Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டசபையில் முதல்வருக்கு எதிராக வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் யார்? ஆர்.டி.ஐ. தகவல்களுக்கு பதிலளிக்க மறுத்த அரசு

Featured Replies

சட்டசபையில் முதல்வருக்கு எதிராக வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் யார்? ஆர்.டி.ஐ. தகவல்களுக்கு பதிலளிக்க மறுத்த அரசு 

 
 

 ஆர்.டி.ஐ. கேள்வி

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் நம்பிக்கைகோரும் வாக்கெடுப்பில் அவருக்கு எதிராக வாக்களித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களின் விவரம், எம்.எல்.ஏக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆர்.டி.ஐ. தகவல்களுக்கு, சட்டமன்ற செயலாளர் அலுவலகம் பதிலளிக்கவில்லை. 

நெல்லை, வி.எம்.சத்திரம், வ.உ.சி. நகரைச் சேர்ந்த  வழக்கறிஞர் பிரம்மா,  சட்டமன்ற செயலாளர் அலுவலக பொது தகவல் அலுவலர் மோகன்ராஜாவிடம் ஆர்.டி.ஜ. மூலம் கடந்த 19.8.2017ல் தகவல்களை கேட்டிருந்தார். 
பிரம்மா கேட்ட ஆர்.டி.ஐ. தகவல்கள் பின்வருமாறு:

* சட்டசபை செயலாளராக 2017 முதல் பணிபுரிந்து வரும் நபரின் பெயர், பணியில் சேர்ந்த காலம் மற்றும் அவரின் குடியிருப்பு முகவரி தர வேண்டும்.

* சட்டசபை செயலாளர் பணிபொறுப்பேற்ற பிறகு நம்பிக்கைகோரும் தீர்மானம் எந்தெந்த தேதிகளில் சட்டசபையில் கொண்டு வரப்பட்டது என்ற விவரம் தர வேண்டும். 

* சட்டசபையில் நம்பிக்கைகோரும் தீர்மானம் கொண்டு வந்த முதல்வரின் பெயர், அவர் வெற்றி பெற்ற தொகுதியின் பெயர் விவரம் வேண்டும்.

* சட்டசபையில் நம்பிக்கைகோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெற்ற பெரும்பான்மை வாக்குகள் எத்தனை? என்ற விவரம் வேண்டும்.

* சட்டசபையில் நம்பிக்கைகோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் மொத்தம் எத்தனை பேர்?, அவர்களின் பெயர்கள், வெற்றி பெற்ற தொகுதிகளின் பெயர், தொகுதி எண் மற்றும் எந்தக் கட்சி சார்பாக சட்ட மன்ற உறுப்பினராக உள்ளனர் என்ற விவரம் வேண்டும்.

* சட்டசபையில் நம்பிக்கைகோரும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த சட்டமன்ற உறுப்பினர்கள் மொத்தம் எத்தனை பேர்? அவர்கள் பெயர், வெற்றி பெற்ற தொகுதிகளின் பெயர், தொகுதி எண், மற்றும் எந்த கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் என்ற விவரம் வேண்டும்.

* சட்டசபையில் நம்பிக்கைகோரும் தீர்மானம் குறித்து ஒவ்வொரு கட்சிகளின் கொறடாக்கள் உத்தரவிட்ட நகல் தர வேண்டும்.

* சட்டசபை கொறடாவாக உள்ள உறுப்பினரின் பெயர் அவர் சார்ந்த கட்சியின் விவரம் தர வேண்டும்.

* சட்டசபையில் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த உறுப்பினர்கள் எத்தனை பேர், வாக்களித்த உறுப்பினர்கள் சார்ந்த கட்சி விவரம் தர வேண்டும்.

* சட்டசபையில் அ.தி.மு.க. கட்சியின் கொறடாவாக உள்ள நபரின் பெயர் விவரம் தர வேண்டும்.

* சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வந்த சமயம் தீர்மானத்துக்கு எதிராக அ.தி.மு.க கட்சியை சார்ந்த எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தார்கள் என்ற விவரம் தர வேண்டும்.

* முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வந்த சமயம் அ.தி.மு.க. கட்சி எம்.எல்.ஏ.க்கள் எத்தனை பேரை நீக்கம் செய்து கட்சி கொறடா உத்தரவிட்டார் என்ற விவரம் வேண்டும்.

* சட்டசபையில் கட்சி கொறடா உத்தரவுக்கு எதிராக செயல்படும் கட்சி உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சட்டப்படி யாருக்கு உள்ளது என்ற விவரம் வேண்டும்.

* சட்டசபையில் கடந்த 10 ஆண்டுகளில் கட்சி கொறடா உத்தரவுக்கு எதிராக செயல்பட்ட கட்சி உறுப்பினர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் அது தொடர்பான நடவடிக்கையின் விவரம் அடங்கிய அறிக்கை நகல் தர வேண்டும் என தகவல்கள் கேட்கப்பட்டிருந்தன.

13 தகவல்களில் சட்ட சபை பொதுத் தகவல் அலுவலர் மோகன் ராஜா, ஒன்றுக்கு மட்டுமே பதிலளித்துள்ளார். அதில் 'கூடுதல் செயலாளர் பூபதி, கடந்த 31.5.2017 பிற்பகல் செயலாளராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகிறார். அவரது குடியிருப்பு சென்னை கீழ்பாக்கம் கார்டன் காலனியில் உள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வழக்கறிஞர் பிரம்மாஇதுகுறித்து வழக்கறிஞர் பிரம்மா கூறுகையில், "சட்டசபையில் நடந்த நம்பிக்கைகோரும் தீர்மானம் தொடர்பாக ஆர்.டி.ஐ. மூலம் 13 தகவல்களைக்கேட்டிருந்தேன். ஆனால், ஒன்றுக்கு மட்டுமே பதிலளிக்கப்பட்டுள்ளது. பதிலளிக்க மறுத்தது, உள்நோக்கம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நம்பிக்கைகோரும் தீர்மானத்தை கொண்டுவந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அவருக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால், அந்த விவரத்தை சட்டமன்ற செயலாளர் அலுவலகம் பதிலளிக்க மறுத்துள்ளது. மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியில் உள்ளவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், தினகரன் அணியில் உள்ள 18 எம்.எல்.ஏக்கள், அ.தி.மு.க. கொறடா புகாரின்பேரில் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நான் கேட்ட ஆர்.டி.ஜ. தகவல்களுக்குப் பதிலளிக்கப்படாததால்  மேல்முறையீடு செய்துள்ளேன்" என்றார். 

http://www.vikatan.com/news/tamilnadu/103171-government-denies-sharing-date-regarding-rti-on-mlas.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.