Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“நவம்பரில் வருகிறார் நம்மவர்!” - நம்பிக்கையில் கமல் ரசிகர்கள்

Featured Replies

“நவம்பரில் வருகிறார் நம்மவர்!” - நம்பிக்கையில் கமல் ரசிகர்கள்

 
 

 

தோ... அதோ... என நடிகர் ரஜினிகாந்த் போக்குக்காட்டிவருகிறார். ஆனால், அரசியலில் நுழைந்துவிட்டதாக அறிவித்து, பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். அவரது அதிரடி அறிவிப்பு குறித்துத் தமிழக அரசியல் கட்சியினர் கருத்துத் தெரிவிப்பது ஒருபக்கம் இருந்தாலும், அவருடைய ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இப்போதே அவர்கள் களப்பணியாற்றத் தயாராகிவிட்டனர். இந்தச் சூழலில், கமல் நற்பணி மன்ற நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். அவர்களின் விறுவிறு கருத்துகள் இதோ...

p4.jpg

‘‘தெளிவான சிந்தனை!”

செந்தில் (நெல்லை மாவட்டப் பொறுப்பாளர்)

‘‘தெளிவான சிந்தனையும், நுணுக்கமான பார்வையும் கொண்டவர் கமல். அவருடைய முடிவுகள் எப்போதுமே தவறாகப் போனதில்லை. கொண்ட கொள்கையில் உறுதியானவர். இப்போது அவர் எடுக்கும் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். நற்பணி இயக்கம் மூலமாக கடந்த 37 வருடங்களாக மக்களுக்குச் சத்தமே இல்லாமல் களப்பணியாற்றி வருகிறார். இப்போதுள்ள அரசியல் சூழலில், ஊழலற்ற ஆட்சி அமைய கமல் போன்ற தன்னலமற்ற தலைவர்கள் அரசியலுக்குத் தேவை. காலதாமதமாக அவர் அரசியலுக்குள் நுழைகிறபோதிலும், அதை, எங்களைப் போன்ற ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தத் தமிழகமும் வரவேற்கும்’’

 ‘‘ஜெ.வை அன்றைக்கே எதிர்த்தவர்!”

பெரியார் குணஹாசன் (சிவகங்கை மாவட்டப் பொறுப்பாளர்)

‘‘அரசியல் ஆர்வமோ, அரசியல் ஆசையோ இல்லாமல்தான் இருந்தோம். ஆனால், இன்றைக்கு தமிழக அரசியல் சூழ்நிலை சரியில்லை. ஜெயலலிதாவை முதன்முதலில் எதிர்த்ததே கமல்தான். சென்னை திரைப்பட நகருக்கு எம்.ஜி.ஆர் பெயர் வைக்காமல், ஜெ.ஜெ திரைப்பட நகர் எனப் பெயர் வைத்தபோது கோபப்பட்டு, அந்த விழா மேடையிலிருந்து கீழே இறங்கினார் கமல். அவரை ஜெயலலிதா திரும்ப அழைத்து, கருத்துச் சொல்லச்சொன்னார். 

அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளுக்கு எதிரான கருத்துகளை கமல் வைத்துக்கொண்டுதான் இருக்கிறார். ஊழல் மற்றும் மதவாதத்துக்கு எதிராகக் குரல்கொடுக்கிறார். ரஜினி, விஜய் உள்ளிட்டோர் அரசியல் வருகை குறித்து சொல்லத் தயங்கும் சூழலில், கமல் மட்டுமே துணிச்சலாக அறிவித்திருக்கிறார். சாதி, மதம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிரானவர் இவர். இவரை விமர்சிக்க அ.தி.மு.க-வினருக்குத் தகுதியில்லை. அவர்களைப்போல இவர்,

பி.ஜே.பி-யிடம் மண்டியிட்டுக் கிடக்கவில்லை.’’

p4a.jpg

 ‘‘ஏ சென்டர்!”

கே.கோபாலகிருஷ்ணன் (மூத்த நிர்வாகி, ராமநாதபுரம்)

‘‘கமல், 20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்தோம். அப்போது அவர், கட்சி ஆரம்பிக்காததால் ரசிகர்கள் எல்லோரும் தங்களுக்குப் பிடித்த கட்சிகளில் பணியாற்றிவருகின்றனர். தலைவர் கட்சி ஆரம்பிப்பதை அறிந்த பழைய ரசிகர்கள் அனைவரும் எங்களைத் தொடர்புகொண்டு ஆர்வத்துடன் விசாரித்து வருகின்றனர். இனி எல்லோரும் கமல் தலைமையில் அணிவகுப்போம். கமல், அரசியல் கட்சித் தொடங்குவதை நாங்கள் மட்டுமல்ல, படித்த இளைஞர்களும் கல்லூரி மாணவர்களும் வரவேற்கிறார்கள். சினிமாவில் கமலுக்கு ‘ஏ’ சென்டர் ரசிகர்கள் அதிகம். அரசியலில் அதிகம் ஈடுபடாத அவர்களின் ஆதரவும் தலைவர் ஆரம்பிக்க உள்ள கட்சிக்கு நிச்சயம் கிடைக்கும். இதன் மூலம் தமிழகத்தில் மிகப்பெரிய சக்தியாக கமல் உருவெடுப்பார். அதன்மூலம் நிச்சயம் மாற்றம் வரும்.’’

 ‘‘இன்றைய சூழல்தான் காரணம்!”

சேகர் (தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர்)

‘‘எங்கள் தலைவர், சுமார் 60 வருட சினிமா அனுபவத்தில், அரசியலுக்கு வருவதாக இதுவரை  சொன்னதே இல்லை. அரசியலுக்கு வரவேண்டும் என்கிற எண்ணமும் அவருக்கு இருக்கவில்லை. அதற்கு அவர் நடித்த திரைப்படங்களே சாட்சி. தமிழகம் செயல்படாமல் முடங்கிக் கிடப்பதாலும், ஊழல் பெருகியதாலும், அதைத் தடுக்க அரசியலுக்கு வருகிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த வக்கீல்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நானும் கலந்துகொண்டேன். அதில்கூட, அரசியல் பற்றி ஆலோசிக்கவில்லை. இப்போதைய சூழல், அவரை அரசியலுக்குக் கொண்டுவந்துவிட்டது.’’

‘‘காமராஜர் ஆட்சிக்கு நிகராக...!”

மூர்த்தி (கடலூர் மாவட்டத் தலைவர்)

“தமிழகத்தில் தற்போது ஊழலும் லஞ்சமும் தலைவிரித்து ஆடுகின்றன. சட்டம் ஒழுங்கு சரியில்லை. இவற்றை அடக்குவதற்கான திறமை, இப்போதைய ஆட்சியாளர்களுக்கு இல்லை. எதிர்க்கட்சிகளுக்கும் அந்தத் தகுதியில்லை. தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுசெல்லும் திறமை, கமலுக்கு மட்டுமே இருக்கிறது. ஊழல் பேர்வழிகள் மிகுந்த அரசியல்வாதிகள் மத்தியில், இதுபோல் ஓர் உத்தமர் கிடைத்திருப்பது தமிழகத்துக்கு வரப்பிரசாதம். அவரால் மட்டுமே தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக்கு நிகரான ஆட்சியை அமைக்க முடியும்”

p4b.jpg

‘‘அரசியல் பாரம்பர்யம்!”

ரிபாய்தீன் (நாகை மாவட்டப் பொறுப்பாளர்)

‘‘ஊழல் அரசியல்வாதிகளைப் பார்த்து மக்கள் வெறுத்துவிட்டார்கள். நாட்டுக்கு நல்லது செய்ய கமல் போன்ற தலைவர்களை மக்கள் வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள். கமல் பாரம்பர்ய அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர். ‘ஊழலை ஒழிப்போம்... மக்களைக் காப்போம்’ என்கிற தாரக மந்திரத்துடன் அவர் களமிறங்கியுள்ளார். அதை நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம். இந்த மாட்டத்தில் உள்ள 500-க்கும் அதிகமான கமல் நற்பணி மன்றத்தினர், அவருக்குத் துணைநிற்போம். அவரால் ஊழல் ஒழிந்து தமிழ்நாடு சுத்தமாகும்.’’  

‘‘வெற்றிடத்தை நிரப்புவார்!”

ஜீவா (திருப்பூர் மாவட்டப் பொறுப்பாளர்)

‘‘கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக கமலுடன் இருக்கிறோம். மக்கள் பணியில்தான் எங்களின் ஈடுபாடு இருந்தது. அரசியலுக்கு அவர் வருவார் என்று நினைக்கவே இல்லை. ‘அரசியல் நமக்குத் தெரியாது. அது வேண்டாம்’ என்று கூறியவர், தற்போது தமிழ்நாட்டில் நிலவிவரும் தலைமைக்கான வெற்றிடத்தை நிரப்ப வந்திருக்கிறார். அவர் என்ன சொல்கிறாரோ, அதைச் செய்வதற்குத் தயாராக  இருக்கிறோம்.”
 
‘‘எதிர்பார்ப்புகள் நிறைவேறும்!”

காளிதாஸ் (விருதுநகர் மாவட்டத் துணைச் செயலாளர்)

‘‘ரசிகர் மன்றமாக இல்லாமல் நற்பணி இயக்கம் என்று சொல்லி, பல ஆண்டுகளுக்கு முன்பே எங்களைச் சமூகத்துக்கு உதவும் வகையில் கமல் மாற்றிவிட்டார். நாங்கள் தொடர்ந்து சமூகப்பணி ஆற்றி வருகிறோம். அதேநேரம், அரசியலுக்கு வந்தாலும் மக்களுக்கான நற்பணிகளைத் தொடர்ந்து செய்யத்தான் போகிறோம். யார் யாரோ அரசியலுக்கு வரும்போது, எங்கள் தலைவர் கமல் வந்தால் சிறப்பாக இருக்கும். தமிழகத்தில் மாற்றம் உண்டாகும். நாங்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்தது இப்போது நிறைவேறப்போகிறது.’’

p4c.jpg

‘‘விரைவில் முக்கிய அறிவிப்பு!”

சசி ஜெயப்பிரகாஷ் (குமரி மாவட்டத் தலைவர்)

‘‘தலைவர் என்ன செய்தாலும், அதன் பின்னணியில் ஆழமான ஒரு விஷயம் இருக்கும். இப்போது நற்பணி இயக்கமும் கட்சியைப்போல செயல்படுகிறது. தனிக்கட்சி தொடங்கினாலும் சரி, வேறு எந்தக் கட்சியில் தலைவர் இணைந்தாலும் சரி, அவரது முடிவு சரியானதாகவே இருக்கும். தமிழக மக்களைக் காப்பற்ற தற்போது கமலைத் தவிர வேறு ஆளில்லை. இப்போது, அவர் தமிழகத்துக்குத் தேவை. மக்கள் கருத்தும் அதுவாகவே இருக்கிறது. ஜெயலலிதா இருந்தபோதே கமல், அரசியலைத் தொடங்கிவிட்டார். இப்போது நேரடி அரசியலுக்கு வந்திருக்கிறார். அவரால் மக்களின் வாழ்வு பிரகாசமாக மாறும். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நற்பணி இயக்கத்தில் இருக்கிறார்கள். கட்சித் தொடங்கியதும் ஒன்றிணைந்து கமலின் பின்னால் பெரும்படையே நிற்கும். நவம்பர் 7-ம் தேதி தலைவரின் பிறந்த நாள். அன்று அவர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்.’’

‘‘அப்போதே அரசியல் பேசியவர்!”

கணேஷ்குமார் (தேனி மாவட்டப் பொறுப்பாளர்)

‘‘கமல், இப்போது ஒன்றும் புதிதாக அரசியல் பேசவில்லை. எப்போது நடிக்க ஆரம்பித்தாரோ, அப்போதே அரசியல் பேச ஆரம்பித்துவிட்டார். புழல் ஏரி திறந்துவிடப்பட்டது தொடர்பாக, ‘என் வரிப்பணம் என்ன ஆனது?’ என்று கேட்டபோதே, அவர் அரசியல்மீதான தனது விமர்சனத்தை வைக்க ஆரம்பித்துவிட்டார். ஒரு சாமானியனுக்கு இந்த அரசின் மீது ஏற்பட்டுள்ள கோபத்தைத்தான் அவர் கருத்துக்களாக வெளிப்படுத்துகிறார். ட்விட்டரில் அவர் தெரிவிக்கும் கருத்துகளுக்கு இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. கட்சியின் கொள்கைகள், பெயர், கொடி எல்லாம் தயாராகிவருகின்றன. விரைவில் அறிவிப்புவரும் என்று கூறியிருக்கிறார். நாங்கள் வெறும் ரசிகர் மன்றமாக அல்லாமல், நற்பணி இயக்கமாக மக்கள் நலனில் அக்கறையோடு இருக்கிறோம். இது, அரசியல் கட்சியாக மாறினால், இன்னும் அதிகமாக மக்கள் பணி செய்வோம்.”

p4d.jpg

‘‘எல்லா தகுதிகளும் உண்டு!”

சுரேஷ் (திருச்சி மாவட்டத் தலைவர்)

“எல்லோரும் கமலை எதிர்பார்க்கிறார்கள். சினிமா, ரத்ததானம், உடலுறுப்பு தானம் எனத்   தமிழினத்துக்காக கமல் தொலைநோக்குடன் செயல்பட்டுவருகிறார். அவரின் கருத்துகள், ஊழலுக்கு எதிரான அறிக்கைகள் அனைத்தும் தொலைநோக்குப் பார்வை கொண்டவை. பல வருடங்களுக்கு முன்பு, பள்ளியில் ‘உயர்’ சாதி மாணவர்களுக்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பானையில் தண்ணீர் எடுத்துக்குடித்த காரணத்துக்காக, தனம் என்ற தாழ்த்தப்பட்ட சமூக மாணவியைப் பள்ளி ஆசிரியர் பிரம்பால் அடித்தார். அதில் அந்த மாணவியின் கண்பார்வை பாதிக்கப்பட்டது. அதைக் கண்டித்து முதலில் குரல் கொடுத்தவர் கமல். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அதற்குக் கண்டனம் தெரிவித்த முதல் நடிகரும் அவரே. மதங்களுக்கும், சாதிகளுக்கும் அப்பாற்பட்டவர். திறமையும் தகுதியும் இருக்கும் இவருக்கு, அரசியலுக்கு வர முழுத் தகுதியும் இருக்கிறது.”

கமல் தயார் ஆவதற்கு முன்பே அவருடைய ரசிகர்கள் தயாராகிவிட்டார்கள்.

http://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.