Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றவியல் சட்டத்தின் கீழ் தவறிழைத்துள்ளார் கோத்தா- சட்டமா அதிபர்

Featured Replies

குற்றவியல் சட்டத்தின் கீழ் தவறிழைத்துள்ளார் கோத்தா- சட்டமா அதிபர்

 

gotaவீரகெட்டியவில் டி.ஏ.ராஜபக்ச நினைவிடம் 90 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டதன் மூலம், பொதுச்சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் ஆகியவற்றின் கீழ், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாய ராஜபக்ச உள்ளிட்ட 6 பேர் தவறிழைத்துள்ளனர் என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையின் போதே, இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டது.

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று நீதிமன்றத்தில் இது தொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்தனர்.  நினைவிடத்தை அமைப்பதற்கு சிறிலங்கா கடற்படையினரைப் பயன்படுத்தியதாகவும், அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையே, கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று நீடிப்புச் செய்துள்ளது.

http://www.puthinappalakai.net/2018/01/26/news/28679

  • தொடங்கியவர்

கோத்­தாவை கைது செய்­வ­தற்கு எதி­ரான இடைக்­கால தடை நீடிப்பு

2-e992583a46f4b7f96c41e2ac640c8c691ddc381d.jpg

 

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்கு எதி­ராக பொதுச்சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ்  எந்­த­வொரு சட்ட நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்க வேண் டாம் என அறி­வித்து நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் விதித்த இடைக்­கால தடை எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 15 ஆம் திக­தி­வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது.  

டீ.ஏ.ராஜ­பக் ஷ ஞாப­கார்த்த அருங்­காட்­சி­யக நிர்­மா­ணிப்பின் போது அரச பணத்தை தவ­றாக பயன்­ப­டுத்­தி­யமை தொடர்பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ சந்­தேக நப­ராக கரு­தப்­படும் நிலையில், அவர் தாக்கல் செய்­துள்ள ரீட் மனுவை நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொண்டே மேன் முறை­யீட்டு நீதி­மன்றம், எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 15 ஆம் திகதி வரை செல்­லு­ப­டி­யாகும் வண்ணம் இந்த இடைக்­கால தடை உத்­த­ரவை நீடித்­தது.  

மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி ப்ரீத்தி பத்மன் சுர­சேன, ஷிரான் குண­ரத்ன ஆகிய இருவர் கொண்ட நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லையில் இந்த வழக்கு நேற்று மீள விசா­ர­ணைக்கு வந்­தது.

இதன்­போது கோத்­தா­பய ராஜ­பக்ஷ சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா மற்றும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்றி ஆகியோர் ஆஜ­ராகி நீதி­ப­திகள் முன்­னி­லையில் சில மணி நேரம் வரை தமது வாதங்­களை முன்­வைத்­தனர்.

ஏற்­க­னவே இந்த வழக்கை விசா­ரித்த நீதி­பதி தெஹி­தெ­னிய உயர் நீதி­மன்­றுக்கு பதவி உயர்வு பெற்று சென்­றுள்ள நிலையில், நேற்று இவ்­வ­ழக்கு விசா­ர­ணையில் முதன் முத­லாக புதிய மேன் முறை­யீட்டு நீதி­மன்ற தலமை நீதி­பதி பிரீத்தி பத்மன் சுர­சேன அமர்ந்தார். இந் நிலை­யி­லேயே அவர் முன்­னி­லையில் மீளவும் விட­யங்கள் தெளி­வு­ப­டுத்­தப்ப்ட்­டன.

 பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் தனது சேவை பெறு­நரை கைது செய்ய எத்­த­னிப்­பதை தடுத்து, நீதிவான் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழான அறிக்கை, உதவி பொலிஸ் அத்த்­யட்­சரின் சான்­றி­தழை வலு விழக்கச் செய்­யு­மாறும் அவ்­வா­தங்கள் ஊடாக எடுத்­து­ரைக்­கப்­பட்­டன.

இந் நிலை­யி­லேயே தடை உத்­த­ரவு மேலும் நீடிக்­கப்­பட்டு அடுத்த கட்ட விசா­ர­ணை­க­ளுக்­காக வழக்கு எதிர்­வரும் பெப்­ர­வரி 14 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. நேற்­றைய விசா­ர­ணை­களின் போது சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் விராஜ் தயா­ரத்ன முன்­னி­லை­யா­கி­யி­ருந்தார்.

முன்­ன­தாக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ, தனது சட்­டத்­த­ரணி சனத் விஜே­வர்­தன ஊடாக மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் ரீட் மனு தாக்கல் செய்தார்.

13 பக்­கங்­களைக் கொண்ட குறித்த ரீட் மனுவில் மனுவின் பிர­தி­வா­தி­க­ளாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர, குற்றப் புல­ன­யவுப் பிரிவு பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஷானி அபே­சே­கர, நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்­தி­ய­லங்­கார, பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் சான்­றிதழ் வழங்­கிய நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் கமல் பலிஸ்­கர மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

அரசியல் அமைப்பின் 140 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேற்படி ரீட் மனுவில் 111 விடயங்களை சுட்டிக்காட்டியுள்ள மனுதாரரான கோத்தபாய , 7 நிவாரணங்களை அதனூடாக கோரியுள்ளார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-26#page-1

கோத்தா உள்ளிட்ட எழுவர் குற்றம் புரிந்துள்ளார்கள்

 

(எம்.எப்.எம்.பஸீர்)
சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக நீதிமன்றுக்கு அறிவித்தது எப்.சி.ஐ.டி.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ உள்ளிட்ட 7 பேர், டீ.ஏ.ராஜ பக் ஷ விவகாரத்தில் பொதுச்சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழும், தண்டனை சட்டக் கோவையின் கீழும் குற்றங்களைப் புரிந்துள்ளதாக சட்ட மா அதிபர் தமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்தது.  

எனினும் குறித்த ஆலோசனைக்கு அமைய நடவடிக்கை எடுப்பது குறித்த செயற்பாடுகள், கோத்தா மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவின் முடிவினைப் பொறுத்து அமையும் என்பதால், அதனையும் கருத்தில் கொண்டு குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க நிதிக் குற்றப் புலனாய்வாளர்கள் வேறு ஒரு திகதியை கொழும்பு மேலதிக நீதிவான் புத்திக சிறி ராகலவிடம் கோரினர். இதற்கு அனுமதியளித்த நீதிவான் வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் வரை ஒத்தி வைத்தார்.

தமது பெற்றோரான டீ.ஏ. ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவியை நினைவு கூர அவர்களுக்காக அரசுக்கு சொந்தமான 9 கோடி ரூபா பணத்தை பணத்தை பயன்படுத்தி அருங்காட்சியகம் அமைத்தமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்துவரும் விசாரணைகளின் நிலைமையை அறிந்துகொள்ள அது தொடர்பிலான வழக்கு நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் புத்திக சிரி ராகல முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது நிதிக் குற்றப் புலனயவுப் பிரிவு முன்னெடுத்துள்ள விசாரணைகள் தொடர்பிலான மேலதிக விசாரணை அறிக்கை நீதிவானுக்கு சமர்பிக்கப்பட்டது. நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவின் 8 ஆம் இலக்க விசாரணை அறையின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சஞ்ஜீவ பெர்ணான்டோவினால் மேலதிக விசாரணை அறிக்கை சமர்பிக்கப்ப்ட்டே, குறித்த விடயம் நீதிவானுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

விசாரணைகள் பெரும்பாலும் நிறைவுற்றுள்ள நிலையில் விசாரணை அறிக்கையினை ஆராய்ந்துள்ள சட்ட மா அதிபர், கோத்தா உள்ளிட்ட 7 பேர் இந்த விவகாரத்தில் 1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழும் தண்டனை சட்டக் கோவையின் கீழும் குற்றங்களைப் புரிந்துள்ளதாக சட்ட மா அதிபர் எமக்கு அறிவித்துள்ளார்.

எனினும் இன்றைய தினமும் ( நேற்று) கோத்தபாய தாக்கல் செய்துள்ள கைதுக்கு எதிரான மனு மேன் முறையீட்டு மன்றில் விசாரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. அதன்படி, அவ்வழக்கின் முடிவினைப் பொறுத்து மேலதிக விசாரணைகளை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேறு தினம் ஒன்றினை தாருங்கள். என பொலிஸ் பரிசோதகர் சஞ்ஜீவ பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஏற்கனவே வீரகெட்டியவில் டி.ஏ.ராஜபக்ஷ மன்றத்தை அமைக்க, அந்த பிரதேச சபையிடம் எவ்வித அனுமதியினையும் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷவோ, அதனை நிர்மாணித்தவர்களோ பெற்றுக்கொள்ளவில்லை என நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தது.

இந்த நிர்மாணத்துக்காக காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபணத்தின் நிதி பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அக்கூட்டுத்தாபணத்தின் 2013,2014,2015 ஆம் ஆண்டுகளுக்கான கணக்கறிக்கைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி வருவாதக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ள நிலையில், அது குறித்த விசாரணைகள் தொடர்கின்றன.

இந்த மன்றம் நிர்மாண பணிகளுக்காக கடற்படையினர் பயன்படுத்தப்ப்ட்டுள்ள நிலையில் கோத்தாவின் வாய்மொழி மூல கட்டளை மற்றும் காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபன தலைவரின் கோரிக்கை கடிததுக்கு அமைவாகவே அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்ப்ட்டுள்ளமை விசாரணையில் உறுதியானதாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிவானுக்கு தெரிவித்திருந்தது. எவ்வாறாயினும் வழைமையான எந்த நடைமுறைகளும் இதில் பின்பற்றப்படவில்லை என சுட்டிக்காட்கியுள்ள நிதிக் குற்ற புலனயவுப் பிரிவு காணி மீட்டல் கூட்டுத்தாபனத்தின் சட்ட அதிகாரிகளின் வாக்கு மூலங்களும் பெறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-26#page-1

சமூக விரோதியான, கொலைகாரனாக  கோத்தபாய அமெரிக்காவின் வதிவிட உரிமை கொண்டுள்ளதால், அமெரிக்காவுக்கு அடிக்கடி சென்றுவருவதால் அமெரிக்காவின் மனித உரிமை ஈடுபாடு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.