Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தானின் அண்மைய நிகழ்வுகள் இந்திய – பாகிஸ்தான் உறவை சகஜ நிலைக்குக் கொண்டுவர வழிவகுக்குமா?

Featured Replies

பாகிஸ்தானின் அண்மைய நிகழ்வுகள் இந்திய – பாகிஸ்தான் உறவை சகஜ நிலைக்குக் கொண்டுவர வழிவகுக்குமா?

 

இரா­ணுவ சதி­க­ளுக்கும், இரா­ணுவ ஆட்­சிக்கும் நீண்­ட­காலம் உட்­பட்ட பாகிஸ்தான் மீண்டும் உலக மக்­களின் கவ­னத்தை ஈர்த்­ துள்­ளது. பாகிஸ்தான் சட்ட அமைச்சர் சாஹிட் ஹமீட் இஸ்­லா­மிய தீவி­ர­வா­த கட்சி­களின் தொடர்ச்­சி­யான வழி­ம­றிப்பு போராட்­டத்தின் மூலம் பத­வி­யி­லி­ருந்து இறங்­கி­யுள்ளார். அர­சாங்­கமும் அவர்­களின் தொடர்ச்­சி­யான போராட்­டத்­திற்கு அடி­ப­ணிந்­துள்­ளது. அண்­மையில் பாகிஸ்தான் அர­சாங்கம் தேர்தல் சட்­டத்தில் திருத்­த­மொன்றை மேற்­கொண்­டது. அத்­தி­ருத்த சட்­டத்தில் அல்­லா­ஹ்வுக்கு மரி­யாதை செலுத்தும் வாசகம் இடம்­பெ­ற­வில்லை என ஆட்­சே­பித்து இஸ்­லா­மிய தீவி­ர­வாத கொள்­கை­களை தூக்­கிப்­பி­டிக் கும் தகறீக் லபீக் யா றசூல் அல்லா (ரி.எல்.வை.ஆர்.) எனும் கட்­சியும் அத­னுடன் இணைந்து இன்னும் இரண்டு சிறிய அமைப்­புக்­களும் கடந்த இரண்டு வாரங்­க­ளாக பிர­தான பாதை­களை மறித்து தொடர் எதிர்ப்­புக்­களைக் காட்­டினர். இஸ்­லா­ம­பாத்தில் இடம்­பெற்ற இப்­போ­ராட்டம் பாகிஸ்­தானின் ஏனைய பிர­தான நக­ரங்­க­ளுக்­கி­டை­யே­யான போக்­கு­வ­ரத்­தினைத் தடை­செய்­தது. போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்கள் பிர­தான வீதி­களில் அமர்ந்­தி­ருந்­தனர். ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை அகற்­று­வ­தற்கு பொலிஸார், படை­யினர் அனுப்­பப்­பட்­டனர். பொலி­ஸா­ருக்கும் ஆர்ப்­பாட்­டக்­கா­ர­ருக்கும் இடையே முறுகல் நிலை தோன்­றி­யது. இதில் எழுவர் உயி­ரி­ழந்­தனர், பலர் காயப்­பட்­டனர். போக்­கு­வ­ரத்து மறுக்­கப்­பட்­டதால் நோயுற்ற சிறு­மியை இஸ்­லா­மாபாத் வைத்­தி­ய­சா­லைக்கு உரிய நேரத்தில் எடுத்­துச்­செல்ல முடி­யா­த­தினால் அச்­சி­றுமி உயி­ரி­ழந்தார். தேர்தல் சட்­டத்தில் அல்­லாஹ்வைப் பற்றிக் குறிப்­பி­டா­தது மன்­னிக்க முடி­யாத தெய்வ நிந்­தனை என்­பதே ரி.எல்.வை.ஆர். கட்­சியின் குற்­றச்­சாட்­டாகும். பாகிஸ்தான் நாட்டின் உத்­தி­யோ­க­பூர்வ பெயர் பாகிஸ்தான் இஸ்­லா­மிய குடி­ய­ரசு என்­ப­தாகும். பாகிஸ்­தானில் இஸ்­லா­மிய தீவி­ர­வாதக் கட்­சி­யினர் தமது கோரிக்­கை­களை வென்­றுள்­ளனர். தற்­போது ஆட்­சி­யி­லி­ருப்­பது நவாஸ் ஷெரிப்பின் கட்­சியின் அர­சாங்கம் ஆகும். நவாஸ் ஷெ ரிப் அதி­யுயர் நீதி­மன்­றத்தால் பத­வி­யி­லி­ருக்க முடி­யாது என தீர்ப்பு வழங்­கி­யதால் பத­வியை விட்டு வில­கி­விட்­டார். அவரின் கட்­சியே ஆட்­சியை நடத்­து­கின்­றது. அந்த அர­சாங்கம் சட்ட அமைச்­சரின் தவ­றுக்கு மன்­னிப்பு கோரி­யுள்­ளது. அமைச்­சரும் மன்­னிப்புக் கோரி­யுள்ளார். இந்­தத்­த­வறு திட்­ட­மி­டப்­பட்­ட­தொன்­றல்ல, தெய்வ நிந்­தனை செய்யும் எண்­ணத்தில் நிகழ்ந்­த­தல்ல. அது ஒரு தட்­டச்சு ஏற்றும் பொழுது நிகழ்ந்­த­தொரு நிர்­வா­கத்­த­வறு என சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். உறு­தி­யான தலை­மைத்­துவம் பாகிஸ்­தா­னுக்கு இன்று இல்­லாத நிலை பிரச்­சி­னை­களைக் கையாள முடி­யா­துள்­ளது. நவாஸ் ஷெரிப் கவர்ச்­சி­க­ர­மான தலைவர், உறு­தி­யா­னவர். அவரை ஊழல் குற்­றச்­சாட்டில் பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து அதி­யுயர் நீதி­மன்­றக்­கட்­டளை மூலம் அகற்­றப்­பட்டார். பாகிஸ்­தானில் இரா­ணுவ ஆதிக்கம் இன்னும் நிலை­பெற்­றுள்­ளது. பாகிஸ்தானின் அர­சி­யலைப் பொறுத்­த­வரை ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக், பாகிஸ்தான் மக்கள் கட்சி, முன்னாள் இரா­ணுவ தலை­வரும் இரா­ணுவ சதி­மூலம் ஜனா­தி­ப­தி­யா­கிய முஷாரப் ஆகி­யோரின் கட்­சிகள் பல­மான மூன்று கட்­சி­க­ளாகும். முன்னாள் சர்­வ­தேச புகழ்­மிக்க கிரிக்கட் அணித்­த­லைவர் இம்­ரான்­கானின் கட்­சியும் சில இடங்­களில் செல்­வாக்கில் உள்­ளது.

பாகிஸ்தான் வெளி­யு­றவுக் கொள்­கையைப் பொறுத்­த­மட்டில் இந்­தி­யா­வுடன் உறவைப் புதுப்­பிக்க வேண்டும், சுமுகநிலைக்கு மீண் டும் வர­வேண்டும், என்ற விட­யங்­க­ளுக்கு ­பா­கிஸ்­தான இரா­ணு­வத்­தினர் மத்­தியில் போதிய ஆத­ரவு கிடை­யாது. பிர­தா­ன­மான மூன்று கட்­சி­களுள் பத­வி­நீக்கம் செய்­யப்­பட்ட நவாஸ் ஷெரிப், இந்­தி­யா­வுடன் உறவு நிலை­களை சுமு­க­மாக்க வேண்டும் என்ற கருத்தை முன்­வைத்து செய­லாற்­றினார். இரா­ணு­வத்­து­டனும் முரண்டு போகும் போக்கை கடைப்­பி­டித்தார். அதி­யுயர் நீதி­மன்றத் தீர்ப் பில் இரா­ணுவ செல்­வாக்கும் இருப்­ப­தாக சில ஊட­கங்கள் கருத்து தெரி­வித்­துள்­ளன. இரா­ணுவம் இந்­தி­யா­வுடன் சுமுக உறவை விரும்­ப­வில்லை. பாகிஸ்தான் மக்கள் கட்சி பூட்­டோக்­க­ளினால் தலைமை தாங்­கப்­பட்­டது. பெனாஸிர் பூட்டோ செல்­வாக்­கு­மிக்க தலை­வி­யாக இருந்தார். ஹவார்ட் (அமெ­ரிக்கா) பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி கற்ற பெனாஸிர் முற்­போக்­கான கருத்­தினைக் கொண்­டவர். பெண்கள் கல்வி, பெண்கள் உரி­மைகள் விட­யத்தில் தீவி­ர­மாகச் சிந்­தித்­தவர். அவர் தற்­கொலைக் குண்­டு­தா­ரியால் 1990 இல் கொலை செய்­யப்­பட்டார். தற்­கொலைத் தாக்­கு­த­லுக்கு அல்­ஹைதா பயங்­க­ர­வாத இயக்கம் உரி­மை­கோ­ரி­யது. இருப்­பினும் பாகிஸ்­தானில் அர­சாங்­கத்­தினுள் அர­சாங்­க­மாகச் செயற்­படும் இரா­ணுவ புல­னாய்வு அமைப்­புக்­க­ளுக்கு சம்­பந்தம் இருப்­ப­தாக இன்றும் சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது. நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப் பெண் கள் கல்வி வளர்ச்­சிக்கும், பெண்­கள் உரி­மை­க­ளுக்­கா­கவும் பாகிஸ்­தானில் உழைத்தார்.வயதில் குறைந்த பெண்­ம­ணி­யாவார். அவ ரின் வயது தற்­போது 20 ஆகி­றது. இவர் பெனாஸிர் பூட்­டோவின் அர­சியல், பொரு­ளா­தார, சமூகக் கொள்­கை­க­ளினால் பெரிதும் ஈர்க்­கப்­பட்­டவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இருப்­பினும் பாகிஸ்தான் இரா­ணுவம் எவ­ரையும் ஜன­நா­ய­க ­ரீ­தி­யாக நீண்­ட­காலம் ஆட்சி செலுத்­து­வதை அனு­ம­திக்­க­வில்லை. இன்று பாகிஸ்தான் மக்கள் கட்சி இரண்­டா­வது ஸ்தானத்தில் உள்­ளது.

முன்னாள் இரா­ணுவ சர்­வா­தி­காரி முஷாரப் இரா­ணுவ மேலா­திக்­க­வாத சிந்­த­னை­யுள்­ளவர். ஜன­நா­யகம் என்­ப­தெல்லாம் வெற்­றுப்­பேச்சு, வறு­மையை ஒழிக்­காத ஜன­நா­யகம், பொரு­ளா­தார வளர்ச்­சியைத் தராத ஜன­நா­யகம் தேவையா? என்று கேட்­கின்றார்.ஜன­நா­யக ஆட்­சியா, இரா­ணுவ ஆட்­சியா என்­பது முக்­கி­ய­மல்ல. இரா­ணுவ ஆட்­சியில் பொரு­ளா­தார முன்­னேற்றம் ஏற்­பட்டால் மக் கள் ஜன­நா­யக ஆட்­சி­யா­ளர்­களைப் பற்றிச் சிந்­திக்­க­மாட்­டார்கள் என்று இரா­ணுவ ஆட்­சியை நியா­யப்­ப­டுத்­து­வ­தா­கவே முஷாரப் காணப்­ப­டு­கின்றார்.

பாகிஸ்தான் 1947 இல் இந்­தி­யா­வி­லி­ருந்து பிரிந்து சுதந்­திர நாடாகி 70 வரு­டங்கள் ஆகி­விட்­டன. இந்த 70 வருட ஆட்­சியில் இரா­ணுவ ஆட்­சியே நீண்ட காலம் அர­சாங்கம் நடத்­தி­யது. முத­லா­வது இரா­ணுவ ஆட்­சியில் அயூப்கான் 1958 இலி­ருந்து 1969 வரையும், இரண்­டா­வது இரா­ணுவ ஆட்­சி­யாளர் சியா உல் ஹக் 1978 இலி­ருந்து 1988 வரையும், மூன்­றா­வது ஆட்­சி­யாளர் பர்வேஷ் முஷாரப் 2001 இலி­ருந்து 2008 வரையும் ஆட்சி செய்­தனர். ஜன­நா­யக ஆட்சி நீடிப்­ப­தற்கு இரா­ணுவம் அனு­ம­திக்­க­வில்லை. அத்­துடன் எஸ்.ஐ.எஸ். எனும் புல­னாய்வு அமைப்பு பாகிஸ்­தானின் அர­சாங்­கத்­திற்குள் ஒரு அர­சாங்கம் என பொது­வாக நம்­பப்­ப­டு­கின்­றது. அல்­ஹைதா, ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற பயங்­க­ர­வாத இயக்­கங்­க­ளுடன் தொடர்பைப் பேணி வரு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது. ஆட்­சி­யா­ளர்கள் குறிப்­பாக ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அர­சாங்­கமோ பூட்­டோக்­களின் பாகிஸ்தான் மக்கள் கட்­சியின் ஆட்­சியோ எஸ்.ஐ.எஸ். இன் கோட்­டையை உடைக்க முடி­ய­வில்லை. இந்­தி­யா­வுடன் விரோதப் போக்கை பேணி வளர்ப்­ப­தற்கு எஸ்.ஐ.எஸ்.க்கு தொடர்பு இருப்­ப­தாக குற்­றச்­சாட்­டுக்கள் நீண்­ட­கா­ல­மாக எழுப்­பப்­படு­கின்­றது.

பாகிஸ்தான் 1947 இல் தனி­நா­டாக உத­ய­மா­கி­யது. இந்­தி­யாவைப் பிரித்து முஸ்லிம் மக்­க­ளுக்­கென பாகிஸ்தான் உரு­வாக்­கப்­பட்­டது. பாகிஸ்­தானின் அயல் நாடு­க­ளாக இந்­தியா, சீனா, ஈரான், ஆப்­கா­னிஸ்தான் ஆகி­ யவை அமைந்­துள்­ளன. சீனா­வுடன் மிக உய­ரிய உற­வு­களைப் பேணி வரு­கின்­றது. இந்­தி­யா­வுடன் மூன்று யுத்­தங்­களில் ஈடு­பட்­­டுள்­ளது. கார்கில் யுத்தம் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­ப­டாத யுத்தம். அதையும் சேர்த்தால் நான்கு யுத்­தங்கள் எனக் கூறப்­ப­டு­கின்­றது. இம்­மூன்று யுத்­தங்­க­ளிலும் 1947ஆம் ஆண்டு பிரி­வி­னையின் போது ஏற்­பட்ட யுத்­தமும், 1971ஆம் ஆண்டு பங்­கள­ாதேஷ் உரு­வான போது ஏற்­பட்ட யுத்­தமும் கோர­மா­னது. இருப்­பினும் 1971ஆம் ஆண்டு வங்­க­தேசப் பிரி­வி­னையின் போது நடை­பெற்ற யுத்­தத்­தில் வங்க தந்தை செக் முஜிபுர் ரஹ்மான் தலை­மையில் பாகிஸ்­தா­னி­ட­மி­ருந்து விடு­தலை பெறு­வ­தற்­கான முக்­தி­பா­ஹினி அமைப்பின் போராட்­டத்தில் இந்­தியா முக்­தி­பா­ஹி­னி­யுடன் இணைந்து பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக யுத்தம் புரிந்­தது. இந்த யுத்­தத்தில் பங்­கா­ள­தேஷ் எனும் புதிய நாடு உத­ய­மா­கி­யது. இந்த யுத்­தத்தின் போது பாகிஸ்தான் படைகள் சர­ண­டைந்­தன. எனினும் பாகிஸ்­தானின் ஒரு பகு­தியைப் பிரித்து புதிய நாடு உரு­வா­கு­வ­தற்கு கார­ண­மான இந்­தி­யாவின் செயற்­பாட்டை பாகிஸ்­தானில் பத­விக்கு வந்த அர­சாங்­கங்­களோ, மக்­களோ இல­கு வில் மறந்­து­வி­ட­மாட்­டார்கள். சர்ச்­சைக்­கு­ரிய பிராந்­தி­ய­மாக இருப்­பது காஷ்மீர் ஆகும்.இந்­திய கட்­டுப்­பாட்டு காஷ்மீர், ஜம்மு காஷ்மீர் எனவும் பாகிஸ்தான் கட்­டுப்­பாட்டு பகுதி, அசாத் காஷ்மீர் எனவும் அழைக்­கப்­ப­டு­கின்­றது. இந்­தப்­ பின்­ன­ணியில் தற்­போது பாகிஸ்­தானில் இடம்­பெறும் அர­சியல் நிகழ்­வுகள் பாகிஸ்­தானை இந்­தி­யா­வுடன் சமா­தான முயற்­சி­க­ளுக்கு இட்­டுச்­செல்­லு­மென எதிர்­பார்க்க முடி­யாது. செல்­வாக்­கில்­லாத மூன்று இஸ்­லா­மிய தீவி­ர­வாத இயக்­கங்கள் அர­சாங்­கத்தை அடி­ப­ணி­ய­வைத்­துள்­ளமை ஜன­நா­யக ஆட்­சியின் இருப்பை கேள்­விக்கு உள்­ளாக்­கியுள்­ளது. அர­சாங்கம் இஸ்­லா­மிய தீவி­ர­வா­தி­களை அடக்­கு­வ­தற்கு துணைப்­ப­டை­யி­னரை சேவைக்கு அழைத்­ததால் போராட்­டக்­கா­ரர்­களின் கவனம் வேறு நக­ரங்­க­ளுக்­கும்­ப­ர­வி­யது. இரா­ணுவம் இப்­பி­ரச்­சி­னையில் தலை­யி­ட­வில்லை. இரா­ணுவம் இப்­பி­ரச்­சி­னையை சமா­தா­ன­மாக தீர்க்­கு­மாறு அர­சாங்­கத்­திற்கு அறி­வுரை கூறி­யது. இச்­சம்­ப­வங்­க­ளுக்குப் பின்னால் பாகிஸ்தான் இரா­ணு­வமும் எஸ்.ஐ.எஸ். உம் உள்­ளன என நியா­ய­மான சந்­தே­கங்கள் ஏற்­பட்­டுள்­ளன. ஷெரிப்பை பத­வி­யி­லி­ருந்து அகற்றி பல­வீ­ன­மான ஆட்­சியை மேலும் நெருக்­க­டிக்­குள்­ளாக்கி இரா­ணுவம் வேடிக்கை பார்க்­கி­றது. இச்­சூழ்­நி­லை­களில் ஜன­நா­யக ஆட்­சி­யா­ளர்­ க­ளினால் இந்­திய உற­வு­களை சீர்ப்­ப­டுத்­து­வது என்­பது பற்றி சிந்­திக்­கவே முடி­யாத நிலை தோன்­றி­யுள்­ளது.

பாகிஸ்தான் இந்­திய உற­வுகள் சகஜ நிலை க்கு திரும்­பு­வ­தற்கு தடை­களும், முட்­களும் இரு­த­ரப்­பிலும் காணப்­ப­டு­கின்­றன. பாகிஸ்­தானில் அல்­ஹைதா, ஐ.எஸ்.ஐ.எஸ் வேறு இஸ்­லா­மிய தீவி­ர­வாத இயக்­கங்­க­ளுடன் இர­க­சிய தொடர்­பு­களைப் பேணு­வ­தாக கூறப்­படும் பாகிஸ்தான் புல­னாய்வு அமைப்­பான எஸ்.ஐ.எஸ். பாகிஸ்தான் இரா­ணு­வத்தின் ஒரு தரப்­பினர் பாகிஸ்தான் தரப்பில் தடைக்­கற்­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்­றனர். அதே­போன்று உலகின் மாபெரும் ஜன­நா­யக நாடு என்று கூறப்­படும் இந்­தி­யாவின் மதச்­சார்­பற்ற அர­சி­ய­ல­மைப்பை வரைந்த மேதை டாக்டர். அம்­பேத்கர் எதிர்­பார்த்த இந்து–முஸ்லிம் ஒற்­றுமை இன்­னமும் கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளது. உலகப் பிர­சித்தி பெற்­றதும் இந்­தி­யா­வுக்கு பெரும் மர­பு­ரிமைச் சொத்­தான தாஜ்­ம­ஹாலை இந்து அடிப்­ப­டை­வா­திகள் தடை­செய்ய வேண்டும் என்றும் இது முஸ்லிம் கலா­சா­ரத்தை வெளிப்­ப­டுத்­து­கின்­றது என்று கூக்­கு­ர­லி­டு­வதும், இவ்­வ­டிப்­ப­டை­வா­திகள் பார­திய ஜனதா கட்­சியைச் சேர்ந்­த­வர்கள் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது. அது­மட்­டு­மல்ல அண்­மையில் தயா­ரித்து வெளி­யி­டப்­பட்ட பத்­மா­வதி எனும் ஹிந்தி திரைப்­படம் இதே அடிப்­ப­டை­வா­தி­க­ளி­ட­மி­ருந்து பலத்த எதிர்ப்பைச் சம்­பா­தித்­துள்­ளது. இந்தப் பட சஞ்சே லீலா பஞ்­சலி, பிர­தம கதா­பாத்­திரம் ஏற்று நடித்த பிர­பல நடிகை தீபிகா படு­கோனை­ தண்­டிக்க வேண்டும் என்றும் ஆக்­ரோஷமாகத் தெரி­வித்­துள்­ளனர். பத்­மா­வதி இள­வ­ர­சியின் கதை 15ஆம் நூற்­றாண்டில் மாலிக் மொஹமட் ஜயசி என்­ப­வ­ரது கவிதைப் படைப்­பாகும். இந்த இள­வ­ரசி ஒரு அழகு தேவதை . இலங்கை சிங்­கள அரசன் கந்­தர்வ செனின் மகள் என்று கூறப்­ப­டு­கின்­றது. சித்தூர் நாட்டு அர­சனைக் கரம்­பி­டித்தாள். முஸ்லிம் மன்னன் சுல்தான் அல­வுதீன் ஹைச்சி, இரா­வணன் சீதையைக் கண்­ணுற்­ற­து­போல பத்­மா­வதி மேல் கண் வைத்தான். சுல்­தா­னி­ட­மி­ருந்து தப்­பு­வ­தற்­காக தனது கண­வ­னுடன் உடன் கட்­டை­யே­றினாள் என்­பது தான் கதை.இக்­கதை தமி­ழில்­சித்தூர் ராணி பத்­மினி என்ற பெய­ரில்­தி­ரைப்­ப­ட­மாக ெவளி­வந்­தது. பத்­மா­வ­தி­யாக நடித்த தீபிகா படு­கோ­ணேயின் தலையைக் கொண்டு வரு­பவர்­க­ளுக்கு சன்­மானம் எனவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான கொடு­மை­யா­னதும், கடு­மை யா­ன­து­மான சிந்­த­னை­க­ளைக்­கொண்ட இந்து அடிப்­படைத் தீவி­ர­வா­திகள் இந்­தியத் தரப்பில் பாகிஸ்தான் இந்­திய உறவை சகஜ நிலைக்குக் கொண்­டு­வர தடை­யாக உள்­ளனர் என்­பது அர­சியல் அறி­ஞர்­களின் கருத்­தாகும்.

இந்­திய – பாகிஸ்தான் உறவுநிலைகளில் இவ்வாறான பல சிக்கல்கள் உள்ளன. இருப்பினும் இந்திய – பாகிஸ்தான் மக்க ளில் பெரும் பகுதியினர் உறவுகள் சுமுக நிலைக்கு வருவதற்கு தடையாக இருக்கப் போவதில்லை. ஆனால் மக்களை தூண்டி விடும் பொய்ப் பிரசாரங்களும் வீராவேச உணர்ச்சிப்பேச்சுகளும் மக்களைக் குழப்பிக் கொண்டிருப்பது ஒரு பாதகமான நிலையாகக் கருதப்படுகின்றது.

சோவியத் யூனியன் உடைவிற்குப் பின் பனிப்போர் 1990 களில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு உலக ஒழுங்கில் பல மான நிலையில் மாற்றங்கள் ஏற்பட்ட பின்ன ரும் இந்திய - பாகிஸ்தான் உறவுகள் சகஜ நிலைக்குத் திரும்பவில்லை. சென்ற வரு டம் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த சார்க் உச்சிமாநாடு நடைபெறாததற்கு இந்திய - – பாகிஸ்தான் முரண்பாடுகளே காரணமாக இருந்தது. வேறு வார்த்தைகளில் குறிப்பிட் டால் பிராந்திய ஒத்துழைப்பு இன்னோ ரன்ன பொருளாதார நலன்கள், மக்களுக்கிடை யேயான அதிகரித்த தொடர்புகள், பிராந் தியத்தினுள் விசா இன்றி பயணம் செய் தல் போன்ற பெரிய இலக்குகளை சார்க் அமைப்பு அடைய முடியாமைக்கு இந்திய –- பாகிஸ்தான் தகராறே காரணமாகும். தீவிரவாத கொள்கைகளை தூக்கிப் பிடிக் கும் தகறீக் லபீக் யா றசூல் அல்லா (ரி.எல்.வை.ஆர்.) எனும் கட்சியும் அதனுடன் இணைந்து இன்னும் இரண்டு சிறிய அமைப்பு களையும் சமாளிக்க முடியாத அரசாங்கம் பாரிய சிக்கலான இந்திய –- பாகிஸ்தான் முரண்பாடுகளை சீர்படுத்த ஆக்கபூர்வமான இராஜதந்திர நகர்வுகளை எடுத்துச் செல்ல முடியுமா என்ற கேள்வி தோன்றியுள்ளது.        

ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம்
(இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.)

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-12-02#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.