Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு?

Featured Replies

இரட்டை இலைச் சின்னம் யாருக்கு? - இறுதி விசாரணைத் தொடங்கியது

 

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில், இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்ற விசாரணை சற்றுமுன் தொடங்கியது. பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் குழு தேர்தல் ஆணைய அலுவலகத்தில் காத்திருக்கிறார்கள். இந்த வழக்கறிஞர்கள் குழுவோடு எம்.பி மைத்ரேயன் மற்றும் கே.பி முனுசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருக்கிறார்கள்.

IMG-20171006-WA0017_15023.jpg

 

இச்சூழலில் விசாரணையை எதிர்த்தும், நான்கு மாதங்கள் கழித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியும் தினகரன் தரப்பு  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைக் காலையில் மூன்று நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல், விசாரணை நடத்த தடையில்லை எனவும் உத்தரவிட்டது. இந்தச் சூழலில் அவசர அழைப்பு காரணமாக டெல்லி விரைந்தார் துணை முதல்வர் பன்னீர்செல்வம். அதே நேரம் பரோலில் வெளியாகியிருக்கிறார் சசிகலா.

IMG-20171006-WA0016_15360.jpg

பரபரப்பான தமிழக அரசியல் சூழலில் மிக முக்கிய நிகழ்வாக இரட்டை இலைச் சின்னம் மீட்பு அமையும் என்று கருதிய பன்னீர்−எடப்பாடி தரப்பு, சின்னத்தை மீட்டு கட்சியை முழுவதுமாகக் கைப்பற்றும் எண்ணத்தில் இருப்பது மட்டுமல்லாமல் அதை மட்டுமே கருத்தில் கொண்டு வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பன்னீர்செல்வத்தின் அவசர டெல்லி பயணம் ஒரு தீர்வை நோக்கியே இருக்கும் என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள்.

http://www.vikatan.com/news/tamilnadu/104226-election-commission-hearing-on-two-leaves-symbol-begins.html

  • தொடங்கியவர்

இரட்டை இலைச் சின்னம் விவகாரம்: விசாரணை ஒரு வாரம் ஒத்திவைப்பு!

 

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விசாரணையைத் தேர்தல் ஆணையம் ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தது. 

EC_18114.jpg

 

அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலைச் சின்னம் தொடர்பாகக் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடிய தினகரனின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், அதுதொடர்பாகத் தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு அறிவுறுத்தியதுடன், சின்னம் தொடர்பாக முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு நவம்பர் 10-ம் தேதி வரை உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

இதையடுத்து அறிவிக்கப்பட்டபடி இரட்டை இலைச் சின்னம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான இறுதி விசாரணை டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பிற்பகலில் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியும், ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் ஆகியோர் தரப்பில் சி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் தினகரன் தரப்பில் விஜய் ஹன்சாரியும் ஆஜராகி வாதிட்டனர். 

கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் உரிய அவகாசம் வழங்கப்படவில்லை என்று கூறி ஒருவார காலம் அவகாசம் தினகரன் தரப்பில் கோரப்பட்டது. மேலும், எதிரணியினர் சார்பில் தாக்கல்செய்யப்பட்ட ஆவணங்கள் யாவும் கட்டாயத்தின் அடிப்படையில் பெறப்பட்டவை என்றும் வாதிடப்பட்டது. விசாரணையைக் காலம்தாழ்த்தும் நோக்கிலேயே தினகரன் தரப்பில் அவகாசம் கேட்பதாகவும், அவகாசம் அளிக்கக் கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், சின்னத்துக்கு உரிமைகோரும் சசிகலா குற்றவாளியாகவும் தினகரன் வழக்குகளை எதிர்க்கொண்டு வருபவராகவும் இருப்பதாக வாதிடப்பட்டது.

 

2 மணி நேரம் நடந்த இருதரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணையம், சின்னம் தொடர்பான இறுதி விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தது. இரட்டை இலைச் சின்னம் தொடர்பான இறுதி விசாரணை அக்டோபர் 13-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

http://www.vikatan.com/news/tamilnadu/104246-election-commission-adjourns-hearing-in-aiadmk-two-leave-symbol-dispute-case-for-13-october.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.