Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்பெயினிலிருந்து தனி நாடாக பிரகடனம் செய்தது கேட்டலோனியா

Featured Replies

ஸ்பெயினிலிருந்து தனி நாடாக பிரகடனம் செய்தது கேட்டலோனியா

வாக்கெடுப்பு நடக்கும்போது பிராந்திய நாடாளுமன்றத்துக்கு வெளியே தனி நாடு ஆதரவாளர்கள் கூடியிருந்தனர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவாக்கெடுப்பு நடக்கும்போது பிராந்திய நாடாளுமன்றத்துக்கு வெளியே தனி நாடு ஆதரவாளர்கள் கூடியிருந்தனர்

ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா தனி நாடாக பிரிந்ததாக கேட்டலன் நாடாளுமன்றத்தில் பிரகடனம் செய்யப்பட்டது.

ஸ்பெயினில் உள்ள இந்த தன்னாட்சிப் பிரதேசத்தில் தனது நேரடி ஆட்சியை அமல்படுத்த பிரதமர் மரியானோ ரஜோய் தலைமையிலான ஸ்பெயின் மத்திய அரசு திட்டமிட்டுக்கொண்டிருந்த நிலையில், கேட்டலோனிய நாடாளுமன்றத்தில் தனி நாடு பிரகடனம் குறித்த வாக்கெடுப்பு இன்று (வெள்ளியன்று) நடந்தது.

இதில் சுதந்திரத்துக்கு ஆதரவாக 70 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் பதிவாயின. எதிர்க்கட்சிகள் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தன.

முன்னதாக, கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி ஸ்பெனிலிருந்து கேட்டலோனியா தன்னாட்சி பிரதேசம் பிரிந்து தனிநாடாக அறிவிப்பது குறித்து நடத்தப்பட்ட பொது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் 43% கேட்டலோனிய மக்கள் வாக்களித்தனர் என்றும், அவர்களில் 90% கேட்டலோனியா தனி நாடாகப் பிரிவதற்கு ஆதரவு தெரிவித்தனர் என்றும் கேட்டலன் அரசு கூறியிருந்தது.

கார்லஸ் பூஜ்டிமோன்படத்தின் காப்புரிமைAFP Image captionகார்லஸ் பூஜ்டிமோன்

அந்த வாக்கெடுப்பு செல்லாது என்று ஸ்பெயின் அரசியலமைப்பு நீதிமன்றம் அறிவித்தது.

கடந்த அக்டோபர் 11 அன்று ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா விடுதலை பெற்று தனி நாடாகிவிட்டதாக ஒரு பிரகடனத்தை கேட்டலோனிய அதிபர் கார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் பிற பிராந்தியத் தலைவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டனர்.

எனினும், ஸ்பெயினுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு, அந்தப் பிரகடனத்தை செயல்படுத்துவதை சில வாரங்களுக்கு நிறுத்திவைப்பதாக அப்போது அறிவிக்கப்பட்டது.

நெருக்கடி நிலையில் தனது நேரடி ஆட்சியை தன்னாட்சி பிரதேசங்களில் அமல்படுத்த ஸ்பெயின் அரசுக்கு அந்நாட்டு அரசியலமைப்பின் 155-வது பிரிவு வழிவகை செய்கிறது. இதுகுறித்து ஸ்பெயின் நாடாளுமன்றம் இன்னும் வாக்களிக்கவில்லை.

மரியானோ ரஜோய்படத்தின் காப்புரிமைEPA Image captionஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய்

அந்த வாக்கெடுப்பில் கேட்டலோனியாவில் நேரடி அதிகாரத்தை அமல்படுத்த அனுமதி வழங்கப்பட்டால், கேட்டலன் தலைவர்களை பதவிநீக்கம் செய்து, ஸ்பெயின் அரசு கேட்டலோனியாவை தனது முழு நிர்வாகக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியும்.

பிராந்திய தலைநகர் பார்சிலோனாவில் பிராந்திய நாடாளுமன்றம் உள்ளது. தனிக் கொடி, தனி தேசிய கீதம், அதிபர், அமைச்சரவை, காவல் துறை ஆகியவற்றைக் கொண்ட கேட்டலோனியாவின் வெளியுறவு, பாதுகாப்பு, நிதி ஆகியவை ஸ்பெயின் அரசின் கீழும், கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவை பிராந்திய அரசின் கீழும் உள்ளன.

கேட்டலோனியா தனி நாடானால், பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகவும் ஸ்பெயின் பாதிக்கப்படுவதுடன் ஐரோப்பாவில் உள்ள பிற தனி நாடு கோரிக்கைகள் வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.bbc.com/tamil/global-41779982

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

நாமும் ஒருநாள் உங்களுடன்  கைகோர்ப்போம்

  • தொடங்கியவர்

தனி நாடு பிரகடனம் செய்த கேட்டலோனிய அரசை கலைத்தது ஸ்பெயின்

ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனி நாடாவதாக அறிவித்த தன்னாட்சி பிரதேசமான கேட்டலோனியாவின் பிராந்திய நாடாளுமன்றத்தை கலைப்பதாக ஸ்பெயின் பிரதமர் மரியனோ ரஜாய் அறிவித்துள்ளார்.

கார்லஸ் பூஜ்டிமோன்படத்தின் காப்புரிமைAFP Image captionகார்லஸ் பூஜ்டிமோன்

ஸ்பெயினின் நேரடி ஆட்சியின் கீழ் கேட்டலோனியா வருவதாகவும், விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு கேட்டலோனியாவுக்கு புதிய அரசு தேர்வு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கேட்டலன் அதிபர் கார்லஸ் பூஜ்டிமோன் தலைமையிலான அமைச்சரவையையும் பதவி நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா தனி நாடாக பிரிந்ததாக கேட்டலன் நாடாளுமன்றத்தில் பிரகடனம் செய்யப்பட்டது. கேட்டலோனிய நாடாளுமன்றத்தில் தனி நாடு பிரகடனம் குறித்த வாக்கெடுப்பு இன்று (வெள்ளியன்று) நடந்தது.

இதனிடையே கேட்டலோனியாவின் நேரடி ஆட்சியை அமல்படுத்த ஸ்பெயின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் நேரடி ஆட்சியை அமல்படுத்துவதற்கு ஆதரவாக 214 வாக்குகளும், எதிராக 47 வாக்குகளும் பதிவாகின.

கேட்டலோனிய நாடாளுமன்றத்தில் தனி நாடு பிரகடனம் குறித்த வாக்கெடுப்பு இன்று (வெள்ளியன்று) நடந்தது.

இதில் சுதந்திரத்துக்கு ஆதரவாக 70 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் பதிவாயின. எதிர்க்கட்சிகள் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தன.

வாக்கெடுப்பு நடக்கும்போது பிராந்திய நாடாளுமன்றத்துக்கு வெளியே தனி நாடு ஆதரவாளர்கள் கூடியிருந்தனர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவாக்கெடுப்பு நடக்கும்போது பிராந்திய நாடாளுமன்றத்துக்கு வெளியே தனி நாடு ஆதரவாளர்கள் கூடியிருந்தனர்

முன்னதாக, கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி ஸ்பெனிலிருந்து கேட்டலோனியா தன்னாட்சி பிரதேசம் பிரிந்து தனிநாடாக அறிவிப்பது குறித்து நடத்தப்பட்ட பொது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் 43% கேட்டலோனிய மக்கள் வாக்களித்தனர் என்றும், அவர்களில் 90% கேட்டலோனியா தனி நாடாகப் பிரிவதற்கு ஆதரவு தெரிவித்தனர் என்றும் கேட்டலன் அரசு கூறியிருந்தது.

அந்த வாக்கெடுப்பு செல்லாது என்று ஸ்பெயின் அரசியலமைப்பு நீதிமன்றம் அறிவித்தது.

கடந்த அக்டோபர் 11 அன்று ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா விடுதலை பெற்று தனி நாடாகிவிட்டதாக ஒரு பிரகடனத்தை கேட்டலோனிய அதிபர் கார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் பிற பிராந்தியத் தலைவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டனர்.

எனினும், ஸ்பெயினுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு, அந்தப் பிரகடனத்தை செயல்படுத்துவதை சில வாரங்களுக்கு நிறுத்திவைப்பதாக அப்போது அறிவிக்கப்பட்டது.

நெருக்கடி நிலையில் தனது நேரடி ஆட்சியை தன்னாட்சி பிரதேசங்களில் அமல்படுத்த ஸ்பெயின் அரசுக்கு அந்நாட்டு அரசியலமைப்பின் 155-வது பிரிவு வழிவகை செய்கிறது. இதுகுறித்து ஸ்பெயின் நாடாளுமன்றம் இன்னும் வாக்களிக்கவில்லை.

மரியானோ ரஜோய்படத்தின் காப்புரிமைEPA Image captionஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய்

அந்த வாக்கெடுப்பில் கேட்டலோனியாவில் நேரடி அதிகாரத்தை அமல்படுத்த அனுமதி வழங்கப்பட்டால், கேட்டலன் தலைவர்களை பதவிநீக்கம் செய்து, ஸ்பெயின் அரசு கேட்டலோனியாவை தனது முழு நிர்வாகக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியும்.

பிராந்திய தலைநகர் பார்சிலோனாவில் பிராந்திய நாடாளுமன்றம் உள்ளது. தனிக் கொடி, தனி தேசிய கீதம், அதிபர், அமைச்சரவை, காவல் துறை ஆகியவற்றைக் கொண்ட கேட்டலோனியாவின் வெளியுறவு, பாதுகாப்பு, நிதி ஆகியவை ஸ்பெயின் அரசின் கீழும், கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவை பிராந்திய அரசின் கீழும் உள்ளன.

கேட்டலோனியா தனி நாடானால், பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகவும் ஸ்பெயின் பாதிக்கப்படுவதுடன் ஐரோப்பாவில் உள்ள பிற தனி நாடு கோரிக்கைகள் வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெயின் மக்கள் தொகையில் சுமார் 16% பேர் கேட்டலோனியாவில் வசிக்கின்றனர்.

 

http://www.bbc.com/tamil/global-41779982

  • தொடங்கியவர்

கேட்டலோனியா அரசாங்கத்தை கட்டுப்பாட்டில் எடுத்தது ஸ்பெயின்

ஸ்பெயின் துணை பிரதமர் சோராயா சேன்ஸ் டி சாண்டாமரியா கேட்டலோனியாவின் பொறுப்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஸ்பெயின் துணை பிரதமர் சோராயா சேன்ஸ் டி சாண்டாமரியா கேட்டலோனியாவின் பொறுப்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்

கேட்டலோனியாவின் தன்னாட்சி அரசாங்கத்தை கலைத்த ஸ்பெயின் அரசாங்கம் கேட்டலோனியா அரசாங்கத்தின் பொறுப்பை தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) கேட்டலோனியாவின் பிராந்திய நாடாளுமன்றம் ஸ்பெயினிருந்து பிரிந்து தனி நாடாக பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்ததையடுத்து, இன்று (சனிக்கிழமை) அதிகாலை ஸ்பெயின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஸ்பெயின் அரசாங்கம் வெளியிட்ட ஒரு அதிகாரபூர்வ அறிக்கை கேட்டலோனிய பிராந்திய அரசில் அங்கம் வகித்தவர்களை ஒட்டுமொத்தமாக நீக்கியது. மேலும், பிராந்திய நிர்வாகம் ஸ்பெயின் துணை பிரதமர் சோராயா சேன்ஸ் டி சாண்டாமரியாவின் கட்டுப்பாட்டிற்குள் வருவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

முன்னர், கேட்டலோனியாவின் மூத்த போலீஸ் அதிகாரிகள் ஸ்பெயின் அரசாங்கத்தால் நீக்கப்பட்டனர்.

ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய்படத்தின் காப்புரிமைEPA Image captionஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய்

நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) கேட்டலோனியாவின் பிராந்திய நாடாளுமன்றத்தை கலைப்பதாகவும், கேட்டலன் அதிபர் கார்லஸ் பூஜ்டிமோன் தலைமையிலான அமைச்சரவையையும் பதவி நீக்கம் செய்வதாகவும் ஸ்பெயின் பிரதமர் மரியனோ ரஜாய் அறிவித்தார். மேலும், அங்கு திடீர் பிராந்திய தேர்தல்களை நடத்துவதற்கு அறிவிப்பு வெளியிட்டார்.

இச்சூழலில், சுதந்திரம் வழங்கப்பட்டதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் நேற்றிரவு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இன்றைய தினம் (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டங்கள் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், மேட்ரிட்டில் 'ஒற்றுமையான ஸ்பெயின் மற்றும் அரசியலமைப்பு சட்டம்' ஆகியவற்றை வலியுறுத்தி பேரணி ஒன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil/global-41787085

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவிலயே தனி நாடு கேட்கிறார்கள் என்றால் நாங்கள் கேட்கிறதில் தப்பேயில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.