Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“இந்தியாவுடன் இணைந்து, புலிகளை தோற்கடித்து, 30 வருடத்திற்கும் மேலான யுத்தத்தை முடிவுறுத்தினோம்”

Featured Replies

“இந்தியாவுடன் இணைந்து, புலிகளை தோற்கடித்து, 30 வருடத்திற்கும் மேலான யுத்தத்தை முடிவுறுத்தினோம்”

mahinda-gota.jpg?resize=598%2C335
“விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவருவதில், இந்தியாவுக்கு இருந்த முக்கியத்துவத்தினை நாம் நன்றாக அறிந்து வைத்திருந்தோம்.” அதன்படி இந்தியாவுடன் இணைந்து யுத்த வெற்றிக்கான இராணுவ தந்திரோபாயங்களையும் மூலோபாயங்களையும் வகுத்து, வீடுதலைப் புலிகளை தோற்கடித்து, யுத்த வெற்றியையும் பெற்றோம்” என இலங்கையின் முன்னாள் பாதுகாப்புத் துறை செயலரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் சகோதரருமான கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து முகநூல் ஊடாக வழங்கியுள்ள நேரடி ஒளிபரப்பினூடாக, கருத்து வெளியிட்ட அவர்,  “விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முன்பிருந்த தலைவர்களும், அரசாங்கங்களும் முன்னெடுத்தன. எனினும் புலிகளை தோற்கடிக்கவோ, அல்லது முடிவுக்கு கொண்டுவரவோ எவராலும் முடிந்திருக்கவில்லை. இவ்வாறான சூழலில், 30 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் தொடர்ந்த யுத்தத்தை, அதனை முன்னெடுத்த விடுதலைப் புலிகளை் இயக்கத்தை, 3 வருட சிறுகாலப்பகுதிக்குள் நாம் முடிவுக்கு கொண்டுவந்தோம். இத்தகைய வெற்றிக்கு காரணம், புலிகளுக்கு எதிராக சரியான நடவடிக்கைகளை எடுத்ததோடு சரியான தலைவர்களையும் உருவாக்கியமையே ஆகும்.” எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய  ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“இந்த வகையில் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்ததது மாத்திரமல்லாமல் அதன்பின் நாட்டை அபிவிருத்திப்பாதையில் கொண்டு சென்றோம் என்பதை குறிப்பிட்டு கூறியாக வேண்டும். இராணுவ வீரர்களுக்காக பல்வேறு திட்டங்களையும் வகுத்து அவர்களை கௌரவப்படுத்தினோம்.”

“ஆனால் கடந்தகாலத்தில் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து நாட்டை கட்டியெழுப்பிய நிலை தற்போது காணப்படவில்லை. தற்போது நாட்டில் பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, மக்கள் கடன்சுமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு இப்போதுள்ள அரசு நிறுவனங்கள் முறையாக செயற்படாதமையே காரணம்.”

முக்கியமாக நாட்டை அழிவுக்கு பாதைக்கு கொண்டு சென்ற 30 வருடத்திற்கும் மேலான யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினரை காட்டிக்கொடுக்கும் வகையில் சர்வதேசத்திற்கு அடிபணியவைக்கும் செயற்பாடுகள் தொடர்கின்றன. இவற்றிற்கு எதிராக தேர்தல் வாக்குகளை நாம் பயன்படுத்தவேண்டும் என கோத்தாபய ராஜபக்ஸ, வெளிநாட்டில் இருந்து முகநூல் ஊடாக வழங்கியுள்ள நேரடி ஒளிபரப்பினூடாக வலியுறுத்தி உள்ளார்.

http://globaltamilnews.net/2018/61123/

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க இனவெறியும், ஊழலும் கலந்த ஹிந்தியா ,  கேரளா நம்பூதிரி மலையாள மாபியாவின் பிராந்திய வல்லரசு ராஜதந்திரம்.  

பிராந்திய வளருசு நலன்களை இனவெறியும், ஊழலும் கலந்த சிறு  ஹிந்தியா ,  கேரளா நம்பூதிரி மலையாள மாபியா குலாமும் , குடும்பத்தின் தனிப்பட்ட கோபதாபங்களும் தீர்மானித்ததால் வந்த வினை.

இயற்ப்பு நீதியும், தர்மமும் தம்முடைய  (ஊழி) ஆட்டத்தை தொடங்கியுள்ளன.      

கோத்தாவின் வார்த்தையில் இவ்வளவு தன்னம்பிக்கை இருப்பதானால், கடின தன்மையுள்ள ஆதாரங்கள் எத்தனையோ, எத்தகவையோ?  

என்றாலும் சிங்களம் பூட்டிய பூட்டு வாழ்த்தப்படவேண்டும்.

இந்தப் பொறியிலே னவெறியும், ஊழலும் கலந்த ஹிந்தியா ,  கேரளா நம்பூதிரி மலையாள மாபியா தெரிந்தே இயற்றப்பு நீதியிடம் சிக்கிக்கொண்டது.

  • கருத்துக்கள உறவுகள்

சில ஆயிரம் புலிகளை அழிக்க

பல வல்லரசுகள் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் இரசாயன குண்டுகள் எல்லாம் பாவித்து வென்றோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.