Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இலக்கத் தகடற்ற வெள்ளை வான் என்னைப் பின் தொடர்கின்றது': சிறீபதி சூரியாராச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'இலக்கத் தகடற்ற வெள்ளை வான் என்னைப் பின் தொடர்கின்றது': சிறீபதி சூரியாராச்சி

"கடந்த சில நாட்களாக இலக்கத் தகடற்ற வெள்ளை வான் என்னைப் பின்தொடர்கிறது, எனவே எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது" என்று சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் சிறீபதி சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளதாவது:

"மங்கள சமரவீரவையும் என்னையும் அமைச்சர் பதவிகளில் இருந்து வெளியேற்றிய பின்னர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைய எமது பாதுகாப்புக்களும் விலக்கப்பட்டிருந்தன. எமது உயிர்களுக்கு விடுதலைப் புலிகளால் மட்டுமல்லாது வேறு சிலராலும் ஆபத்துக்களை ஏற்படுத்தும் நோக்குடன் தான் இவை செய்யப்பட்டுள்ளன.

நாங்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்ட பின்னர் எனக்கு நான்கு காவல்துறையினரும், மங்கள சமரவீரவுக்கும் 8 காவல்துறையினரும் பாதுகாப்பை வழங்குவதாக தீர்மானிக்ப்பட்டிருந்தது. ஆனால் எனது பாதுகாப்பிற்கு என இருந்த இரு காவல்துறையினரும் கடந்த புதன்கிழமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். நாங்கள் நாடாளுமன்றத்தில் தெரிவிப்பவற்றையும், செய்பவைகளையும் நிறுத்துவதற்கே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது எமக்கு தெரியும்.

விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் அரச தலைவரின் ஆலோசகரான பசில் ராஜபக்சவுடன் முதற்சுற்று பேச்சக்களில் நான் கலந்து கொண்டேன். சில விடயங்களில் எனக்கு உடன்பாடு இல்லாததால் அடுத்த சுற்றுப் பேச்சுக்களில் இருந்து நான் விலகிக்கொண்டேன்" என்றார் அவர்.

இதனிடையே "வெள்ளை வானில் வருவோர் மக்களை கடத்திச் செல்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவர்களை ஏன் காவல்துறை மா அதிபர் கைது செய்யவில்லை" என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறீ ஜெயசேகரா கேள்வி எழுப்பியுள்ளார்.

-புதினம்

சுதந்திரக்கட்சியின் உள்வீட்டு இரகசியம்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இந்த உள்வீட்டு இரகசியங்களை அந்தக் கட்சியின் எம்.பியும், சமீபத்தில் ஜனாதிபதியினால் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்களில் ஒருவருமான சிறிபதி சூரியாராய்ச்சி நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியமையையடுத்து நேற்று சபையில் சலசலப்பு ஏற்பட்டது.

நானும் பஸில் ராஜபக்ஷவும் அவர்களுடன் (புலிகளுடன்) பேசியபோது ஏற்க முடியாத நிபந்தனைகளை அவர்கள் விதித்தனர். இதனால் நாம் பேச்சிலிருந்து திரும்பிவிட்டோம். என்று கூறினார் எம்.பி.

தமது பாதுகாப்பு விலக்கப்பட்டதால் தமக்கு ஏற்பட்டுள்ள உயிர் ஆபத்துப் பற்றியும் ஆவேசமாகப் பேசி, அரச தரப்பைச் சாடினார் அவர்.

நாடாளுமன்றத்திலிருந்து செல்லும்போதே இலக்கத் தகடில்லாத வெள்ளை வானில் விரட்டி வருகின்றனர். எந்த நேரத்திலும் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இப்படியான ஒரு நிலையில் என்னுடைய பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. எனக்கு ஏதாவது விபரீதம் ஏற்படுமானால் அதற்கு இந்த அரசும் பொலிஸ் மா அதிபருமே பதில் சொல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

வெள்ளை வானில் விரட்டுகின்றனர்

முன்னாள் அமைச்சர் சிறிபதி சூரியாராட்சி சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப் பிப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த சில தினங்களாக இலக்கத்தகடு இல்லாத வெள்ளை வானில் என்னையும்மங்கள சமரவீரவையும் பின் தொடர்கின்றனர். நேற்று நான் நாடாளுமன்றத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது வெள்ளை வானில் சிலர் விரட்டி வந்தனர். பின்னர் மறைந்துவிட்டனர்.

எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக நான் மனித உரிமை ஆணைக்குவிடமும், பொலிஸ் மா அதிபரிடமும் முறைப்பாடு செய்துள்ளேன்.

என்ன தவறு செய்தேன் நான் ?

நான் என்ன தவறு செய்தேன்? கிழக்கு மாகாணத்தில் உண்மை நிலையை வெளிப் படுத்தினேன். அவ்வளவே. இராணுவப் பேச்சாளரே உண்மையை ஒப்புக் கொள்கிறார். வாகரைக்குச் சென்ற போது அங்கு 79 வயதான ஒரேயொரு முதியவரை மட்டுமே காணமுடிந்தது என்று அவர் கூறுகிறார். அங்கு எல்லா இடங்களுமே மனித நடமாட்டம் இல்லாத வனாந்தரமாக் காணப் பட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.

""இதைத் தான் நானும் கூறினேன். பிரபாகரன் கிழக்கில் இல்லை. படை எடுப்பது என்றால் முல்லைத்தீவு, கிளிநொச் சிப் பிரதேசங்களுக்குப் படை எடுக்க வேண்டும். கட்டாந்தரையைப் பிடித்துக் கொண்டு தம்பட்டம் அடிக்கவேண்டாம் என்று கூறினேன்.

கிளிநொச்சி மீது படையெடுக்கத்

தயங்குவது ஏன்?

இவர்கள் ஏன் கிளிநொச்சி மீது படை எடுக்கத் தயங்குகின்றனர் என்பது எனக்குத்தெரியும்.

எனது அமைச்சுப் பதவி பறிக்கப்பட்ட சில மணி நேரத்தில் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவின்பேரில் எனது பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. எமக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

இது தொடர்பாக நாம் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ததன் பின்னர் மங்கள சமரவீரவுக்கு எட்டுப் பேரும் எனக்கு நான்கு பேரும் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இவர்களை நாம் முன்பின் பார்த்ததே இல்லை. இவர்கள் குறித்து எமக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, முன்பு எங்களுடைய பாதுகாப்புக் கடமையில் இருந்தவர்களையே திருப்பித்தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளேன். எனது வீட்டுக்கு காவல் கடமையில் இருந்த இரண்டு பொலிஸ்காரர்களையும் கூட நேற்றுமுதல் வாபஸ் பெற்றுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனது சிறப்புரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். சுதந்திரமாகப் பேசும் எனது அடிப்படை மனித உரிமை காக்கப்பட வேண்டும். இதற்கு சபாநாயகர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார் சிறிபதி சூரியõராச்சி தனது நீண்ட உரையில்

.-உதயன்-

கிளிநொச்சி மீது படையெடுக்கத்

தயங்குவது ஏன்?

இவர்கள் ஏன் கிளிநொச்சி மீது படை எடுக்கத் தயங்குகின்றனர் என்பது எனக்குத்தெரியும்.

எனக்கு தெரியவில்லை. உங்கள் யாருக்காவது தெரியுமா?

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனது சிறப்புரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். சுதந்திரமாகப் பேசும் எனது அடிப்படை மனித உரிமை காக்கப்பட வேண்டும். இதற்கு சபாநாயகர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்ன அனியாயம்!

இது நாள் வரை அரசுக்கு பல்லக்குத் தூக்கிய அரசதரப்பு நாடளுமன்ற உறுப்பினருக்கே அடிப்படை (அப்படி ஒன்று இருந்தால்) மனித உரிமை மீறலா?

தப்பிக்க சாணக்கியனின் சில ஆலோசனைகள்,

1) வெட்கத்தை (இருந்தால்) விட்டு அனுராவை போல மகிந்தவின் காலில் விழலாம்.

2) நீங்களும் இலக்கத்தகடில்லா வெள்ளை வானில் திரியலாம்.

3) புலிகளிடம் பாதுகாப்பு கேட்டுப் பார்க்கலாம்.

4) இறுதியாக (யாழ் மக்கள் செய்வது போல) நீங்களாகவே சிறைச்சாலையில் தஞ்சமடையலாம்.

Edited by சாணக்கியன்

என்ன அனியாயம்!

இது நாள் வரை அரசுக்கு பல்லக்குத் தூக்கிய அரசதரப்பு நாடளுமன்ற உறுப்பினருக்கே அடிப்படை (அப்படி ஒன்று இருந்தால்) மனித உரிமை மீறலா?

தப்பிக்க சாணக்கியனின் சில ஆலோசனைகள்,

1) வெட்கத்தை (இருந்தால்) விட்டு அனுராவை போல மகிந்தவின் காலில் விழலாம்.

2) நீங்களும் இலக்கத்தகடில்லா வெள்ளை வானில் திரியலாம்.

3) புலிகளிடம் பாதுகாப்பு கேட்டுப் பார்க்கலாம்.

4) இறுதியாக (யாழ் மக்கள் செய்வது போல) நீங்களாகவே சிறைச்சாலையில் தஞ்சமடையலாம்.

அண்ணா சாணக்கியா சரியான வழிமுறைகள் சொன்னீர்கள் :P

இந்த வெள்ளை வான் விவகாரத்தில் அரசு கண்டும் காணாமலும் இருப்பதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மிக முக்கியமானது என்னவென்றால், இப்போது வெள்ளைவான் விற்பனையில் சூடுபிடித்துள்ளது. மற்றைய வான்களை விட இவை இரண்டு மடங்கு விலையில் விற்கப்படுவதால் அரசுக்கு பல கோடி ரூபாக்கள் வருமானமாகக் கிடைக்கிறது. வெள்ளைவான் வாங்குபவர்களும் என்ன விலையென்றாலும் கொடுக்கத் தயாராக உள்ளனர்.

திடீர் பணக்காரராக மாறிய முன்நாள் இராணுவ வீரரும் இன் நாள் கேடியுமான ஒருவரை தொலைபேசியில் இதுபற்றிக் கேட்டபோது :

'வெள்ளைவான் வைத்திருப்பதில் பல வசதிகள் உண்டு. இதில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், யாரும் சோதனை செய்ய மாட்டார்கள். கிடைக்கும் வருமானத்தில் அரைவாசியை அரசியல்வாதிகளுக்குக் கொடுத்தாலே போதும். சில வேளைகளில் அவர்களே எங்களுக்கு பிஸினஸ் வாய்பையும் தருவார்கள்...' என்றார். :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திடீர் பணக்காரராக மாறிய முன்நாள் இராணுவ வீரரும் இன் நாள் கேடியுமான ஒருவரை தொலைபேசியில் இதுபற்றிக் கேட்டபோது :

'வெள்ளைவான் வைத்திருப்பதில் பல வசதிகள் உண்டு. இதில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், யாரும் சோதனை செய்ய மாட்டார்கள். கிடைக்கும் வருமானத்தில் அரைவாசியை அரசியல்வாதிகளுக்குக் கொடுத்தாலே போதும். சில வேளைகளில் அவர்களே எங்களுக்கு பிஸினஸ் வாய்பையும் தருவார்கள்...' என்றார். :icon_idea:

அப்ப உங்களுக்கு முன்னால் இராணுவ வீரருடன் தொலைபேசியில் பழக்கமுண்டோ லிசா?

:angry: அப்ப லிசா உமக்கு ஆமியோட தொடர்புகள் இருக்கிறமாதிரி எழுதியிருக்கிறீர். நான் நினைக்கவில்லை அப்படி கிப்படி ஏதாவது இருந்தா சொல்லும் எனக்கு தெரிந்த பலர் அங்க என்னும் பிடிபடாம இருக்கிறீனம். அடிச்சு சொல்லுவம் பிலேனில போய் இறங்கி போக வெள்ளைவானையே அனுப்பி வைக்கலாம். லண்டனில ஒரு பெரும் தமிழ் தொழிலதிபர் அவர்தான் முதன் முதலில் 1999 ல் நான் அங்க நிண்ட போது டெலிபோன் காட் ஆரம்பிச்சு வைச்சவர். புலிகளுக்கு அப்பவே கோடி கோடியாக குடுத்தவர் அப்படி இருக்க கொழும்பில வைத்து கருநா குழுவால் கடத்தப்பட்டுள்ளார். லண்டனில இருந்து அவர் போர விமான நேரம் இறங்கிர நேரம் எல்லாம் கச்சிதமாக் அனுப்பிவைக்கபட்டதாக அவரின் தங்கை இங்க எனக்குச் சொன்னா :angry:

  • கருத்துக்கள உறவுகள்

'' நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனது சிறப்புரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். சுதந்திரமாகப் பேசும் எனது அடிப்படை மனித உரிமை காக்கப்பட வேண்டும். இதற்கு சபாநாயகர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்"

ஜயா சாணக்கிய ஜயா என்ன அருமையான ஆலோசனை கூறியிருக்கிறீங்க..இதே மாதிரி எங்க மக்களுக்கும் ஏதாவது ஆலோசனை கூறுங்களேன்....

அம்மா லிஷா எனக்கும் உங்க மீது கொஞ்சம் சந்தேகம் இருக்கு, விரைவில் உண்மையை கண்டு பிடித்து விடலாம்.

அவா இல்லை அவர் தான் முன்பு எனக்கு ஒரு கடிதம் போட்டவர் அப்ப நான் கண்டு கொண்டேன் அவர் ஒரு தமிழீழ விரும்பி. அவர் எழுதும் போது தவறிஎழுதியிருக்கிறார்.

அய்யோ ஆளை விடுங்கப்பா. கருத்தின் இறுதியில் சிரிப்பு குறியீடு போட்டுள்ளேனே, யாரும் கவனிக்கவில்லையா ?

தமிழர்கள் அநுபவித்த அதே கொடுமையை இன்று சிங்களவனும் அநுபவிக்கிறான் என்றால் சீரியசாகத்தான் கருத்தெழுதவேண்டுமா.

:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.