Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோவை: இலங்கைப் பயணியின் வயிற்றிலிருந்து 20 தங்கத் துண்டுகள் பறிமுதல்!

Featured Replies

கோவை: இலங்கைப் பயணியின் வயிற்றிலிருந்து 20 தங்கத் துண்டுகள் பறிமுதல்!

கோவை விமான நிலையத்தில், இலங்கையைச் சேர்ந்த பயணி ஒருவர், 20 தங்கத் துண்டுகளை வயிற்றில் வைத்து கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை, விமான நிலையத்திலிருந்து கடந்த சில மாதங்களாக இலங்கைக்கு நேரடியாக விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

d4a09cc1-0b26-416f-beb4-6a1fe142de1e_213

 

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, கொழும்புவிலிருந்து, கோவை விமானநிலையம் வந்தவர்களில், இலங்கையைச் சேர்ந்த சத்தியசீலன் என்பவரின் நடவடிக்கையில் போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரைச் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து, அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் சென்று மருத்துவச் சோதனை செய்தனர். அப்போது, அந்த நபர் வயிற்றில் வைத்து 20 தங்கத் துண்டுகளைக் கடத்தியது தெரியவந்தது. ஆனால், இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை சுங்கத்துறை வெளியிடவில்லை.

a98928af-ce0d-460b-a7d3-4ead22f6982a_215

 

இந்நிலையில், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அவரது வயிற்றிலிருந்த 20 தங்கத் துண்டுகள் இன்றுதான் முழுவதுமாக வெளியில் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 434 கிராம் எடை கொண்ட இதன் மதிப்பு, 13 லட்சம் ரூபாய். இந்தத் தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த நபரைக் கைது செய்யவில்லை. 20 லட்ச ரூபாய்க்கு மேல், தங்கம் கடத்தி வரப்பட்டால் மட்டுமே கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதையடுத்து, அந்த நபர் யார் எதற்காக வயிற்றுக்குள் தங்கத்தைக் கடத்தி வந்தார் என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு தற்போதுவரை, கோவை விமான நிலையத்தில் 12 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய்.

http://www.vikatan.com/news/tamilnadu/105709-20-gold-pieces-recovered-from-sri-lanka-passenger-in-coimbatore-airport.html

தமிழகத்தின் கண்ணாடி

16mins ago
 
இலங்கை - கோவை வந்த விமானத்தில் வயிற்றில் தங்க கட்டி கடத்தி வந்த சத்தியசீலன் உடம்பின் எக்ஸ்ரே மூலம் தங்க உருண்டை வைத்திருப்பதை சுங்க வரித்துறையினர் பத்திரிக்கையாளர்களுக்கு காண்பித்தனர். படம் : அ.அருள் குமார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.