Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதாவையே எச்சரித்த விருதுநகர் புள்ளி... சசிகலாவுக்கு எதிராக வாக்குமூலம் அளிப்பாரா!? #VikatanExclusive

Featured Replies

ஜெயலலிதாவையே எச்சரித்த விருதுநகர் புள்ளி... சசிகலாவுக்கு எதிராக வாக்குமூலம் அளிப்பாரா!? #VikatanExclusive

 

2_11107.jpg

ஜெயலலிதா மரணத்தில் சசிகலா, தினகரனைச் சிக்கவைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தரப்பினர் மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டுள்ளனர். அது, சசிகலா குடும்பத்தினருக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்று சொல்கின்றன உள்விவர வட்டாரங்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தினகரனுக்கும் இடையே நடந்துவரும் மோதல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் வியூகத்தால் நிலைகுலைந்துள்ளனர் தினகரன் ஆதரவாளர்கள். குறிப்பாகத் தற்காலிகப் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட சசிகலாவை நீக்கியதும், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் தினகரன் ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில்பாலாஜி ஆகியோருக்குக் கொடுக்கப்படும் நெருக்கடி தினகரன் ஆதரவாளர்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. செந்தில் பாலாஜிமீது எடுக்கப்படும் நடவடிக்கை தினகரன் ஆதரவாளர்களுக்கு நிச்சயம் பயத்தை ஏற்படுத்தும் என்று கணக்குப்போட்டுள்ளனர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர்.

தினகரன்மீது அதிருப்தியிலிருக்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. அதில், சிலர் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் தாவ முடிவு செய்துள்ளனர். அவர்கள் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க அனுமதி கேட்டுள்ளனர். தங்கள்மீது எடுக்கப்பட்ட தகுதி நீக்கத்தை ரத்துசெய்ய உறுதியளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் பேச்சுவார்த்தையின்போது முன்வைத்துள்ளனர் தினகரனை ஆதரித்த முன்னாள் எம்.எல்.ஏ-க்கள். இதற்கு சட்டரீதியாக ஆலோசித்துவிட்டு பதிலளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பதிலளித்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில் கர்நாடகச் சொகுசு விடுதிக்குச் சென்ற தினகரன், அங்கு தன்னுடைய ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களில் சிலர் விரக்தியில் பேசியுள்ளனர். இதைக்கேட்ட தினகரன், நீதிமன்றத்தில் நிச்சயம் நமக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று சொல்லியதாகக் கூறப்படுகிறது. தினகரனின் சமாதான பேச்சுக்குச் சிலர் உடன்படவில்லை.

ops-_edapadi_2a_11163.jpg

சசிகலா குடும்பத்தினரால் இனி, சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்க எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர். ஜெயலலிதா மரண விவகாரத்தில் சசிகலா குடும்பத்தினர் மீது பழி சொல்லத் தொடங்கியுள்ளனர் எடப்பாடி பழனிசாமி அணியினர். மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவை, நாங்கள் பார்க்கவில்லை என்றும் சசிகலா கூறியதைப்போல பொய் சொன்னோம் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்படும் விசாரணைக் கமிஷனில்கூட சசிகலா குடும்பத்தினர்மீது குற்றம் சுமத்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் முடிவுசெய்துள்ளனர். ஜெயலலிதா மரண விவகாரத்தை கையில் எடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்குப் பதிலடி கொடுக்க தினகரன் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார். மருத்துவமனை வீடியோ, புகைப்படங்களை வெளியிடலாமா என்று சசிகலா குடும்பத்தினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வீடியோ, புகைப்படங்களால் சிக்கல் வரக் கூடாது என்பதிலும் சசிகலா குடும்பத்தினர் கவனமாக உள்ளனர். இதுதொடர்பாக சசிகலாவிடம் ஆலோசிக்க தினகரன் முடிவுசெய்துள்ளார். ஆனால், சசிகலாவைச் சந்திக்க தினகரனுக்கு அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி தரப்பினர், சசிகலா குடும்பத்தினரால் ஆட்சிக்கும் கட்சிக்கும் இனி சிக்கல் ஏற்படாது. முடக்கி வைக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னம் விரைவில் எங்களுக்குக் கிடைத்துவிடும். நாங்கள் கொடுத்த பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் நிச்சயம் ஏற்றுக்கொண்டு சசிகலாவின் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவி செல்லாது என்று அறிவிக்கும். அதன்பிறகு தினகரனின் ஆதரவாளர்கள் எங்கள் பக்கம் வருவார்கள். இல்லையென்றால் புதிய கட்சியைத் தொடங்குவார்கள். சசிகலா குடும்பத்தினரை மக்களும் அ.தி.மு.க தொண்டர்களும் எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது நடந்த நிகழ்வுகளிலுள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முடிவு செய்துவிட்டோம். அங்கு என்ன நடந்தது என்பதை மக்களிடம் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் உண்மையைச் சொன்னால் நிச்சயம் சசிகலா குடும்பத்தினருக்கு சிக்கல் ஏற்படும். ஜெயலலிதா மரண விவகாரம், அவர் மறைவுக்குப் பிறகு, கட்சியைக் கைப்பற்ற சசிகலா குடும்பத்தினர் செய்த சதித் திட்டம் ஆகியவை குறித்து விளக்கமாகப் பேசவுள்ளோம். ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய மிரட்டிய சசிகலா குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஜெயலலிதாவுக்கு ஆரூடம் சொன்ன முக்கிய வி.வி.ஐ.பி ஒருவர், சசிகலா குறித்த உண்மைகளையும் அப்போலோ ரகசியத்தையும் மக்கள் மன்றத்தில் விளக்கமாகச் சொல்லத் தயாராக இருக்கிறார். அவர், விரைவில் மீடியாக்களிடம் சசிகலா குறித்து பரபரப்பு தகவல்களை வெளியிட உள்ளார்" என்றனர்.

 

யார் அந்த வி.வி.ஐ.பி. என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் கேட்டதற்கு, "போயஸ் கார்டனில் ஜெயலலிதாவைச் சந்திக்க அனுமதி இல்லாமல் சென்ற விருதுநகர் வி.வி.ஐ.பி-தான் அவர். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் செல்வீர்கள் என்று ஜெயலலிதாவிடமே தைரியமாகச் சொன்னவர்" என்று சூசகமாகத் தெரிவித்தனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/103225-virudhunagar-cadre-who-warned-jayalalithaa-in-past-likely-to-act-against-sasikala.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.