Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு அதிகாரி வெளிநாடு செல்ல ஆளுனர் அனுமதி வழங்க வேண்டும் – யாழ்.மேல் நீதிமன்றம்

Featured Replies

வடக்கு அதிகாரி வெளிநாடு செல்ல ஆளுனர் அனுமதி வழங்க வேண்டும் – யாழ்.மேல் நீதிமன்றம்

Judgement.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரியதாசன் ஜேகூ வெளிநாட்டுக்குச் சென்று கல்வியைத் தொடர வடக்கு மாகாண ஆளுநர் அனுமதி வழங்கவேண்டும் என  யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கட்டளையிட்டுள்ளார். உதவிச் செயலாளர் தாக்கல் செய்த உறுதிகேள் எழுத்தாணை மனு மீதே இந்தக் கட்டளையை மேல் நீதிமன்றம் வழங்கியது.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரியதாசன் ஜேகூ, புலமைப் பரிசில்பெற்று அவுஸ்திரேலியாவுக்கு மேற்கல்வி கற்கச் சென்றிருந்தார். அவர் கடமையிலிருக்கும் போது வெளிநாடு செல்வதற்கான அனுமதிகேட்டு மாகாண ஆளூனருக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஊடாக விண்ணப்பிருந்தார்.

அவரது விண்ணப்பத்துக்கு வடக்கு மாகாண பிரதம செயலாளரால் பரிந்துரை வழங்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. எனினும் ஜேகூ ஆளுநரின் அனுமதி கிடைக்க முன்னரே அவுஸ்திரேலியா சென்றுவிட்டார். இந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய அவர் மீள அழைக்கப்பட்டார். நாடு திரும்பிய அவருக்கு அனுமதியின்றி வெளிநாடு சென்ற காரணத்தால் வடக்கு மாகாண ஆளுநரால் ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராகவும் தனது வெளிநாடு செல்லும் விடுமுறைக்கான விண்ணப்பத்துக்கு அனுமதி வழங்க கட்டளையிடுமாறு கோரியும் உதவிச் செயலாளர் ஜேகூ யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் எழுத்தாணை மனுவைத் தாக்கல் செய்தார்.

மனு மீதான விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் இன்று யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கட்டளையை வழங்கினார். வடக்கு மாகாண ஆளுநரால் மனுதார்ரான ஜேகூவாவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. எனினும் ஆளுநரால் அதிகாரம் பகிர்தளிக்கப்பட்ட பிரதம செயலாளர் மனுதாரரின் விண்ணப்பத்தை ஏற்று அனுமதியளித்தே ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ளார். எனவே மனுதார்ர் வெளிநாடு சென்றமையில் நிர்வாக மீறல் கிடையாது.

வடக்கு மாகாண ஆளுநர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர். எனினும் அவர் ஆற்றுகின்ற பணிகள் மாகாண அதிகாரத்துக்குட்பட்டவை. எனவே ஆளுநருக்கு உத்தரவிடும் அதிகாரம் மாகாண மேல் நீதிமன்றுக்கு உள்ளது. அதனடிப்படையில் மனுதாரர் வெளிநாட்டில் கல்வியைத் தொடர்வதற்கான அனுமதியை வழங்க மன்று கட்டளையிடுகிறது.

இந்தக் கட்டளையின் பிரதி அவுஸ்திரேலிய தூதரகத்துக்கும் அனுப்பிவைக்கப்படவேண்டும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி கட்டளையிட்டார்.

http://globaltamilnews.net/archives/48772

  • தொடங்கியவர்

வட மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் அவுஸ்திரேலியாவில் கல்வியைத்தொடர அனுமதிக்குமாறு உத்தரவு

 

வட மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் அவுஸ்திரேலியாவில் கல்வியைத்தொடர அனுமதிக்குமாறு உத்தரவு
 

வட மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் மரியதாசன் யெகு, அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட புலமைப்பரிசில் மூலம் கல்வியைத் தொடர்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவிற்கு யாழ். மேல் நீதிமன்றம் இன்று எழுத்தாணை பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையை நிறைவு செய்த யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று தீர்ப்பை அறிவித்துள்ளார்.

வட மாகாண ஆளுநரின் அதிகாரங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு யாழ். மேல் நீதிமன்றுக்கு அதிகாரம் கிடையாது என சட்ட மா அதிபர் திணைக்களம் முன்வைத்திருந்த ஆட்சேபனையை நீதிபதி நிராகரித்துள்ளார்.

அத்தோடு, ஆளுநரின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அதிகார அத்துமீறலை விசாரணை செய்யும் அதிகாரம் மேல் நீதிமன்றுக்கு உண்டு எனவும் நீதிபதி வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் காரணமாக இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தின் பிரகாரம், வட மாகாண சபை உருவாக்கப்பட்டு முதலமைச்சர், அமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, அதே சட்டத்தின் பிரகாரமே வட மாகாண வரையறைக்குள் கடமையாற்றுவதற்கு ஆளுநரை ஜனாதிபதி நியமித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, வட மாகாண எல்லைக்குள் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அத்துமீறல் ஆளுநரால் மேற்கொள்ளப்படுமாயின் அதனை கேள்விக்குட்படுத்தும் அதிகாரம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு உண்டு எனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

மேலதிகக் கல்விப் பணிப்பாளர் மரியதாசன் யெகு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புலமைப்பரிசில் பெற்று கல்வி கற்பதற்காக 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் திகதி அவுஸ்திரேலியா சென்றிருந்தார்.

அவர் அவுஸ்திரேலியாவின் தலைநகர் கென்பராவில் தரையிறங்கியதன் பின்னர் அவரது வெளிநாட்டுக் கல்வி விடுமுறை அங்கீகரிக்கப்படவில்லை என ஆளுநர் தீர்மானித்து அவரை உடனடியாக நாடு திரும்புமாறு பணிப்புரை விடுத்ததை அடுத்து, 2016 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் அவர் நாடு திரும்பியிருந்தார்.

இதற்கமைய, பாதிக்கப்பட்ட அதிகாரி வட மாகாண சபையின் உயர் அதிகாரிகள் மற்றும் ஆளுநரின் தீர்மானங்களுக்கு எதிராக ஆணை வழக்கு ஒன்றை யாழ். மேல் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார்.

மீண்டும் அவுஸ்திரேலியா சென்று இரண்டு ஆண்டுகள் முதுமானி கற்கை நெறியைப் பூர்த்தி செய்வதற்கு தனது விடுமுறையை அங்கீகரிக்க ஆளுநருக்கு ஆணை பிறப்பிக்குமாறு மனுதாரர் யாழ். மேல் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது சட்ட மா அதிபர் திணைக்களம் முன்வைத்த ஆட்சேபனைகளை நிராகரித்த நீதிபதி, குறித்த தமிழ் அதிகாரி இரண்டு ஆண்டுகள் அவுஸ்திரேலியாவில் கல்வி பயில்வதற்கு விடுமுறையை அங்கீகரிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த ஆணையை உடனடியாக அமுல்படுத்துமாறும் கால தாமதமின்றி அவர் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல அனுமதிக்குமாறும் வட மாகாண ஆளுநருக்கு நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கின் தீர்ப்பு பிரதிகளை ஆளுநருக்கும் அவுஸ்திரேலிய தூதுவராலயத்திற்கும் நிதி அமைச்சிற்கும் அனுப்புமாறு மேல் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

http://newsfirst.lk/tamil/2017/11/114039/

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதக் கும்பலின் (அ)நீதித்துறையை ஆட்டம் காண வைத்த முதலாவது தீர்ப்பு இதுவாக இருக்கலாம்.

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதக் கும்பலின் ஏஜென்ட் ஆன ஆளுநரின் தமிழின விரோத பயங்கரவாத செயல் கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கிறது.

நல்ல விடயம்.

தொடர்ந்து சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதக் கும்பலின் (அ)நீதித்துறை என்ன செய்யப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

ஆளுநர் ரப்பர் ஸ்டாம்ப் வேலையைத் தான் செய்யவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.