Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புட்டினுடன் பேசுவேன்...தேயிலை இறக்குமதி தடை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பு

Featured Replies

புட்டினுடன் பேசுவேன்

G26-a300beeaec320e736577f667961ff26ba19c0c13.jpg

 

தேயிலை இறக்குமதி தடை விவகாரம்  தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பு 
(அப்­புத்­தளை நிருபர்)

தேயிலை ஏற்­று­மதி நிறு­வ­ன­மொன்றின் கவ­ன­யீ­னத்தின் கார­ண­மாக எமது நாட்டு தேயி­லையை ரஷ்யா தற்­கா­லி­க­மாக ஏற்க மறுத்­தி­ருக்­கி­றது. இது­வொரு தற்­கா­லிக விடயம் மாத்­தி­ர­மே­யாகும்.

ரஷ்­யா­வுக்­கான தேயிலை ஏற்­று­மதி   விவ­கா­ரத்தில் எழுந்­துள்ள அசௌ­க­ரிய சூழலை மாற்­றி­ய­மைப்­ப­தற்கு சடு­தி­யான நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்ளேன். அந்த வகையில் ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமீன் புட்­டினை சந்­தித்து சுமு­க­மான பேச்­சு­வார்­த­தை­யொன்றை மேற்­கொள்­வ­தற்கு அமைச்­சர்­க­ளான நவீன் திஸா­நா­யக்க மற்றும் ரிசாட் பதி­யுதீன் ஆகி­யோரை எனது பிர­தி­நி­தி­க­ளாக ரஷ்­யா­வுக்கு அனுப்­பி­வைக்­கிறேன். அத்­துடன் ரஷ்ய ஜனா­தி­பதி புட்­டி­னுடன் பேசு­வ­தற்கு தயா­ராக இருக்­கிறேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.  

48 வரு­டங்­களின் பின்னர் தங்­க­ளது தொகு­தி­யூ­டாக உள்ளுர் பிர­தி­நி­தி­களை தேர்ந்­தெ­டுக்கும் வாய்ப்பு மக்­க­ளுக்கு கிட்­டி­யுள்ள இச்­சந்­தர்ப்­பத்தில் நாட்டு மக்கள் வாய்ப்பை சரி­யாக பயன்­ப­டுத்தி ஒழுக்­க­முள்­ள­வர்­க­ளையும் மோச­டி­யற்­ற­வர்­க­ளையும் தேர்ந்­தெ­டுக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கிறேன் என்றும் அவர் கூறினார்.

இலங்கை தொழி­லாளர் காங்­கி­ர­ஸினால் ஒழுங்கு செய்­யப்­பட்ட ஐக்­கிய மக்கள் சதந்­திர முன்­ன­ணியின் முத­லா­வது தேர்தல் பிர­சா­ரக்­கூட்டம் அப்­புத்­த­ளையில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்­றது. காங்­கி­ரஸின் உப தலை­வரும் ஊவா மாகாண அமைச்­ச­ரு­மான செந்தில் தொண்­டமான் தலை­மையில் நடை­பெற்ற இக்­கூட்­டத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

சிவில் விமான போக்­கு­வ­ரத்து அமைச்சர் நிமால் ஸ்ரீ பால டி சில்வா, ஊவா மாகாண ஆளுநர் சட்­டத்­த­ரணி ஜய­சிங்க, ஊவா மாகாண முத­ல­மைச்சர் சாமர சம்பத் தச­நா­யக்க, மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான ஆ.சிவ­லிங்கம், ஆ.கணே­ச­மூர்த்தி, முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டாக்டர் புஷ்­ப­கு­மார மற்றும் இ.தொ.கா. ஆலோ­சகர் டி.வி.சென்னன், இணைப்­பா­ளர்­க­ளான எஸ்.அசோக்­குமார், கலை சகா­தேவன் உள்­ளிட்ட இ.தொ.கா. பிர­மு­கர்கள், அப்­புத்­தளை நகர சபை வேட்­பா­ளர்கள், ஹல்­து­முல்லை பிர­தேச சபை வேட்­பா­ளர்கள், கட்சி ஆத­ர­வா­ளர்கள் கலந்­து­கொண்­டனர்.

இங்கு ஜனா­தி­பதி தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

 உள்­ளூ­ராட்சி சபைத் தேர்தல் கூட்­டத்தின் முத­லா­வது கூட்­ட­மாக உழைக்கும் மக்கள் மத்­தியில் கலந்­து­கொள்ள கிடைத்த வாய்ப்­பை­யிட்டு மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன். இக்­கூட்­டத்­தினை ஒழுங்கு செய்த அமைச்சர் செந்தில் தொண்­ட­மா­னுக்கும் இ.தொ.கா. விற்கும் வாழ்த்­துக்­களை தெரி­வித்து கொள்­கின்றேன். இ.தொ.கா. வின் தலைவர் சௌமிய மூர்த்தி தொண்­டமான் பெருந்­தோட்ட மக்­களின் தேவை­க­ளையும் கோரிக்­கை­க­ளையும் வரப்­பி­ர­சா­தங்­க­ளையும் பெற்று கொடுப்­ப­தற்­காக தன்னை முழு­மை­யாக அர்ப்­ப­ணித்­தவர். ஆட்­சியில் இருந்த அனைத்து அர­சாங்­கத்­தோடும் இணைந்து பெருந்­தோட்ட மக்­களின் அபி­லா­சை­களை பூர்த்தி செய்­தவர். அதன் கார­ண­மா­கத்தான் அண்­மையில் இலங்­கைக்கு வந்­தி­ருந்த பாரத பிர­தமர் நரேந்­திர மோடி நோர்­வூட்டில் தன­து­ரையில் எனது முன்­னி­லையில் தொண்­ட­மானின் சேவையை பற்றி சுட்­டிக்­காட்­டினார். அந்த வகையில் அனை­வ­ருக்கும் அது பெருமை அளிக்கும் விடயம் என்­ப­தோடு இ.தொ.கா. தொடர்ந்தும் எமது கட்­சி­யுடன் ஒத்­து­ழைத்து வரு­வது எமக்கு பல­மா­கவும் இருக்­கி­றது.

2015 ஆம் ஆண்டில் நான் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­ற­போது விகி­தா­சார முறை­யினை மாற்றி தொகு­தி­வா­ரி­யான தேர்தல் முறை­யினை கொண்டு வருவேன் என்ற வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்தேன். அன்று என்னால் கொடுக்­கப்­பட்ட வாக்­கு­றுதி இன்று நிறை­வேற்­றப்­ப­டு­கின்­றது.

48 வரு­டங்­க­ளுக்கு பின்னர் கிராம சபை, நகர சபை ரீதி­யாக தெரி­வுகள் இடம்­பெற்று கிரா­மத்­திற்கும் ஊர்­க­ளுக்கும் தேவை­யான உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை ஏற்­ப­டுத்தல், பாதை, பாலம் அமைத்தல், தண்ணீர் வச­தி­களை பெற்­றுக்­கொ­டுத்தல், அடிப்­படை தேவை­களை பூர்த்தி செய்தல் போன்ற பணி­களை செய்­யக்­கூ­டி­ய­வர்­களை தெரிவு செய்யும் தேர்­தலே நடை­பெ­ற­வுள்­ளது. இந்த தேர்தல் மூல­மாக ஒரு­வரை ஒருவர் அவ­தூறு செய்து நல்­லாட்­சிக்கு பாதிப்பு வராமல் பார்த்து கொள்ள வேண்­டி­யது அனை­வ­ரதும் பொறுப்­பாகும்.

தொகு­தி­வாரி தேர்தல் முறையின் மூல­மாக வாக்­க­ளிக்கும் உரிமை மக்­க­ளுக்கு கிடைத்­தி­ருப்­பதன் ஊடாக இலங்கை அர­சியல் வர­லாற்றில் தாம் வாழ்­கின்ற பிர­தே­சத்­திற்கு சேவை செய்­யக்­கூ­டிய உள்ளூர் தலை­வர்­களை நேர­டி­யாக தெரிவு செய்யும் வாய்ப்பு 48 வரு­டங்­களின் பின்னர் எட்­டி­யுள்­ளது. இதனை பிர­தேச மக்கள் சரி­யான முறையில் பயன்­ப­டுத்தி பய­ன­டைய வேண்டும் செய்­யக்­கூ­டி­ய­வர்­க­ளையும் குற்ற செயல்­க­ளுக்கு உட்­ப­டா­த­வர்­க­ளையும் மக்கள் தமது பிர­தி­நி­தி­க­ளாக தெரி­வு­செய்ய வேண்­டி­யது அனை­வ­ரி­னதும் பொறுப்பும் கட­மை­யு­மாகும்.

கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையும் மாகாண ஆட்­சியும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் ஆட்­சியும் முன்­னைய ஜனா­தி­ப­திக்கு கிடைத்­தி­ருந்த போதிலும் என்னில் நம்­பிக்கை வைத்து மக்கள் என்னை தெரிவு செய்­தார்கள்.

13 வரு­டங்­க­ளாக ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் செய­லா­ள­ராக கட­மை­யாற்­றினேன். கடந்த உள்­ளூ­ராட்சி சபை­களில் இருந்­த­வர்கள் நூற்­றுக்கு எண்­பது வீத­மா­ன­வர்கள் பாலியல் வன்­முறை, கொலை அச்­சு­றுத்தல், போதைப்­பொருள் பாவனை போன்ற இன்­னோ­ரன்ன குற்­றங்­க­ளுக்­காக நீதி­மன்றம் சென்­ற­வர்கள் எனலாம்.

யாரை வெற்­றி­பெற செய்­வது, யாரை தோல்­வி­ய­டைய செய்­வது என்­ப­தல்ல முக்­கியம். 15 வரு­டங்­க­ளாக நாட்டை பாழ­டித்­த­வர்­களை இனங்­காண்­பதே முக்­கி­ய­மாகும். முன்னாள் தலை­வர்­க­ளான எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்க, ஜே.ஆர். ஜய­வர்­தன, ரண­சிங்க பிரே­ம­தாஸ போன்­ற­வர்கள் நகர சபை பிர­தி­நி­தி­க­ளாக இருந்து பிர­த­மர்­க­ளா­கவும் ஜனா­தி­ப­தி­க­ளா­கவும் வெளி­யே­றினர். எனது வயது நிமித்தம் அந்த வாய்ப்பு என்னை சேர­வில்லை.

எமது நாட்டில் புத்­தி­ஜீ­விகள், கல்­வி­மான்கள், அறி­வா­ளிகள், விஞ்­ஞா­னிகள் இருக்­கின்­ற­போதும் ஒழுக்­க­முள்ள அர­சி­யல்­வா­தி­களை உரு­வாக்­கு­வ­தற்கு இந்த தேர்தல் ஒரு முன்­னி­லை­யான வெடி முழக்­க­மாக அமை­கி­றது.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி சார்பில் கை சின்­னத்­திலும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி சார்பில் வெற்­றிலை சின்­னத்­திலும் இலங்­கையின் 307 தொகு­தி­களில் போட்டி இடு­வ­தோடு பதுளை மாவட்­டத்தில் 9 இடங்­களில் இ.தொ.கா.வுடன் இணைந்து போட்­டி­யி­டு­கின்றோம்.

இந்­நாட்டின் பொரு­ளா­தா­ரத்­திற்கு பாரிய பங்­க­ளிப்­பினை வழங்கி வரு­ப­வர்கள் பெருந்­தோட்ட மக்­களே என்­ப­தனை எனது மன­சாட்­சி­யோடு பதித்­துள்ளேன். இந்­நாட்டில் வாழ்­கின்ற சிங்­கள, தமிழ், முஸ்லிம், மலே, பேகர் ஆகிய அனை­வ­ரது சக வாழ்­விற்கும் நான் எல்­லோரும் ஒன்­றி­ணைவோம்.

தேயிலை ஏற்­று­ம­திக்கு இன்று பாரிய சவால் ஏற்­பட்­டுள்­ளது. தனியார் நிறு­வனம் ஒன்­றினால் ஏற்­று­மதி செய்­யப்­பட்ட தேயி­லைப்­பெட்டி ஒன்றில் ஒரு­வகை வண்டு காணப்­பட்­டதால் ரஷ்யா நமது தேயி­லையை தற்­கா­லி­க­மாக ஏற்க மறுத்­துள்­ளது.

இது தொடர்பில் யாரும் அஞ்சத் தேவை­யில்லை. குறித்த ஏற்­று­மதி நிறு­வனம் தொடர்­பான முழு­மை­யான விசா­ர­ணைகள் தொடர்­வ­துடன் அதன் தவ­றுகள் நிரூ­ப­ண­மாகும் பட்­சத்தில் அந்த நிறு­வ­னத்தின் ஏற்­று­மதி அனு­ம­திப்­பத்­திரம் இரத்து செய்­யப்­படும் என்­பதை கூறி­வைக்­கிறேன்.

அது­மாத்­தி­ர­மன்றி அமைச்­சர்­க­ளான நவீன் திசா­நா­யக்க, ரிசாட் பதூர்தீன் ஆகியோர் நிலை­மையை தெளி­வுப்­ப­டுத்­து­வ­தற்­கென எனது பிர­தி­நி­தி­க­ளாக ரஷ்­யா­விற்கு செல்­கி­றார்கள். நட்பு நாடான ரஷ்­யாவின் ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்­டி­னுக்கு தனிப்­பட்ட கடிதம் ஒன்­றினை அனுப்பி இது பற்­றிய தீர்­மா­னத்தை பரி­சீ­லனை செய்து அதனை மாற்­றிக்­கொள்­ளு­மாறு வேண்­டுகோள் விடுக்­க­வுள்ளேன்.

ஓய்வு நிலை அரச ஊழி­யர்கள் சம்­பந்­த­மாக ஊட­கங்கள் வாயி­லாக அறிந்து கொண்டேன். அவர்­க­ளது கோரிக்­கையை நிறை­வேற்­ற­வில்லை என என் மீது குற்றம் சுமத்­தி­யி­ருந்­தார்கள்.

எனினும் இன்னும் ஒரு­வார காலத்­திற்குள் அவர்­க­ளது பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­படும். நான் பதவி ஏற்­ற­போது நம்மை முறைத்து பார்த்த நாடுகள் அனைத்தும் இன்று நட்பு நாடுகளாக மாறியுள்ளன. இந்த உறவை நாம் தொடர்ந்தும் பாதுகாத்து தக்க வைத்துக்கொள்ளவேண்டும்.

மேலும் ஒழுக்கமுள்ள உள்ளூர் தலைவர்களை, இந்த உள்ளூராட்சி தேர்தல் மூலமாக தேர்வு செய்வோம். அமைச்சர் நிமால் ஸ்ரீபால த சில்வா பதுளைக்கு மாத்திரம் அல்லாமல் நாட்டிற்கு கிடைத்த நல்ல தலைவர். அவரைப் போன்றே ஊவா மாகாண இளம் முதலமைச்சரும் அவருடன் சேர்ந்து மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானும் உங்கள் பிரதேசத்தில் தலைமையேற்று சேவையாற்றி வருகின்றார்கள்.

அவர்களின் கரங்களை பலப்படுத்துவதுடன் எதிர்வரும் தேர்தலில் வெற்றிலை சின்னத்தையும் கை சின்னத்தையும் வெற்றிபெற செய்வதற்கு நாம் அனைவரும் கை கோர்ப்போம் என்றார்.

இக்கூட்டத்தில் அப்புத்தளை மற்றும் ஹல்துமுல்லை பிரதேச சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களான அசோக்க உதயகுமார, சி.பி.சுகுமுாரன் நாயர் ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டனர்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-18#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.