலிய அணி சரிந்துள்ளது. ஹெட் 42 ரன்களிலும் ஸ்டாய்னிஸ் 46 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 45 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது.

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணியை சரிவிலிருந்து ஸ்டாய்நிஸ் - ஹெட் ஜோடி மீட்டு வருகின்றது. 50 ரன் பார்ட்னர்ஷிப்பைக் கடந்து இந்த ஜோடி ஆடிவருகிறது. 37 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் அடித்து ஆஸ்திரேலிய அணி ஆடிவருகிறது.

ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்து இருந்த ஆஸ்திரேலிய அணி, அடுத்த 18 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி தனது நான்காவது விக்கெட்டை இழந்தது. அந்த அணியின் ஹேண்ட்ஸ்கொம்ப் 13 ரன்களில் அக்‌ஷார் படேல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இது அவருக்கு இரண்டாவது விக்கெட் ஆகும். 25 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழபிற்கு 119 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டகாரரான வார்னர் 53 ரன்களில் அக்‌ஷார் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். படேல் பந்து வீச்சில் தூக்கி அடிக்க பவுண்டரி அருகில் மணிஷ் பாண்டே பந்தை பிடித்தார். குறுகிய இடைவெளியில் இரண்டு விகெட்டுகளை இழந்ததால் அந்த அணியின் ரன்விகிதம் சற்று குறைந்துள்ளது

 

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் 16 ரன்களில், பகுதி நேர பந்து வீச்சாளரான கேதர் ஜாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த வார்னர் 50 ரன்களுடன் களத்தில் உள்ளார்.  அந்த அணி 19.3 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி ட்ரிங்ஸ் இடைவேளையின் போது 18 ஓவரில், ஒரு விக்கெட் இழபிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 47 ரன்களுடனும் ஸ்மித் 13 ரன்களுடனும் ஆடி வருகின்றனர், 

ஆஸ்திரேலிய அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. தொடக்க ஆட்டக்காரர் பின்ச் 36 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து பாண்டியா வீசிய பந்தில் பும்ராஹ்விடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 11.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 66ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி ஆடிவருகிறது.

5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் பின்ச் நிதானமான தொடக்கத்தை அளித்துள்ளனர். 5 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21ரன்கள் எடுத்துள்ளனர் வார்னர் 10 ரன்களிலும்,பின்ச் 11 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

india vs aus

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மகாராஷ்டிராவின் நாக்பூரில் இன்று தொடங்கியது. முதலில் மோதிய நான்கு போட்டிகளில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தும்  5 போட்டிகள் கொண்ட தொடரில்  3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தெர்வு செய்தார்.   

http://www.vikatan.com/news/sports/103786-ind-vs-aus-5th-odi-australia-opts-to-bat.html

  • தொடங்கியவர்

WR_20171001223419.jpeg

ஆஸி.,க்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 4–1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. வெற்றிக்கோப்பையுடன் இந்திய அணியினர். இடம்: நாக்பூர்.

  • தொடங்கியவர்

டாப் 4 சிறப்பாக செயல்படவில்லை: ஸ்டீவ் ஸ்மித் வருத்தம்

இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மகாராஷ்டிராவின் நாக்பூரில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பறிய்யுள்ளது. ஐந்தாவது ஒரு நாள் போட்டி முடிவடைந்ததை அடுத்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

ஸ்டீவ் ஸ்மித்

 
 

செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்மித் கூறியதாவது, 'இந்த தொடர் முழுவதும் நாங்கள் சில இடங்களில் நன்றாக விளையாடினோம். ஆனால், மொத்த தொடராக பார்க்கும் போது, நாங்கள் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பது தெரியும். பேட்டிங்கை பொறுத்தவரை, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது சரியில்லை. பேட்டிங் வரிசையில் முதலில் களமிறங்கும் நால்வர்தான் நன்றாக விளையாடி ஆட்டத்துக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்க வேண்டுபம். அதை இந்த தொடரில் சரியாகச்  செய்யவில்லை. அப்படிச் செய்தால்தான் கடைசி ஓவர்களில் அதிக ரன்களை விரைவாக ஸ்கோர் செய்ய முடியும். என்னளவில் இந்த தொடரில் மிகவும் சோபிக்கவில்லை. ஆனால், 20 ஓவர் தொடர் அடுத்து வர உள்ளது. அதில் நானும் எங்கள் அணியும் நன்றாக விளையாடுவோம்' என்று தெரிவித்துள்ளார். 

http://www.vikatan.com/news/sports/103812-the-top-four-need-to-stand-up-and-really-take-control-steve-smith.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.