Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திரைவிமர்சனம்: உள்குத்து

Featured Replies

திரைவிமர்சனம்: உள்குத்து

திரைவிமர்சனம்: உள்குத்து
   
நடிகர்கள் தினேஷ், நந்திதா, ஸ்ரீமன், பாலசரவணன், சரத் லோகிதஸ்வா, ஜான் விஜய், சாயா சிங், திலிப் சுப்பராயன்
ஒளிப்பதிவு பி.கே. வர்மா
   
இசை ஜஸ்டின் பிரபாகரன்
   
இயக்கம் கார்த்திக் ராஜு

திருடன் போலீஸ் படத்தை இயக்கிய கார்த்திக் ராஜுவின் இரண்டாது படம் இது. திருடன் போலீஸ் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த தினேஷ்தான் இந்தப் படத்திற்கும் கதாநாயகன். தினேஷ் நடித்த அட்டகத்தி படத்தில் நாயகியாக நடித்த நந்திதா இந்தப் படத்தின் நாயகி.

முட்டம் மீனவக் கிராமம். கடற்கரையில் தனியாக அமர்ந்திருக்கும் ராஜாவை (தினேஷ்) தன் வீட்டிற்கு அழைத்துவந்து வைத்துக்கொள்கிறார் சுறா சங்கர் (பால சரவணன்). அவரது தங்கை கடலரசி (நந்திதா). அந்தப் பகுதியைச் சேர்ந்த காக்காமணியும் (சரத்) அவரது மகன் சரவணனும் (திலீப் சுப்பராயன்) கந்துவட்டி கொடுத்து, அதைக் கடுமையாக வசூல் செய்பவர்கள். எதிர்ப்பவர்களைக் கொலைசெய்பவர்கள். எதிர்பாராமல் அவர்களது ஆள் ஒருவரை அடித்துத் துவைக்கிறார் ராஜா. அதற்குப் பிறகு சரவணனையும் அடிக்கிறார். பிறகு தந்திரமாக காக்கா மணியுடன் நெருங்கி, சரவணனுடன் நண்பனாகிறார். பிறகு அவரைக் கொல்கிறார். பார்க்க சாதாரணமாக இருக்கும் ராஜாவின் பின்னணி என்ன, அவர் ஏன் இதுபோலவெல்லாம் செய்கிறார் என்பது மீதிக் கதை.

இந்தப் படத்தின் பாராட்டத்தக்க அம்சம் படம் துவங்கியவுடனேயே பாடல், தேவையில்லாத காட்சிகள் எதையும் வைக்காமல் நேரடியாக கதைக்கு வந்துவிடுவதுதான். துவக்கத்தில் மட்டுமல்ல, படம் முழுவதிலுமே தேவையில்லாத காட்சிகள் மிகக் குறைவு.

திரைவிமர்சனம்: உள்குத்து

பாடல்களும் சில வரிகளோடு முடிந்துவிடுகின்றன என்பது பெரிய ஆறுதல். படம் தொடர்ந்து மையக் கதையையே தொடர்ந்து செல்கிறது. சாதாரணமாகத் தோற்றமளிக்கும் ராஜா ஏன் இப்படிச் செய்கிறார் என்ற கேள்வியை மெல்ல மெல்ல எழுப்பி, இடைவேளையில் அதை உச்சகட்டத்திற்கும் கொண்டுவருகிறார் இயக்குனர்.

ஆனால், படத்தின் பிற்பாதியில் சில சொதப்பல்கள் இருக்கின்றன. சரவணனை போலீஸ் சுட்டுக்கொன்றுவிட்டதாக அவரது தந்தை காக்காமணி நினைக்கும் நிலையில், தானாகப் போய் அவர் போலீஸால் சாகவில்லையென ராஜா சொல்லும்போது, அதற்கு ஏதாவது காரணம் இருக்குமெனத் தோன்றுகிறது. ஆனால், அப்படி எந்தக் காரணமும் முடிவில் இல்லை.

படத்தின் துவக்கத்தில் சுறா சங்கராக வரும் பால சரவணனின் நகைச்சுவை பெரிதாக எடுபடாதது படத்தின் பலவீனங்களில் ஒன்று. ஆனால், பிற்பாதியில் அதைச் சற்றுச் சரிசெய்கிறார் அவர். அதேபோல அவர் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்யும் காட்சிகளில் சிறிதும் நகைச்சுவையில்லை. அது படத்தின் வேகத்தைக் குறைக்கிறது.

திரைவிமர்சனம்: உள்குத்து

கதாநாயகனாக நடித்திருக்கும் தினேஷ் படம் நெடுக, மிகச் சுமாராகவே நடிக்கிறார். பல இடங்களில் எந்தவித பாவங்களையும் காட்டாமல் நிற்கிறார். முதல் படத்தில் அவர் தத்தித்தத்தி நடந்தது, அந்தக் கதைக்குப் பொருத்தமாக இருந்தது. ஆனால், இத்தனை படங்களுக்குப் பிறகும் அவர் அதேபோல நடப்பது, குறிப்பாக இந்தக் கதைக்கு சற்றும் பொருந்தவில்லை.

இந்தப் படத்தின் நாயகியாக வரும் நந்திதாவுக்கு படத்தில் பெரிதாக வேலையில்லை என்றாலும் தோன்றும் இடங்களில் சிறப்பாக நடிக்கிறார். அதேபோலத்தான் படத்தில் வரும் ஜான் விஜய், சரத் லோகிதஸ்வா, திலீப் சுப்பராயன், ஸ்ரீமன் ஆகியோரும் பொருத்தமான பாத்திரத்தில் வந்துசெல்கின்றனர்.

ஒரு த்ரில்லர் - ஆக்ஷன் படத்திற்கு உரிய கதையை கொண்ட இந்தப் படம் மிக விறுவிறுப்பாக நகர்ந்திருக்க வேண்டும். ஆனால், பல இடங்களில் ஒரு தொலைக்காட்சி தொடர் பாணியிலான காட்சியமைப்புகள் உறுத்துகின்றன. இதுதான் இந்தப் படத்தின் முக்கியமான பிரச்சனை.

http://www.bbc.com/tamil/arts-and-culture-42497226

  • தொடங்கியவர்

சுறான்னா சும்மா இல்லடா..! - உள்குத்து விமர்சனம்

 
 

தன்னைக் கொலைசெய்ய ஸ்கெட்ச் போடும் கூட்டத்துக்குள் இணையும் ஹீரோ பற்றிய கதைதான் `உள்குத்து'. `திருடன் போலீஸ்' படத்துக்குப் பிறகு இணைந்திருக்கும் தினேஷ் - கார்த்திக் ராஜூ கூட்டணி, இந்தமுறை கையில் எடுத்திருப்பது ஆக்‌ஷன். ஆனால், அது எடுபடுகிறதா?

உள்குத்து

 
 

வீட்டைவிட்டு வெளியேறி மீனவக் குப்பத்துக்குள் வந்த ராஜாவுக்கு (தினேஷ்) தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார் `சுறா' சங்கர் (பாலசரவணன்). பாலசரவணின் தங்கை கடலரசியைப் (நந்திதா) பார்த்ததும் தினேஷுக்குக் காதல். இதற்கிடையில் ஏரியாவில் பெரிய தாதாவான `காக்கா' மணி (சரத் லோஹித்சவா) ஆட்களுடன் பிரச்னை, சண்டை என இருக்கிறார் தினேஷ், ஒருகட்டத்தில் அவரது மகன் சரவணனை (திலீப் சுப்பராயண்) அடித்துவிடுகிறார். இதனால் கோபமாகி, தினேஷை கொலை செய்யத் திட்டமிடும் சரத், அவரைத் தன் கூட்டத்தில் சேர்த்துக் கொள்கிறார். அது ஏன், தினேஷ் யார், `சுறா' சங்கர்ன்னா சும்மாவா போன்ற விஷயங்களைச் சொல்கிறது `உள்குத்து'

மாஸ் ஹீரோ நடிப்பதற்கு ஏற்ற கதைக் களம், அதற்கு ஏற்ப இரண்டு ஸ்லோ மோஷன் சண்டைக் காட்சிகளும் உண்டு, அதை தன்னால் முடிந்த அளவு சரியாகச் செய்ய முயற்சி செய்திருக்கிறார் தினேஷ். ஆனால், இன்னும் விறைப்புடன் திரியும் உடல்மொழியை மாற்றாமல் இருப்பதும், எமோஷனல் காட்சிகளில் திணறுவதும் அப்படியே தெரிகிறது. படம் முழுக்க வரும் கதாபாத்திரம், நகைச்சுவைக்கான நிறைய இடம் இருந்தும் அதை முழுமையாப் பூர்த்தி செய்யாமல் வந்து போகிறார் பாலசரவணன். "சுறா சங்கர்ன்னா சும்மாவா" என்பதை மட்டும் பெரிய காமெடி என நினைத்து சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் ஒருகட்டத்துக்கு மேல் வெறுப்பேற்றுகிறது. முந்தைய பல படங்களில் நடித்த அதே கதாபாத்திரம்தான் என்பதால், அதே டேய்ய்ய்ய், அதே வெட்டுங்கடாஆஆஆஆ என வழக்கமான நடிப்பைத் தந்திருக்கிறார் சரத். திலீப் சுப்பராயண் முதல் படம் எனத் தெரியாதபடி மிரட்டலான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நந்திதாவுக்கு, கையில் ஸ்டார் டாட்டூ போட்ட, மீனவப் பகுதியைச் சேர்ந்த பெண் வேடம். மீன் குழம்பு வைத்து பரிமாறுகிறார். கூடவே பாடல்களின் மாண்டேஜ் காட்சிகளில் வந்து போகிறார், ஹீரோவின் ஃப்ளாஷ் பேக்கை அழுதுகொண்டே கேட்கிறார். மற்றபடி கதையில் அவரது கதாபாத்திரத்திற்கு வேறு எந்த வேலையும் கிடையாது. கொஞ்சநேரமே வந்தாலும் ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமன் நடிப்பு சொல்லிக்கொள்ளும் படியாய் இருந்தது

Ulkuthu

நடிகர்களை நடிக்கவைப்பதில் இயக்குநர் கார்த்திக் ராஜூ எவ்வித மெனக்கடலும் காட்டவில்லை என்பது தெரிகிறது. கூடவே நடிகர்கள் எத்தனை சிறப்பாக நடித்திருந்தாலும், திரைக்கதையும் அதற்கான கதாபாத்திரங்களும்  பலவீனமாக இருப்பதால் எல்லாமே வீண்தான்.  குப்பம் என்றால் அது எந்த ஊரில் இருக்கிறது? அவர்கள் பேசும் மொழியில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை எளிதில் யூகித்துவிடக் கூடியதாக இருப்பதால் பரபரப்பான காட்சியாக இருக்க வேண்டியவைகூட பார்வையாளர்களுக்குக் கொட்டாவி வரவைக்கின்றன. தினேஷ், நந்திதா இருவருக்குள்ளும் காதல் வருவதற்கான காரணங்கள் எல்லாம் ஓவரோ ஓவர். சரத், தினேஷை மன்னித்து தன் கூட்டத்தில் சேர்ப்பதற்கான காரணம், தினேஷுன் முன் கதை எனக் கதைக்கு மிக முக்கியமான இரண்டு புள்ளிகளில் அழுத்தம் எதுவும் இல்லை என்பது படத்தை மிக பலவீனமாக்குகிறது. பிரதான பிரச்னை தாண்டி படத்தில் இடம்பெறும் காதல் காட்சியும், காமெடி காட்சியும் சிறப்பாக இல்லாததால் சோர்வடைய வைக்கிறது. படத்துக்குத் தேவையான ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார் பி.கே.வர்மா. திலீப் சுப்பராயன் வடிவமைத்திருந்த சண்டைக் காட்சிகள், ஓரளவு நம்பும்படி இருந்தது படத்துக்கு வலு.  குறிப்பாக சரத் இடத்தில் நடக்கும் கபடி சண்டைக்காட்சி சிறப்பு. பாடல்கள் நன்றாக இருந்தாலும், படத்துக்கு பலமாக அமையே வேண்டிய பின்னணி இசையில் சறுக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். 

 

 

படத்தின் இறுதியில் வன்முறை தவறு என ஹீரோ பேசுவது ஓகே. ஆனால், "டேங்க்ல தண்ணியில்ல மோட்டர் போடு" என்பது போல, "கத்தி எடுத்தா மீன் வெட்டு, கட்டை எடுத்தா துடுப்புப் போடு" என மிக விட்டேத்தியாக அட்வைஸ் போடுவதெல்லாம் அபத்தம். அதை சொல்வதற்குண்டான எந்த பலமும் படத்துக்கு இல்லாததால், இன்னுமொரு வசனமாக வந்து போகிறது. 

 

நல்ல ஆக்‌ஷன் படத்துக்குத் தேவையான களத்தை எடுத்துவிட்டு, படத்தின் உணர்வுகளை ஆடியன்ஸுக்குக் கொடுக்காததால் உள்குத்து வெறும் ஊமைக் குத்தாகவே முடிகிறது.

https://cinema.vikatan.com/movie-review/112210-ulkuthu-movie-review.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.