Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளை வைத்து 'வாக்கு யாசகம்'

Featured Replies

புலிகளை வைத்து 'வாக்கு யாசகம்'

stock-vector-candidate-of-party-involved-in-debate-election-campaign-speech-from-the-rostrum-430347733-c07e121dbe02b24380e257774248d32dcb1a3710.jpg

 

உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்­கான பிர­சா­ரங்­களில் வழக்­கம்­போ­லவே, விடு­தலைப் புலி­களும், விடு­தலைப் புலி­களின் எழுச்சிப் பாடல்­களும் தாரா­ள­மாகப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

இது­வரை காலமும் தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சிகள் தான், விடு­தலைப் புலி­ளையும் அவர்­களின் எழுச்சிப் பாடல்­க­ளையும் தேர்தல் பிர­சா­ரங்­களின் போது பயன்­ப­டுத்தி வந்­தன.

இப்­போது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் கூட, விடு­தலைப் புலி­களைப் பயன்­ப­டுத்தி- அவர்­களின் பாடல்­களை ஒலிக்க விட்டு வாக்கு கேட்­கின்ற நிலைக்கு வந்­தி­ருக்­கி­றது.

யாழ்ப்­பா­ணத்தில் கடந்­த­வாரம் நடந்த ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் வேட்­பா­ளர்கள் அறி­முகம் மற்றும் தேர்தல் அறிக்கை வெளி­யீட்டு நிகழ்வில், மறைந்த எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி.சாந்­தனின் குரலில் ஒலிப்­ப­திவு செய்­யப்­பட்ட “நித்­தி­ரையா தமிழா நிமிர்ந்து பாரடா” என்ற பாடல் ஒலிக்­க­வி­டப்­பட்­டது.

இது­போன்று வேறும் பல எழுச்சிப் பாடல்கள் ஒலிக்க விடப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.

இந்தச் சம்­பவம் யாழ்ப்­பா­ணத்தில் அர­சியல் கட்­சிகள் மத்­தியில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது போலவே, தென்­னி­லங்கை அர­சி­ய­லிலும் இதற்­கான எதிர்­வி­னைகள் ஒலித்­தன.

தமிழ் அர­சியல் கட்­சிகள் மத்­தியில், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் இந்த நட­வ­டிக்கை கடும் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

விடு­தலைப் புலி­களை அழிப்­ப­தற்­கான போரை நடத்­திய ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியே புலி­களின் பாடல்­களை ஒலி­ப­ரப்பி வாக்கு கேட்­பதா என்ற கொந்­த­ளிப்பு மாத்­தி­ரமே அதற்குக் காரணம் அல்ல.

விடு­தலைப் புலி­களின் பாடல்­களைப் பயன்­ப­டுத்தி வாக்கு கேட்­கின்ற தமது ஏக­போக உரி­மை­யையும் தேசி­யக்­கட்சி ஒன்று தட்­டிக்­கொண்டு போய் விடுமோ என்ற பயமும் கூட, அதற்குக் காரணம் தான்.

தமிழ்த் தேசிய விடு­தலைப் போராட்டம் ஆயுதப் போராக உரு­வெ­டுப்­ப­தற்கும், பெரும் அழி­வுகள் ஏற்­ப­டு­வ­தற்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி கார­ண­மாக இருந்­தி­ருக்­கி­றது.

தனிச் சிங்­களச் சட்டம், தமிழர் தரப்­பு­க­ளு­ட­னான ஒப்­பந்­தங்­களை கிழித்­தெ­றிந்­தமை, இனக்­க­ல­வரம் என்று பல்­வேறு கால­கட்­டங்­க­ளிலும் தமி­ழர்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்­ட­தற்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பொறுப்­பாக இருந்து வந்­தி­ருக்­கி­றது.

அதற்­காக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஒரு­போதும் தமிழ் மக்­க­ளிடம் வருத்தம் தெரி­விக்­கவோ, மன்­னிப்புக் கோரவோ இல்லை. அதே ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி இன்று புலி­களின் பாடல்­களை ஒலி­ப­ரப்பி வாக்கு கேட்­கி­றது.

இந்­த­ள­வுக்கு சுதந்­திரக் கட்சி வங்­கு­ரோத்து அர­சியல் நிலைக்கு வந்து விட்­டது என்­பதை மாத்­திரம் இது வெளிப்­ப­டுத்­த­வில்லை.

விடு­தலைப் புலிகள் இன்­னமும் கூட தமிழர் அர­சி­யலில் ஒரு நீங்க முடி­யாத நிழ­லாகப் பர­வி­யி­ருக்­கி­றார்கள் என்­ப­தையும் கூட வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

ஸ்ரீலங்கா, சுதந்­திரக் கட்சி, ஐ.தே.க. என்­பன வடக்கில் ஒன்­றையும் தெற்கில் ஒன்­றையும் கூறியே வாக்கு வேட்­டை­யாடி வந்­தி­ருக்­கின்­றன.

வடக்­கிலும், தெற்­கிலும் வெவ்­வேறு முகத்­துடன் அர­சியல் நடத்­து­வ­தற்­கான இப்­ப­டி­யொரு பாதையை தேசியக் கட்­சி­க­ளுக்கு காண்­பித்துக் கொடுத்­தவர், காலஞ்­சென்ற அமைச்சர் மகேஸ்­வரன் தான்.

அவர் அர­சி­ய­லுக்குள் நுழைந்­த­போது, தமிழ்த்

தேசிய அர­சியல் கட்­சி­க­ளையும், அர­சுடன் இணைந்து- தமிழ்த் தேசி­யத்­துக்கு எதி­ராக அர­சியல் நடத்திக் கொண்­டி­ருந்த ஈ.பி.டி.பி.யையும் ஒருங்கே சமா­ளிக்க வேண்­டி­யி­ருந்­தது.

அதனால் அவர், தெற்கில் ஐ.தே.க. பின்­பற்றும் கொள்­கை­களை வடக்கில் முன்­வைத்தால் சரிப்­ப­டாது என்று, விடு­தலைப் புலிகள் சார்பு கொள்கை ஒன்றை வெளிப்­ப­டுத்த முனைந்தார். அது அவ­ருக்கு கைகொ­டுத்­தது.

அதையே தான் இப்­போது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் பின்­பற்றத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

மூன்று கூட்­ட­ணி­க­ளாக பிரிந்து கிடக்கும் தமிழ்த் தேசியக் கட்­சிகள், ஈ.பி.டி.பி., ஐ.தே.க. இவற்­றுடன் மோதி ஆச­னங்­களைக் கைப்­பற்­று­வ­தாயின், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை முன்­னி­றுத்­தியோ, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் கொள்­கை­களை முன்­னி­றுத்­தியோ பய­னில்லை என்­பதை, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அங்­கஜன் இரா­ம­நாதன் உணர்ந்­தி­ருக்­கிறார்.

அதனால் அவர் விடு­தலைப் புலிகள் சார்ந்த ஒரு நிலைப்­பாட்­டையும் எடுத்து, தமிழ்த் தேசியக் கட்­சி­களின் வாக்கு வங்­கியை உடைப்­ப­தற்குத் திட்­ட­மிட்­டுள்ளார்.

 "நித்­தி­ரையா தமிழா" என்று அவர் தட்­டி­யெ­ழுப்ப முயன்­றது, தமிழ்த் தேசிய வாக்­கா­ளர்­களைத் தான். தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சிகள் பொது­வா­கவே அபி­வி­ருத்தி அர­சி­யலை முன்­னி­றுத்­து­வ­தில்லை என்­பது பர­வ­லாக கூறப்­ப­டு­கின்ற ஒரு குற்­றச்­சாட்டு. (6ஆம் பக்கம் பார்க்க)

தமிழ் மக்­களின் உரிமைப் பிரச்­சி­னை­களை முன்­னி­றுத்தி அர­சியல் செய்து வரும் தமிழ்த் தேசியக் கட்­சி­க­ளுக்கு அபி­வி­ருத்தி அர­சியல் எட்­டாக்­கனி தான். 

ஏனென்றால், அர­சாங்­கங்­க­ளுக்கு எதி­ரா­கவே அர­சியல் செய்து வந்த தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சி­களால், அபி­வி­ருத்தி அர­சி­யலை முன்­னெ­டுப்­ப­தற்கு வாய்ப்­புகள் இருக்­க­வில்லை.

உள்­ளூ­ராட்சி, மாகா­ண­ச­பைகள் மட்­டத்தில் அதனை முன்­னெ­டுப்­ப­தற்­கான வாய்ப்­புகள் இருந்த போதிலும், தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சிகள் அதனை சரி­யாக முன்­னெ­டுக்­க­வில்லை என்றே கூறலாம்.

அர­சாங்­கத்­துடன் அண்­டி­யி­ருந்த ஈ.பி.டி.பி. தான், சலுகை, அர­சியல், அபி­வி­ருத்தி அர­சி­யலை சரி­யாக முன்­னெ­டுத்­தி­ருந்­தது. தமிழ் மக்­களை நோக்கி சலு­கை­க­ளையும், நிதி­யு­த­வி­க­ளையும் நீட்­டு­வதன் மூலமும், வேலை­வாய்ப்­புகள் போன்­ற­வற்றை பெற்றுக் கொடுப்­பதன் மூலமும், தமிழர் அர­சி­யலில் நிலை­யான இடத்தைப் பிடிக்­கலாம் என்று கணக்குப் போட்­டது.

போரினால் சீர­ழிந்து போயி­ருந்த வீடுகள் அப்­ப­டியே இருக்க, அக­திகள் ஒழுகும் குடில்­களில் வாழ, கோவில்­க­ளுக்கும், கும்­பா­பி­ஷே­கங்­க­ளுக்கும் அபி­வி­ருத்தி அர­சியல் நிதியைக் கொட்­டி­யது. பொது அமைப்­பு­க­ளுக்கு நிதி­யு­த­விகள் அள்ளி வீசப்­பட்­டன. இதனால் போரினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் கொதித்­தனர்.

அதே­வேளை வேலை­வாய்ப்­பு­க­ளையும் பெற்றுக் கொடுத்து, தம் பக்கம் தமிழ் மக்­களை சாய்ப்­பதில் ஈ.பி.டி.பி. கடி­ன­மாக முயற்­சித்­தது. விடு­தலைப் புலி­களின் காலத்­தி­லேயே, அவர்­க­ளுடன் போட்டி போட்டுக் கொண்டு சலுகை மற்றும் அபி­வி­ருத்தி அர­சி­யலை முன்­னெ­டுத்­தது.

ஈ.பி.டி.பி.யின் இந்த அர­சி­யலை ஒரு கட்­டத்தில் பசில் ராஜபக் ஷ தமக்குச் சாத­க­மாகத் திருப்பிக் கொண்டார். ஈ.பி.டி.பி.யை தனித்துப் போட்­டி­யிட விடாமல் தடுத்து, வெற்­றி­லையில் போட்­டி­யிட செய்தார். டக்ளஸ் தேவா­னந்­தா­விடம் இருந்து அபி­வி­ருத்தி அர­சி­யலை பிடுங்கி தனது கைக்குள் வைத்துக் கொண்டார். கடை­சியில் இரண்டு பேருமே அதில் தோல்­வி­யுற்­றனர்.

அது­போ­லவே, ஐ.தே.க. ஆட்­சியில் இருந்த காலத்தில், டக்ளஸ் தேவா­னந்­தாவைப் பின்­பற்றி முன்னாள் அமைச்சர் மகேஸ்­வ­ரனும், அபி­வி­ருத்தி சலுகை அர­சி­யலை முன்­னெ­டுத்துப் பார்த்தார். அவர் டக்ளஸ் தேவா­னந்தா அள­வுக்கு அதில் வெற்றி பெற­வில்லை.

டக்ளஸ் தேவா­னந்­தாவின் அபி­வி­ருத்தி அர­சியல், புலி எதிர்ப்பு அர­சி­ய­லுடன் பின்னிப் பிணைந்­தி­ருந்­தது. புலி­களின் ஆத­ர­வா­ளர்கள், ஈ.பி.டி.பி.யை முற்­றாக வெறுத்­தனர். துரோ­கி­க­ளா­கவே பார்த்­தனர்.

புலி எதிர்ப்பு அர­சியல், தமிழ்த் தேசி­யத்­துக்கு விரோ­த­மான அர­சியல் முன்­னெ­டுப்­பு­களால், அபி­வி­ருத்தி, சலு­கை­களின் மூல­மாகக் கூட, தமிழ் மக்­களின் ஆத­ரவைப் பெற்­றுக்­கொள்ள முடி­யாது போனது.

விடு­தலைப் புலி­களின் அழி­வுக்குப் பின்­னரும் கூட, ஈ.பி.டி.பி.யினால் தலை­யெ­டுக்க முடி­யா­தி­ருப்­ப­தற்கு பிர­தான காரணம், கடந்த காலத்தில் செய்த புலி எதிர்ப்பு அர­சியல் தான்.

அதே­வேளை, ஈ.பி.டி.பி. இன்­னமும் ஒரு அர­சியல் கட்­சி­யாக தமிழ் மக்கள் மத்­தியில் இருப்­ப­தற்குக் காரணம், அபி­வி­ருத்தி, சலுகை அர­சியல் போக்கு தான் என்­ப­தையும் மறுக்க முடி­யாது.

வடக்கில் தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சி­க­ளுடன் சிங்­கள பௌத்த தேசி­ய­வாதக் கட்சி ஒன்­றினால் போட்டி போட­மு­டி­யாது என்­பது, மஹிந்த ராஜபக் ஷவின் காலத்­தி­லேயே உறு­தி­யாகி விட்­டது.

அதனால் தான், வெறு­மனே அபி­வி­ருத்தி அர­சி­ய­லுடன் மாத்­திரம் நின்றால் வடக்கில் தமிழ் மக்­களின் வாக்­கு­களை பெற்­றுக்­கொள்ள முடி­யாது என்­பதை உணர்ந்து, புலி ஆத­ரவு நிலைப்­பாட்­டுடன் அதனை முன்­னெ­டுக்கத் தொடங்­கி­யி­ருக்­கிறார் அங்­கஜன் இரா­ம­நாதன்.

தமிழ்த் தேசியக் கட்­சிகள் உரிமை பற்றிப் பேசிப் பேசியே அபி­வி­ருத்­தியைக் கோட்டை விட்டு விட்­டன, என்று கூறி உரி­மை­யுடன் கூடிய அபி­வி­ருத்தி என்ற கோசத்தை அவர் முன்­வைத்­தி­ருக்­கிறார்.

ஒரு அர­சாங்­க­மாக வடக்கில் அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுத்­தாலும், தமி­ழர்­க­ளுக்­கான உரிமை விட­யத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி எந்த உரி­மையை வழங்கப் போகி­றது, எத்­த­கைய உரி­மையை விட்­டுக்­கொ­டுக்கத் தயா­ராக இருக்­கி­றது என்று தெரி­ய­வில்லை.

முழு­மை­யான அதி­கா­ரப்­ப­கிர்­வுக்கே தயா­ரில்­லாத ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி வடக்கில் உரி­மை­யுடன் கூடிய அபி­வி­ருத்தி பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறது.

தேர்தல் என்று வந்து விட்டால், யாருடைய காலையும் பற்றிக் கொள்ளலாம், எந்த வாக்குறுதியையும் வழங்கலாம், எந்த நிலைக்கும் போகலாம் என்ற நிலைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சென்றிருக்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், தமிழ் மக்களுக்கு எதிரான போரை பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று உலகெங்கும் பிரசாரம் செய்யும் ஜனாதிபதியின் கட்சியே, அவர்கள் யாரைப் பயங்கரவாதிகள் என்று அடையாளம் காட்டுகின்றனரோ அவர்களின் பாடல்களை வைத்து வாக்குகளை யாசகம் கேட்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

சரி பிழைகளுக்கு அப்பால் மஹிந்த ராஜபக் ஷ ஒருபோதும் இத்தகைய விடயங்களில் விட்டுக்கொடுப்பவராக நடந்து கொள்ளவில்லை.

மைத்திரிபால சிறிசேனவின் நெகிழ்வுத் தலைமைத்துவம் தான், வடக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்கு யாசகத்துக்கு துணையாக இருக்கிறது.

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.