Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சினிமா விமர்சனம்: நாச்சியார்

Featured Replies

சினிமா விமர்சனம்: நாச்சியார்

 
சினிமா விமர்சனம்: நாச்சியார்

தாரை தப்பட்டை படம் இயக்குனர் பாலாவின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருந்த நிலையில், பாடல்களைக் குறைத்து, தன் வழக்கத்திற்கு மாறான பாணியில் ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் மனிதர்.

நாச்சியார் (ஜோதிகா) ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. கர்ப்பமாக இருக்கும் அரசி (இவானா) என்ற ஒரு சிறு பெண்ணை மீட்பவர்,

அந்தப் பெண்ணைக் கர்ப்பமாக்கியதாக காத்தவராயன் (ஜி.வி. பிரகாஷ்குமார்) என்ற சிறுவனைக் கைதுசெய்து சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கிறார்.

 
திரைப்படம் நாச்சியார்
 
நடிகர்கள் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ்குமார், இவானா, தமிழ்க்குமரன், ராக்லைன் வெங்கடேஷ்
 
ஒளிப்பதிவு ஈஸ்வர்
 
இசை இளையராஜா
 
இயக்கம் பாலா

ஆனால், அந்தப் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கு, அந்தச் சிறுவன் தந்தையல்ல என்று தெரியவருகிறது.

இதையடுத்து, அந்த சிறுபெண்ணை பலாத்காரம் செய்தது யார் என்று தேடும் நாச்சியார், அந்த நபரைக் கண்டுபிடித்து சட்டத்திற்கு அப்பாற்பட்ட முறையில் தண்டிக்கிறார்.

கதை ரொம்பவும் பழையதாக இருக்கிறது என்று நினைக்க வேண்டாம்; படமுமே அப்படித்தான் இருக்கிறது.

சினிமா விமர்சனம்: நாச்சியார்

தொலைக்காட்சி சீரியல்களுக்கே உரிய காட்சியமைப்பில் நகரும் இந்தப் படத்தின் ஒரே சுவாரஸ்யமான அம்சம், வெவ்வேறு நபர்களின் வாக்குமூலத்தின் மூலம் அரசிக்கும் காத்தவராயனுக்கும் இடையிலான காதலைச் சொல்வதும் குற்றவாளியைத் தேடுவதும்தான்.

படத்தின் முக்கியமான திருப்பம் இடைவேளையின்போது வந்துவிட்ட நிலையில், குற்றவாளி யார் என்பதைத் தேடும் பயணம் விறுவிறுப்பாக, அதிர்ச்சியூட்டும்விதமாகவோ இருந்திருக்க வேண்டும்.

சினிமா விமர்சனம்: நாச்சியார்

பதிலாக ரொம்பவுமே சாதாரணமாக அந்தத் தேடுதல் நடப்பது, பிற்பாதி படத்தில் தொய்வை ஏற்படுத்துகிறது.

படத்தில் வரும் பல பாத்திரங்கள், இயல்புக்குப் பொறுந்தாதவகையில் இருக்கின்றன. குறிப்பாக ஜோதிகாவின் பாத்திரம்.

அவர் இதுவரை ஏற்று நடிக்காத வேடம் என்பதால் சற்று புதுமையாகத் தென்படுகிறது. ஆனால், எரிச்சலூட்டும் பாத்திரப்படைப்பு.

சினிமா விமர்சனம்: நாச்சியார்

குறிப்பாக, குற்றவாளிகள் என்று கருதுபவர்களையும் தன் கீழ்நிலை காவலர்களையும் நாச்சியார் நடத்தும் விதம் சரியானதாக இல்லை.

அரசியாக நடித்திருக்கும் இவானாவுக்கு இது முதல் படம். படத்தில் இயல்பாக வந்துசெல்லும் கதாபாத்திரங்கள் ஒன்றிரண்டில் இவருடையதும் ஒன்று. ஜீ.வி. பிரகாஷ்குமாருக்கு மற்றும் ஒரு படம்.

சினிமா விமர்சனம்: நாச்சியார்

இளையராஜாவின் இசையில் வரும் ஒரே ஒரு பாடல், ரசிக்கவைக்கிறது. ஆனால், பின்னணி இசையில் குறிப்பிடும் வகையில் ஏதும் இல்லை.

ஈஸ்வரின் ஒளிப்பதிவில் ட்ரோன் காட்சிகளும் டாப் - ஆங்கிள் காட்சிகளும் அசத்துகின்றன.

தன் பாணியிலிருந்து விலகி ஒரு படத்தைத் தர முயன்றிருக்கிறார் பாலா. ஆனால், அது ஒரு சுவாரஸ்யமான படமாக உருவாகவில்லை.

http://www.bbc.com/tamil/india-43084589

  • தொடங்கியவர்

அந்த ஒரு விஷயம் ஓ.கே பாலா... ஆனா, மத்ததெல்லாம்...?! - நாச்சியார் விமர்சனம்

 
 

வயது வந்தவர்களின் காதலே இங்கு பலரால் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இரண்டு மைனர்கள் காதல், அவர்களுக்கு நடக்கும் விபரீதம், அதன் விளைவுகளுக்குக் காரணமானவர்களுக்கான முடிவு... என்ற களத்தை நூறு நிமிடப் படமாகப் பேச முயல்கிறது, 'நாச்சியார்' திரைப்படம்.

நேர்மையான போலீஸ் அதிகாரி ஜோதிகாவிடம் (நாச்சியார்), மைனர் சிறுமியை ஒருவர் பலாத்காரம் செய்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதில் தொடர்புடையதாகக் கருதப்படும் ஜி.வி.பிரகாஷை காவல்துறை வளைத்துப் பிடிக்கிறது. விசாரணைக்குப் பிறகு, ஜி.வி கூர்நோக்கு இல்லத்தில் அடைபட, கர்ப்பமாக இருக்கும் அந்தச் சிறுமியை ஜோதிகாவே தத்தெடுத்துப் பார்த்துக்கொள்கிறார். சில நாள்களில் அந்தச் சிறுமியின் குழந்தையும் பூமியைத் தொடுகிறது. 

 

நாச்சியார் விமர்சனம்

என்ன இது... பாலா படம் மாதிரியே இல்லையே, என்கிறீர்களா? அதேதான்! முதல்பாதியில் எங்குமே படைப்பாளி பாலாவை நீங்கள் பார்க்கமுடியாது. இடைவேளையின்போது ஓர் உண்மை உடைய, இரண்டாம்பாதியில் அது பற்றிய விசாரணையில் களமிறங்குகிறார், ஜோதிகா. இந்த இரண்டு மைனர்களின் அறியாமையைப் பயன்படுத்திக்கொண்டவர்கள் யார் என்பது 'நாச்சியாரி'ன் மீதிக்கதை.

அசிஸ்டென்ட் கமிஷனர் நாச்சியாராக ஜோதிகா. வாயும், கையும் சேர்ந்தே 'பேசும்' உடல்மொழி. நடிப்பு, வசன உச்சரிப்பு என அனைத்திலும் மெனக்கெட்டிருக்கிறார். முதல் முறையாக சொந்தக்குரல் பொருந்திப்போகும் இந்தக் கேரக்டரில், பலமுறை பார்த்த துள்ளல் ஜோதிகாவாக இல்லாமல், யாரைத் திட்டலாம், யாரைப் போட்டு மிதிக்கலாம் எனப் பரபரவென்று சுற்றும் போலீஸ் அதிகாரியாக மிரட்டியிருக்கிறார்.

ஒரே மாதிரியான கதைகளை, கேரக்டர்களில் மட்டுமே நடித்துக்கொண்டிருந்த 'நடிகர்' ஜி.வி பிரகாஷுக்கு இது நிச்சயம் வெரைட்டியான வேடம்தான். சில இடங்களில் நடிப்பு துருத்திக்கொண்டு தெரிந்தாலும், பாலா படத்தின் முக்கியக் கேரக்டர் என்னென்ன மேனரிஸங்களோடு இருக்குமோ அதையெல்லாம் 'காத்தவரயன்' கேரக்டரில் பக்காவாக செய்கிறார். நல்ல முன்னேற்றம் ஜி.வி!. மைனர் பெண் 'அரசி'யாக வரும் இவானா, கண்களாலேயே படத்தைத் தாங்குகிறார். சில இடங்களில் சிறுமியாகவும், 'அவன்மேல மட்டும் தப்பு இல்லை மேடம்; நானும்தான்!' என மெச்சூரிட்டியோடு சொல்லும் இடம்... எனப் பல காட்சிகளில் பார்வையால் படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறார். வெல்கம் குட்டிப்பெண்ணே!

முக்கியக் கதாபாத்திரங்களைத் தவிர, படத்தில் வரும் ‘இன்ஸ்பெக்டர் ஃபெரோஸ்கான்’ (ராக்லைன் வெங்கடேஷ்), டாக்டர் குரு, பாட்டி கொளப்புள்ளி லீலா, வழக்குரைஞரராக வரும் மை.பா.நாராயணன்... நடித்த பெரும்பாலான நடிகர்கள் கதாபாத்திரத்துடன் மிகச்சரியாக  பொருந்தியிருக்கிறார்கள்; தேவையான அளவு நடித்தும் இருக்கிறார்கள்.

நாச்சியார் விமர்சனம்

'எளியவர்களைச் சுரண்டும் வலியவர்கள், இரு துருவங்களையும் சந்திக்கும் ஒரு போலீஸ் அதிகாரியின் முடிவு' என்ற ஒன்லைனை அழுத்தமான கதையாகச் சொல்கிறார், இயக்குநர் பாலா. வழக்கமான பாலாவின் படங்களில் இருந்து இது வித்தியாசமான அனுபவம் தருகிறது. இரண்டாம் பாதியை த்ரில்லராக தரமுனைந்ததெல்லாம் சரிதான். ஆனால், அந்த இன்டர்வெல் ட்விஸ்ட்டை காலங்காலமாக கோலிவுட்டை கவனித்துவரும் ரசிகன் ஈஸியாக கணித்துவிடுவானே!. தவிர, பாலா படங்களின் பலமே அதிலுள்ள காட்சிகள் கோபம், வெறுப்பு, குரோதம், நகைச்சுவை... என ஏதேனும் ஒரு உணர்ச்சியையாவது ரசிகனுக்குக் கடத்துவது. அது இந்தப் படத்தில் மிஸ்ஸிங். படத்தின் மொத்தக் கதையையும் தாங்கி நிற்கும் ஃப்ளாஷ்பேக் காட்சியில் அழுத்தம் இல்லை. காவல்துறையை நல்லவர்கள் புழங்கும் இடமாகவும் சென்னையின் பூர்வகுடிகளை சந்தேகக் கண்ணோட்டத்தோடும் அணுகும் படங்களை இன்னமும் எத்தனை காலத்திற்குப் பார்ப்பது? 

குற்றம் செய்தவனுக்கு சட்டத்தில் இருந்து விலகி, தானாகவே கொடூரமான தண்டனையைக் கொடுக்கும் நாச்சியாரை காவல்துறை 'ஜஸ்ட் லைக் தட்'டாக அணுகுவது, படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 'சென்னை மொழி', நீதிமன்றம், சமூக சீர்திருத்தப்பள்ளி தொடங்கி,கல்யாண வீடு, டெபுடி கமிஷனர் அருகில் இருந்துகொண்டு உதவி கமிஷனரை விரட்டும் போலீஸ் ஏட்டம்மா, மருத்துவமனை ஆயா வரை... இயல்பில் இருந்து விலகி நிற்கும் இடங்கள் அதிகம். முக்கியமாக, 'ஆணவக்கொலை நடக்கும் இடங்களுக்கு உன்னை ட்ரான்ஸ்ஃபர் செய்கிறேன்' என உயரதிகாரி நாச்சியாரிடம் சொல்வது, ஃபேஸ்புக் புரட்சியாக இருக்கிறது. தவிர, போலீஸ் 'விசாரணையை' நியாயப்படுத்துவது, மனித உரிமைகள் ஆணையத்தை நக்கலடிப்பது போன்றவையெல்லாம் இனியும் வேண்டாமே!. 

நாச்சியார் விமர்சனம்

குப்பை மேடுகளின் புழுதியில் இருந்து எழும் ஈஸ்வரின் கேமரா குப்பங்களின் இண்டு இடுக்குகள் வழியே காவல் நிலையத்தின் இருட்டு லாக்கப்களுக்கும், அழுக்கு படிந்த கூர்நோக்கு இல்லத்திற்கும் அலுப்பே தட்டாமல் பயணிக்கிறது. இசை, இளையராஜா. பாடலோ பின்னணி இசையோ பெரிதாக ஈர்க்கவில்லை. நிறைய காட்சிகள் அந்தரத்தில் தொங்குவதுபோல இருக்கிறது. சதீஷ் சூர்யாவின் எடிட்டிங் ஓரளவுக்கு ஒத்துழைத்திருக்கிறது. 

இதையெல்லாம் மீறி, ‘ஏழைகளை சோதிப்பதே இந்தக் கடவுளுக்கு வேலையாப்போச்சு’ என்றதும், 'அவருக்கும் பொழுது போகணும்ல, விடு... நாம நமக்கேற்றபடி ஃப்ரெஷ்ஷா ஒரு கடவுள் பண்ணிப்போம்’, ' 'நீங்க எங்களைப் பிடிச்ச படைய்யா! கடைசிவரை உங்களை சொறிஞ்சிகிட்டேதான் இருக்கணும்!', ‘தோப்பனார் வடகலை, தாயார் தென்கலை’,  'அருள்தரும் அரபு நாட்டினிலே’ என்று பாடும்போது, 'போகவேண்டியதுதானே அங்கயே...' எனப் படத்தில் இருக்கும் பாலாவின் டிரேட் மார்க் பகடிகளுக்கு லைக்ஸ்! 

பாலா படத்தை பாசிட்டிவ் முடிவோடு பார்க்க விரும்புபவர்கள், இந்த நாச்சியாரோடு கைகுலுக்கிவிட்டு வரலாம்.

https://cinema.vikatan.com/movie-review/116653-naachiyaar-movie-review.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.