Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமஷ்­டியை எதிர்க்கும் எத்­த­னை பேர் அது­பற்றி விளங்கிக் கொண்­டுள்­ளனர்

Featured Replies

சமஷ்­டியை எதிர்க்கும் எத்­த­னை பேர் அது­பற்றி விளங்கிக் கொண்­டுள்­ளனர்

 

இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட வேண்டும் என்­கிற கோஷங்கள் நாளுக்கு நாள் வலு­வ­டைந்து வரு­கின்­றன. எனினும் தீர்­வினைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான முன்­னெ­டுப்­புகள் எந்­த­ள­விற்கு இடம்­பெ­று­கின்­றன என்­ப­தனை சிந்­திக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. தீர்வு விட­யத்தில் அர­சி­யல்­வா­திகள் இதய சுத்­தி­யுடன் செயற்­ப­டு­கின்­றார்­களா? என்ற சந்­தே­கமும் மேலெ­ழுந்து வரு­கின்­றது. இதற்­கி­டையில் நிரந்­தர தீர்­வுக்­காக ஒத்­து­ழைப்­ப­வர்­களை இனங்­கண்டு அவ்­வா­றா­ன­வர்­களை ஊக்­கு­விக்க வேண்­டிய ஒரு தேவையும் காணப்­ப­டு­கின்­றது.

இலங்­கையின் இனப்­பி­ரச்­சினை என்­பது இப்­போது ஒரு புற்­று­நோ­யாகி இருக்­கின்­றது. இன்று தீர்வு கிடைக்கும், நாளை தீர்வு கிடைக்கும் என்று எண்ணி ஏமாந்­த­துதான் மிச்­ச­மாக இருக்­கின்­றது. ஒவ்­வொரு அர­சாங்­கமும் தமிழ் மக்­களின் வாக்­கு­களை பெற்­றுக்­கொண்டு அம்­மக்­களின் நம்­பிக்­கையை சித­ற­டிக்­கின்ற நட­வ­டிக்­கை­க­ளி­லேயே ஈடு­பட்டு வரு­கின்­றன. ஒரே குட்­டையில் ஊறிய மட்­டை­க­ளா­கவே அனை­வரும் காணப்­ப­டு­கின்­றார்கள்.

பல்­லின மக்கள் வாழு­கின்ற இலங்கை திரு­நாட்டில் ஒவ்­வொரு இனத்­த­வர்­க­ளி­னதும் உரி­மைகள் எந்­த­ள­விற்கு உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன-? என்­பது சிந்­த­னைக்­கு­ரிய விட­ய­மே­யாகும். உரி­மை­களை கேட்கும் வரையில் நல்­ல­வ­னாக இருக்கும் ஒருவன் உரி­மைக்­காக குரல் கொடுக்­கின்­ற­போது இன­வா­திகள் பார்­வையில் தீய­வ­னாக மாறி­வி­டு­கின்றான். வாய் மூடி மௌனி­யாக இருப்­ப­வனே இன­வா­தி­களால் வர­வேற்­கப்­ப­டு­கின்றான்.

இந்த நிலை மாற்­ற­ம­டைய வேண்டும். உரி­மை­க­ளுக்­காக உயிர்­கொ­டுத்த வர­லாறு அதி­க­மாக இருக்­கின்­றது. இதனை எவரும் கொச்­சைப்­ப­டுத்த முனைதல் கூடாது. கேட்­கா­விட்டால் உரி­மைகள் கிடைக்­காது. அதனை யாரும் தங்­கத்­தட்­டிலே வைத்து கொடுக்­கவும் மாட்­டார்கள் என்­ப­தனை புரிந்து கொள்­ள வேண்டும். சகல சமூ­கங்­களும் உரி­மை­களை சரி­யாக இனங்­கண்டு கொள்ள வேண்டும் என்­ப­தோடு பெற்­றுக்­கொள்­ளவும் குரல் கொடுக்க வேண்டும். ஒரு இனம் இன்­னொரு இனத்தை அடக்­கி­யாள முடி­யாது. அவ்­வாறு அடக்­கி­யா­ளு­மி­டத்து அல்­லது அடக்­கி­யாள முற்­ப­டு­மி­டத்து அதனால் ஏற்­படும் பாதக விளை­வு­களும் அதி­க­மா­கவே காணப்­படும் என்­பது சொல்­லித்­தெ­ரிய வேண்­டிய விட­ய­மில்லை. மற்­றைய மனி­தனின் விருப்­ப­மின்றி அவனை நிர்­வ­கிப்­ப­தற்கு எந்­த­வொரு மனி­த­னுக்கும் தகுதி கிடை­யாது என்ற ஆபி­ரகாம் லிங்­கனின் வார்த்­தையை ஒவ்­வொ­ரு­வரும் நினைத்­துப்­பார்க்க வேண்டும்.

சிறு­பான்­மை­யி­னரின் உரி­மை­களை மழுங்­க­டிக்கச் செய்து அம்­மக்­களை சகல துறை­க­ளிலும் நிர்­வா­ணப்­ப­டுத்தும் நட­வ­டிக்கை இன்று நேற்று ஆரம்­பிக்­கப்­பட்­ட­தல்ல, நாடு சுதந்­தி­ர­ம­டை­வ­தற்கு முன்னர் இடப்­பட்ட வித்தே இப்­போது விருட்­ச­மாக வளர்ந்­தி­ருக்­கின்­றது.

நாடு சுதந்­தி­ர­ம­டை­கின்­றது, அந்­நியர் ஆட்­சியின் பிடியில் இருந்து விடு­படப் போகின்­றது என்­ற­வுடன் சிறு­பான்மை மக்கள் மகிழ்ச்­சி­ய­டைந்­தார்கள். தமது வாழ்வில் முன்­னேற்­ற­க­ர­மான மாற்றம் ஏற்­படப் போகின்­றது என்றும் கனவு கண்­டார்கள். ஆனால் நினைத்­தது ஒன்று. நடந்­தது ஒன்று. சுதந்­தி­ரத்தின் பின்னர் சிறு­பான்­மை­யினர் மீதான வன்­மு­றை­களும், அக்­கி­ர­மங்­களும் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டதே தவிர அவர்­களின் நிம்­ம­தி­யான வாழ்­விற்கு வித்­தி­டப்­ப­ட­வில்லை என்­பது கசப்­பான உண்­மை­யாகும். இந்த உண்­மையை யாரும் மறுக்க முடி­யாது. கால­னித்­துவ வர­லா­று­களில் இருந்தும் பின் கால­னித்­துவ வர­லாறு இங்கு மோச­மாகிப் போய் இருக்­கின்­றது. சுதந்­திரம் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு சுக­ம­ளிக்­க­வில்லை. இந்த நிலையில் இந்­திய அர­சி­ய­ல­மைப்பின் சிருஷ்­டி­கர்த்தா ரீ.ஆர்.அம்­பேத்கார் கூறிய ஒரு விட­யத்தை இங்கு நினை­வு­ப­டுத்த விரும்­பு­கின்றேன். “எமக்கு சுதந்­திரம் ஏன் இருக்க வேண்டும்? எமது அடிப்­படை உரி­மை­க­ளுடன் மோதலை ஏற்­ப­டுத்தும் சமத்­து­வ­மின்மை, பார­பட்­ச­மாக நடத்­தப்­ப­டுதல் என்­பவை நிறைந்த எமது சமூக அமைப்பை மாற்­றி­ய­மைக்­கவே சுதந்­திரம் வேண்டும்’’ என்­கிறார் அம்­பேத்கார். ஆனால் இலங்­கையின் சுதந்­திரம் இந்­நி­லை­மை­க­ளுக்கு வழி சமைத்­ததா?

சுதந்­தி­ரத்தின் பின்னர் மோச­மாகிப் போன சிறு­பான்­மை­யினர் மீதான நெருக்­கீ­டு­க­ளினால் நாடு நாச­ம­டைந்­தது. நாட்டின் அபி­வி­ருத்தி தடைப்­பட்­டது. புறக்­க­ணிப்பு நிலை­மை­களால் யுத்தம் மேலெ­ழுந்­தது. இனப்­பி­ரச்­சினை உக்­கி­ர­ம­டைந்­தது. ஒரு­வரை ஒருவர் சந்­தேகக் கண்­கொண்டு பார்க்கும் நிலைமை வலு­வ­டைந்­தது. பிரி­வு­களும் வேற்­று­மை­களும் பிள­வு­களும் தாரா­ள­மாக மேலெ­ழுந்­தன. ‘நாம்’ என்ற பன்­மைத்­தன்மை வீழ்ச்­சி­ய­டைந்த நிலையில் ‘நான்’ என்று குறு­கிய வட்­டத்­துக்குள் செயற்­பா­டுகள் இடம் பெற்­றன. யுத்­தத்தின் சத்­தத்தால் நாடு மட்­டு­மின்றி முழு உல­க­முமே அதிர்ந்து போய் இருந்­தது. சர்­வ­தே­சத்தின் பார்­வையும் இலங்­கையின் மீது விழுந்­தி­ருந்­தது. யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டதன் பின்னர் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு உரிய தீர்வு கிடைத்து விடப்­போ­கின்­றது என்ற நம்­பிக்கை துளிர்­விட்­டது. ஆனால் நிலைமை தலை­கீ­ழா­கிப்­போ­னது தான் மிச்சம். நம்­பிக்­கையில் மண் விழுந்­ததும், ஆசை நப்­பா­சை­யா­னதும் நீங்கள் அறிந்த விட­ய­மே­யாகும். இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு இழுத்­த­டிக்­கப்­பட்ட நிலையில் பேச்­சு­வார்த்­தைகள், சர்­வ­கட்சி மாநா­டுகள் என்று நிலை­மைகள் தொடர்ந்து கொண்­டி­ருந்­தன. இதற்­கி­டையில் பிர­பா­கரன் இறந்த கையோடு எல்லாம் முடிந்து விட்­டது. இங்­கி­ருந்­தது இனப்­பி­ரச்­சினை அல்ல, பயங்­க­ர­வாதப் பிரச்­சி­னை­யே­யாகும். எனவே தீர்வு தொடர்பில் சிந்­திக்க வேண்­டி­ய­தில்லை என்­கிற நிலைப்­பாட்­டிலும் இன­வாத சிந்­த­னை­யா­ளர்கள் இருந்து வந்­தனர். தமி­ழர்­களின் பிரச்­சி­னையை புரிந்து கொள்­ளாத இவர்கள் தமி­ழினத் துரோ­கிகள் என்­பதைத் தவிர வேறென்ன கூற முடியும்.

இலங்கை இன்றும் இனப்­பி­ரச்­சி­னையால் அழுது கொண்­டி­ருக்­கின்­றது. பாதிப்­பிற்குள்­ளா­ன­வர்­களின் தழும்­புகள் இன்னும் மாற­வில்லை. இலங்கை தேசத்தின் தேகத்­திலும் இந்த வடுக்கள் இன்­னு­மின்னும் இருந்து கொண்­டுதான் இருக்­கின்­றன. இந்­நி­லையில் இனப் பிரச்­சி­னைக்கு நிரந்­த­ர­மான அர­சியல் தீர்­வினை பெற்­றுக்­கொடுத்து நாட்டின் அபி­வி­ருத்­திக்கு சகல இனத்­த­வர்­களின் பங்­க­ளிப்­பி­னையும் பெற்­றுக்­கொள்ள வேண்­டிய ஒரு தேவை­யா­னது மேலெ­ழுந்து காணப்­படு­கின்­றது. இதி­லி­ருந்தும் விலகிச் செல்ல யாரும் முற்­படுதல் கூடாது. நாட்டில் புதிய அர­சி­ய­ல­மைப்பு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­ப­டு­வ­தோடு சகல இன மக்­களும் கைகோர்க்­கின்ற ஒரு சூழ்­நி­லைக்கு அடித்­தளம் இடப்­படும் என்று பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­பட்­டது. அவ்­வாறு புதிய அர­சி­ய­ல­மைப்பு முன்­வைக்­கப்­படு­மானால் சமஷ்டி முறையின் ஊடாக தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வினை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் என்ற வலி­யு­றுத்­தல்கள் தமிழ்த்­தரப்­பி­ன­ரி­டையே இடம் பெற்­றி­ருந்­தன.

எனினும் சமஷ்டி என்ற சொல்லே சில­ருக்கு வேப்­பங்­கா­யாகக் கசக்­கின்­றது. சமஷ்டி ஏற்­ப­டுத்­தப்­பட்டால் அது தனி ஈழக் கோரிக்­கைக்கு வலு­சேர்க்கும் என்று எதிர்ப்­புகள் கிளம்­பின. பிர­பா­க­ரனால் பெற்­றுக்­கொ­டுக்க முடி­யாமல் போன தமி­ழீ­ழத்தை சமஷ்­டியின் மூலம் புதிய அர­சி­ய­ல­மைப்பின் மூலம் பெற்­றுக்­கொ­டுக்க சிலர் முனை­வ­தா­கவும் எதிர்ப்புக் குரல்கள் மேலோங்கி ஒலித்­த­மையை கேட்கக் கூடி­ய­தாக இருந்­தது. சமஷ்­டியை சிலர் எதிர்க்­கின்ற நிலையில் சமஷ்­டியை எதிர்ப்­ப­வர்கள் எல்­லோ­ருக்கும் சமஷ்டி தொடர்பில் பூரண அறிவு இருக்­கின்­றதா என்று சிந்­திக்க வேண்டி இருக்­கின்­றது. இச்­ச­ம­யத்தில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க கூறிய ஒரு கருத்­தினை இங்கு நினை­வு­ப­டுத்­து­வது பொருத்­த­மானதாக இருக்கும் என்று கரு­து­கின்றேன்.

சந்­தி­ரி­காவின் கருத்து பின்­வ­ரு­மாறு அமைந்­தி­ருந்­தது:

எனது ஆட்­சிக்­கா­லத்தில் கொண்டு வரப்­பட்ட ‘அதி­கா­ரத்தை பகிர்ந்து நாட்டை பிள­வு­ப­டுத்­தாமல் இருப்போம்’ என்ற முன்­மா­திரி இன்­றைக்கும் பொருந்தும். இது பற்­றிய அறி­வில்­லாத மனி­தர்கள் தீவி­ர­வாத கருத்­துக்­களை கூறி கோஷ­மெ­ழுப்பத் தொடங்­கி­னார்கள். அவ்­வாறு கூறு­ப­வர்­களில் எத்­தனை பேர் பல்­க­லைக்­க­ழ­கத்திற்கு அருகில் கூட சென்­றி­ருப்­பார்கள்? நான் அவ்­வாறு கூறு­வ­தற்கு காரணம் பல்­க­லைக்­க­ழகம் செல்­வ­தென்­பது பெரிய ஒரு விடயம் என்­ப­தற்­காக அல்ல. சற்று அதி­க­மாக கல்வி பயின்­ற­வர்­க­ளுக்கு நன்கு வாசித்து விளங்கிக் கொள்ள முடியும். அர­சாங்­கத்தின் சில தலை­வர்­க­ளுக்கும் இது பொருந்தும். இந்­தி­யாவைப் போன்று இலங்­கை­யிலும் சமஷ்டி முறை­யொன்று ஏற்­ப­டுத்­தப்­ப­டு­மாயின் இந்த நிலை­மை­களில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தலாம். மிகப்­பெ­ரிய அளவில் அதி­கா­ரத்தை பகிர்ந்­த­ளித்து சமஷ்டி முறைமை ஒன்­றினை வழங்கத் தேவை­யில்லை. குறைந்­தாலும் முதிர்ச்­சியைக் கொண்­டுள்ள ஒரு நாடு செய்ய வேண்­டிய ஆகக் குறைந்த செயல் 13 ஆவது திருத்தம் என்­ப­தனை நான் கூற விரும்­பு­கின்றேன் என்று முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

சமஷ்டி என்­பது ஒன்றும் தீண்­டத்­த­காத விட­ய­மல்ல. பல்­லின மக்கள் வாழு­கின்ற நாடு­களில் ஒற்­று­மைக்கும், அபி­வி­ருத்­திக்கும் சமஷ்டி தோள் கொடுத்­தி­ருக்­கின்­றது. இதனை ஒரு பாட­மாகக் கொண்டு இலங்கை ஏன் முன்­செல்லக் கூடாது? இன­வா­திகள் ஏன் இதனை விளங்கிக் கொள்­ளா­தி­ருக்­கின்­றார்கள் என்­பது ஒரு கேள்­விக்­கு­றி­யாக இருக்­கின்­றது. இன­வாதத்தை மட்­டுமே ஆயு­த­மாகக் கொண்டு அர­சியல் பிழைப்பு நடத்தி தனது இருப்­பினை தக்­க­வைத்துக் கொள்ள முனை­வோரால் நாடு மிகப்பெரும் ஆபத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகி இருக்கின்றது. மக்கள் இது தொடர்பாக விழிப்புடன் செயற்பட்டு இனவாத சிந்தனையாளர்களை ஓரம் கட்ட வேண்டும்.

தமிழர்களின் தாயகமான வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு மாகாணமாக உருவாக்கப்படுவதோடு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற கொள்கையினை ஏற்றுக்கொண்ட சகல அமைப்புகளையும் தம்முடன் இணைந்து கொள்ளுமாறு தமிழ்த்தேசிய விடுதலை கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் அழைப்பு விடுத்திருக்கின்றது. சமஷ்டிக்கு வலு சேர்த்திருக்கின்றது. இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு உடனடியாக எட்டப்பட வேண்டிய நிலையில் யாழ்.ஆயர் மேதகு கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் வேண்டுகோள் ஒன்றினையும் விடுத்திருக்கின்றார். நிரந்தர தீர்வுக்காக உழைக்கக் கூடியோரை இனங்காண வேண்டும். முகங்களுக்கு அல்லாது கொள்கைகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஆயர் கேட்டுக் கொண்டிருக்கின்றார். இதற்கிடையில் தேசிய அரசாங்கம் இப்போது கேள்விக்­குறியாகி இருக்கின்றது. இந்நிலை­யில் அரசியல் தீர்வு மேலும் இழுபடக்கூடும் என்று நம்பப்படுகின்றது.  

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-16#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.