Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘தீர்வை நோக்கி நகர வேண்டும்’

Featured Replies

‘தீர்வை நோக்கி நகர வேண்டும்’
 

-நிர்ஷன் இராமானுஜம்

“நிலையான அபிவிருத்தியுடன், அனைவருக்கும் சமமான ஜனநாயக உரிமைகளை வழங்குவதே அரசமைப்பின் நோக்கமாக இருக்க வேண்டும். அரசமைப்பின் ஊடாக அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை நோக்கி நாம் நகர வேண்டும்” என, நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று (31) தெரிவித்தார்.

புதிய அரசமைப்புக்கான, அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழுவால் நாடாளுமன்றத்துக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை தொடர்பான இரண்டாம் நாள் விவாதம், நேற்று (31) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “அதிகாரப் பகிர்வு குறித்து ஒன்றிணைந்த எதிரணியினர், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். எனினும், 1995ஆம் ஆண்டு, வெள்ளைத் தாமரை இயக்கத்தில் என்னோடு இணைந்திருந்து, இன்று ஒன்றிணைந்த எதிரணியில் இருக்கும் சிலரோடு, அன்று நாம் கலந்துரையாடியிருந்தோம்.

“இப்போது எதிர்ப்புத் தெரிவிக்கும் மஹிந்த ராஜபக்ஷ, தான்தான் நாட்டின் ஐந்தாவது ஜனாதிபதி என பல்வேறு இடங்களில் இன்று கூறிக்கொண்டிருக்கிறார். இங்கே, அரசமைப்பின் இடைக்கால அறிக்கையில் என்ன இருக்கிறது என அறிந்துகொள்ளாத சிலரே, அது குறித்துத் தவறான கருத்துகளைப் பரப்புகிறார்கள்.

“அரசமைப்பு வழிநடத்தும் குழுவிலிருந்து விமல் வீரவன்ச விலகிச் சென்றார். ஆனால் அரசமைப்புச் சபை நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், இங்கே மதிய உணவை அருந்திக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.

“அன்று மெதமுலனவில் கோப்பைகளைக் கழுவியவர்களும், இவர்களோடு இணைந்திருக்கிறார்கள். இந்த உயர்ந்த சபைக்கு ஒவ்வொரு பிரதேசத்திலிருந்தும் ஒவ்வொரு பிரிவு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஒவ்வொரு கலாசாரத்தைப் பின்பற்றும், வெவ்வேறு சிந்தனையுடையவர்கள் இருக்கிறார்கள்.

“எனவே, நாம் அனைவருடனும் கலந்தாலோசித்து, நாடு, நாட்டுமக்களின் நலன் கருதி, முன்னோக்கிச் செல்ல வேண்டிய காலம் இப்போது கனிந்துள்ளது” என்றார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/தீர்வை-நோக்கி-நகர-வேண்டும்/175-206383

பிளவுபடாத இலங்கையை பார்க்க தமிழர்கள் விருப்பம்

 

புதிய யுகத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிறார் மங்கள
(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான பணிகள் பகிரங்கமாக இடம் பெற்று வருகின்றன. இலங்கை வர­லாற்றில் இவ்­வா­றான திறந்த ஏற்­பா­டு­களை நான் இது­வரை கண்­ட­தில்லை. அதற்கு மாறாக அர­சாங்கம் மறை­மு­க­மாக அர­சி­ய­ல­பை்பை நிறை­வேற்ற சதி திட்டம் தீட்­ட­வில்லை. எனவே இன, மத வேறு­பா­டு­களை கழைத்து அனைத்து மக்­க­ளுக்கும் சம­வு­ரிமை வழங்க இட­ம­ளிக்க வேண்டும் என்று நிதி மற்றும் ஊட­கத்­துறை அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார். 

அத்­துடன் அர­சி­ய­ல­மைப்பு சபையில் இருந்து வில­கி­யுள்ள விமல் வீர­வன்ச இன்று (நேற்று) அர­சி­ய­ல­மைப்பு சபையின் சிற்­றுண்டி சாலையில் உண்டு பரு­கு­வ­தனை தான் கண்­ட­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சி­ய­ல­மைப்பு சபையில் நேற்று செவ்­வாய்­கி­ழமை இடைக்­கால அறிக்கை மீதான விவாத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

ஒற்­றை­யாட்சி, பெளத்த மத முன்­னு­ரிமை வகிக்கும் ஏற்­பா­டு­களை உள்­ள­டக்­கி­யுள்ள இடைக்­கால அறிக்­கைக்கு எதிர்ப்பு வெளி­யிட்டு வரும் டலஸ் அழ­க­பெ­ரும அன்று சந்­தி­ரிகா அம்­மை­யாரின் ஆட்­சியின் போது அர­சி­ய­ல‍மைப்­புக்­காக கிரா­மத்­திற்கு கிராமம் சென்று அதற்­காக பிர­சா­ரத்தில் ஈடுப்­பட்­ட­மையை மறந்­துள்ளார். அதில் நானும் பிர­தான பங்கு வகித்­தி­ருந்தேன். வெள்ளை தாமரை இயத்தின் ஊடாக ஐக்­கிய அர­சி­ய­ல­மைப்­புக்­காக பிர­சாரம் செய்தோம். ஆனால் தற்­போது முன்­வைக்­கப்­பட்­டுள்ள இடைக்­கால அறிக்­கையில் ஐக்­கிய சமஷ்டி ஆட்சி முறை­யல்ல. ஒற்­றை­யாட்சி முறை­மையே கொண்டு வரப்­பட்­டுள்­ளது. ஐக்­கிய அர­சியல் யாப்பை ஆத­ரித்­தவர் இன்று ஒற்­றை­யாட்­சியை எதிர்க்­கின்றார். அத்­துடன் நாட்டை பின்­ந­கர்த்தும் செயற்­பாட்டில் தொடர்ந்து செயற்­பட்டு வரும் உத­ய­மா­காத மொட்டு சின்­னத்­தி­லான குழுவின் தலை­வ­ராக உள்ள ஜீ.எல் பீரிஸ்தான் ஐக்­கிய அர­சி­ய­ல­மைப்­பினை முன்­வைத்தார். எனினும் அவரும் ஒற்­றை­யாட்சி எதி­ராக மாறி­யுள்ளார். எவ்­வா­றா­யினும் சமிஷ்டி ஆட்சி முறையே எனக்கு விருப்­ப­மா­னது.

இந்­நி­லையில் அர­சியல் தீர்வு விட­யத்தின் மீதான அக்­கறை தற்­போது ஏற்­பட்­ட­தல்ல. இதற்கு முன்னர் இருந்த எமது அர­சியல் தலை­வர்கள் ஏற்­றுக்­கொண்ட விட­ய­தா­னங்­கா­ளாகும். இதன்­படி அனைத்து அர­சியல் கட்­சி­களும் இலங்கை வாழ் இனங்கள் அனை­வ­ருக்கும் சம­வு­ரிமை வழங்க வேண்டும் என வலி­யு­றுத்­தின. இதன்­படி ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ரான எஸ்.டப்­ளியூ.ஆர்.டி பண்­டா­ர­நா­யக்­கவும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ரான டி.எஸ் சேனா­நா­யக்­கவும் சம­வு­ரி­மை­யையும் சுய­நிர்­ண­யத்தை அனை­வ­ருக்கும் சம­மாக வழங்க வேண்டும் என வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர். அதே­போன்று இட­து­சாரி கட்சி தலை­வ­ரான கொல்வின் ஆர் டி சில்­வாவும் மக்கள் விடு­தலை முன்­னணி ஸ்தாபக தலைவர் ரோஹன விஜே­வீ­ரவும் சுய நிர்­ணயம் வழங்­கு­வ­தற்கு ஆத­ர­வ­ளித்­தனர். அதே­போன்று உத­ய­மா­காத மொட்டு சின்­னத்தை கொண்ட கட்­சியின் மறை­முக தலைவர் மஹிந்த ராஜ­ப­க்ஷவும் அவ­சர பிர­க­ட­ன­மாக அர­சியல் தீர்­வினை வழங்க வேண்டும் என கூறி­யுள்ளார். எனவே அனைத்து அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­களும் இதற்கு இணக்கம் தெரி­வித்­துள்­ளனர்.

எனவே இந்த யாதார்த்தை நன­வாக்­கவே எமது அர­சாங்கம் முன்­வந்­துள்­ளது. அடிப்­ப­டை­வா­திகள் சிலர் அபாய கருத்­து­களை தெரி­வித்து வரு­கின்­றனர். எனினும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­யை நி­றை­வேற்­று­வ­தற்கு பெரும்­பாடு படு­கின்றார். வடக்கு கிழக்கு மக்­களின் ஆணை கிடைத்த ஒரே ஒரு சிங்­கள தலைவர் மைத்­தி­ரி­பால சிறி­சேனவேயாவார். அவர் நாட்டு மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தியை நிறை­வேற்ற 2016 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பு சபையை உரு­வாக்­கினார்.

இந்­நி­லையில் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான பணிகள் திறந்து விடப்­பட்­டுள்­ளது. இலங்கை வர­லாற்றில் இவ்­வா­றான திறந்த ஏற்­பா­டு­களை நான் இது­வரை கண்­ட­தில்லை. அர­சாங்கம் மறை­மு­க­மாக அர­சி­ய­ல­பை்பை நிறை­வேற்ற சதி திட்டம் தீட்­ட­வில்லை.

அத்­துடன் ஜன­நா­யக ஆட்சி என்ற வகையில் தீர்வு வழங்­கவே நாம் முற்­ப­டு­கின்றோம். இந்த யாதார்­பூர்­வ­மான செயற்­பா­டுகள் சர்­வ­தி­கார போக்­கு­டைய ஆட்­சி­யா­ள­ருக்கு பக்­க­சார்­பான செயற்­படும் குழு­வி­ன­ருக்கு புரி­யாது. வடக்கு மக்கள் யுத்தம் கார­ண­மாக பல்­வேறு பிரச்சினை­க­ளுக்கு முகங்­கொ­டுத்­தனர்.இந்­நி­லையில் தற்­போது நாட்டில் வாழும் அனை­வரும் அடிப்­படை மாற்­றத்தை கோரு­கின்­றனர். இதன்­படி நிலை­யான சம­தா­னத்தை எதிர்­பார்க்­கின்­றனர்.அனைத்து இனத்­த­வர்­க­ளுக்கும் சம வாய்ப்பு வழங்­கப்­பட வேண்டும். அன­வைரும் ஒரு பிர­ஜை­யாக வாழ வேண்டும். இதனை செயற்­ப­டுத்­தி­னா­லேயே பொரு­ளா­தா­ரத்தை வளப்­ப­டுத்த முடியும். பிள­வுப்­ப­டாத இலங்­கையை பார்க்க தமிழ் மக்கள் விருப்பம் கொள்­கின்­றனர். யுத்­த­தினால் எமது நாட்­டவர் பலர் உயி­ரி­ழந்­தனர். இரா­ணுவ வீரர்கள், விடு­தலை புலிகள், அப்­பாவி மக்கள் கொலை செய்­யப்­பட்­டனர். இதனால் பாதிக்­கப்­பட்­ட­வ­வர்கள் ஏழைகளேயாவர். எனவே மீண்டும் வன்­முறை ஏற்­பட இட­ம­ளிக்க முடி­யாது. புதிய யுகத்தை ஏற்­ப­டுத்த வேண்டும்.

அடுத்த வருடம் 70 வருட சுதந்­திரம் கொண்­டாடும் போது நல்ல அடித்­த­ளத்தை இட­வேண்டும். எமக்கு கிடைக்க வேண்­டிய சுதந்­திரம் கிடைக்­க­வில்லை. தற்­போ­தா­வது இன­வாத கண்­கொண்டு பார்ப்­ப­தனை நிறுத்தி கொண்டு முன்­னேற்றம் காண வேண்டும். அர­சி­ய­ல­மைப்பின் ஊடா­கவே சிறு­பான்மை மக்கள் உரி­மையை உறு­திப்­ப­டுத்த முடியும். பெளத்த தர்மத்தின் பிரகாரம் அரசியலமைப்பை தயாரிக்க வேண்டும்.அதற்கு யார் எதிர்க்க போகின்றனர். இந்த வாய்ப்பினை தவறவிட்டால் பொருளாதார அபிவிருத்தி எம்மை விட்டு சென்று விடும். அதன்பின்னர் மீண்டும் ஏற்படாது. மீண்டும் யுத்ததிற்கே வழி வகுக்கும்.

கட்சி, பேதங்களை மறந்து சுதந்திரம் பெற வேண்டும். இன, மத வேறுபாடுகளை களைந்து மக்களுக்கு சமவுரிமை வழங்க இடமளிக்க வேண்டும். மேலும் அரசியலமைப்பு சபையில் இருந்து விலகியுள்ள விமல் வீரவன்ச இன்று (நேற்று) அரசியலமைப்பு சபையின் சிற்றுண்டி சாலையில் உண்டு பருகிறார் என்றார்.

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.