Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கமல்ஹாசன் மீது வழக்குப்பதியலாம்! காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Featured Replies

 

கமல்ஹாசன் மீது வழக்குப்பதியலாம்! காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

 
 

kamal_1_11125.jpg

Chennai: 

நிலவேம்புக் கஷாயம் விவகாரத்தில், மனுதாரர் புகாரில் முகாந்திரம் இருந்தால், நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தமிழகத்தில், டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதற்குக் காரணமான கொசுவை அழிக்கும் நடவடிக்கையில் தமிழக சுகாதாரத்துறை ஈடுபட்டுவருவதோடு, நாேய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பாதிக்கப்பட்டவர்களுக்கும் பொதுமக்களுக்கும் நிலவேம்புக் கஷாயத்தை வழங்கிவருகிறது. இதனிடையே, நிலவேம்புக் கஷாயம் தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து, நிலவேம்புக் கஷாயம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் கருத்து ஒன்றை வெளியிட்டார். அதில், "சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நம் இயக்கத்தினர் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபட வேண்டாம். ஆராய்ச்சியை அலாேபதியர்தான் செய்ய வேண்டுமென்றில்லை. பாரம்பர்யக் காவலர்களே செய்திருக்க வேண்டும். மருந்துக்கு பக்க விளைவுண்டு என்பதும் பாரம்பர்யம்தான்" என்று தெரிவித்திருந்தார்.

 

இதனிடையே, நிலவேம்புக் கஷாயம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் புகார் அளித்தார். ஆனால், இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனிடையே, கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் தேவராஜன். அதில், ''நிலவேம்புக் கஷாயம் குறித்து கமல்ஹாசன் உண்மைக்குப் புறம்பான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் மீது புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கமல்ஹாசன்மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இருந்தால், நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப் பதியலாம் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டது.

http://www.vikatan.com/news/tamilnadu/105865-police-can-file-case-against-actor-kamal-if-they-wish-says-chennai-hc.html

  • தொடங்கியவர்

கமல் மீது வழக்குப் பதிய முகாந்திரமில்லை! - மனுவை முடித்துவைத்த சென்னை போலீஸ்

 
 

''நிலவேம்புக் குடிநீர் குறித்த ட்விட்டர் பதிவு தொடர்பாக, நடிகர் கமல் மீது வழக்குப் பதிய எந்த முகாந்திரமும் இல்லை'' என்றுகூறி மனுவை சென்னை போலீஸார் முடித்துவைத்தனர். 

Kamal_15385.jpg

 

தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டுவந்தது. நிலவேம்புக் குடிநீர் தொடர்பாகப் பல்வேறு சர்ச்சைகளும் எழுந்துவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் கடந்த 18-ம் தேதி கருத்து தெரிவித்திருந்த நடிகர் கமல்ஹாசன், ‘சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நம் இயக்கத்தார், நிலவேம்பு  விநியோகத்தில் ஈடுபடாதிருக்கக் கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்’ என்று பதிவிட்டிருந்தார். 

Kamal_tweet_15499.jpg


நடிகர் கமல்ஹாசனின் இந்தப் பதிவு, மக்களிடையே நிலவேம்பு குடிநீர் குறித்து அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாகக் கூறி, அவர்மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தேவராஜன் என்பவர் மனு அளித்தார். பின்னர்,  அந்த மனு மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்திலும் அவர் முறையிட்டார். இதுகுறித்து விசாரித்து உரிய முடிவெடுக்குமாறு போலீஸாருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. 
நிலவேம்பு தொடர்பான கமலின் கருத்து தொடர்பாக, அவர் மீது வழக்குப்பதிவு செய்யலாமா என்பதுகுறித்து சென்னை சைபர் கிரைம் போலீஸார் அரசு வழக்கறிஞர்கள், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் கமல் மீது வழக்குப் பதிய முகாந்திரம் இல்லை என்று கூறி, தேவராஜன் அளித்த மனுவை சென்னை போலீஸார் முடித்துவைத்தனர். 

 

இதுதொடர்பாக மனு அளித்த தேவராஜனுக்கு சென்னை போலீஸார் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘நடிகர் கமல்ஹாசன், அவரது ட்விட்டர் பக்கத்தில் நிலவேம்புக் குடிநீர் பற்றி மக்களிடையே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் செய்தி வெளியிட்டுள்ளதாக மனு அளித்திருந்தீர்கள். அந்த மனுவின்மீது விசாரணை மேற்கொண்டதில், அதுதொடர்பாக குற்ற நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் இல்லை என்பதால், தங்களது மனு முடிக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/106324-chennai-police-has-closed-the-petition-against-kamal-haasan-on-nilavembu-controversy.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.