Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாமதம் வேண்டாம்

Featured Replies

தாமதம் வேண்டாம்

 

ஐக்­கி­ய ­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் பெப்­ர­வ­ரி ­மாதம் 26 ஆம்­ தி­கதி முதல் மார்ச் மாதம் 23 ஆம்­ தி­க­தி­வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் இலங்கை தொடர்­பாக இரண்டு தினங்கள் விவா­தங்கள் நடை­பெ­ற­வுள்­ளன. பூகோள காலக்­கி­ரம மீளாய்வு சம்­பந்­த­மான இலங்கை குறித்த விவாதம் மார்ச் மாதம் 16ஆம் திக­தியும் இலங்கை மனித உரி­மைகள் நிலை­மைகள் மற்றும் ஐ.நா. தீர்­மானம் குறித்த விவாதம் 21ஆம் திக­தியும் ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நடை­பெ­ற­வுள்­ளன. இதன்­போது ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை ஆணை­யாளர் இலங்கை குறித்த அறிக்­கையை சமர்ப்­பிக்­க­வுள்­ள­துடன் சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களும் இலங்கை தொடர்­பாக அறிக்­கை­களை தாக்கல் செய்­ய­வுள்­ளன. அத்­துடன் இலங்­கையும் தனது அர்ப்­ப­ணிப்பு தொடர்­பாக ஜெனிவா மனித உரிமை பேர­வையில் விட­யங்­களை முன்­வைக்­க­வுள்­ள­துடன் அதற்­கான தயார்­ப­டுத்­தல்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றது.

அத்­துடன் இம்­முறை ஜெனிவா கூட்டத் தொடரில் பல்­வேறு தரப்பு பிர­சா­ரங்கள் இடம்­பெ­ற­வுள்­ளன. குறிப்­பாக அர­சாங்கம் ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டத் தொட­ருக்கு உயர்­மட்டத் தூதுக்­கு­ழுவை அனுப்ப உள்­ளது. அந்த தூதுக்­கு­ழு­வா­னது 2015 ஆம் ஆண்டு ஐ.நா. பிரே­ர­ணையை இலங்கை எவ்­வாறு அமுல்­ப­டுத்­தி­ வ­ரு­கின்­றது என்­பது தொடர்­பான விப­ரங்­களை முன்­வைக்­க­வுள்­ள­துடன் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் அர­சாங்கம் எந்­த­ள­வு­தூரம் அர்ப்­ப­ணிப்­புடன் உள்­ளது என்­பதை வெளிக்­காட்­ட­வுள்­ளது. அதே­வேளை பாதிக்­கப்­பட்ட மக்­களின் சார்பில் தமிழர் தரப்பு இந்­தக்­கூட்டத் தொடரில் கலந்து கொண்டு தமக்கு இது­வரை நீதி கிடைக்­காமை தொடர்பில் சர்­வ­தேச சமூ­கத்­திற்கு தெளி­வு­ப­டுத்த உள்­ளனர். அதே­போன்று தென்­னி­லங்கை தரப்பும் இரா­ணு­வத்­திற்கு ஆத­ர­வாக ஜெனிவா மனித உரிமை பேர­வையில் இம்­முறை முகா­மிட்டு பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்க உள்­ளது. அந்­த­வ­கையில் 37ஆவது ஜெனிவா கூட்டத் தொட­ரா­னது இம்­முறை மிகவும் பர­ப­ரப்­பா­கவும் அழுத்தம் மிக்­க­தாகவும் விமர்­ச­னங்கள் கூடி­ய­தா­கவும் இருக்கும் என பல­ராலும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

ஜெனிவா மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடர் அடுத்­த­மாதம் ஆரம்­ப­மா­க­வுள்ள பின்­ன­ணியில் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் எந்த மட்­டத்தில் இருக்­கின்­றது என்­பது குறித்து பார்க்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. அதா­வது 2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இது­வரை எவ்­வி­த­மான நீதியும் நிலை­நாட்­டப்­ப­ட­வில்லை. காணா­மல்­போதல் தொடர்பில் 20ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட முறைப்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. காணி­களை இழந்த மக்கள் அவற்­றுக்­காக போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.

யுத்தம் கார­ண­மாக அவ­ய­வங்­களை இழந்த மக்கள் தமது வாழ்க்­கையைக் கொண்டு நடத்­து­வதில் பெரும் சிர­மங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர். கண­வனை இழந்த பெண்­களை குடும்பத் தலை­மை­க­ளாகக் கொண்ட குடும்­பங்கள் தமது வாழ்க்­கையை கொண்டு நடத்­து­வதில் பாரிய நெருக்­க­டி­களை சந்­தித்து வரு­கின்­றனர். அதே­போன்று பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையில் முக்­கிய அம்­ச­மான மீள் நிக­ழா­மையை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான அர­சியல் தீர்வைக் காணும் செயற்­பாடும் தொடர்ந்து மந்­த­க­தி­யி­லேயே இடம்­பெற்று வரு­கின்­றது. தீர்­வுத்­திட்­ட­மொன்று கிடைக்­குமா என்று கேள்­விக்­கு­றி­யாகும் வகை­யி­லேயே நகர்­வுகள் இடம்­பெறு­கின்­றன. இவ்­வாறு நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் உறு­தி­யான செயற்­பா­டுகள் இது­வரை முன்­னெ­டுக்­கப்­ப­டாத நிலைமை காணப்­ப­டு­கின்­றது.

அதே­போன்று இனங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மையை பலப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களும் உரிய முறையில் இடம்­பெ­று­வ­தாக தெரி­ய­வில்லை. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் அப்­போ­தைய அர­சாங்கம் இந்த நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் எவ்­வி­த­மான செயற்­பாட்­டையும் முன்­னெ­டுக்­க­வில்லை. மாறாக அக்­கா­லத்தில் இனங்­க­ளுக்­கி­டையில் மேலும் விரி­சல்கள் ஏற்­படும் நிலை­மையே காணப்­பட்­டது. இந்­நி­லையில் 2015 ஆம் ஆண்டு புதிய அர­சாங்கம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் உரு­வா­கிய பின்னர் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையில் முன்­னேற்றம் ஏற்­பட்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்கும் என பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­பட்­டது. சர்­வ­தே­சமும் ஐக்­கி­ய­நா­டுகள் சபையும் இந்த விட­யத்தில் நம்­பிக்கை வைத்து புதிய அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்­கின. அந்த நிலை­யி­லேயே 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்­பாக ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையில் பிரே­ரணை ஒன்றும் கொண்­டு­வ­ரப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டது. ஆனால் அந்த பிரே­ரணை கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­டா­ததன் கார­ண­மாக 2017ஆம் ஆண்டு அந்தப் பிரே­ர­ணைக்கு மீண்டும் இரண்டு வரு­டங்கள் கால அவ­காசம் வழங்­கப்­பட்­டது.

அவ்­வாறு கால அவ­காசம் வழங்­கப்­பட்டு தற்­போது ஒரு­வ­ருடம் முடி­வ­டை­யப் ­போகின்­றது. இந்த நிலை­யி­லேயே 37ஆவது மனித உரிமை கூட்டத் தொடர் ஆரம்­ப­மா­கின்­றது. இதில் அனைத்துத் தரப்­பி­னரும் தமது பக்க நியா­யங்­களை முன்­வைக்­க­வுள்­ளனர். ஆனால் இங்கு ஒரு முக்­கி­ய­மான விடயம் ஆரா­யப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. அதா­வது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இது­வரை நீதி வழங்­கப்­ப­டாமல் இழுத்­த­டிக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் அது குறித்து உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்­டி­யதன் அவ­சியம் தொடர்பில் ஆரா­ய­வேண்டும். அதா­வது தொடர்ந்து இவ்­வாறு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதி தாம­திக்­கப்­பட்டு வந்தால் அது நீதி மறுக்­கப்­ப­டு­கின்­ற­மைக்கு சம­னா­கி­விடும். அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுப்­பதில் பாரிய தயக்­கத்தை வெளிக்­காட்­டி­வ­ரு­கின்­றது. அதா­வது இவ்­வாறு பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுத்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்கும் செயற்­பாட்டை முன்­னெ­டுத்தால் அத­னூ­டாக தென்­னி­லங்­கையில் அர­சாங்­கத்­திற்கு எதி­ரான அர­சியல் செயற்­பா­டுகள் வலு­வ­டைந்து அர­சாங்­கத்தின் இருப்­பிற்கே ஆபத்து ஏற்­படும் என கரு­து­கின்­றது.

எனவே இந்தக் கார­ணத்­தினால் அர­சாங்கம் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் தயக்கம் காட்டி வரு­கின்­றது. ஆனால் இவ்­வாறு சில கார­ணங்­களை முன்­வைத்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதி­வ­ழங்கும் செயற்­பாட்டை ஒரு­போதும் தாம­திக்கக்கூடாது. யுத்­த­கா­லத்தில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்கள் தொடர்­பாக சர்­வ­தேச விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட்டு வரும் நிலையில் பாதிக்­கப்­பட்ட மக்கள் நீதிக்­காக தொடர்ந்து வீதியில் இறங்கி போரா­ட­வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. பாதிக்­கப்­பட்ட மக்­களை பொறுத்­த­வ­ரையில் அவர்கள் போது­மா­ன­வரை காலம் பொறுமை காத்­து­விட்டனர். எனவே அவர்­க­ளுக்கு தாம­திக்­காமல் நீதியை நிலை­நாட்­ட­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும்.

அர­சாங்கம் இவ்­வாறு ஒரு நம்­ப­க­ர­மான பொறி­மு­றையை முன்­னெ­டுத்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­டு­வ­தாக கூறியே பத­விக்கு வந்­தது. ஆனால் பத­விக்கு வந்­ததன் பின்னர் அர­சாங்கம் அது­தொ­டர்பில் நட­வ­டிக்­கை­களை எடுப்­பதில் பாரிய தயக்­கத்தை காட்­டி­வ­ரு­வதை காண­மு­டி­கின்­றது. வடக்கு, கிழக்கு மக்­களும் மற்றும் நாட­ளா­விய ரீதியில் பாதிக்­கப்­பட்ட மக்­களும் அர­சாங்கம் தமக்கு நீதியை நிலை­நாட்டும் என்று நம்­பியே புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினர். ஆனால் தற்போதைய நிலைமையில் அந்த நம்பிக்கையும் கேள்விக்குறியாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தற்போது 37 ஆவது மனித உரிமை கூட்டத் தொடர் ஆரம்ப மாகவுள்ள நிலையில் இதில் பொறுப்புக்கூறும் பொறி முறையில் கேள்வி எழுப்பப்படும். சர்வதேசமும் ஐக்கிய நாடுகள் சபையும் இவ்வாறு கேள்விகளை எழுப்பும். அதற்கு அரசாங்கமும் ஏதோவொரு வகையில் பதிலளிக்கும் ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை அவ்வாறே நீடிக்கப்போகின்றது. இதனை அனுமதிக்க முடியாது.

எனவே இதுதொடர்பில் ஐக்கியநாடுகள் சபையும் அரசாங்கமும் கவனம் செலுத்தவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டியதன் அவசியம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இலங்கை அரசாங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்துகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-04#page-4

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நவீனன் said:

பாதிக்­கப்­பட்ட மக்­களின் சார்பில் தமிழர் தரப்பு இந்­தக்­கூட்டத் தொடரில் கலந்து கொண்டு தமக்கு இது­வரை நீதி கிடைக்­காமை தொடர்பில் சர்­வ­தேச சமூ­கத்­திற்கு தெளி­வு­ப­டுத்த உள்­ளனர். அதே­போன்று தென்­னி­லங்கை தரப்பும் இரா­ணு­வத்­திற்கு ஆத­ர­வாக ஜெனிவா மனித உரிமை பேர­வையில்

http://www.traveller.com.au/the-18-places-you-should-visit-in-2018-h0bxhc

Jaffna, Sri Lanka

Travellers heard the word on Sri Lanka some time ago – almost everyone you know has been to Kandy, or Galle, or Colombo, right? However, there's a new frontier in Sri Lanka: the formerly war-torn, Tamil-dominated north. The city of Jaffna is worth visiting for the incredibly good food alone, but once you throw in friendly locals and a sultry, rough-and-ready vibe, you have yourself a great new destination.

See also: Non-stop flights from Australia to Sri Lanka take off



Read more: http://www.traveller.com.au/the-18-places-you-should-visit-in-2018-h0bxhc#ixzz53Hz2aZOO 
Follow us: @TravellerAU on Twitter | TravellerAU on Facebook

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.