Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இக்கட்டான நிலையில் நடராஜன்...பரோலுக்காகத் தவிக்கும் சசிகலா!

Featured Replies

இக்கட்டான நிலையில் நடராஜன்...பரோலுக்காகத் தவிக்கும் சசிகலா!

 
 

நடராஜன்

“உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வரும் ம.நடராசனை சந்திக்க சசிகலா பரோலில் வர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மருத்துவமனையில் நடராஜன்

அ.தி.மு.க-வின் பவர் சென்டராக இருந்த சசிகலா குடும்பத்தின் முக்கிய நபராக விளங்கியவர் ம.நடராசன். அ.தி.மு.க என்ற கட்சியை தனது மனைவி மூலம் பலநேரங்களில் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர். ஒருகட்டத்தில் சசிகலாவுக்கும் இவருக்கும் மனவருத்தம் ஏற்பட்டு, இருவரும் விலகி இருந்தபோதும், குடும்பஉறவுகள் மூலம் கட்சியிலும், ஆட்சியிலும் தனக்கு இருந்த செல்வாக்கைத் தொடர்ந்து நிலைநாட்டிவந்தார். 

ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா குடும்பத்தினர் கட்சியின் பொறுப்புகளில் வர முடிவெடுத்தபோது, அதன் பின்னணியில் இருந்து இயக்கியவர் நடராசன் என்று சொல்லப்பட்டது. ஒரு கட்டத்தில் சசிகலா முதல்வராக பதவியேற்கும் நிலையில் அந்தத் தகவல் பெசன்ட் நகர் வீட்டில் இருந்த நடராசனுக்கு சொல்லப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக வந்ததால் நான்கு ஆண்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலை சசிகலாவுக்கு ஏற்பட்டது. பெங்களூரு சிறைக்கு சசிகலா செல்லும் முன்பே பெங்களுரு சென்ற நடராசன், சசிகலாவை சிறைவாசல் சென்று அவருக்கு ஆறுதல் கூறினார். மனைவி சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு கட்சி விவகாரங்களில் பெரிதாக தலைக்காட்டாமலே இருந்தார். அதோடு அவருக்கு கல்லீரலில் தொற்று ஏற்பட்டதால், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கல்லீரலை மாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் உறுப்புதானம் பெற பதிவு செய்திருந்தார் நடராசன்.

அப்போலோவில் இருந்து வீட்டுக்குத் திரும்பிய பிறகு குற்றாலத்தில் ஓய்வில் இருந்த நடராசனுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் செயல் இழந்துவருதால் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும், கல்லீரலோடு, சிறுநீரகமும் நடராசனுக்குப் பாதிக்கப்பட்டு இருப்பதால், வேறு சிறுநீரகமும் பொறுத்த வேண்டிய நிலை உள்ளது.

மனைவி பற்றி விசாரிக்கிறார்

இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது நடராசன் இருந்து வருகிறார். அவருடைய உறவினர்கள் பலரும் சந்தித்து வருகிறார்கள்.  அவர்களிடம் சசிகலா குறித்து கேட்டுள்ளார்.இந்தத் தகவல் சசிகலாவுக்குச் சொல்லப்பட்டது. அவரும் கணவரின் உடல்நிலை நினைத்து வருத்தப்பட்டுள்ளார். சசிகலா பரோலில் வந்து நடராசனைப் பார்க்க வேண்டும் என்று அவருடைய உறவுகள் சொல்லிவருகின்றனர்.  ஆனால், சசிகலா மீது சிறையில் விதிகளை மீறியதாக எழுந்த சர்ச்சை இருப்பதால் பரோல் வழங்க கர்நாடக சிறைத்துறை யோசனை செய்துவருகிறது.'

சசிகலா

 

இந்நிலையில்தான், சசிகலா சிறையில் இருந்து வருவதற்கு வாய்ப்பாக குளோபல் மருத்துவமனை, நடராஜன் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கையை வெளியிட்டது. இந்த மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டதே சசிகலாவின் பரோலுக்குத்தான் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில், பெங்களூரு சிறை அதிகாரிகளிடம் பரோலுக்கு சசிகலா விண்ணப்பித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் சில தினங்களில் நடராசனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வாய்ப்புள்ளதால், அறுவை சிகிச்சை நடைபெறும் தினத்தன்று பரோலில் வர சசிகலா திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள். சசிகலாவின் வழக்கறிஞர்கள் இதற்கான வேலையில் தீவிரம் காட்டிவருவதாகச் சொல்கிறார்கள்.

http://www.vikatan.com/news/tamilnadu/103386-natarajan-wants-to-meet-his-wife-sasikala.html

  • தொடங்கியவர்

கணவர் நடராஜனை பார்க்க சசிகலா பரோல் மனு..!

 
 

நடராஜன்

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவர் நடராஜனை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று பரோல் கேட்டு சசிகலா மனு போட்டுள்ளார். 

 

சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்தபடியே சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கல்லீரல், சிறுநீரக நோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை அவரது உறவினர்கள் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு தினமும் டயாலிசிஸ் செய்யப்படுகிறது. 

சசிகலா

 

இந்நிலையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையும் அவருக்கு இப்போது தேவைப்படுகிறது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவர் நடராஜனை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று பெங்களூரூ சிறைத்துறைக்கு பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளார் சசிகலா. இந்த பரோல் மனுவை சிறைத்துறை தீவிரமாக பரிசீலித்து வருகிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/103394-sasikala-apply-parole-to-bangalore-jail-authorities.html

  • தொடங்கியவர்
நடராஜனை பார்க்க வர மாட்டேன்: சசிகலா
 
 
 

மருத்துவமனையில், உயிருக்கு போராடும் கணவர் நடராஜனை பார்க்க, 'பரோலில்' வர, சசிகலா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

 

நடராஜனை,பார்க்க, வர ,மாட்டேன்,சசிகலா

சசிகலாவின் கணவர் நடராஜன், உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை, குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்ட அவருக்கு, 'டயாலிசிஸ்' சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

நடராஜனுக்கு, சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய

கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. தற்போது, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்சசிகலாவை, கர்நாடக, அ.தி.மு.க., செயலர், புகழேந்தி சந்தித்து, 'பரோல் விடுமுறையில் வந்து,நடராஜனை பாருங்கள்' என, கூறியுள்ளார். பரோல் கேட்பதற்கான மனுவில் கையெழுத்திடும் படியும், சசிகலாவிடம், வழக்கறிஞர்கள் கேட்டுள்ளனர். ஆனால், அம்மனுவில் கையெழுத்து போட, சசிகலா மறுப்பு தெரிவித்து உள்ளார்.

அதே சமயம், நடராஜனின் உடல்நிலை பற்றி மட்டும், புகழேந்தியிடம் விசாரித்து உள்ளார்.
இது குறித்து, மன்னார்குடி வட்டாரம் கூறியதாவது: நடராஜன், கவலைக்கிடமாக இருக்கிறார். அவருக்கு,முக்கியமான இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட உள்ளன.

அதற்கு முன், சசிகலா வந்து பார்க்க வேண்டும் என, உறவினர்கள் விரும்புகின்றனர்; ஆனால், அவர் மறுத்துள்ளார்.பரோல் விடுமுறைக்கு விண்ணப்பிக்க, அவர் விரும்பவில்லை.

 

ஜெயலலிதாவால் ஓரங்கட்டி வைக்கப்பட்ட நடராஜனுடன், 33 ஆண்டுகளாக, சசிகலா சேர்ந்து வாழவில்லை. 'சசிகலா நடராஜன்' என்ற பெயரை மாற்றி, 'வி.கே.சசிகலா' என, வைத்துக் கொண்டார்.

ஏற்கனவே, மகாதேவன், தினகரன் மாமியார் மரணத்திற்கும், சசிகலா வரவில்லை. இதனால், குடும்பத்தில் பிரச்னை வெடித்து உள்ளது.இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1864197

  • தொடங்கியவர்

தசரா விடுமுறைக்கு பிறகு பரோல் கோரி விண்ணப்பிக்க சசிகலா திட்டம்: பெங்களூரு அதிமுக வட்டாரம் தகவல்

 

 
Sasikala1

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ள கணவர் நடராஜனை பார்ப்பதற்காக தசரா விடுமுறைக்கு பிறகு பரோல் கேட்க சசிகலா திட்டமிட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது கணவர் நடராஜன் சிறுநீரகம், கல்லீரல் செயலிழந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கவலைக்கிடமான நிலையில் உள்ள அவரைப் பார்க்க, கடந்த வாரம் சசிகலா பரோலில் சென்னை செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் பரோலில் வெளியே செல்வதற்கு ஏராளமான விதிமுறைகள் இருப்பதால், அவர் பரோலுக்கு விண்ணப்பிக்கவில்லை எனத் தெரிகிறது.

இதனிடையே, சிறைத்துறை நிர்வாகம், நீதிமன்றம் ஆகியவற்றுக்கு தசரா விடுமுறை விடப்பட்டுள்ளன. எனவே இப்போது பரோல் கேட்டு விண்ணப்பிக்க முடியாது.

தசரா விடுமுறை முடிந்த பிறகு, சிறை அதிகாரிகள் பணிக்கு திரும்பியதும் சசிகலா அவசர பரோல் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, “கர்நாடகாவில் தற்போது தசரா விடுமுறை காலம் என்பதால் சசிகலா பரோலுக்கு விண்ணப்பிக்கவில்லை. வரும் திங்கள்கிழமைக்கு பிறகு நடராஜனின் மருத்துவ சான்றிதழை தாக்கல் செய்து, சசிகலா முறைப்படி பரோலுக்கு விண்ணப்பிக்க இருக்கிறார்.

கர்நாடக சிறைத்துறை விதிமுறைகளின்படி அவசர பரோலில் 15 நாட்கள் வரை செல்ல முடியும். ஆனால் எத்தனை நாட்கள் பரோல் கோருவது என்பது குறித்து தனது வழக்கறிஞர் மற்றும் குடும்பத்தினரிடம் சசிகலா ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பார்” என்றனர்.

http://tamil.thehindu.com/india/article19779471.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.