Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலாவை முதல்வராக்க அழைக்காதது ஏன்? - முன்னாள் ஆளுநர் விளக்கம்

Featured Replies

சசிகலாவை முதல்வராக்க அழைக்காதது ஏன்? - முன்னாள் ஆளுநர் விளக்கம்

 

 
Sasikala1

சட்டப்பேரவை தலைவராக எம்எல்ஏக்களால் சசிகலா தேர்வு செய்யப்பட்டு கடிதம் கொடுத்தபோதும், சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு வெளியாக இருந்ததால், முதல்வர் பதவியேற்க அவரை அழைக்கவில்லை என்று முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தன் நூலில் விளக்கியுள்ளார்.

தமிழக பொறுப்பு ஆளுநராக சி.எச்.வித்யாசாகர் ராவ் கடந்தாண்டு ஆகஸ்ட் முதல், ஓராண்டு பணியாற்றினார். ஜெயலலிதா கடந்தாண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்த பிறகு, தமிழக அரசியலில் ஏற்பட்ட ஸ்திரமற்ற தன்மையை சமயோஜிதமாக கையாண்டார். அவர் இதுதொடர்பாக எழுதிய புத்தகத்தை நேற்று முன்தினம் வெளியிட்டார். இதில், தமிழகத்தில் ஆளுநராக இருந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளார். 6-ம் அத்தியாயத்தில், சசிகலா தொடர்பாக சில விளக்கங்களை அளித்துள்ளார். ஓபிஎஸ், பிப்.5-ம் தேதி பதவி விலகினார். அன்றே, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் சசிகலா தலைவராக தேர்வானார். உடனடியாக, ஆளுநரை சந்தித்து ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால், ஆளுநர் உடனடியாக அழைக்கவில்லை.

இது தொடர்பாக அவர் தன் புத்தகத்தில்,‘‘ சசிகலா ஆட்சியமைக்க உரிமை கோரினார். மறுநாள் ஓபிஎஸ் ராஜினாமாவை ஏற்றேன். அன்று, உச்ச நீதிமன்றம், சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தது. இந்த நேரத்தில் சசிகலாவை பதவியேற்க அழைப்பதா அல்லது தீர்ப்புக்காக காத்திருப்பதா என்ற மிகப்பெரிய சவால் என் முன் இருந்தது. சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, தீர்ப்பு வரும்வரை காத்திருக்க முடிவு செய்தேன். சசிகலாவை பதவியேற்க அழைக்கவில்லை. இந்த விவகாரத்தை சாதுர்யமாக கையாண்டதால், சட்டச்சிக்கல் மற்றும் அரசியலில் கரும்புள்ளி விழுவதும் தவிர்க்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19877881.ece?homepage=true

  • தொடங்கியவர்
சசிகலாவால் முதல்வராக முடியாமல் போனது ஏன்?
வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் விரிவான பதில்
 
 
 

'தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம், இந்திய பண்பாட்டில் வேரூன்றி உள்ள அகிம்சை போராட்டத்திற்கு, அழகிய விளம்பர மாக அமைந்தது' என, தமிழக பொறுப்பு கவர்னராக இருந்த, வித்யாசாகர் ராவ் தெரிவித்து உள்ளார்.

 

சசிகலாவால்,முதல்வராக,முடியாமல்,போனது,ஏன்?

மஹாராஷ்டிர கவர்னராக உள்ள, வித்யாசாகர் ராவ், 2016 செப்., 2 முதல், இந்தாண்டு அக்., 1 வரை, தமிழக பொறுப்பு கவர்னராக இருந்தார். அவர் கவர்னராக இருந்த போது, முதல்வராக இருந்த ஜெ., மறைவு, அதனால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் என, தமிழக அரசியல் பெரும் பரபரப்பாக இருந்தது.

இது குறித்து, 'அந்த பரபரப்பான நாட்கள்' என்ற தலைப்பில், வித்யாசாகர் ராவ் புத்தகம் எழுதி உள்ளார். இப்புத்தகத்தை, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
 

12 அத்தியாயம்


இப்புத்தகம், 148 பக்கங்கள் உடையது. அதில், கவர்னராக இருந்த போது நடந்த நிகழ்வுகளை, 12 அத்தியாயங்களாக தொகுத்து உள்ளார். முதல் தொகுப்பில், அவரது பதவியேற்பு நிகழ்ச்சி விபரங்கள் இடம் பெற்றுள்ளன. இரண்டாவது தொகுப்பில், ஜெ., மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டது, அவரது துறைகள் மாற்றம் செய்யப்பட்ட விபரங்கள் உள்ளன.இது பற்றி, வித்யாசாகர் ராவ் கூறியுள்ளதாவது:

ஜெ., உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டது எதிர்பாராதது. இது, மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் சில நாட்களில், உடல் நலம் தேறி, வீடு திரும்புவார் என, அனைவரும் நம்பினர். ஆனால், நாட்கள் கடந்து

மாதங்களாகின. அவர் சிகிச்சை பெற்று வந்த, சென்னை, அப்பல்லோ மருத்துவமனை முன், ஏராளமான மக்கள் திரண்டனர்.

மாற்றப்பட்டன:இந்த சூழ்நிலையில், மருத்துவ மனைக்கு சென்று, முதல்வருக்கு சிகிச்சை அளித்த, மருத்துவர்களை சந்தித்தேன். அவர்கள் அளித்த தகவல் அடிப்படையில், அவர் உடல் நலம் குறித்து அறிக்கை வெளியிட்டேன். அதன்பின், அரசு முறையாக நடைபெற வேண்டும் என்பதற்காக, எம்.ஜி.ஆர்., மருத்துவமனையில் இருந்த போது, மேற்கொண்டது போல,ஜெ., கவனித்து வந்த துறைகள், நிதி அமைச்சர், பன்னீர்செல்வத்திற்கு மாற்றப்பட்டன.இவ்வாறு அவர் கூறிஉள்ளார். மூன்றாவது தொகுப்பில், ஜெ., மறைவு மற்றும் இறுதி சடங்கு விபரங்களை, வித்யாசாகர் ராவ் தெரிவித்து உள்ளார்.

நான்காவது தொகுப்பில், 'வர்தா' புயலால் ஏற்பட்ட பாதிப்பு, மீட்பு நடவடிக்கை குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. புயலில், ஏராளமான மரங்கள் சேத மடைந்ததால், மரக்கன்றுகளை, அதிகளவில் நடும்படி, பல்கலை நிர்வாகங்களுக்கு உத்தரவிட்ட தாகவும், அதன்படி, கவர்னர் மாளிகையிலும், ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
 

அழகிய விளம்பரம்


ஐந்தாவது தொகுப்பில், ஜல்லிக்கட்டு போராட்ட நிகழ்வுகளை விவரித்து உள்ளார். மெரினா போராட்டம் குறித்து குறிப்பிடும் போது, 'தமிழகத் தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம், இந்திய பண்பாட்டில் வேரூன்றி உள்ள அகிம்சை போராட்டத்திற்கு, அழகிய விளம்பரமாக அமைந்தது' என, வர்ணித்து உள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டம், அதன் தொடர்ச்சியாக, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க, அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது, அதற்கு தான் உதவியது போன்ற விபரங்களையும் விளக்கி உள்ளார். லட்சக்கணக்கான மக்கள் திரண்ட போதும், சிறு அசம்பாவிதம் ஏற்படாததை,பெருமையாக குறிப் பிட்டு உள்ளார். ஆறாவது தொகுப்பில், 'அரசியல் கொந்தளிப்பு' என்ற தலைப்பில், முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் ராஜினாமா, அதன் தொடர்ச்சி யாக, முதல்வராக சசிகலா முயற்சி மற்றும் சட்டப் போராட்டங்களை விவரித்து உள்ளார்.
 

கடிதம்:

சசிகலாவை, முதல்வர் பதவியேற்க

 

அழைக்க கோரி, என்னிடம் கடிதம் தரப்பட்டது. அதில், நான் உடனடியாக எந்த முடிவும் எடுக்க வில்லை. அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், தீர்ப்பு வர உள்ள தகவல் கிடைத்தது.

'எனவே, தீர்ப்பு வரும் வரை, காத்திருக்க முடிவு செய்தேன். அதன்பின், நான் அவசரம் காட்டாத தையும், அரசியல் சட்டப்படி செயல்பட்டதை யும், தமிழக மக்கள் பாராட்டினர்' என, அவர் எடுத்துரைத்து உள்ளார்.

ஏழாவது தொகுப்பில், உயர் கல்வித் துறையில் மேற்கொண்ட சீர்திருத்தங்களை பட்டியலிட்டு உள்ளார். மற்ற தொகுப்புகளில், ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சிகள் குறித்த விபரங்கள் இடம் பெற்று உள்ளன.அனைத்து பக்கங்களிலும், வண்ண புகைப்படங்கள் நிறைந்துள்ளன. கவர்னர் மாளிகை புகைப்படங்கள், ஜல்லிக் கட்டு போராட்டப் படங்கள், ஜெ., இறுதி சடங்கு புகைப்படங்களும் உள்ளன.
 

சிறு குறிப்பு


திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடி குறித்து, அதிகம் அறிந்தவர் வித்யாசாகர் ராவ். அதை வெளிப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு பக்கத்திலும், திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடி யின் ஆங்கில வடிவம் இடம் பெற்றுள்ளது. அதே போல், 'வர்தா' புயலின் போது, எவ்வளவு வேகத்தில் காற்று வீசியது, எவ்வளவு சேதம் ஏற்பட்டது என்ற விபரங்களையும் பட்டியலிட்டு உள்ளார்.

ஜெ., சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவ மனையில், எம்.ஜி.ஆர்., சிகிச்சை பெற்றது பற்றியும், சிறு குறிப்பாக, ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1879572

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.