Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவைக் கந்தன் ஆலயத்தில் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு!

Featured Replies

மாவைக் கந்தன் ஆலயத்தில் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு!

 

அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழர் சம இயக்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு, மாவைக் கந்தன் ஆலயத்தில் வைத்து வெளியீடு செய்தமை தொடர்பில் விசாரணை செய்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு, பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசேட குழுவொன்று, நேற்று தேர்தல்(04.01.2018) ஆணையகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளது.

மாவைக் கந்தன் ஆலயத்தில்  தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு!

உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் போட்டியிடும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் தமிழர் சம இயக்கப் பிரதிநிதிகளான, வலி. வடக்கு பிரதேச சபையின் பிரதம வேட்பாளர் தாயுமானவர் நிகேதன் மற்றும் வலி. மேற்கு வேற்காளர் பொன்ராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, கடந்த 30ம் திகதி மாவைக் கந்தன் ஆலயத்தில் பூசையுடன், ஆலயப் புறச் சூழலில் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு இடம்பெற்றது.

குறித்த பூசையில் கலந்துகொண்ட வேட்பாளர்கள் மற்றும் ஆலய வெளி வீதியில் இடம்பெற்ற வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட அரசியல்வாதிகள் தொடர்பில், உடன் விசாரணை செய்து, குறித்த சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு கோரியுள்ளது. இவ்வாறு கோரும் அறிக்கையின் பிரகாரம், அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைக்கும் ஆணைக்குழு தயாராவதாக தெரியவிக்கப்படுகின்றது.

இதேநேரம் குறித்த சம்பவமானது, தேர்தல் மீறலிற்கு அப்பால், தேர்தல் குற்றமாகவே கருதப்படுகின்றது. இதேபோன்று கடந்த 1972ம் ஆண்டில் தென்னிலங்கையில் ஓர் அரசியல்வாதி, தேர்தல் கொள்கை விளக்கத்தினை பௌத்த ஆலயத்தில் வைத்து பிரித்து ஓதி கொண்டு சென்ற சம்பவம், நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டதனையடுத்து, தேர்தலில் வெற்றியீட்டிய நாடாளுமன்ற உறுப்பினரின் பதவியும் பறிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் குறித்த குற்றம் நீதிமன்றம் ஊடாக, குற்றம் என நிரூபிக்கப்பட்டால், தேர்தலில் வெற்றியீட்டினாலும் உறுப்புரிமை பறிக்கப்படுவதோடு, 7 ஆண்டுகள் அரசியல் உரிமையும் இழக்கும் நிலமை ஏற்படும். எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இவ்விசாரணைக்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் குழு திங்கட் கிழமை யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Election-manifesto-release-in-Mavik-Kandan-temple

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, நவீனன் said:

தேர்தல் கொள்கை விளக்கத்தினை பௌத்த ஆலயத்தில் வைத்து பிரித்து ஓதி கொண்டு சென்ற சம்பவம், நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டதனையடுத்து, தேர்தலில் வெற்றியீட்டிய நாடாளுமன்ற உறுப்பினரின் பதவியும் பறிக்கப்பட்டது.

போராட்ட காலத்தில் இராணுவவீர்ர்களுக்கு பெளத்த ஆலயத்தில் ஆசிர்வாதம் வழங்கினது  சட்டத்திற்க்கு புறம்பானது இல்லையோ....45 வ்ருடங்களின் பின்பும் கொழும்பு சட்டம் யாழ்ப்பாணத்தில் கடைப்பிடிக்கினமாம்... 

  • தொடங்கியவர்

ஆன்மீகத் தலங்களுக்கு தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை!

 

 

வேட்பாளர்களைப் பிரபலப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் வகையில் ஆன்மீக செயற்பாடுகள் நடத்தப்பட்டாலோ அல்லது ஆன்மீகத் தலங்களில் தேர்தல் உறுதிமொழிகள் வெளியிடப்பட்டாலோ, குறித்த வேட்பாளர் மீதும் குறித்த ஆன்மீகத் தலங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் சமயத் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

5_Election_Commissioner.JPG

தேர்தல் திணைக்களத்தில் இன்று (5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போதே தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேஷப்ரிய இதைத் தெரிவித்தார்.

“நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டிருக்கும் கட்சி அலுவலகங்கள், விளம்பரப் பதாகைகள், கட்-அவுட்கள், சுவரொட்டிகள் என்பனவற்றை இம்மாதம் 31ஆம் திகதிக்குள் அகற்றிவிட வேண்டும்.

“குறித்த கால எல்லைக்குள் அலுவலகங்கள், சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் கட்-அவுட்களை அகற்றப்படாவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

“மேலும் எதிர்வரும் இருபதாம் திகதிக்கு முன் வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்” என்றும் ஆணையாளர் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/29021

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.