Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரு அணிகள் உரிமை கோரியதால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் யாருக்கு?- தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பு

Featured Replies

இரு அணிகள் உரிமை கோரியதால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் யாருக்கு?- தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பு

 

30CHRGNECI
AIADMKcol
30CHRGNECI

முடக்கப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விசாரணை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று நடைபெறவுள்ளது.

முதல்வராகவும் அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அதிமுக இரு அணிகளாக பிரிந்தன. அதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு இரு தரப்பும் உரிமை கோரியதால் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது.

சின்னம் முடக்கப்பட்டபோது சசிகலா, தினகரனுக்கு ஆதரவாக இருந்த முதல்வர் பழனிசாமி அணியினர் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைந்தனர். இதனால் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும் டிடிவி தினகரன் தரப்பினர் தனி அணியாகவும் பிரிந்து, இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி வருகின்றனர்.

இரட்டை இலை சின்னம் எங்களுக்கே வேண்டும் என இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை அளித்துள்ளனர். இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி தலைமையில் கடந்த 6-ம் தேதி முதல்கட்ட விசாரணை நடைபெற்றது. அதன்பிறகு பலகட்ட விசாரணைகள் நடந்து முடிந்துள்ளன.

கடந்த 16-ம் தேதி நடந்த விசாரணையின்போது, முதல்வர் பழனிசாமி தரப்பினர் அளித்த பிரமாணப் பத்திரங்களில் போலி கையெழுத்துக்கள் இருப்பதாகவும் இதுதொடர்பான சாட்சியங்களை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தினகரன் தரப்பு கோரியது. இதனை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.

அதனைத் தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என தினகரன் தரப்பு கோரியது. இதற்கு பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. மீண்டும் கடந்த 23-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது இரு தரப்பினரும் ஆஜராகி தங்களது வாதங்களை முன்வைத்தனர். ஆனாலும், எந்த முடிவையும் அறிவிக்காத தேர்தல் ஆணையம் விசாரணையை அக்டோபர் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

அதன்படி டெல்லி தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க முதல்வர் பழனிசாமி - ஓபிஎஸ் தரப்பில் வி.மைத்ரேயன், கே.பி.முனுசாமி ஆகியோர் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றனர். தினகரன் தரப்பில் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி உள்ளிட்டோர் ஆஜராக உள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் கடந்த 11 மாதங்களாக காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் டிசம்பர் 31-க்குள் இடைத்தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் இன்று முடிவு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ அவர்களே உண்மையான அதிமுக என கருதப்படுவார்கள். எனவே, சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் அளிக்கவுள்ள தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

http://tamil.thehindu.com/tamilnadu/article19948212.ece?homepage=true

  • தொடங்கியவர்
இரட்டை இலை சின்னம் தீர்ப்பு.. நவ.,1?

அ.தி.மு.க.வின் இரு அணியினரும் வைத்த கடுமையான வாதங்கள் காரணமாக கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டதால் இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விசாரணை நான்காவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நவ., 1ம் தேதியான நாளை மீண்டும் விசாரணை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது குறித்த தீர்ப்பு நாளை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், இரு அணியினரும் பதற்றமடைந்துள்ளனர்.

 

இரட்டை இலை சின்னம் தீர்ப்பு.. நவ.,1?

ஜெயலலிதா மறைந்ததை அடுத்து அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டு சசிகலா, பன்னீர்செல்வம் தலைமையில் தனித் தனி அணிகள் உருவாயின. இதனால் சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் இரு அணிகளுக்கும் தனித்தனி சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம் இரட்டை இலையை முடக்கி வைத்தது.இதற்கிடையே அ.தி.மு.க., வில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு பன்னீர்செல்வம் அணியினர் சசிகலா அணியில் இருந்த முதல்வர் பழனிசாமி தரப்பினருடன் இணைந்தனர். ஆனாலும் சசிகலா தரப்பின் ஒரு பகுதியினர் தினகரன் தலைமையில் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.
 

இரு தரப்பினரும் உறுதியாக உள்ளனர்



இதற்கிடையே முடக்கி வைக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னம் விஷயத்தில் முடிவை அறிவிக்கும்படி சுப்ரீம் கோர்ட் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. தங்கள் அரசியல் எதிர்காலமே இரட்டைஇலைச் சின்னத்தில் இருப்பதாக அ.தி.மு.க.,வின் இரண்டு அணிகளுமே கருதுகின்றன. இதனால்

அந்த சின்னத்தை கைப்பற்றியே தீர வேண்டுமென்பதில் இரு தரப்பினரும் உறுதியாக உள்ளனர்.தலைமைத் தேர்தல் ஆணையம் ஏற்கனவே மூன்றுமுறை விசாரணை நடத்தி முடித்தது. கடந்த விசாரணையின் முடிவில் 'இனி நடக்கப்போவது இறுதி விசாரணை' என பன்னீர்செல்வம் தரப்பின் மூத்த வழக்கறிஞர், முகுல் ரோகத்கி வெளிப்படையாகவே அறிவித்துச் சென்றார்.

இந்நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நேற்று மீண்டும்விசாரணைக்கு வந்தது. இதனால் கூடுதல் எதிர்பார்ப்பும் பரபரப்பும் அ.தி.மு.க.,வின் அனைத்து மட்டங்களிலும் நிலவியது. திட்டமிட்டபடி மாலை 3:00 மணிக்கு தேர்தல் ஆணையர்கள் ஜோதி, சுனில் அரோரா முன்னிலையில் விசாரணை துவங்கியது.பழனிசாமி - பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோகத்கி, வைத்தியநாதன், சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, விஜய் ஹன்சாரியா உள்ளிட்டோர் ஆஜராயினர். வாதத்தின் துவக்கத்திலேயே கூடுதல் அவகாசம் வேண்டுமென்றும், உடனடியாக எந்தவொரு முடிவுக்கும் வருவதை ஏற்க முடியாது என்றும் சசிகலா தரப்பு வலியுறுத்த துவங்கியது.
 

கூடுதல் அவகாசம்



முதல்வர் பழனிசாமி தரப்பினர் தாக்கல் செய்த ஆவணங்களை சரிபார்க்க கூடுதல் அவகாசம் வேண்டுமென்றும், அவற்றில் கையெழுத்து போட்டவர்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி வேண்டுமென்றும் சசிகலா தரப்பு கோரிக்கை வைத்தது.இதற்கு பழனிசாமி தரப்பு எதிர்க்கவே அப்போதே அந்த சூழ்நிலை சூடாகத் துவங்கியது. பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டு 'இரட்டை இலைச்சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும்' என்ற தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சை சசிகலா தரப்பு முன்வைக்கவே பிரச்னை மேலும் அதிகமானது.

 

சசிகலா தரப்பு வாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதாவது:பிரச்னைக்கு தொடர்பில்லாத விஷயங்களை பேசுவதும் பிரதமரை தேவையில்லாமல் சர்ச்சைக்குள் இழுப்பதும் உள்நோக்கம் உடையது. விதவிதமான குற்றச்சாட்டுகளை கூறி இரட்டை இலைச் சின்னத்தை முடக்கும் நோக்கில் சசிகலாவும், தினகரனும் செயல்படுகின்றனர்.ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் கைதியாக இருப்பவர் சசிகலா. தினகரன் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர்கள் அ.தி.மு.க.,வுக்கு தலைமை தாங்கும் தகுதி இல்லாதவர்கள்.இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

 

கடும் வாதங்கள்




இதற்கு பதிலடியாக சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதாவது:ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் அரசியல் கட்சிகளுக்கு தலைமை ஏற்க கூடாது என எந்த சட்டம் கூறவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் தண்டனை பெற்றவர் தான். சிறையில் இருந்தபோதும், கட்சிக்கு அவர்தான் தலைமை தாங்கினார்.அப்போது எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் இப்போது இதுபோன்ற குற்றச்சாட்டை கூறுவது சரியல்ல. அரசியலில் ஈடுபட சசிகலாவுக்கு தடை விதிக்க முடியாது. விதிகளின்படியே துணைப் பொதுச் செயலாளராக தினகரன் செயல்படுகிறார்.இவ்வாறு அவர்கள் வாதிட்டதை அடுத்து அமளி துவங்கியது.இருதரப்புக்கும் இடையில் கடும் வாதங்கள் கிளம்பவே அந்த அரங்கம் முழுவதும் கூச்சல், குழப்பம் அதிகமாகி அமளி ஏற்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது குறித்து தேர்தல் ஆணையம் நாளை இறுதி தீர்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1885967

  • தொடங்கியவர்
இரட்டை இலை வழக்கு விசாரணை: நவ., 6க்கு ஒத்திவைப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.