Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டிரம்பின் முன்னாள் பிரச்சார முகாமையாளர் எவ்பிஐயிடம் சரணடைந்தார்

Featured Replies

டிரம்பின் முன்னாள் பிரச்சார முகாமையாளர் எவ்பிஐயிடம் சரணடைந்தார்- அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பு

 

 

டிரம்பின் முன்னாள் பிரச்சார முகாமையாளர் எவ்பிஐயிடம் சரணடைந்தார்- அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முன்னாள் பிரச்சார முகாமையாளர் போல் மனபோர்ட்டினை சரணடையுமாறு எவ்பிஐ விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து அவர் சரணைடந்துள்ளார்..
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஸ்யாவின் தலையீடு குறித்த விசேட விசாரணைகளின் அடிப்படையிலேயே எவ்பிஐ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.மனபோர்ட்டின் சகாவொருவரிற்கும் எவ்பிஐ இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது அவரும் சரணடைந்துள்ளார்.
டிரம்பின் பிரச்சார அதிகாரியாக பணியாற்றுவதற்கு முன்னர் மனாபோர்ட் உக்ரைனுடன் நெருக்கமான வர்த்தக உறவுகளை கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வேளை அவர் ரஸ்யாவின் முக்கிய பிரமுகர்கள் சார்பாக செயற்பட்டிருந்தார்.
எனினும் இது தெரியவந்ததும் கடந்த ஆகஸ்டில் அவர் டிரம்பின் பிரச்சார குழுவிலிருந்து விலக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை சரணடைந்த இருவரிற்கும் எதிராக அமெரிக்காவிற்கு எதிரான சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://www.samakalam.com/

  • தொடங்கியவர்

டிரம்பின் முன்னாள் பிரசார மேலாளர் மீது பணமோசடி, சதித்திட்ட குற்றச்சாட்டு

மான்ஃபோர்ட்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபால் மான்ஃபோர்ட்

உக்ரைன் உடனான தனது தொடர்பில் அமெரிக்காவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்க அதிபர் டிரம்பின் பிரசார மேலாளராக இருந்த பால் மான்ஃபோர்ட் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

பணமோசடி செய்யச் சதித்திட்டம் தீட்டியது உள்பட, பால் மான்ஃபோர்ட் மற்றும் அவரது வணிக கூட்டாளியான ரிக் கேட்ஸுக்கு எதிராக 12 குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளது.

மான்ஃபோர்ட்டும் அவரது வழக்கறிஞரும் வாஷிங்டனில் உள்ள எப்பிஐ அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் விசாரணையில் இருந்து, இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மான்ஃபோர்டும் அவரது வணிக கூட்டாளியான ரிக் கேட்ஸும், உக்ரேனில் பதிவு செய்யப்படாத முகவர்களாகச் செயல்பட்டு லட்சக்கணக்கான டாலர்களைச் சம்பாதித்ததை மறைத்ததாகக் குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மான்ஃபோர்ட்படத்தின் காப்புரிமைAFP

உக்ரைன் அரசியல்வாதி விக்டர் யானுகோவிச் மற்றும் அவரது கட்சிக்கும், மான்ஃபோர்டும், கேட்ஸும் பதிவு செய்யப்படாத முகவர்களாகச் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ரஷ்ய ஆதரவு கொள்கைகளால், 2014-ம் ஆண்டு விக்டர் உக்ரைன் அதிபர் பதவியில் இருந்து பதவியிறக்கப்பட்டார்.

வெளிநாட்டு வங்கிக்கணக்கு மூலம் மான்ஃபோர்ட் 18 மில்லியன் டாலர் பணமோசடி செய்து, அதன் மூலம் சொத்துக்களையும் பொருட்களையும் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

சிறப்பு விசாரணை அதிகாரி ராபர்ட் மில்லர் தலைமையிலான விசாரணை ஆணையம், ரஷ்யாவிற்கும் டிரம்ப் பிரசாரத்திற்கும் இடையேயான தொடர்பை ஆராய்கிறது. தங்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை இரண்டு தரப்பும் மறுக்கிறது.

குற்றச்சாட்டுகள் குறித்த செய்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாக ட்விட் செய்த டிரம்ப், தனது பிரச்சாரம் குறித்து அவர்கள் அக்கறை கொள்ளவில்லை என்றும், தனது போட்டியாளர் ஹிலாரி கிளிண்டன் சம்மந்தப்பட்டதாகக் கூறப்படும் தவறுகள் குறித்து ஏன் `கவனம்` செலுத்தவில்லை என டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்

உக்ரைனில், ரஷ்ய ஆதரவு அரசியல்வாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக மான்ஃபோர்ட் மீது குற்றம் சாட்டப்பட்டதையடுத்து, டிரம்பின் பிரசார மேலாளர் பதவியில் இருந்து 2016 ஆகஸ்ட் மாதம் அவர் விலகினார்.

http://www.bbc.com/tamil/global-41807155

  • கருத்துக்கள உறவுகள்

10,5 மில்லியன் பிணையில் விடப்பட்டுள்ள இருவரும் வீட்டுக்காவலில் உள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 80.70 வருட சிறை தண்டனை அனுபவிக்க வேண்டி வரும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரம்புக்கு சொந்த கட்சியின்ரை ஆதரவுமில்லை.

நாட்டு மக்களின்ரை ஆதரவும் பெரிசாய் தெரியேல்லை.

உலக நாடுகளின்ரை அரசியல் தலைவர்களும்(மோடியை தவிர) பெரிசாய் நல்லமாதிரி சொல்லுற மாதிரியும் இல்லை....பயப்பிடுற மாதிரியும் இல்லை...:cool:

அமெரிக்க வியாபாரியளும் சந்தோசப்பட்டு செய்தி வெளியிட்டதாயும் தெரியேல்லை......

இவர் அடுத்தமுறையும்  சனாதிபதியாய் வருவார் எண்டுறீங்கள்? tw_thumbsdown:

இப்பவும் ஒபாமாவை அமெரிக்க சனாதிபதி மாதிரித்தான்  கனசனம் நினைக்குது போலை.....ஏனெண்டால் அமெரிக்காவிலை கடைசியாய் வந்த சூறாவளியளை தவிர வேறை ஒரு மாற்றமும் நடக்கேல்லையாம்.:grin:

 

  • தொடங்கியவர்

எஃப்.பி.ஐயிடம் டிரம்பின் பிரசார ஆலோசகர் கூறியது பொய்யா?

ஜார்ஜ் பாப்பலோப்புலாஸ்படத்தின் காப்புரிமைTWITTER/@GEORGEPAPA19

ரஷியர்களுடனான சந்திப்பு எப்போது நடந்தது என்பது குறித்து, எஃப்.பி.ஐயிடம், அதிபர் டிரம்பின் பிரசார ஆலோசகர் பொய் கூறியது தெரியவந்துள்ளது.

டிரம்பின் தேர்தல் பிரசார ஆலோசகரான ஜார்ஜ் பாப்பலோப்புலாஸ், தான் டிரம்பிற்காக பணியாற்றிய போது தான், ரஷியர்களுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது என்றும், அதற்கு முன்னதாக நடக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளதாக, நீதிமன்ற கோப்புகள் தெரிவிக்கின்றன.

ஹிலாரி கிளிண்டனை கறைப்படுத்த வேண்டும் என்று ரஷியர்கள் எண்ணம் கொண்டிருந்ததாக தன்னிடம் கூறப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

இதை தவிர, 2016 தேர்தலுக்கு தொடர்பில்லாத விவகாரத்தில், டிரம்பின் முன்னாள் பிரசார மேலாளரான பால் மனஃபோர்ட் மீது இருந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றமற்றவர் என தெரிவிக்கப்பட்டது.

டிரம்பின் பிரசாரத்தில், ரஷியாவின் தொடர்பு குறித்து விசாரித்து வரும் சிறப்பு ஆலோசகரான ராபர்ட் மல்லர் முதலில் குற்றம் சாட்டியுள்ளது ஜார்ஜ் பாப்பலோப்புலாஸ் மீதுதான்.

அமெரிக்க தலைவரின் பிரசாரத்திற்கு நேரடி தொடர்பில் உள்ளதால், அவரை பாதிக்கும் அளவிற்கான சக்தி இந்த வழக்கிற்கு உள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

சிகாகோவை சேர்ந்த, சர்வதேச ஆற்றல் குறித்த வழக்கறிஞரான பாப்பலோப்புலாஸ், கடந்த ஏப்ரல் மாதம், டிரம்ப் வெளியிட்ட தனது தேசிய பாதுகாப்பு குழுவுடனான ஆலோசனை கூட்ட புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளார்.

நீதிமன்ற கோப்புகளின்படி, டிரம்பின் வெளியுறவு கொள்கைகளுக்கான முன்னாள் அலோசகர், ரஷியாவின் உள்கூட்டுகள் குறித்த எஃப்.பி.ஐயின் விசாரணையில் இடையூறு செய்ததை ஒப்புகொண்டுள்ளார் என உள்ளது.

ஜனவரி மாதம், எஃப்.பி.ஐ அவரிடம் விசாரணை நடத்திய போது, டிரம்பின் பிரசாரத்தில் பங்கேற்பதற்கு முன்பு, ரஷியாவிற்கு தொடர்புடைய இருவரை சந்தித்தாக, பொய் கூறியுள்ளார். ஆனால், அவர், டிரம்பின் பிரசாரத்தில் இணைந்த பிறகே அவர்களை சந்தித்துள்ளார்.

அதில் ஒருவர், ரஷிய அரசு அதிகாரிகளுடன் தொடர்புடையவர் என்று ஜார்ஜால் நம்பப்படும், பெயர் குறிப்பிடப்படாத ரஷிய பெண்.

ரஷிய அரசு அதிகாரிகளுக்கு பிரசாரகர்களுக்கும் இடையிலான சந்திப்புகளை நடத்த அவரின் உதவியை நாடியதை ஜார்ஜ் ஒப்புக்கொண்டுள்ளார்.

மற்றொருவர், ரஷிய அரசு அதிகாரிகளுடன் கணிசமான நட்பு உள்ளதாக கூறப்படும் லண்டனை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத பேராசிரியர்.

டிரம்பின் பிரசாரத்தில், ஜார்ஜின் நிலையை பார்த்தே, அந்த பேராசிரியர் ஜார்ஜிடம் பேச ஆர்வம் காட்டியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஹிலாரி கிளிண்டன் மீது, ரஷியாவின், `கரையை` உருவாக்கும் செயல்பாடுகள், மின்னஞல்கள் மூலம் நடக்கும் என 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டனில் நடந்த சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மாஸ்கோவில், ரஷிய அரசின் மூத்த அதிகாரிகளுடன் நடந்த சந்திப்பில், இந்த மின்னஞ்சல்கள் குறித்து பேசப்பட்டதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.bbc.com/tamil/global-41813164

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.