Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆனைக்கோட்டையில் சடலம் மீட்பு : விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வுத்துறை

Featured Replies

ஆனைக்கோட்டையில் சடலம் மீட்பு : விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வுத்துறை

 

தனிமையில் விட்டில் வசித்து வந்த பெண்னொருவர் காயங்களுடன் யாழ். ஆணைக்கோட்டைப் பகுதியில் நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும்,  அவரின் உயிரிழப்பில் சந்தேகங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆணைக்கோட்டை பொன்னையா வீதியிலுள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த 72  வயதான ஜெகநாதன் சத்தியபாமா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

online_New_Slide__3_.jpg

இச் சம்பவம் குறித்த தெரிய வருவதாவது,

குறித்த பெண்ணின் கணவர் ஏற்கனவே இறந்துள்ள நிலையில் மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். ஆயினும் மகன் தற்போது வன்னியில் வசித்து வருகின்றார்.

வீட்டில் தனிமையில் இருந்து வந்த குறித்த பெண்ணிற்கு அவரது உறவினர்கள் உணவுகளை வழங்கி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு நேர உணவை வழங்குவதற்காக வீட்டிற்குச் சென்ற போது குறித்த வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வயோதிப் பெண் உயிரிழந்துள்ளதை உறவினர்கள் அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து சம்வம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன் போது குறித்த வயோதிப் பெண்ணின் காதில் மற்றும் கையில் இருந்த நகைகள் என்பன காணாமல் போயிருப்பதாகவும் மேலும் ஏதாவது காணாமல் போயிருக்கிறாதா? என்பது குறித்தும் தெரியவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றனர். மேலும் உயிரிழந்த பெண்ணின் தலையில் காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் வயோதிபப் பெண்ணின் உயிரிழப்பில் சந்தேகங்கள் காணப்படுவதால் அங்கு திருட்டுக்கள் இடம்பெற்றனவா? என்றும் திருட்டுக்காக கொலை செய்யப்பட்டிருக்கின்றாரா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

27048898_1036785699806132_88329001_o.jpg

http://www.virakesari.lk/article/29764

  • கருத்துக்கள உறவுகள்

மர்ம கொலைகளால் குடாநாடு அதிர்கின்றது என்று செய்தி போட ஒரு பேப்பரும் துணியவில்லை பாருங்கோ .

  • தொடங்கியவர்

யாழ்.ஆறுகால்மடத்தில் கொலைசெய்யப்பட்ட மூதாட்டியின் நகைகள் மீட்பு!

 

 
 

யாழ்ப்பாணம் - ஆறுகால் மடம் பகுதியில் இடம்பெற்ற மூதாட்டி படுகொலை தொடர்பில், அதே இடத்தை சேர்ந்த நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.ஆறுகால்மடத்தில் கொலைசெய்யப்பட்ட மூதாட்டியின் நகைகள் மீட்பு!கோப்புப்படம்

மூதாட்டியிடம் இருந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் நகைகள், மேற்படி சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆறுகால் மடம் பொன்னையா வீதியில் தனிமையில் வசித்து வந்த 72 வயதுடைய ஜெகனாதன் சத்தியபாமா என்ற மூதாட்டி, நேற்று முன்தினம்(21.01.2018) அவருடைய வீட்டில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இவர் ஆணைக்கோட்டை பொன்னையா வீதிப் பகுதியில், உறவினர்கள் யாருமின்றி தனிமையிலேயே வசித்து வருவதோடு, இவரது பெறாமகன் ஒருவர் கிளிநொச்சியில் இருந்து இவரை பார்வையிட வருவதுண்டு. அத்துடன் உணவு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

மூதாட்டிக்கு பாதுகாப்பாக அவரது மைத்துனர் ஒருவர் வழமையாக வீட்டில் தங்கி வருகிறார். சம்பவம் நடந்த தினத்தன்று, வீட்டுக்கு இரவு 7.30 மணியளவில் அவர் வந்த போது, குறித்த மூதாட்டியின் தலையில், அடிகாயங்களுடன் சடலமாக காணப்பட்டார். அத்துடன் அவர் அணிந்திருந்த நகைகளும் திருடப்பட்டுள்ளதாக மைத்துனர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், குறித்த மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார், அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை நேற்று கைது செய்து, விசாரணைக்குட்படுத்தியிருந்தனர். விசாரணையின் அடிப்படையில் அவரிடம் இருந்து, மூதாட்டியின் நகைகளை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர் இன்று மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Jewels-of-murder-victim-in-jaffna

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.