Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1970 - கிழக்கில் தமிழ் முஸ்லிம் சகவாழ்வின் சிதைவு. - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1970's - THE BEGINNING OF THE END OF DEVOTIONAL PATH AND TAMIL MUSLIM CO-EXISTENCE IN THE EASTERN PROVINCE OF SRI LANKA.- V.I.S.JAYAPALAN
.
1970கள். கிழக்கில் பக்தி மார்க்கம் மற்றும் தமிழ் முஸ்லிம் சகவாழ்வின் முடிவின் ஆரம்பம்.- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
Jaya Palan என்னுடைய பல்கலைக்கழக நாட்க்களில்தான் எனக்கு கிழக்கு மாகாணத்தோடு நெருங்கிய தொடர்பு ஏற்ப்பட்டது. 1970பதுகளின் இறுதிப் பகுதியில் முஸ்லிம் மக்கள்பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது காசிநாதர் வணசிங்க எஃப் எக் சி நடராசா பிதா சந்திராபெர்ணாண்டோ போன்ற தமிழ் ஆழுமைகளை சந்தித்து முஸ்லிம் மக்கள் பற்றிய அவகளது அவிப்பிராயங்களைக் கேட்டுப் பதிவு செய்தேன். 
.
கிழக்கில் நான் சந்தித்த காசிநாதரின் தலைமுறை தமிழ் முஸ்லிம் ஆழுமைகள் மத்தியில் ஒன்றாக வளர்ந்து ஒன்றாக வாழ்ந்த பொதுப்புத்தி தூக்கலாக இருந்தது. அன்றைய சூழலில் தமிழ் மொழியும் தமிழர் மத்தியில் பலமாக இருந்த சிறுதெய்வ வழ்பாட்டின் அடிப்படையிலான சைவம் சமூகநல நோக்குள்ள கிறிஸ்துவமும் முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்திய பக்திமார்க்கமான சூபித்த்வமும் செழுமையானதொரு மனிதாபிமான சூழலுக்கு வழிவகுத்தது. ஆனால் 1970பதுகளில் கற்ற இளைஞர்களை அடிப்படையாகக் கொண்ட மத்தியதரவர்க்கம் மேலோங்கி நிலஉடமை சார் மேல் வர்க்கத்துக்கு சமூக அரசியல் ரீதியாகச் சவாலானது. ஆனால் இளைஞர்கள் தமிழர் முஸ்லிம்கள் என வேறுபட ஆரம்பித்திருந்தனர். தமிழ் உருவாக்கியிருந்த மொழிவாரிப் பாலங்களும் பக்திமார்க்கம் உருவாக்கியிருந்த கலாச்சாரப் பாலங்களும் தகர ஆரம்பித்தன. 
.
தமிழ் இளைஞர்கள் மத்தியில் யாழ்பாண மைய தமிழ் விடுதலை அரசியல் செல்வாக்கும் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் ஈரான் சவூதி அரேபிய மார்க்க பார்வைகளின் செல்வாக்கும் தலைதூக்கி 
புதிய மாற்றங்கள் காலம் காலமாக நிலவி வந்த பொதுமைகளை மிதித்துச் சிதைத்தது. 
.
இக்காலக்கட்டத்தில் கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் தமிழர் முஸ்லிம்கள் என இனவாரியாக தனிமைபடுதல் ஆரம்பித்தது. 
இப்போக்கு 1970பதுகளில் வடக்கில் செல்வாக்குப் பெறவில்லை.
கிழக்கில் உருவாகிவந்த இனப்பிழவு நிலமை கவலையாக இருந்தபோதும் நான் எதிர்காலத்தை புரிந்துகொண்டதுடன் பரஸ்பரம் மாற்றத்தை அங்கீகரிப்பதன்மூலமே ஒற்றுமை சாத்தியம் என்பதை உரத்துப் பேச ஆரம்பித்தேன். இக்கால்கட்டத்தில்தான் தோழர் தலைவர் அஸ்ரப் அவர்களது நட்ப்பும் கிடைத்தது. 
.
இன்று பார்க்கையில் பிறிண்ஸ் காசிநாதர் எஸ்.எல்.எம்.ஹனீபா போன்றவர்களது தலைமுறையினர் மட்டுமே கிழக்கின் பழைய தலைமுறையின் செழுமையின் அழையாளங்களாக இன்றும் மிழிளிர்கிறார்கள்.
.
வட கிழக்கு மாகானத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் இளைஞர்கள் வரலாற்றைத் த்ரும்பிப்பார்த்து எங்கே எப்போது எப்படி என்ன தவறு நிகழ்ந்தது எப்படி இன உறவின் பாலங்கள் உடைய ஆரம்பித்தன என்பதைக் கண்டுணர வேண்டும். பழியும் பாவமும் அடுத்தவரது என்னும் இரத்தக் கறையும் சாமர்கறையும் உள்ள உங்கள் பெற்றோரின் கதைகளை நம்ப வேண்டாம். இரு தரப்பையும் சேர்ந்த உங்கள் பெற்றோரது தலைமுறையின் கைகளில் சாமலும் இரத்தமும் கறையாகப் படிந்துள்ளது. கிழக்கில் 1985 - 1995 கால கட்டத்தில் சரிக்கு சரி வீடு வழிபாட்டுத் தலங்கள் சாம்பராக்கபட்டும் சரிக்குச் சரி கொலை இரத்தம் சிந்தபட்டுமுள்ளது. வடக்கில் உங்கள் பெற்றோர் தலைமுறைத் தமிழர்களை மட்டும் நான் குற்றம் சாட்டுவேன். இன்னமும் மீழ் குடியேற்றம் தாமதமாவதுபற்றி நாம் வெட்க்கித் தலை குனிதல் வேண்டும். 
.
எல்லா தவறுகளும் திருத்தக்கூடியவையே. உடைந்த எல்லாப் பாலங்களும் மீழக் கட்டி எழுப்பப்படக்கூடியவையே என்பதை எமது இளைய தலைமுறை உணரவேண்டும்.

 
 
 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனத்தை அழிக்கனும் என்றால் முதலில் சாதியை கதைச்சு ஊக்குவிக்கனும் அல்லது மதத்தை கதைச்சு கடந்தகால மேவின புன்னை கிண்டிசீல் பிடிக்க வைக்கணும் பின்பு அதுபாட்டுக்கு கொல்லுபட தொடங்கி னால் சுய நிர்ணயம் கேட்பவன் பிச்சை வேண்டாம் நாயை பிடி எனும் வழியை நாடுவான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.