Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வம்புக்கு இழுத்த கிப்ஸ்; சூதாட்டத்தில் நான் சம்பாதிக்கவில்லை: அஸ்வின் காட்டம்

Featured Replies

வம்புக்கு இழுத்த கிப்ஸ்; சூதாட்டத்தில் நான் சம்பாதிக்கவில்லை: அஸ்வின் காட்டம்

 

 
Ashwin-Gibbs

அஸ்வின், கிப்ஸ் (கோப்புப் படம்)

இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை கிண்டல் செய்து ட்வீட் செய்து தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஹெர்சல் கிப்ஸ் பதிவிட்டதற்கு, கோபமடைந்த அஸ்வின் சரியான பதிலடி கொடுத்து அதிர்ச்சி அடைய வைத்தார்.

இந்திய ஆல்ரவுண்டர் அஸ்வின் நைக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஷூ குறித்த வீடியோவை ட்விட்டரில் இன்று பதிவிட்டார்.

அதில், ''நண்பர்களே என்னிடம் புதிய நைக் ஷூ இருக்கிறது. இந்த ஷூவின் வடிவமைப்பு, நிறம், ஃபோம் தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் எடை குறைவாக இருக்கிறது. அணிவதற்கு எளிதாகவும், சொகுசாகவும் இருக்கும். ஓடுவதற்கு சிறப்பானதாக இருக்கும், நான் அணிய தயாராகிவிட்டேன்'' எனத் தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதில் அளித்து கிப்ஸ் ட்விட் செய்தார். அதில், ''நம்புகிறேன், அஸ்வின் இனிமேல் நீங்கள் இன்னும் கொஞ்சம் வேகமாக ஓடுவீர்கள் ஏனென்றால் புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துவீட்டீர்கள். இனிமேல் உடல் தகுதியில்லாமல் இருக்கப் போவதில்லை.'' என கிரிக்கெட் சூதாட்டத்தை உள் அர்த்தமாகக் கூறி பதில் அளித்து இருந்தார்.

அதாவது புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துவிட்டார் அஸ்வின், அந்த நிறுவனத்துக்காக இனி அதிகமாக விளையாடுவார், விக்கெட்டுகள் எடுப்பார், ரன்கள் சேர்ப்பார், அதிக முயற்சிகள் எடுப்பார் என்று மறைமுகமாகக்  கூறி இருந்தார்.

இதற்கு அஸ்வின் தனது வார்த்தைகளில் கடுமையான காட்டத்தை காட்டினார். அடுத்த சில நிமிடங்களில் மிகுந்த காட்டத்துடன் ட்விட்டரில் பதில் அளித்திருந்தார்.

அதில், ''நீங்கள் வேகமாக ஓடிய அளவுக்கு என்னால் வேகமாக ஓட முடியாது. துரதிர்ஷ்டவசமாக உங்களைப் போல் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் இல்லை. ஆனால், மிக அருமையான நேர்மையான, நியாயமான சிந்தனை கொண்ட மனிதராக ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறேன். எந்தப் போட்டியிலும் சூதாட்டம் , மேட்ச் பிக்சிங் செய்து, அதில் வந்த பணத்தை வைத்து நான் சாப்பிடவில்லை.

எனக்கு எது உணர்வுப்பூர்வமாக இருக்குமோ அது சிலருக்கு அப்படி இருப்பதில்லை. உங்களுக்கு உணர்வுப்பூர்வமாக இருப்பது எனக்கு இருப்பதில்லை. நான் எனது ரசிகர்களையும், குடும்பதத்தாரையும் மதிக்கிறேன். இத்துடன் ட்வீட்டையும் முடிக்கிறேன்'' எனத் தெரிவித்தார்.

கடந்த 2000-ம் ஆண்டு இந்தியாவுக்கு தென் ஆப்பிரிக்க அணி சுற்றுப்பயணம் வந்திருந்தது. அப்போது, நடந்த போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங் செய்ததாக கேப்டன் குரோனியே, கிப்ஸ், நிக்கி போயே, ஸ்டிரைடம் ஆகியோர் மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இது குறித்து விசாரணை நடத்திய கிங் கமிஷன் குரோனியேவுக்கு வாழ்நாள் தடை விதித்தது, கிப்ஸ் தான் செய்த தவறுக்கு குரோனியேதான் காரணம் எனக் கூறியதையடுத்து, அவருக்கு அபராதமும் , 6 மாதம் தடையும் விதிக்கப்பட்டது.

2006-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஐசிசி சாம்பியன் கோப்பையில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியில் கிப்ஸ் சேர்க்கப்பட்டார். இந்தியாவுக்கு சென்றால் கைது செய்யப்படுவோம் என அஞ்சினார். இருப்பினும் இந்தியா வந்து போலீஸாரிடம் ஆஜராகி விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/article22799383.ece

  • தொடங்கியவர்

`நானும் ஜோக்தான் அடிச்சேன்!’ வைரலாகும் அஷ்வின் - கிப்ஸ் ட்விட்டர் உரையாடல்!

 

"சூதாடித்தான் வாழ வேண்டும் என்ற நிலை எனக்கு வரவில்லை" என்று இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், தென்னாப்பிரிக்க அணி முன்னாள் வீரர் ஹார்ஷ்லே கிப்ஸை நகைச்சுவையாக ட்விட்டரில் சாடிய சம்பவம் தற்போது  டிரெண்டாகி வருகிறது.

 

அஷ்வின்

 

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷூ ஒன்று குறித்து பதிவிட்டிருந்தார். அஷ்வினின் இந்தப் பதிவுக்குத் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஹார்ஷலே கிப்ஸ், ``இனிமேலாவது நீங்கள் வேகமாக ஓடுவீர்கள் என்று நம்புகிறேன் அஷ்வின்" என்று பதிவிட்டிருந்தார். இதற்குப் பதில் அளிக்கும் வகையில், "ஆம். என்னால் தங்களது வேகத்தில் ஓட முடியாது தான். ஆனால். கிரிக்கெட்டில் சூதாடிதான் உணவு சாப்பிட வேண்டும் என்ற நிலை எனக்கு இல்லை என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்று அஷ்வின் பதில் கொடுத்திருந்தார். 

இதற்கு, "ஒரு ஜோக்கை ஜோக்காகப் பார்க்க முடியவில்லை... நான் செல்கிறேன்" என்று கிப்ஸ் சொல்ல, இதற்குப் பதில் அளித்த அஷ்வின், " நானும் இதை ஜோக் என்று நினைத்தே கூறினேன். ஆனால், நீங்களும் மற்றவர்களும் (ட்விட்டர் ஃபாலோயர்ஸ்) இதை வேறு மாதிரிப் புரிந்துகொண்டுவிட்டீர்கள். நாம் என்றாவது இதைப் பற்றி நேரில் பேசலாம்" என்று கூறி அஷ்வின் வாதத்தை முடித்து வைத்தார். அஷ்வின் மற்றும் கிப்ஸ் இடையிலான இந்த ட்விட்டர் உரையாடல் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆனது. 

ஹான்ஸி குரேனியே தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி கடந்த 2000-ம் ஆண்டில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டில் கிப்ஸுக்கு 6 மாதங்கள் கிரிக்கெட் விளையாடத் தடையும் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

https://www.vikatan.com/news/sports/116890-ashwin-and-gibbs-talk-on-twitter-goes-viral.html

  • கருத்துக்கள உறவுகள்

முதுகில புண்ணை வைத்துக்கொண்டு பொட்டுக்குள்ள போகக்கூடாது . ஹிப் ஸ் ஒடிஞ்சிடும்.....!  tw_blush:

அஸ்வின் தான் சூதாடிச் சம்பாதிக்கவில்லை என்று சொல்கின்றார். இருக்கட்டும். அவங்க பரம்பரை என்ன வேலை செய்து தமிழ்நாட்டில் தமிழர் தாயகங்களை ஆட்டையைப் போட்டது? தமிழர்களினால் தமிழர்களின் உழைப்பில் கட்டப்பட்ட உலகக் கட்டடக்கலைக்கே அகரம் எழுதிய தமிழர்களின் கோயில்களைச் சூழ்ச்சியாகக் கைப்பற்றி தமிழர்களையே வேண்டத்தகாதவராக்கி சூத்திரப் பட்டம் கொடுத்து வெளியேற்றி சூழ்ச்சியால் சொத்துச் சேர்த்து தமிழர் தாயகத்தை வன்கவர்ந்து ஆளும் அதிகார வர்க்கத்திற்கு கூட்டிக் கொடுக்கும் மரபில் வந்ததாலேயே அஸ்வினால் துடுப்பாட்டத்திற்குள் வர முடிந்தது. பூநூல் இல்லையேல் தமிழ்நாட்டிலிருந்து துடுப்பாட்டத்தில் தெரிவாக முடியாது. சூழ்ச்சி செய்து மண்ணின் மக்களை அந்த மண்ணிலேயே அடிமையாக்கும் மரபில் வந்த ஆரிய மரபினத்தான் அஸ்வின் உழைத்துயர்ந்த மரபில் வந்தது போல கதைப்பது தான் கடுப்பாக்குது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.