Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மஹிந்த வீட்டில் மந்திராலோசனை நடத்தும் மைத்திரி! உடன்படிக்கை இன்று கைச்சாத்து

Featured Replies

மஹிந்த வீட்டில் மந்திராலோசனை நடத்தும் மைத்திரி! உடன்படிக்கை இன்று கைச்சாத்து

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீட்டில் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மந்திராலோசனை நடத்தி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்போது கூட்டு எதிர்க்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இடையில் இன்று ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் இன்று காலை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இதேவேளை, அரசாங்கத்தை கலைத்து நாடாளுமன்ற தேர்தலுக்கு செல்லும் வரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு ஆதரவு வழங்கும் போதிலும், ஒருபோதும் அரசாங்கத்தில் இணைந்து தற்காலிக பதவிகளை ஏற்றுகொள்ளப்போவதில்லை, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எப்போதும் ஐக்கிய தேசிய அரசாங்கத்திற்கு எதிரானவர்கள். மக்கள் தெளிவாக அரசாங்கத்தை நிராகரித்துள்ளனர். நாடாளுமன்றதை கலைப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.tamilwin.com/politics/01/174428?ref=home-imp-parsely

அது எந்த ஊடகம் என்று இந்த சாக்கடை ஊடகம் கூற வேண்டியது தானே ?? ஊடக தர்மத்தின் அடிப்படைகளில் ஒன்று தாம் வழங்கும் செய்தியை மேற்கோள் காட்டுவது

  • தொடங்கியவர்

மைத்திரியின் கூண்டில் மகிந்தவின் ஆட்கள் – மகிந்தவின் கூண்டில் மைத்தியின் ஆட்கள் …

mahinda-mithri.jpg?resize=538%2C314
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் தற்போது கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ இல்லத்தில மஹிந்த ராஜபக்ஸவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது  இந்த இரண்டு வௌ;வேறு கலந்துரையாடல்களிலும் தற்போதைய அரசியலில் ஏற்பட்டுள்ள சமநிலையற்ற தன்மை மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசப்படுவதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://globaltamilnews.net/2018/67094/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.