Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ்குமாரை தப்பவைக்க விஜயகலா எடுத்த முயற்சிக்கு இளஞ்செழியன் விமர்சனம்!

Featured Replies

vvvvvvvvvvvvvv.jpg

வித்தியா படுகொலை வழக்கில் சுவிஸ்குமாரைத் தப்பவைப்பதற்கு அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எடுத்த நடவடிக்கைக்கு நீதிபதி இளஞ்செழியன் விமர்சனம் செய்துள்ளார்.

வித்தியா படுகொலை வழக்குத் தீர்ப்பாயத்தின் நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி இளஞ்செழியன் தனது 245 பக்க அறிக்கையை வாசிக்கும்போதே  விஜயகலா மகேஸ்வரன் சுவிஸ்குமாரைத் தப்பவைக்க எடுத்த நடவடிக்கை தொடர்பாக விமர்சனம்செய்துள்ளார்.

அவரது அறிக்கையில், வித்தியா படுகொலை வழக்கின் எதிரியான சுவிஸ்குமாரை தப்பவைப்பதற்கு விஜயகலா மகேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கமைய, சுவிஸ்குமாரை மக்கள் கட்டிவைத்து அடித்துக்கொண்டிருக்கும்போது, அங்குசென்ற விஜயகலா மகேஸ்வரன் கட்டை அவிழ்த்து விடுமாறு மக்களைக் கோரியமை நல்ல விடயம்.

ஆனால், சந்தேகநபரை காவல்துறையினரிடம் ஒப்படைக்கவோ, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவோ விஜயகலா மகேஸ்வரன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென மகாலிங்கம் சசிக்குமார் எனப்படும் சுவிஸ்குமார் மன்றில் தெரிவித்திருந்தார்.

பொதுமக்களை அவிழ்த்துவிடுமாறு தெரிவித்த விஜயகலா மகேஸ்வரன், சுவிஸ்குமாரின் உறவினர்கள் அவ்விடத்திற்கு வருகை தந்து அவரை அழைத்துச் செல்லும் வரை சுமார் இரவு 11 மணியிலிருந்து 1மணிவரை காத்திருந்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

இராஜாங்க அமைச்சரான விஜயகலாமகேஸ்வரன் சுவிஸ்குமாரைத் தப்ப வைப்பதற்கே இந்த நடவடிக்கையை மேற்கொண்டார் என இதன்மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது எனவும் நீதிபதி இளஞ்செழியன் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

http://thuliyam.com/?p=79822

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Athavan CH said:

பொதுமக்களை அவிழ்த்துவிடுமாறு தெரிவித்த விஜயகலா மகேஸ்வரன், சுவிஸ்குமாரின் உறவினர்கள் அவ்விடத்திற்கு வருகை தந்து அவரை அழைத்துச் செல்லும் வரை சுமார் இரவு 11 மணியிலிருந்து 1மணிவரை காத்திருந்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

இராஜாங்க அமைச்சரான விஜயகலாமகேஸ்வரன் சுவிஸ்குமாரைத் தப்ப வைப்பதற்கே இந்த நடவடிக்கையை மேற்கொண்டார் என இதன்மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது எனவும் நீதிபதி இளஞ்செழியன் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இப்படியான குற்றங்களை வெளிநாடுகளில்  செய்தால் அடுத்த கணமே பதவி பட்டங்களை பறித்து கம்பி எண்ணவைத்து விடுவார்கள். ஆனால் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் சம்பந்தப்பட்டவர்கள் தெய்வீக செயலாக பார்ப்பார்கள். tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சைக்கோ கொலைகாரனை தப்ப உதவின இவவை அவனிடமே கொண்டுபோய் விட்டு விடுவது உத்தமம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.