Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொது அமைதியை கெடுக்க முயன்ற தினகரன், வெற்றிவேல், புகழேந்தி உள்ளிட்ட நான்கு பேர் கைதாகின்றனர்.

Featured Replies

பொது அமைதி, கெடுக்க முயன்ற தினகரன், வெற்றிவேல்  ,

சேலம், :பொது அமைதியை கெடுக்க முயன்ற தினகரன், வெற்றிவேல், புகழேந்தி உள்ளிட்ட நான்கு பேர் கைதாகின்றனர். அவர்களை பிடிக்க சேலம் தனிப்படை போலீசார் சென்னை, பெங்களூரு விரைந்துள்ளனர்.
 

 

பொது அமைதி, கெடுக்க முயன்ற தினகரன், வெற்றிவேல்  ,

இதற்கிடையில் முதல்வருக்கு எதிராக நோட்டீஸ் வினியோகித்த 'மாஜி' எம்.எல்.ஏ., உள்பட ஆறு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருந்து பரோலில் வெளியே வரும் சசிகலாவால் சர்ச்சை உருவாகாமல் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகே தினகரன் அணியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான வெங்கடாஜலம் தலைமையில் 13 பேர் செப்., 27ம் தேதி காலை 8:00 மணிக்கு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நோட்டீஸ் வினியோகித்தனர். முதல்வர் பழனிசாமி சேலத்தில் முகாமிட்டிருந்த நிலையில் தினகரன் அணியினர் அவருக்கு எதிராக 'நோட்டீஸ்' வினியோகித்தது போலீசுக்கு தலைவலியை ஏற்படுத்தியது.

புகார்


இந்நிலையில் முதல்வர் நேற்று

முன்தினம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் சுப்புலட்சுமியிடம் இது குறித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அஸ்தம்பட்டி பகுதி அ.தி.மு.க., செயலர் சரவணன் அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

அதில் 'மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக நோட்டீஸ் வினியோகம் செய்தவர்களை தடுக்க முயற்சித்தோம். அவர்கள் எங்களுக்கு கொலை மிரட்டல்விடுத்ததுடன், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்க முயற்சித்தனர்' என கூறியிருந்தார். உடனடியாக விசாரணையில் இறங்கிய போலீசார் முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடாஜலம் உட்பட 13 பேர் மீது நேற்று அதிகாலை வழக்குப்பதிவு செய்தனர்.
 

வழக்குப்பதிவு



பின் வெங்கடாஜலம் சரண் அடைந்தார். சந்திரன், சூரியா, கலைவாணி, சசிகுமார், கார்த்திகேயன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இதன் தொடர்ச்சியாக முதல்வருக்கு எதிராகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், நோட்டீஸ் வினியோகிக்க துாண்டியதாக தினகரன், முன்னாள் எம்.எல்.ஏ., வெற்றிவேல், எஸ்.கே.செல்வம், கர்நாடகா மாநில செயலர், புகழேந்தி ஆகியோர் மீதும் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
.நான்கு பேரையும் கைது செய்ய தனிப் படையினர் பெங்களூரு, சென்னை விரைந்துள்ளனர். சென்னையில் சிகிச்சை பெறும்

 

கணவர் நடராஜனை பார்க்க சசிகலா சிறையில் இருந்து வெளிவரலாம் என தெரிகிறது. அவர் வரும் நேரத்தில், மிகப் பெரிய கூட்டத்தை திரட்டி, அரசுக்கு எதிராக சர்ச்சையை கிளப்ப தினகரன் திட்டமிட்டிருந்தார். அதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை,
தினகரன் மீது பாய்ந்துள்ளது.முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடாஜலம் கூறியதாவது: 'நீட்' தேர்வுக்கு எதிராகவும், அனிதா மரணத்துக்கு நியாயம் கேட்டும், தினகரன் தலைமையில் போராட்டங்கள் நடக்கின்றன. அது குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தான் நோட்டீஸ் வினியோகித்தோம். பழிவாங்கும் நடவடிக்கையாக என்னை கைது செய்துள்ளனர், என்றார்.
 

ரகசிய முடிவு!



சேலத்தில் முகாமிட்டிருந்த முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் சுப்புலட்சுமியுடன் 30 நிமிடம் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகே தினகரன் ஆதரவாளர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கமிஷனர் சஞ்சய்குமாரின் பார்வைக்கு செல்லாமல் தினகரன் கைது நடவடிக்கையை மேற்கொள்வதற்காக தான் துணை கமிஷனர் சுப்புலட்சுமியை அழைத்து முதல்வர் பேசியுள்ளார். தினகரன் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட துாண்டியதாக வழக்கு பதியவும் வாய்ப்பு உள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1867171

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.