Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு

Featured Replies

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு

 

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு
 
சென்னை:

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலன் இன்றி டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

அவர் மரணம் குறித்த சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்த நிலையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். ஆனால், விசாரணை அதிகாரி நியமிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்கான விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது, நாங்கள் யாரும் அவரை பார்க்கவில்லை. அவர் இட்லி சாப்பிட்டார் என்று பொய் சொன்னோம்’ என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். 

முறைப்படி விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு விரைவில் விசாரணை தொடங்கும் என்றும், சிபிஐ விசாரணை நடத்தினாலும் தவறு இல்லை என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/25170634/1109873/inquiry-commission-headed-by-retired-judge-was-formed.vpf

  • தொடங்கியவர்
 
 
பேட்டியளித்த,பிரபலங்கள்,பீதி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, தமிழக அரசால் நியமிக்கப்
பட்டுள்ள, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், அடுத்த வாரம் அதிரடி விசாரணையை
துவக்குகிறது. அதனால், கமிஷனின் விசாரணை வளையத்துக்குள், யார் யார் வருவர் என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

பேட்டியளித்த,பிரபலங்கள்,பீதி!

ஜெ.,வை பார்க்க, அப்பல்லோ மருத்துவமனை சென்று வந்த பிரபலங்களும், 'விரைவில் வீடு திரும்புவார்' என, பேட்டி அளித்தவர்களும், 'சம்மன் வருமோ...' என்ற பீதியில் உள்ளனர். ஜெ.,வை பார்க்காமல், பார்த்ததாக பேட்டி அளித்த யாரும், விசாரணை வரம்பில் இருந்து தப்ப முடியாது என்பதால், கலக்கம் அடைந்துள்ளனர்.

திடீர் உடல் நல பாதிப்பு காரணமாக,2016 செப்., 22ல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனை யில், ஜெ., அனுமதிக்கப்பட்டார். அதன்பின், அவரது உடல் தான், டிச., 6 அதிகாலையில் வெளியே வந்தது. லண்டன் டாக்டர், டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனை டாக்டர்கள், சென்னை டாக்டர்கள் என, பல மருத்துவ

குழுவினர், சிறப்பு சிகிச்சை அளித்தும் பலனில்லை.
 

நியமனம்:

ஜெ., மரணம் குறித்து, பல்வேறு சந்தேகங்கள் கிளப்பப்பட்டன. அவரது மரணத்துக்கு,சி.பி.ஐ.,விசாரணை, நீதி விசாரணை கோரப்பட்டது. உயர் நீதிமன்றத்தி லும் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. கடைசியில், 'ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.இந்த அறிவிப்பு வந்த ஒரு மாதத்துக்கு பின், விசாரணை கமிஷனுக்கு, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை, தமிழக அரசு நியமித்தது.விசாரணை கமிஷன், மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கும் எனவும், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த வாரத்தில், விசாரணை கமிஷன், தன் பணியை துவக்க உள்ளது. விசாரணை வரம்புக்குள் யார் யார் வருவர் என்பது குறித்து, நீதிபதி முடிவு செய்ய வேண்டும். ஆனால், ஜெ.,க்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடமும், அவருடன் தங்கியிருந்த சசிகலா குடும்பத்தின ரிடமும், விசாரணை நடத்தப்படுவது உறுதி.

ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக, மத்திய அமைச்சர், அருண் ஜெட்லி, தற்போதைய துணை ஜனாதிபதி, வெங்கய்யா நாயுடு, தமிழக கவர்னர், வித்யாசாகர் ராவ், காங்கிரஸ் துணை தலைவர், ராகுல், பா.ஜ., தலைவர், அமித்ஷா, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர்

 

வந்தனர்.மருத்துவமனைக்கு சென்று திரும்பிய தலைவர்களில் பெரும்பாலானோர், ஜெயலலிதா உடல் நிலை பற்றி, வெளியில் பேட்டி அளித்தனர்.

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, பொன்னையன், சி.ஆர்.சரஸ்வதி போன்றோரும், அன்றாடம் ஜெ., உடல் நிலை பற்றி பேட்டி கொடுத்தனர். ஆனால், சமீபத்தில், அமைச்சர் சீனிவாசன், 'நாங்கள் யாரும், ஜெயலலிதாவை பார்க்கவில்லை; பொய் சொன்னதற்காக, பொது மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்' என, வெளிப்படையாக பேசினார்.

மற்றொரு அமைச்சர் வீரமணி, 'சசிகலாவுக்கு பயந்து, அப்படி பொய் சொன்னோம்' என்றார்.
இதனால், தற்போது நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன், தங்களிடம் விசாரணை நடத்துமா; அதற்காக, 'சம்மன்' அனுப்புமோ என, டில்லி தலைவர்கள் உட்பட, பேட்டியளித்த பிரபலங்கள், தற்போது அச்சத்தில் உள்ளனர்.
 

தீவிரம்:

மருத்துவமனைக்கு வந்து சென்ற பிரபலங்களுக்கு, கேள்விகள் அடங்கிய பட்டியலை அனுப்பி, அதற்கு பதிலளிக்கும்படி, விசாரணை கமிஷன் உத்தரவிடலாம். பதிலில் திருப்தி அடையவில்லை என்றால், நேரில் ஆஜராகும் படி, சம்மன் அனுப்பலாம். அவை எல்லாம், விசாரணை கமிஷன் அதிகார வரம்புக்கு உட்பட்டது. ன்று மாதங்களில் அறிக்கை அளிக்கும்படி, தமிழக அரசு கூறியிருப்பதால், விசாரணை கமிஷன் பணிகள் தீவிரமடையும்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1864877

  • தொடங்கியவர்

"பார்த்தோம், பார்க்கவில்லை.." அதிரவைத்த அமைச்சர்களையும் விசாரிக்குமா விசாரணை கமிஷன்?

 
 

ஜெயலலிதா

மிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்து ஒருவருடத்தைக் கடக்கவிருக்கும் நிலையில், அவரது மரணத்தில் எழும் சர்ச்சைகளும், அ.தி.மு.க-வில் நிலவும் குழப்பங்களுமே இன்றைய சமூக வலைதளங்களுக்கும், பத்திரிகை உலகுக்கும் செய்தியாக இருக்கிறது. ஜெ-வின் மரணத்துக்குப் பிறகு தமிழக அரசியலே மாற்றம் கண்டது. அந்த நேரத்தில், அவருடைய மரணம் பற்றி விசாரணை கமிஷன் வைக்க வேண்டும் என்று கோரிக்கைகளும் எழுந்தன. ஆனால், அவர் நின்ற தொகுதி (ஆர்.கே.நகர்) காலியாக அறிவிக்கப்பட்டு... இடைத்தேர்தல் வந்ததால், அவற்றையெல்லாம் மறந்துபோயினர் நம் அரசியல்வாதிகள். அதற்குப் பின் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாகத் தகவல் சொல்லப்பட, அந்தத் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்திவைத்தது தேர்தல் ஆணையம். இடையில் மீண்டும் அ.தி.மு.க-வில் பல நாடகங்கள் அரங்கேற... திரும்பவும் பூதாகரமாய் வெடித்திருக்கிறது ஜெயலலிதாவின் மரணம் பற்றிய விவகாரம். இதையடுத்து, ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும்'' என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அதிரடியாய் அறிவிப்பை வெளியிட்டார். 

 

இதற்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், '' 'ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை கமிஷன்' அறிவித்திருப்பது தமிழக மக்களை ஏமாற்றும் வேலை மட்டுமல்ல, ஜெயலலிதாவின் மரணத்தை முன்வைத்து தர்மயுத்தத்தை முடித்துக்கொண்டு இரு அணிகளும் இணைந்து, சச்சரவின்றி ஊழல் அத்தியாயத்தைத் தொடங்கப் போடுகிற மோசடித் திட்டம்'' என்று தெரிவித்திருந்தார். அதேபோல் நடிகர் ஆனந்தராஜும், ''இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் விசாரணை கமிஷன், மக்களுக்கு மிகப்பெரிய கண்துடைப்பாகத்தான் இருக்கும். இதன்மூலம் யாரும் எதையும் புதிதாகத் தெரிந்துகொள்ளப் போவதில்லை. அ.தி.மு.க-வில் இருக்கும் அணிகள் தங்களுடைய பதவியைக் காப்பாற்றிக்கொள்ளவே மாறிமாறித் திட்டம் தீட்டுகின்றன. ‘பன்னீர்செல்வம் கேட்டதற்காக விசாரணை கமிஷன் அமைக்கவில்லை’ எனச் சொல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதுகுறித்து விசாரிக்க நினைத்திருந்தால் அதை முன்பே செய்திருக்க வேண்டும். அதோடு, ஓய்வுபெற்ற நீதிபதியைவைத்து இதை விசாரிப்பதில் என்ன நோக்கம் இருக்கிறது என்று புரியவில்லை. அப்படி விசாரணை அமைக்கப்பட்ட எந்த வழக்குகளும் முடிவுக்கு வந்ததுமில்லை'' என்று தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில், ''ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டால், அதைச் சந்திக்கத் தயார்'' என்று அப்போலோ மருத்துவமனையின் செயல் தலைவர் பிரதாப் சி.ரெட்டி அறிவித்திருந்தார். இதுகுறித்து அவர், ''ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. எனவே, விசாரணை கமிஷன் அமைத்தால், அதைச் சந்திக்கத் தயாராகவே உள்ளோம். மேலும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் யாருடைய தலையீடும் இல்லை'' என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாகத் தற்போது நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி தற்போது மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வின் நீதித்துறை உறுப்பினராக உள்ளார். ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பான விவகாரம் 2013-ல் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தபோது, ''கர்நாடக நீதிமன்ற முடிவுகளில் சென்னை நீதிமன்றம் தலையிட முடியாது'' என்று தீர்ப்பளித்தவரும் ஆறுமுகசாமிதான். 

'கமிஷனின் விசாரணை அறிக்கை மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்படவேண்டும்' என்று கூறப்பட்டுள்ள நிலையில், அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்தபோது அ.தி.மு.க-வினர் பலரும் அவர் பற்றிய தகவல்களை வெளியிட்டனர். அந்தச் சமயத்தில், ''அமைச்சர்கள் அனைவரும் மருத்துவமனையில் அம்மாவைப் (ஜெ.வை) பார்தோம்; அம்மா இட்லி சாப்பிட்டாங்க... சட்னி சாப்பிட்டாங்க... நலமாக இருக்காங்க" என்றார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். ஆனால், இப்போது ''அம்மாவை (ஜெ-வை) மருத்துவமனையில் நாங்கள் யாரும் பார்க்கவேயில்லை. நாங்கள் சொன்னது பொய். எங்களை மன்னித்துவிடுங்கள்'' என்று பல்டி அடிக்கிறார் அதே அமைச்சர். இதற்கு விடைகொடுக்கும் வகையில், ''நாங்கள் எல்லோருமே பார்த்தோம்'' என்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸோ,  ''அம்மா, என்னைப் பார்த்து கையசைத்து வாழ்த்தினார்'' என்கிறார். 

 ''ஜெ-வின் மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருக்கும் வேளையில், அவர் வழியில் ஆட்சி நடத்துவதாகச் சொல்லும் எடப்பாடி பழனிசாமி அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களும், எம்.எல்.ஏ-வும் இப்படி ஆளுக்கொரு கருத்தைச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்? அரசாங்கம்,  விசாரணை கமிஷனை அமைத்தபிறகும் இவர்கள் சொல்லும் பலவித கருத்துகளால் மக்களுக்கு நிறைய சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆக, அனைத்துக்கும் பதில் சொல்லும் விதமாக விசாரணை கமிஷன் கொடுக்கும் அறிக்கை இருக்க வேண்டும். அதில், எம்.எல்.ஏ., அமைச்சர்கள் சொன்ன தகவல்கள் உண்மையா என்று ஆராயப்பட வேண்டும்'' என்று கோரிக்கை வைக்கின்றனர் அ.தி.மு.க-வின் உண்மையான விசுவாசிகள். 

 

பதில் சொல்லுமா விசாரணை கமிஷன்?

http://www.vikatan.com/news/politics/103645-will-the-investigative-committee-investigate-the-ministers-of-tamilnadu.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.