Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் தகவல் தொழில்நுட்பத் துறையை உருவாக்கியுள்ளனர்: கொழும்பு ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது மகன் சாள்ஸ் அன்ரனி தலைமையில் தகவல் தொழில்நுட்பத்துறையை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

பிரித்தானியாவில் விமானப் பொறியியல்துறை பட்டப்படிப்பை நிறைவு செய்த சார்ள்ஸ் அன்ரனி, ஆறு மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சிக்கு திரும்பியுள்ளார். அதன் பின்னர் இந்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது என தேசிய புலனாய்வுத்துறை அரசாங்கத்திற் அறிவித்துள்ளது.

இந்த பிரிவின் மூலம் செய்மதிப் படங்கள், கணணியில் சேகரிக்கப்படும் தகவல்கள், ஏனைய கணணிகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் என்பவற்றை ஆராயமுடியும். தகவல் தொழில்நுட்பப் பிரிவில் ஆய்வு மையமும் உள்ளது. இது விமான எதிர்ப்பு ஏவுகணை தொழில்நுட்பத்தை கொண்டிருப்பதுடன் விமானத் தாக்குதல் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளக் கூடியது என மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் முன்னரும் நவீன தொழில்நுட்பங்களை போர்க்களத்தில் பயன்படுத்திய போதும் அதற்கான தனியான பிரிவை கொண்டிருக்கவில்லை. போர் நிறுத்த காலத்தில் அவர்கள் விமான எதிர்ப்பு கருவிகள், நவீன தொலைத் தொடர்பு கருவிகள், ஓடியோ, வீடியோ ஒலிபரப்புக் கருவிகள் போன்ற நவீன உபகரணங்களை கொள்வனவு செய்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் இந்தப் பிரிவு பாதுகாப்பு படைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் என புலனாய்வுத்துறை அரசாங்கத்தை எச்சரித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source: www.puthinam.com

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஊடகம் ஐயா அது....?

சாள்ஸ் அன்ரனி வெளிநாட்டில் படிப்பதாக வயிரெறிந்தூ திரிபவர்களுக்கு இந்தச்செய்தி திகைப்பை ஊட்டும்.புலிக்கு பிறந்தது பூனையாகுமா எதிரிகளை திணரடிக்க தந்தையின் வழியில் போராட்டத்துடன் இணிஅந்திருப்பவர்தான் சாள்ஸ்

ஈழவனே ஏன் அப்படி கூறுகிறீர்கள். அப்பா ஒரு கைத்துப்பாக்கியோடு விஞ்ஞான வளர்ச்சி கண்டிராத அந்த காலங்களில் தனித்துவமான் அறிவுடன் வீறுநடை போட்டு இன்று ஒரு பெரும் சேனையினைக்கட்டி முடித்துள்ளார். இதனை செவ்வனே கொண்டிளுக்க அவரின் பிள்ளை எனிவரும் காலங்களின் சண்டையின் போது எதிரி விஞ்ஞான வளர்ச்சியினை பாவிக்கவெளிக்கிடும் போது முன்கூட்டியே அதனை அறிந்து அதற்கேற்ப காய்நகர்த்தி பல் உடைய கொடுக்க முன்னமே தாயார்பண்ணி இருப்பது தானே சரியான விவேகம். அது என்பிள்ளை செய்தா என்ன அவரின் பிள்ளை செய்தா என்ன. ஒரு தமிழன் ஆமா நம்ம தமிழ்பிளை அப்படி படித்து 16 அடி பாய எத்தனிப்பதனையிட்டு நாம் எல்லோம் பெருமையல்லவா படவேன்டும்.ம்...

ஈழவனே ஏன் அப்படி கூறுகிறீர்கள். அப்பா ஒரு கைத்துப்பாக்கியோடு விஞ்ஞான வளர்ச்சி கண்டிராத அந்த காலங்களில் தனித்துவமான் அறிவுடன் வீறுநடை போட்டு இன்று ஒரு பெரும் சேனையினைக்கட்டி முடித்துள்ளார். இதனை செவ்வனே கொண்டிளுக்க அவரின் பிள்ளை எனிவரும் காலங்களின் சண்டையின் போது எதிரி விஞ்ஞான வளர்ச்சியினை பாவிக்கவெளிக்கிடும் போது முன்கூட்டியே அதனை அறிந்து அதற்கேற்ப காய்நகர்த்தி பல் உடைய கொடுக்க முன்னமே தாயார்பண்ணி இருப்பது தானே சரியான விவேகம். அது என்பிள்ளை செய்தா என்ன அவரின் பிள்ளை செய்தா என்ன. ஒரு தமிழன் ஆமா நம்ம தமிழ்பிளை அப்படி படித்து 16 அடி பாய எத்தனிப்பதனையிட்டு நாம் எல்லோம் பெருமையல்லவா படவேன்டும்.ம்...

ஓகோ............இன்னும் எத்தனை வருடகாலம் சண்டை பிடிக்க உத்தேசம்? .........60......90.....?

இதனை நீங்கள் எங்கு இருந்து சொல்லுகிறீர்கள் என்பதில் தான் அந்த தனித்துவம் தங்கியுள்ளது!

போரில் மடியுது ஒரு கூட்டம், அதை கண்டு பரவசமடையுது ஒரு கூட்டம்!

Edited by சாணக்கியன்

அவுஸ்திரேலியாவில் இருந்து.

இல்லை போரண்டு தொடங்கினா சனம் சாகத்தான் வேணும். மழையெண்டு பெஞ்சா உடை கீழபக்கத்தில கொஞ்சம் நனையத்தான் பார்க்கும். அப்படி நனையக்கூடாது எண்டா நல்ல குடை எங்க இருக்கு எண்டு போய் அங்க இருந்து குடையினையும் தாங்கிபிடித்தபடி நனையாம தானும் இருந்து கொண்டு மற்றவையையும் நனையாம காப்பாற்றலாமே?? அப்படியும் செய்ய ஏலாது நனையவும் கூடாது எண்டா புலிகள் என்னத்தை செய்ய முடியும். அது சரி இப்ப கொழும்பில சிங்களவன் அடிக்க வெளிக்கிட்டா நீர் அடிவேண்டதானே வேண்டும். அதே போல நாளை புலிக்கு சப்போட்டு என்று எங்கட சொத்துகளை முடக்கினா நாங்க என்ன செத்தா போடுவம். என்னுமொரு நாட்டில போவம் வேலை எடுப்பம் வீடுகள் வேண்டுவம். இதுக்குப்போய் சண்டையெண்டு வந்தா ஏன் சாணக்கியன் நீர் இப்பிடி அழுகிறீர். போய் சொல்லும் எல்லாரையும் ஓர் அணியில நிக்கச்சொல்லி.நீரும் தான். :lol:

அடடா நீங்களா இது! அப்ப நான் எஸ்கேப்!!!

இளைய தலைமுறைக்கோர் இனிய தலைவன்...! ஒவ்வொரு தமிழனும் ஒவ்வோரு துறையில் முன்னேறட்டும். நாளை ஈழம் மட்டுமல்ல உலகும் நம் கையில்.

saivan நெற்றியடி கொடுத்து விட்டீர்கள்.

ஈழத்திலிருந்து

ஜானா

ஓகோ............இன்னும் எத்தனை வருடகாலம் சண்டை பிடிக்க உத்தேசம்? .........60......90.....?

இதனை நீங்கள் எங்கு இருந்து சொல்லுகிறீர்கள் என்பதில் தான் அந்த தனித்துவம் தங்கியுள்ளது!

போரில் மடியுது ஒரு கூட்டம், அதை கண்டு பரவசமடையுது ஒரு கூட்டம்!

வணக்கம் சாணக்கியன்,

நாம் வலுவாகவும், பலமாகவும் இருப்பது என்பது சண்டை போடுவதற்க்காக மட்டுமல்ல நம்மிடம் யாரும் சண்டை போடாமல் இருப்பதற்க்கும் உதவும். மனித மனம் குறித்தான ஆழமான புரிதல் தாங்களுக்கு இருக்குமானால் இது தாங்களுக்கு நன்றாக விளங்கும். நாம் அகிம்சாவாதியாக இருக்கலம், நம் அருகில் உள்ளவன் அடாவடி பேர்வழியாக இருந்தால் நம்ம பாடு திண்டாட்டம் தான். பிழைப்பவர்களுக்கு தாங்கள் கூறுவது பொருந்தும். வாழ வேண்டும் என்றால் வல்லவனாகவும் இருக்கனும். அதனால் தான் அனைத்து நாடுகளும் தனது இராணுவத்தை நவீன மாகவும் பலமுள்ளதாகவும் கட்டமைக்கிறது.

ஆமாம் தெரியாமல் தான் கேட்கிறேன், தங்களுக்கு யார் சாணக்கியன் என்று பெயர் வைத்தது?

  • கருத்துக்கள உறவுகள்

ஓகோ............இன்னும் எத்தனை வருடகாலம் சண்டை பிடிக்க உத்தேசம்? .........60......90.....?

இதனை நீங்கள் எங்கு இருந்து சொல்லுகிறீர்கள் என்பதில் தான் அந்த தனித்துவம் தங்கியுள்ளது!

போரில் மடியுது ஒரு கூட்டம், அதை கண்டு பரவசமடையுது ஒரு கூட்டம்!

இல்லையுங்கோ உம்மை போல பரதேசிக் கூட்டம் தலைவரின் மகனை வெளி நாட்டுக்கு அனுப்பி விட்டு ஏழையின் பிள்ளைகளை இயக்கத்தில் சாகடிக்கிறாங்கள் என்றவர்கட்கு சரியான அடி. ஓஓ உமக்கு , நீர் நினைத்தவுடனே நாட்டை பிரித்தெடுக்க உம்மடை குஞ்சியப்பர் தானே நாட்டை ஆட்சி செய்யிறார். நீரும் உம்மடை பன்னாடை கருத்தும்.

FIGHT AS LONG AS IT TAKES. THERE IS NO TIME FRAME MR SAANSSSSSSSSSSSSS

அடடா நீங்களா இது! அப்ப நான் எஸ்கேப்!!!

எனக்கும் மண்டைக்குள் ஏதோ குடைவதுபோல் இருந்தது. உறுதிப்படுத்தியதற்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.