Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓபிஎஸ் உள்ளிட்ட 12 பேர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?- 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர் நீதிமன்றத்தில் கடும் வாதம்

Featured Replies

ஓபிஎஸ் உள்ளிட்ட 12 பேர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?- 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர் நீதிமன்றத்தில் கடும் வாதம்

 

 
download%203

18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றத்தில் கடும் வாதங்கள் வைக்கப்படுகிறது. 18 எம்.எல்.ஏக்களை நீக்கும் போது ஓபிஎஸ் உள்ளிட்ட 12 பேர் மீது ஏன் நடவடிக்கை இல்லை என டிடிவி தரப்பு வழக்கறிஞர் வாதம் வைத்துள்ளார். இரு தரப்பிலும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் வாதங்களால் விசாரணை பரபரப்பாக செல்கிறது.

அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்ததை அடுத்து தனி அணியாக இயங்கி வரும் தினகரன் அணியினர் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இதையடுத்து டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களான தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவைத் தலைவருக்கு அரசு கொறடா பரிந்துரை செய்த அன்றே 19 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு, 3 வாரத்துக்குள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து தினகரன் தரப்பு தொடர்ந்த வழக்கில் 18 எம்.எல்.ஏக்கள் தொகுதிகள் காலி என அறிவிக்கக்கூடாது, சட்டப்பேரவையை கூட்டக்கூடாது என்ற உத்தரவுடன் முதலமைச்சர், சட்டப்பேரவைச்செயலர், கொறடா பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி டிடிவி தினகரன் தரப்புக்கும், முகுல் ரோத்தகி , சோமையாஜி ஆகியோர் அரசு தரப்புக்கும் ஆதரவாக வாதாடி வருகின்றனர். வழக்கில் முதலில் சட்டப்பேரவை தலைவர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

அந்த பதில் மனுவில்

"18 எம்.எல்.ஏக்களும் விளக்கமளிக்க உரிய அவகாசம் வழங்கப்பட்டது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டினர். பழனிசாமி - பன்னீர்செல்வம் இணைந்த தினத்தன்றே தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சதித்திட்டம் தீட்டினர். ஆட்சியை கவிழ்ப்பேன் என்று தினகரன் மற்றும் தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் ஆகியோர் வெளிப்படையாக பேசியதற்கான அதாரங்கள் உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிடிவி தரப்பு வாதம்:

18 எம்.எல்.ஏ சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதிட்டுவருகிறார். 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டது தவறானது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் கொறடா உத்தரவை மீறி பிப்ரவரியில் வாக்களித்த ஓபிஎஸ் அணியினர் 12 பேர் பதவியை பறிக்கவில்லை என அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.

தகுதி நீக்கத்துக்கான உத்தரவு வழங்குவதிலேயே முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எங்களுக்கு நோட்டீஸ் வழங்குவதற்கு முன்னதாகவே ஊடகங்களுக்கு வழங்கினர். ஆட்சிக்கு எதிராக 18 எம்.எல்.ஏக்கள் செயல்படவில்லை. முதலமைச்சர் மீது தான் நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளோம்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் நடவடிக்கையை எடுத்த சட்டப்பேரவை தலைவர் 12 எம்.எல்.ஏக்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பினார்.

இந்த வழக்கில் முதலமைச்சர் தரப்பில் புகழ்பெற்ற வழக்கறிஞர் சோமையாஜி ஆஜராகி உள்ளார். அவர் தரப்பு வாதம் இன்னும் வைக்கப்படவில்லை.

http://tamil.thehindu.com/tamilnadu/article19795610.ece?homepage=true

  • தொடங்கியவர்

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு அக்டோபர் 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

தினகரன் தரப்பைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் அக்டோபர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

Madras_HC1_15121.jpg

 

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி தி.மு.க. தொடர்ந்த வழக்கு, 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 12 பேரைத் தகுதிநீக்கம் செய்யக் கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்குகளை ஒன்றிணைத்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திர பாபு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதில், தினகரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிசேக் மனு சிங்வி ஆஜராகி வாதாடினார். அப்போது, ’தகுதிநீக்கம் தொடர்பாக எம்.எல்.ஏ-க்களுக்கு உரிய அவகாசம் அளிக்கவில்லை. அதுதொடர்பான உத்தரவையும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அறிவிக்கவில்லை. அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னரே, அதை தபால் மூலம் உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டது. கட்சி சாராமல் செயல்பட வேண்டிய சபாநாயகர், முதலைமைச்சரின் ஆலோசனையின்படி செயல்பட்டுள்ளார் என்ற வாதங்களை அவர் முன்வைத்துள்ளார்.

வாதங்களைக் கேட்ட நீதிபதி, எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கை அக்டோபர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையும், 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையும் நீடிப்பதாக உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கையும், இந்த வழக்குடன் இணைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, அந்த வழக்கு அக்டோபர் 12-ம் தேதி விசாரிக்கப்படும் என்று அறிவித்தார்.  

http://www.vikatan.com/news/tamilnadu/104015-disqualified-mlas-case-adjourned-to-9th-october-mhc.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.