Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜி சிலை அரசியல்

Featured Replies

சிவாஜி சிலை அரசியல்

 

உச்­ச­கட்ட அர­சியல் பர­ப­ரப்­பு­க­ளுக்கு இடையே சிலை அர­சியல் மீண்டும் ஒரு­முறை தமி­ழ­கத்தில் இவ்­வாரம் அரங்­கே­றி­யி­ருக்­கி­றது. நடிகர் திலகம் சிவாஜி கணே­சனின் சிலை மெரினா கடற்­க­ரை­யி­லி­ருந்து அகற்­றப்­பட்­ட­தோடு அச்­சி­லையை நிறு­விய தமி­ழக முன்னாள் முதல்வர் கலைஞர் கரு­ணா­நி­தியின் பெயரும் அச்­சி­லை யில் இருந்து அகற்­றப்­பட்­டுள்­ளது. இது ஒருபுறம் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தோடு சிவாஜி மணி­மண்­டப திற ப்பு விழாவும் பல்­வேறு சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ளது.

தமி­ழ­கத்தில் ஆட்­சியில் உள்ள கட்சி தொடங்கும் நல்ல திட்­டங்கள் கூட அடுத்து வரும் ஆட்­சி­யினால் அப்­ப­டியே கிடப்பில் போடப்­பட்டு புது­திட்­டங்கள் தொடங்­கப்­ப­டு­வது புது­மை­யல்ல. அது­போ­லவே ஒருவர் வைக்கும் சிலை என்­பது பின்னர் ஆட்­சிக்கு வரு­ப­வர்­க­ளினால் அகற்­றப்­ப­டு­வதும் புது­மை­யல்ல. இது இன்று நேற்று தொடங்­கி­ய­தில்லை. பல ஆண்­டு­ காலமாக இடம்பெறு­கின்­றது. சென்னை நுங்­கம்­பாக்­கத்தில் 1971–1976 காலப்­ப­கு­தியில் பிர­மாண்­ட­மான முறையில் கரு­ணா­நிதி வள்­ளு­வ­ர் கோட்­டத்தை கட்­டினார். அப்­போது இந்­தி­ரா­காந்தி பிர­தம­ராக இருந்­த­தோடு நெருக்­கடி கால­மாகும். கரு­ணா­நிதி வள்­ளுவர் கோட்ட திறப்பு விழா­வுக்கு திகதி குறித்து விளம்­ப­ரங்கள் கூட செய்­து­விட்டார். ஆனால் விழா நடை­பெ­று­வ­தற்கு ஓரிரு நாட்­க­ளுக்கு முன்னர் இந்­திரா காந்தி கரு­ணா­நி­தியின் ஆட்­சியை கலைத்து விட்டார். அத்­தோடு அப்­போ­தைய குடி­ய­ரசுத் தலை­வ­ர்தான் விழாவை நடத்­தினார். இதன்­போது வள்­ளுவர் கோட்­டத்­துக்கு அடிக்கல் நாட்­டிய கரு­ணா­நி­தியின் பெயர் அங்­கி­ருந்து அகற்­றப்­பட்­டது. கரு­ணா­நி­திதான் வள்­ளுவர் கோட்­டத்தை கட்­டினார் என்ற ஆதா­ரமே இல்­லாமல் செய்­யப்­பட்­டது. ஆனால் வள்­ளுவர் கோட்­டத்துக்கு முன்னால் தி.மு.க. சார்பில் அண்ணா சிலையை கரு­ணா­நிதி நிறுவி சிலை திறப்­பாளர் வள்­ளுவர் கோட்டம் கண்ட கலைஞர் கரு­ணா­நிதி என்று கல்­வெட்டில் பொறித்தார்.

இதே­போ­ல­ சி­லப்­ப­தி­கா­ரத்தின் மீது ஈடு­பாடு கொண்டு கரு­ணா­நிதி, கண்­ணகி சிலையை சென்னை கடற்­கரை சாலையில் நிறு­வினார். ஜெய­ல­லிதா முதல்­வ­ராக இருந்­த­போது இந்த சிலை திடீ­ரென அகற்­றப்­பட்­டது. மணல் லொறி மோதி விபத்­துக்­குள்­ளா­னதால் அந்த சிலை அகற்­றப்­பட்­ட­தாக காரணம் கூறப்­பட்­டது. ஆனால் முதல்வர் செல்லும் பாதையில் உக்­கிர தெய்­வ­மான கண்­ணகி சிலை இருப்­பது உகந்­த­தல்ல என்று ஜோதிட வல்­லு­நர்கள் கூறி­ய­தா­கவும், அதனைத் தொடர்ந்து அந்த சிலை அகற்­றப்­பட்­ட­தா­கவும் அப்­போது பர­வ­லாக பேசப்­பட்­டது.

கடற்­க­ரையில் இருந்து அகற்­றப்­பட்ட கண்­ணகி சிலை முதலில் அருங்­காட்­சி­ய­கத்தில் வைக்­கப்­பட்­டது. கரு­ணா­நிதி மீண்டும் முதல்­வ­ரான பிறகு அந்த சிலையை மீண்டும் கடற்­க­ரையில் பார­தியார் சாலை சந்­திப்பில் நிறுவச் செய்தார். இத­னி­டையே அண்­ணா­சா­லையில் உள்ள அன்­ப­கத்­திலும் கண்­ணகி சிலை அமைக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. இதே­போல அண்ணா உயி­ருடன் இருக்கும் போதே அவ­ருக்கு சிலை வைக்­கப்­பட்­டது. ஆனால் அதற்கு எம்.ஜி.ஆர். நன்­கொடை கொடுத்­த­மையால் பின்னர் கரு­ணா­நிதி தி.மு.க. வுக்கு என தனி சிலை நிறு­வினார். பெரியார் சிலையும் இப்­ப­டியே தி.மு.க.வுக்கு வேறு அதி.மு.க.வுக்கு வேறு என்றுதான் வைக்­கப்­பட்­டுள்­ளன.

தொடர்ந்து கரு­ணா­நி­திக்கும் ஜெய­ல­லி­தா­வுக்கும் இடை­ யி­லான அர­சியல் பகை­மையின் கார­ண­மாக ஒருவர் ஆட்­சியில் வைக்­க­ப்பட்ட சிலைகள் மற்­றவர் ஆட்­சியில் இல்­லாது செய்­ய­ப்­ப­டு­வது இயல்­பான விட­ய­மாக மாறி­யது. இதன் உச்­சக்­கட்­டமே சிவா­ஜி­சிலை அகற்றம். சிவாஜி தமி­ழுக்கும் தமி­ழர்க்கும் நமது கலா­சா­ரத்­துக்கும் முகவரி கொடுத்த கலைஞன். அவரை அர­சி­ய­லாக்க வேண்டாம் என்ற குரல்கள் ஒலித்­தாலும் அவ­ரது சிலை மற்றும் மணி­மண்­டபம் என்­பன அர­சி­யலில் கலந்தேபோயின.

நடிப்­புக்கு இலக்­கணம் வகுத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி மர­ண­ம­டைந்தார். அவ­ரது மறை­வுக்கு வந்த முதல்வர் ஜெய­ல­லி­தா­விடம் அவ­ருக்கு மணி மண்­ட­பமும் சிலையும் அமைக்க வேண்­டு­மென சிவாஜி ரசி­கர்கள் மனு அளித்­தனர். 2002 செப்­டெம்பர் 26 ஆம் திகதி சிவாஜிக்கு மணி மண்­டபம் அமைப்­ப­தற்­காக சென்னை சத்யா ஸ்டுடி­யோ­வுக்கு எதிரே, பொதுப் பணித்­து­றைக்குச் சொந்­த­மான 65 சென்ட் நிலத்தை ஒதுக்கி உத்­த­ர­விட்டார் ஜெய­ல­லிதா. ஆனால் சிலை குறித்து ஏதும் அறி­விக்­க­வில்லை. தென்­னிந்­திய நடிகர் சங்­கத்­திடம் அந்த இடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

2006 மே அன்று தி.மு.க. அரசு பத­வி­யேற்­றதும், சிவாஜி கணே­ச­னுக்கு சென்­னையில் சிலை அமைக்­கப்­படும் என ஆளுநர் உரை­யி­லேயே அறி­விக்­கப்­ப­டு­கி­றது. அதற்­கி­ணங்க நடிகர் தில­கத்­துக்­கு சென்னை கடற்­கரை சாலையில் அப்­போ­தைய முதல்வர் கரு­ணா­நிதி சிலை வைத்தார். ஸ்தபதி கே.ஜி. ரவியின் வடி­வ­மைப்பில், சிவாஜி கணே­சனின் சிலை உரு­வாக்­கப்­பட்டு 2006 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் திகதி அவ­ரது நினைவு தினத்­தன்று கரு­ணா­நி­தியால் திறக்­கப்­பட்­டது.

இந்த சிலையால் போக்­கு­வ­ரத்து பாதிக்­கப்­ப­டு­வதா­ கவும் அடிக்­கடி விபத்­துகள் ஏற்­ப­டுவ­தா­கவும் கூறி உயர்­நீதிமன்­றத்தில் வழக்குத் தொட­ரப்­பட்­டது. இத­ற­்­கி­டையே அ.தி.மு.க. ஆட்சிப் பீடம் ஏறி­யது. இக்­கா­லப்­ப­கு­தியில் வழக்கின் இறுதி தீர்ப்பில், சிவாஜி கணேசன் சிலையை அகற்ற வேண்டும் என நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது. சிலையை அகற்­றினால் கெட்ட பெயர் வரும் என சிந்தித்த அப்­போ­தைய முதல்வர் ஜெய­ல­லிதா சிலையை அகற்ற கால அவ­காசம் கேட்­ட­தோடு சிவா­ஜிக்கு மணி­மண்­ட­பத்தை தனது அரசே கட்டும் என அறி­வித்தார். இது சிவாஜி ரசி­கர்­களை மகிழ்ச்­சி­ய­டைய செய்­தது. சிவாஜி மணி­மண்­டபம் அமைக்­கப்­பட்டு வந்த நிலையில் திடீ­ரென ஜெ. கால­மானார். இந்­நி­லையில் கடந்த ஆகஸ்ட் மாதம் யாரும் எதிர்­பா­ராத நிலையில் நள்­ளி­ரவில், இயந்­தி­ரங்­களின் மூலம் சில மணிநேரங்களில் சிவா­ஜியின் சிலை கடற்­க­ரை­யி­லி­ருந்து அகற்­றப்­பட்­டது. இதற்கு சிவாஜி ரசி­கர்­களும் திரை­யு­ல­கத்­தி­னரும் கடும் எதிர்ப்பு தெரி­வித்­தனர். சிலை அகற்­றப்­பட்­ ட­மைக்கு கடும் கண்­ட­னங்கள் எழுந்­தன. இன்று தமி­ழக அர­சி­ய லில் களம் இறங்­கி­யுள்ள கமல்­ஹாசன் கூட இனி­யொரு சிலை செய்வோம். சிவா­ஜிக்கு புதிய சிலை அமைப்போம் என்று தெரி­வித்தார். தமிழ் திரை­யு­லகம் முழுவதும் கண்­டனம் தெரி­வித்­தி­ருந்­தது. பொது­மக்கள் கூடும் இடத்தில் சிலையை மீண்டும் நிறுவ வேண்­டு­மென நடிகர் சங்­கத்­தினால் தீர்­மா­னமும் நிறை­வேற்­றப்­பட்­டது. ஆனால் இர­வோடு இர­வாக அகற்­றப்பட்ட சிலை சென்னை அடை­யாறில் உள்ள மணி­மண்­ட­பத்தில் நிறு­வப்­பட்­டது.

கரு­ணா­நி­தியால் நிறு­வப்­பட்ட சிலை ஜெய­ல­லி­தாவால் அமைக்­கப்­பட்ட அடையாறு மணி­மண்­ட­பத்தில் வைக்­கப்­பட்­டது கூட பர­வா­யில்லை. அதி­லி­ருந்த கரு­ணா­நி­தியின் பெயர் அழிக்­கப்­பட்­டுள்­ள­மைதான் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதற்கு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரி­வித்­தி­ருந்தார். அதாவது நடிகர் திலகத்தின் சிலையின் கல்­வெட்டில், அதை திறந்­து­வைத்த தலைவர் கலை­ஞரின் பெயர் பொறிக்­கப்­பட்­டி­ருந்­தது. அது முன்னாள் முத­ல­மைச்சர் ஜெய­ல­லி­தாவின் கண்­களை உறுத்திக்கொண்­டி­ருந்­தது. இப்­போது எடப்­பா­டியின் கண்­க­ளையும், அ.தி.மு.க. ஆட்­சி­யா­ளர்­களின் கண்­க­ளையும் உறுத்­தி­யி­ருக்­கி­றது. எனவே திட்­ட­மிட்டு, இது­கு­றித்து நீதி­மன்­றத்தில் கூட வாதா­டாமல், அங்­கி­ருந்து சிலையை அப்­பு­றப்­ப­டுத்­து­வதில் இந்த ஆட்சி முனைப்­பாக இருந்­தது. அந்தச் சிலையை கொண்­டுபோய் மணி­மண்­ட­பத்தில் வைக்­கின்­ற­போது, தலைவர் கலைஞர் கருணாநிதியின் பெயரை நீக்­கி­விட்டு, ஜெய­ல­லி­தாவின் பெயர் அதில் பொறிக்­கப்­பட வேண்டும் என்­ப­தற்­காக திட்­ட­மிட்டு இவை­யெல்லாம் நடந்­தி­ருக்­கி­றது.

பரா­சக்­தியில் கரு­ணா­நி­திக்கும் நடிகர் திலகம் சிவா ஜிக்கும் தொடங்­கிய பாசத்தை இதுபோன்ற இழி­வான செயல்­களால் எல்லாம் எடப்­பாடி பழ­னிச்­சாமி போன்றோர், தமிழ் திரை­யு­ல­கத்­தி­னரின் மன­தி­லி­ருந்து நீக்­கி­விட முடி­யாது என்­பதை முதலில் அவர் உணர்ந்து கொள்ள வேண்டும். அர­சியல் காழ்ப்­பு­ணர்ச்­சி­யுடன் அ.தி.மு.க. அரசு நடிகர் தில­கத்தின் சிலையை அகற்­றி­யி­ருக்­கி­றது” என்று கண்­டனம் செய்தேன். அர­சியல் காழ்ப்­பு­ணர்ச்­சியின் உச்­ச­கட்­ட­மாக அவ­ரது மணி மண்­டபத் திறப்பு விழா­வையும் இப்­போது கொச்­சைப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது இந்த குதிரை பேர அரசு.

அத­னால்தான் அந்த சிலையை அகற்ற அ.தி.மு.க. அரசு முனைந்­த­போது, “கண்­ணகி சிலை­யையே எடுத்­த­வர்கள் இப்­போது என்­னு­டைய நண்பர் சிவாஜி கணே­சனின் சிலையை எடுக்க விரும்­பினால், அதன் பலனை அவர்­களே அனு­ப­விக்­கட்டும்” என்று எச்­ச­ரித்தார். அதையும் பொருட்­ப­டுத்­தாமல் அந்த மாபெரும் கலை­ஞனின் சிலையை முக்­கிய இடத்தில் இருந்து நள்­ளி­ரவில் அகற்றி, அந்த விழா­வையும் நய­வஞ்­ச­கத்­துடன் சிறு­மைப்­ப­டுத்­து­வது ஒட்­டு­மொத்த தமிழ் திரை­யு­ல­கத்­தையும், நடிகர் தில­கத்தின் கோடிக்­க­ணக்­கான ரசி­கர்­க­ளையும் அவ­மா­னப்­ப­டுத்­தி­யி­ருக்கும் செயல். இது­போன்ற சிறுபிள்­ளைத்­த­ன­மான அர­சியல் விளை­யாட்­டு­களால் மன்­னிக்க முடி­யாத துரோ­கத்தை செய்து கொண்­டி­ருக்கும் முத­ல­மைச்சர் எடப்­பாடி பழ­னிச்­சா­மியை தமிழ் திரை­யு­லகம் ஒருபோதும் மன்­னிக்­காது என்று கண்­டனம் தெரி­வித்தார்.

அதே­போல, சிலை அர­சியல் செய்ய வேண்டாம் என கவி­ப்பே­ர­ரசு வைர­முத்­துவும் கோரி­யி­ருந்தார். சிவா­ஜி யின் பெய­ரோடு கலைஞர் பெயர் கலந்­தி­ருக்­கி­றது என்­பது கலை உண்மை. சிவாஜி சிலையை கலை­ஞர்தான் நிறு­வி னார் என்­பது வர­லாற்று உண்மை. இரு உண்­மை­களும் சிலைக்கு கீழே புதைக்­கப்­ப­டு­வதை தமிழ் உணர்­வா­ளர்கள் ஏற்கமாட்­டார்கள். சிவா­ஜியின் சிலை பீடத்தில் இருந்த கலை­ஞரின் பெயரை மீண்டும் பொறிக்க வேண்டும்.

சிலையை சிலை­யாக பார்க்க வேண்டும். அர­சி­ய­லாக பார்க்கக்கூடாது. தமிழ்­நாட்டில் சிலையே அர­சியல் ஆகி­வி­டு­கி­றது. சிலை அர­சி­யலை முடி­வுக்கு கொண்டு வர­வேண்டும். சிலையே இல்­லா­விட்­டாலும் சிவாஜி சிவா­ஜி தான். ஆனால் நிறு­வப்­பட்ட சிலையில் நேர்மை இருக்க வேண்டும். சிலையில் பீடத்தில் கலை­ஞரின் பெயரை தமி­ழக அரசு கட்­டாயம் பொறிக்க வேண்டும் என்று தெரி­வித்­துள்ளார். அதே­போல சிவாஜி சிலையை திறந்து வைத்த கரு­ணா­நி­தியின் பெயரை ஒரு ஓரத்­தி­­லா­வது பொறிக்க வெண்டும் என சிவா­ஜியின் இளைய மகனும் நடி­க­ரு­மான பிரபு தமி­ழக அர­சுக்கு கோரிக்கை விடுத்­தி­ருந்தார். ஆனால் இதற்கு முத­ல­மைச்சர் எவ்­வித பதிலும் தெரி­விக்­க­வில்லை. இதே­வேளை அ.தி.மு.க. அமைச்சர் செல்லூர் ராஜூவோ சிவாஜி சிலை கல்­வெட்டு அகற்றம் குறித்து, தி.மு.க.வினர் பெரி­தாக பேசி வரு­கி­றார்கள். கடந்த 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி 133 அடி திரு­வள்­ளுவர் சிலைக்கு எம்.ஜி.ஆர். அடிக்கல் நாட்­டிய கல்­வெட்டை கழிப்­ப­றையில் தி.மு.க.வினர் வீசி­யதை மறக்­க­மு­டி­யாது என்று ஏட்­டிக்கு போட்­டி­யாக பேசி­யுள்ளார்.

இது ஒரு­புறம் இருக்க சிவாஜி என்னும் மாபெரும் கலை­ஞ­னுக்கு கட்­டப்­பட்ட மணி­மண­்ட­பத்தை திறந்து வைக்க முதல்­வரோ துணை­மு­தல்­வரோ வராமல் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைப்பார் என்று தமி­ழக அரசு தெரி­வித்­தமை ஒரு பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யது. சிவா­ஜியை தமி­ழக அரசு அவ­ம­திப்­ப­தாக குற்­றஞ்­சாட்டப்­பட்டு எதிர்­ப்புகள் கிளம்­பின. உடனே எடப்­பாடி துணை­மு­தல்­வ­ரான பன்­னீரை சிலை திறப்­புக்கு அனுப்­பி­வைத்தார். இதற்கு காரணம் தோஷமாம்.

சிவாஜி சிலையை கரு­ணா­நிதி திறந்­து­வைத்­த ­பி­றகு அவ­ருக்கு அடுத்­த­டுத்து சோதனைகள் வந்­த­தாக தி.மு.க.வினர் தரப்பில் ஒருபேச்சு உள்­ளது. அந்த சென்­டிமெண்ட் குறித்து முதல்வர் எடப்­பாடி பழ­னிச்­சா­மி­யிடம் கூறி­யுள்­ளனர். சிவாஜி மணிமண்­ட­பத்தை திறந்து வைத்தால், பத­விக்கு ஆபத்து என ஜோதி­டர்கள் சொன்­னதால், முதல்வர் எடப்­பாடி பழ­னிச்­சாமி அந்த விழா­வுக்குச் செல்­வதைத் தவிர்த்­து­விட்­டாராம். சிவாஜி மணி­மண்­டப திறப்பு விழா­வுக்கு துணை முதல்­வ­ரான பன்னீர்செல்­வத்தை அனுப்­பி­விட்டார் எடப்­பா­டியார். ஆனாலும் அச­ராத ஓ.பி.எஸ். எவ்­வ­ளவோ பார்த்­துட்டோம் இதை பார்க்­க­மாட்­டோமா? பரி­காரம் பண்­ணி­டுவோம் என்று கூறி­னாராம். மணி­மண்­ட­பத்தை திறந்து வைத்­ததால் உடனே திருப்­ப­திக்கு போய் வெங்­க­டா­ஜ­ல­ப­தியை ஒரு தடவை தரி­சனம் பண்­ணிட்டு வந்­து­டுங்க. எந்த தோஷ­மாக இருந்­தாலும் அது ஓடிப் போய்­விடும் என ஜோதி­டர்கள் பரி­காரம் கூறி­யுள்­ளனர். உடனே பன்னீர் செல்வம் திருப்­ப­திக்கு குடும்­பத்­தோடு சென்று ஏழு­ம­லை­யானை தரி­சனம் செய்தார். தான் முதல்­வ­ராக இருந்­த­போது இச்­சிலை திறந்து வைக்­கப்­பட்­டதால் எடப்­பாடி பழ­னிச்­சா­மியும், குடும்­பத்­துடன் திருப்­பதி சென்று ஏழு­ம­லை­யானை வழி­பட்­டுள்ளார். இது ஒரு­புறம் இருக்க இந்த புறக்­க­ணிப்­புக்­கான மற்­றொரு கார­ண­மாக மணிமண்­டப திறப்பு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொள்­ள­வி­ருப்­ப­தால்தான் முதல்வர் பழ­னிச்­சாமி தவிர்ப்­ப­தாக குற்­றச்­சாட்டு எழுந்­தது. தமி­ழக அரசை தொடர்ந்து கமல் விமர்­சித்து வரு­வ­தோடு இந்த ஆட்­சியை வீட்­டுக்கு அனுப்ப வேண்­டு­மெ­னவும் கூறி வரு­கின்றார். எனவே இந்த விழாவில் கமல்­ஹாசன் கலந்து கொள்வார் என்ற நிலையில், அவரைப் பார்ப்­பதை தவிர்க்­கவே முதல்வர் இந்த விழாவில் கலந்து கொள்­ள­வில்லை என்ற பேச்சும் அடி­பட்­டது. அது­மட்டும் அல்ல சிவாஜி குடும்பம் சசி­க­லாவின் சம்­பந்தி என்­பது அனை­வ­ருக்கும் தெரியும். ஜெய­ல­லி­தாவின் தோழி சசி­க­லாவின் சகோ­தரி வனி­தா­ம­ணியின் மக­னான சுதாகர் நடிகர் சிவாஜி கணேசன் பேத்தி சத்­தி­ய­லட்­சு­மியை திரு­மணம் செய்­துள்ளார். சுதா­கரை ஜெய­ல­லிதா வளர்ப்பு மக­னாக தத்தெடுத்து இந்­தி­யாவே வாய்­பி­ளக்கும் அள­வுக்கு 6 கோடி ரூபா செலவில் பிர­மாண்­ட­மாக சுதா­க­ர­னுக்கு நடிகர் சிவாஜி கணேசன் பேத்தி சத்­தி­ய­லட்­சு­மியை திரு­மணம் செய்­து­வைத்தார். இந்த திரு­ம­ணம்தான் ஜெ. அர­சியல் வாழ்க்­கையின் மிக­முக்­கி­ய­மான சறுக்­க­லாக இருந்­தது. சொத்­து­க்கு­விப்பு வழக்கில் ஜெய­ல­லிதா சிக்கி ஆட்­சியை தொலைக்­கவும் இதுவே கார­ண­மாக அமைந்­தது. பின் சுதா­க­ரனை விரட்­டி­ய­டித்தார் ஜெய­ல­லிதா. எப்­ப­டி­யா­யினும் சசி­கலா குடும்பம் சிவா­ஜிக்கு சம்­பந்தி. சசி­கலா குடும்­பத்­தி­ன­ரோடு நெருங்­கிய தொடர்பில் தான் சிவாஜி குடும்பம் இருந்து வரு­கி­றது. சசி­க­லாவை வெறுக்கும் எடப்­பாடி, சசி­க­லாவை ஆத­ரிக்கும் சிவாஜி குடும்­பத்­தி­ன­ரையும் வெறுக்­கிறார்.

மேலும், எடப்­பாடி முதல்­வ­ரா­ன­தை­ய­டுத்து நடிகர் சங்­கத்­தினர் பல­முறை அவரை சந்­தித்­தனர். இந்­த­ சந்­திப்­பு­களில் பிரபு கலந்­து­கொள்­ள­வில்லை. இது குறித்து எடப்­பாடி ஒரு­முறை விசா­ரித்­த­போது, தம்மை சந்­திக்க சிவாஜி குடும்பம் விரும்­ப­வில்லை என்­ப­தை­ய­றிந்­து­கொண்டார். இதுவும் அவ­ருக்கு சிவாஜி குடும்­பத்­தினர் மீது வெறுப்பை ஏற்­ப­டுத்­தி­யது. இதற்­கி­டையே, எடப்­பாடி கலந்­து­கொள்ளும் ஒவ்­வொரு விழா­வி­னையும் அவ­ரது குடும்­பத்­தினர் தங்­களின் குடும்ப ஜோதி­டர்­க­ளிடம் ஆலோ­சிக்­கின்­றனர் என்று கூறப்­ப­டு­கி­றது. அந்த ஆலோ­ச­னைப்­ப­டியே விழாவில் எடப்­பாடி கலந்­து­கொள்­வது முடிவு செய்­யப்­ப­டுகி­றது என்று கூறப்­ப­டு­கி­றது. அந்­த­வ­கையில், சிவாஜி விழாவில் கலந்­து­கொள்ள வேண்டாம் என ஜோதி­டர்­களின் அறி­வு­றுத்­தி­யுள்­ளனர் என்று தெரி­கி­றது. இத்­த­கைய கார­ணங்­க­ளால்தான் மண்­ட­பத்தை திறக்க மறுத்­துள்ளார்.

எப்­ப­டி­யா­யினும் குடும்பம், அர­சியல், உற­வுகள் இவை அனைத்­தையும் கடந்­த­வரே நடிகர் திலகம். அவர் அர­சி­யலில் வந்து தோற்றுப்போனாலும் நமது கலா­சாரம், பண்­பா­டுகள் அனைத்­தையும் ஆயிரம் தலை­மு­றைகள் கண்­டு­க­ளிக்கும் வகையில் ராஜ­ராஜ சோழ­னாக, கர்­ண­ன­னாக, வீர­பாண்டிய கட்­ட­பொம்­ம­னாக, பார­தி­யாக, அப்­ப­ராக மட்டும் அல்ல, நாம் காணாத அந்த கட­வு­ளையும் திரு­வி­ளை­யாடல் மூலம் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியவர். வலக்கண் சிரித்தால் இடக்கண் அழும்.நடைகளிலேயே பலவகை நடைகளை கண்டுபிடித்தவர்.வெறும் பாடல்களாக இருந்த தமிழ் சினிமாவில் புதிய வீர நடைவசனங்களை பேசி தமிழ் சினிமாவுக்கு இலக் கணம் கொண்டுவந்து சக்கரவர்த்தியாக இந்த தமிழ் சினிமாவை ஆட்சி புரிந்தவர். அதனால் தான் பத்மஸ்ரீ பத்மபூஷண்களை கடந்து செவாலியே விருதை வென்றார். விருதுகளை கடந்த மதங்களை கடந்த இந்த தமிழ் கலைஞனை அரசியல் ஆக்குவது நமது அறியாமையே. மணிமண்டபத்தை திறந்துவைக்க எடப்பாடி செல்லாமை க்கு ஆயிரம் காரணங்கள் இருக்கட்டும். காலத்தால் அழி யாத வான் உயர்ந்த புகழ்கொண்ட சிவாஜியின் மணி மண்டபத்தை திறந்து வைப்பதற்கும் ஓர் அதிர்ஷ்டம் வேண்டும். முதல்வராக இருந்த போதிலும் அந்த அதிர்ஷ் டம் எடப்பாடிக்கு கிட்டாமல் போய்விட்டது. ஆனால் முதல்வராக தேர்தலில் நிற்காமல் அதற்கான எந்த பிர யத்தனமும் செய்யாமல் குனிந்து கும்பிட்ட பன்னீருக்கு ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே முதல்வர் நாற்காலியில் அமரும் யோகம் 3 முறை கிடைத்தது.அதுபோலவே இந்த மணிமண்டபத்தை திறந்து வைக்கும் யோகமும் கிட்டியது. இதனையே தமிழகத்தின் அடுத்த முதல்வராகும் வாய்புள்ள ஒருவரான நடிகர் ரஜினிகாந்த் அவ்விழாவில் கலந்துகொண்டபோது நகைச்சுவையாக பன்னீர் ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டசாலி என்றார். மணி மண்டபத்தை விடுவோம். ஆனால் உயர்ந்து பார்க்க வேண்டிய கம்பீரமான சிவாஜி சிலையை மணிமண்டபம் என்னும் 4 சுவர்களுக்குள் பூட்டி வைப்பது முறையல்ல. அரசியல் கடந்து பொது வெளியில் அவரது சிலை நிறு வப்பட வேண்டும். அதுதான் வானுயர்ந்த புகழ் கொண்ட அந்த கலைஞனுக்கு சிறப்பு.

குமார் சுகுணா

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-10-07#page-7

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.