Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கரும்புத் தோட்ட காணியை மக்களுக்கு பகிர்ந்தளிக்க முடியாது - சி.வி விக்னேஸ்வரன்!

Featured Replies

கரும்புத் தோட்ட காணியை மக்களுக்கு பகிர்ந்தளிக்க முடியாது - சி.வி விக்னேஸ்வரன்!

 

கிளிநொச்சி- ஸ்கந்தபுரம் கிராமத்தில் உள்ள 200 ஏக்கர் கரும்புதோட்ட காணியை மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என வடமாகாணசபையில் உறுப்பினர்கள் கேட்டுள்ள நிலையில், மேற்படி காணியை மக்களுக்கு பகிர்ந்தளிக்க இயலாது, காணியை கேட்கும் முன்னாள் போராளிகள் மற்றும் மக்களுக்கு மாற்று காணிகளை வழங்கலாம். என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

இன்று வடமாகாணசபையின் 109வது அமர்வு நடைபெற்றது. இதன்போதே உறுப்பினர்கள் கேட்டதற்கு முதலமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

கரும்புத் தோட்ட காணியை மக்களுக்கு பகிர்ந்தளிக்க முடியாது - சி.வி விக்னேஸ்வரன்!

மேற்படி விடயம் தொடர்பாக சபையில் பேசப்பட்டபோது, மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை கருத்து தெரிவிக்கையில், 200 ஏக்கர் காணியை கால்நடை வளர்ப்பதற்காக கொடுத்திருக்கிறீர்கள். அரை ஏக்கர் காணியில் 18 மாடுகளை ஒரு பெண் வளர்த்து வருகின்றார். சாணகத்தில் கால் படாதவர்கள் கால்நடை வளர்க்க இயலுமா? அவர்களுக்கு கால்நடை வளர்க்க காணி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாகாணசபை ஒரு தடவையில் 200 குடும்பங்களுக்கு எதாவது நல உதவித்திட்டம் கொடுத்துள்ளதா? என கேள்வி எழுப்பினார்.

இதே நேரம் கருத்துத் தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா, முதலமைச்சர் தன் முடிவை மாற்றி மக்களுக்கு காணியை வழங்கவேண்டும் என கேட்டு கொண்டார்.

இதற்கமைய குறித்த காணியின் பங்குதாரர்கள் யார்? செலுத்தப்பட்ட முதல் எவ்வளவு? நோக்கு இலக்கு மாற்றப்பட்டது எப்படி? இனிமேல் போடப்படும் முதல் எவ்வளவு? வேறு யாருக்காவது குத்தகைக்கு காணி வழங்கப்பட்டதா? என ஆராய்ந்து அடுத்த அமர்வில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் பதிலளிக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டு அவைத் தலைவர் சீ.வி. கே.சிவஞானம் ஊடாக மேற்படி கேள்விகள் அடங்கிய கடிதம் முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/cant-release-the-land-for-people

3 hours ago, நவீனன் said:

200 ஏக்கர் காணியை கால்நடை வளர்ப்பதற்காக கொடுத்திருக்கிறீர்கள். அரை ஏக்கர் காணியில் 18 மாடுகளை ஒரு பெண் வளர்த்து வருகின்றார். சாணகத்தில் கால் படாதவர்கள் கால்நடை வளர்க்க இயலுமா?

அரைவேக்காடுகளின் மிகவும் குதர்க்கமான கேள்வி!

சிறுபோகம், பெரும் போகம் என வயல் விதைக்கும் 7-8 மாத காலங்களில் கால்நடைகள் வளர்ப்பவர்கள் மேச்சல் நிலமின்றி படும்பாடு இருக்கிறதே. அதை அறியாத அறிவிலிகள் தான் தற்போது மேச்சலுக்கு ஒதுக்கிய நிலத்தை மக்களுக்கு கேட்கிறார்கள்.  

கிளிநொச்சி பிரதேசத்தில் கடந்த ஒருவருடத்தில் கண்ட நல்ல மாற்றம், மக்கள் விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலும் கூடிய ஆர்வம் செலுத்த தொண்டாகியிருப்பது ஆகும். இது இந்த அறிவிலி அரசியல்வாதிகளுக்கு தெரியாதிருப்பது ஆச்சரியம்.

மக்களுக்கு பிரித்துக்கொடுக்க வேறுபல காணிகள் இருக்கையில் மேச்சல் நிலம் என்று அடையாளம் கண்ட காணியை கால்நடை வளர்பவர்களின் வயிற்றில் அடித்தபடி தமது எடுபிடிகளுக்கு பிரித்துக்கொடுக்க நினைப்பது கேவலமான சிந்தனை.

15 hours ago, நவீனன் said:

த.குருகுலராஜா, முதலமைச்சர் தன் முடிவை மாற்றி மக்களுக்கு காணியை வழங்கவேண்டும் என கேட்டு கொண்டார்.

குருகுலராசா மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து தண்டனைபெறாமல் தான் முன்னர் காப்பாற்றிய ஆசிரியர்களுக்கு இந்தக் காணிகளை பகிர்ந்தளிக்க நினைக்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.