Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இடைக்கால அறிக்கையை முழுமையாகப் படித்துவிட்டு விவாதிக்க வரலாம்!

Featured Replies

இடைக்கால அறிக்கையை முழுமையாகப் படித்துவிட்டு விவாதிக்க வரலாம்!

 

அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையில் தமிழர்களுக்கு எதுவும் இல்லை என்று கூறுபவர்கள் முதலமைச்சராக இருந்தாலும் அமைச்சர்களாக இருந்தாலும் அல்லது தேசியக் கொடியை ஏற்ற முடியாது என போலித் தேசியம் பேசுபவர்களாக இருப்பினும் அவர்களுடன் நேரடியாக விவாதிப்பதற்கு தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இடைக்கால அறிக்கையை முழுமையாகப் படித்துவிட்டு விவாதிக்க வரலாம்!

விவாதிக்க வருபவர்கள் இடைக்கால அறிக்கையை முதலில் முழுமையாகப் படித்துவிட்டு வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், தமிழ் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளைத் தெரியாதவர்களே மக்கள் மத்தியில் குழுப்பநிலையை உருவாக்குகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி நிமலன் சௌந்தர நாயகத்தின் 17 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் இன்று சிறப்புரையாற்றுகைலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

நிமலன் சௌந்தரநாயகம், 2000.11.07 அன்று மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்டமை தெரிந்ததே. அன்னாரின் பதினேழாம் ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் கடைப்பிடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முறக்கொட்டான்சேனை தேவபுரம் இலங்கை கிறிஸ்தவ சமுக மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், இலங்கை தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்ம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நிமலன் சௌந்தர நாயகம் மரணித்து 17 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் அவரை  இதுகாலவரை நினைவுகூராத தமிழரசுக்கட்சி தற்போது தேர்தல் காலம் நெருங்கும்போது நினைவுகூரல் நிகழ்வினை நடாத்துவது குறித்து சில இளைஞர்கள் இக்கூட்டத்தில் தமது அதிருப்தியை வெளியிட்டனர். இதனால் சிலநிமிட நேரம் அமளி துமளி ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பேசுகையில்,

“சமஷ்டி குறித்து யாரும் பயப்படத் தேவையில்லை, சமஷ்டியை முதலில் அறிமுக்படுத்தியவர்கள் சிங்களவர்கள். இதை முதலில் பிரித்தானியர்களுக்கு பரிந்துரை செய்தவர்கள் கண்டிய சிங்கவர்கள். இது சிங்கள மக்களுக்கு எதிரானது என எவரும் கூற முடியாது. இந்த விடயங்களை அவர்கள் பயப்படாமல் இருக்கும் வகையில் கூற வேண்டும்.

ஒரு நாட்டின் அரசியலமைப்பு மக்கள் பார்த்து பயப்படும் ஒன்றாக இருக்க கூடாது. சொற்களைக் கண்டு பயந்தால் அந்த செற்களைத் தள்ளி வைத்துவிட்டு உள்ளடக்கங்களைப் பார்கக்க வேண்டும். 70 ஆண்டுகளாக எமது மக்களின் அபிலாசைகளாக இருந்த எங்களை எமது மாநிலத்தில் ஆட்சி செய்கின்ற அதிகாரம் இருக்கிறதா இல்லையா? ஏன பார்க்க வேண்டும். சொற்களை வைத்து போலித் தேசிய வாதம் பேசாதீர்கள். அனைத்துப் பாராளுமன்ற சட்டங்களும் மாகாணசபை நியதிச் சட்டங்களும் துணைநிலை சட்டவாக்கங்களும் சிங்களத்திலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் இயற்றப்படுதல் வேண்டும் என உபகுழு அறிக்கையிலே தெழிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டதில் சிங்கள மொழி மேலோங்கும் என கூறப்படவில்லை. வருகின்ற சட்டத்திலே மூன்று மொழிகளுக்கும் சம அதிகாரம் வழங்கப்பட வேண்டும். எங்களுடைய மக்களின் அடிப்படை விடயங்கள் இடைக்கால அறிக்கையில் மறுக்கப்பட்டுள்ளன என எவராலும் கூற முடியாது. நாங்கள் தற்போது அரைவாசி தூரம்தான் வந்துள்ளளோம். இது சரிவரும் சரிவராமலும் போய்விடலாம். சரிவராமல் போய்விடுமோ என்ற பயத்தினாலே இப்போதே வெளிவாருங்கள் என்று கூறும் மூடர் யார்? மூடத்தனமாக மக்களை வீணாக உசுப்பேத்தி அவர்களுக்குள்ளே வீணான பீதியை செலுத்தி இதுகாலவரை நாங்கள் இழந்த இழப்புகளுக்கு மாற்றீடாக ஒரு அரசியல் தீர்வு கிடைக்க வருகின்ற சந்தர்ப்பத்தை நாங்களே மழுங்கடித்து எங்கள் தலையில் நாங்களே மண்ணைப் போட வேண்டும் என்று சொல்லுகின்றவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்.

இது எங்களுடைய மக்களுடைய உள்ளக் குமுறல், கட்சிகள் சம்மந்தமான விடயமும் அல்ல. எந்த அரசியல் கட்சியின் பெயரினால் வந்திருந்தாலும் கூட இறுதியாக மக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை அபிலாசைகள் இவைகள்தான். இந்த இலக்கை அடைந்துகொள்வதற்க நிமலன் சௌந்தரநாயகம் அவர்களும் பயங்கரமான சூழ்நிலையிலும் அரசியலில் இறங்கினார். அவரும் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இது போல பலரும் தமது உயிரை மாய்த்துக் கொண்டார்கள். பல விதமான நிகழ்வுகள் நடைபெற்றன.

நாங்கள் பாராம்பரியமாக வாழ்ந்துவந்த பிரதேசத்திலே மிடுக்கோடு ஒரு நாட்டுக்குள்ளே சிங்கள மக்களோடு சேர்ந்து வாழுகிறார்கள், சம உரிமையோடு வாழுகிறார்கள் என்ற சரித்திரித்தை படிக்க வேண்டுமா ஏன்பதை சிந்தித்துப் பாருங்கள். இலங்கைத் தீவிலே வாழுகின்ற தமிழ் மக்களுக்கு நிறைவான ஒரு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது சொகுசான வாழ்க்கை காத்திருக்க அதனைப் புறம் தள்ளி அரசியல் என்னும் சாக்கடைக்குள் புகுந்து தனது உயிரை மாய்த்துக்கொண்டவர் நிமலன் சௌந்தரநாயகம் என்பதனைச் சொல்லிவைக்க விரும்புகிறேன்.” என்று குறிப்பிட்டார் அவர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/sumanthiran-said-about-tamil-politics

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நவீனன் said:

சமஷ்டியை முதலில் அறிமுக்படுத்தியவர்கள் சிங்களவர்கள். இதை முதலில் பிரித்தானியர்களுக்கு பரிந்துரை செய்தவர்கள் கண்டிய சிங்கவர்கள்.

சிங்களவர்கள் அறிமுகப்படுத்திய சமஷ்டியை ஏன் 80களுக்கு முன் அமுல்படுத்தவில்லை?

தெரியாமல் கேக்கிறன் அந்த சமஷ்டிக்குள் என்னென்ன அடங்கியிருந்தது.:rolleyes:

சம்பந்தன் சுமந்திரனின் பம்மாத்து அரசியலை

ஆதாரங்களோடு முன்வைக்கும் கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் சட்டத்தரணி காண்டீபன்

 

 

2 hours ago, நவீனன் said:

 

விவாதிக்க வருபவர்கள் இடைக்கால அறிக்கையை முதலில் முழுமையாகப் படித்துவிட்டு வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், தமிழ் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளைத் தெரியாதவர்களே மக்கள் மத்தியில் குழுப்பநிலையை உருவாக்குகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

இவர்கள் நீங்கள் கூறிய அணைத்து தகுதிகளுடனும் இருந்து கொண்டு விவாதிக்கிறார்கள் உங்களால் பதில் சொல்லமுடியுமா சுமந்திரன்

 

2 hours ago, நவீனன் said:

நாங்கள் தற்போது அரைவாசி தூரம்தான் வந்துள்ளளோம். இது சரிவரும் சரிவராமலும் போய்விடலாம். சரிவராமல் போய்விடுமோ என்ற பயத்தினாலே இப்போதே வெளிவாருங்கள் என்று கூறும் மூடர் யார்? மூடத்தனமாக மக்களை வீணாக உசுப்பேத்தி அவர்களுக்குள்ளே வீணான பீதியை செலுத்தி இதுகாலவரை நாங்கள் இழந்த இழப்புகளுக்கு மாற்றீடாக ஒரு அரசியல் தீர்வு கிடைக்க வருகின்ற சந்தர்ப்பத்தை நாங்களே மழுங்கடித்து எங்கள் தலையில் நாங்களே மண்ணைப் போட வேண்டும் என்று சொல்லுகின்றவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்.

இந்த இடைக்காலத்திட்டம்சரிவராது என்பது உங்களின் கூற்றிலேயே தெரிகிறது.
நீங்கள் இன்னுமொருமுறை நல்லாட்சி அரசாங்கத்தினை பதவியேற்றி விட்டு 10 வருடம் கழித்து "நாங்கள் கடுமையாக முயன்றோம் சரிவராமல் போய்விட்டது" என அறிக்கை விடப்போகிறீர்கள். இது தான் உண்மை , உங்களை வைத்து காலம் கடத்துவது தான் சிங்கள அரசின் நோக்கம் , அதற்காகத்தான் உங்களுக்குரிய விலைகளைக் கொடுத்து சிங்களவர்கள் வாங்கி வைத்துள்ளார்கள்.

இந்த இடைக்கால அறிக்கை தொடர்பான அரசியல் வழி நடாத்தல் குழுவில் 73 தடவைகள் நீங்கள் கலந்து கொண்டுள்ளீர்கள் அது சம்மந்தமாக நீங்கள் உங்கள் கட்சியினருக்கே ஒன்றும் கூற வில்லை மக்களுக்கா கூறப்போகிறீர்கள் ..... உங்களின் இந்த கபடதனத்தை சிவசக்தி ஆனந்தனே கூறுகிறார் கேளுங்கள்.(-7.00 நிமிடத்தில்)

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

இது சரிவரும் சரிவராமலும் போய்விடலாம். சரிவராமல் போய்விடுமோ என்ற பயத்தினாலே இப்போதே வெளிவாருங்கள் என்று கூறும் மூடர் யார்?

 கடந்தகால அனுபவம் ஏதும் தெரியாமல் அலறுவது வேண்டுரகாசுக்கு மாரடிப்பதாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியவாதிகளுக்கு சவால் விடும் சுமந்திரன் எம்.பி

 

தமிழ் தேசியம் பேசுவோருக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் சவால் விடுத்துள்ளார்.

அரசியல் மறுசீரமைப்பு இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்களுக்கு எதுவும் இல்லை என்று கூறும் முதலமைச்சராக இருந்தாலும் சரி, அமைச்சர்களாக இருந்தாலும் சரி அல்லது தேசியக் கொடியை ஏற்ற முடியாது என்று போலித் தேசியம் பேசுபவர்களாக இருந்தாலும் சரி அவர்களுடன் நான் விவாதிக்கத் தயாராக இருக்கின்றேன் என சவால் விட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி நிமலன் சௌத்தரநாயகத்தின் 17ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்ட போது இந்த கருத்தினை வெளியிட்டார்.

கூட்டாட்சியை (சமஷ்டி) முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் சிங்களவர்கள். இதை முதலில் பிரிட்டிஷாரிடம் பரிந்துரை செய்தவர்கள் கண்டியச் சிங்களவர்கள். அதனால் கூட்டாட்சியை சிங்கள மக்களுக்கு எதிரானது என்று எவரும் கூறமுடியாது. இந்த விடயங்களை அவர்கள் பயப்படாமல் இருக்கும் வகையில் கூறவேண்டும்.

ஒரு நாட்டின் அரசமைப்பு மக்கள் பார்த்துப் பயப்படும் ஒன்றாக இருக்கக் கூடாது. சொற்களைக் கண்டு பயந்தால் அந்தச் செற்களைத் தள்ளி வைத்துவிட்டு உள்ளடக்கங்களைப் பார்க்கவேண்டும்.

70 ஆண்டுகளாக எமது மக்களின் வேணவாக்களாக இருந்த, எங்களை எமது மாநிலத்தில் ஆட்சி செய்கின்ற அதிகாரம் இருக்கிறதா இல்லையா? என்று பார்க்க வேண்டும். சொற்களை வைத்து போலித் தேசிய வாதம் பேசாதீர்கள்.

அனைத்து நாடாளுமன்றச் சட்டங்களும் மாகாணசபை நியதிச் சட்டங்களும் துணைநிலை சட்டவாக்கங்களும் சிங்களத்திலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் இயற்றப்படுதல் வேண்டும் என்று உபகுழு அறிக்கையிலே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய அரசமைப்பிலே சிங்களம் மேலோங்கும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. மூன்று மொழிகளுக்கும் சம அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் அடிப்படை விடயங்கள் இடைக்கால அறிக்கையில் மறுக்கப்பட்டுள்ளது என்று எவராலும் கூற முடியாது. நாங்கள் தற்போது அரைவாசித் தூரம்தான் வந்துள்ளோம். இது சரிவரும்; சரிவராமலும் போய்விடலாம்.

சரிவராமல் போய்விடுமோ என்ற பயத்தினாலே இப்போதே வெளிவாருங்கள் என்று கூறும் மூடன் யார்? மூடத்தனமாக மக்களைத் தேவையில்லாது உசுப்பேத்தி அவர்களுக்குள்ளே வீணாகப் பீதியை உருவாக்கி இதுவரை நாங்கள் இழந்த இழப்புகளுக்கு மாற்றீடாக ஓர் அரசியல் தீர்வு கிடைக்கும் வாய்ப்பை நாங்களே மழுங்கடித்து எங்கள் தலையில் நாங்களே மண்ணைப் போட வேண்டும் என்று சொல்லுகின்றவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என சுமந்திரன் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ்வின்.காம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.